Mar 17, 2010

4

மேல்மட்டம் கீழ்மட்டம்

  • Mar 17, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நிதானமாக சிந்திக்க வேண்டும் ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.

    வணக்கம் எனதருமை அன்புள்ளங்களே எனக்கு தெரிந்ததை ஏதோ பெரிய எழுத்தாளர் அளவிற்கு முடியாவிட்டாலும் எனக்கு தெரிந்த எழுத்து நடையில் என் கருத்துகளை எழுதி வருகிறேன் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும், சமுதாயத்தில் மேல்மட்ட கீழ்மட்ட மக்களின் எதார்த்தத்தை பிரதிபலிப்பதற்காகத்தான் இந்த இடுகை ஏதோஎனக்கு தெரிந்த வரையில் எழுதியிருக்கிறேன்

    மேல்மட்டம் கீழ்மட்டம்

    என்ன என்ன
    இது என்ன வேதனை
    நித்தம் நித்தம்
    வந்து போகும் சோதனை
    கணவினில் கேள்விகள் ஆயிரம்
    நிஜத்தினில் பதில்கள் இல்லையே!

    என்ன சமுதாயம் இது
    நித்தமும் சல்லாப உல்லாசம் அங்கே
    ஒரு வேளை சோற்றுக்கும்
    உயிர் விடும் கூட்டம் இங்கே

    மண்ணை விற்றாலும்
    விலை போகும் அங்கே
    மாணம் விற்றால்தான்
    விலை போகும் இங்கே

    வெட்டி போட்டாலும்
    வேடிக்கை பார்க்கும் கூட்டம் அங்கே
    சரிந்தவன் உதிரம் கண்டு
    துடிதுடிக்கும் கூட்டம் இங்கே

    லட்சம் லட்சம் கண்டும்
    நிம்மதியில்லை அங்கே
    ஒருவேளை சோற்றில்
    உழைப்பின் நிம்மதி இங்கே

    நெஞ்சம் இருந்தும்
    நீதி இல்லை அங்கே
    நெஞ்சத்தில் நீதி இருந்தும்
    நீதிக்கு கண் இல்லை இங்கே

    என்ன என்ன
    இது என்ன வேதனை
    நித்தம் நித்தம்
    வந்து போகும் சோதனை
    கணவினில் கேள்விகள் ஆயிரம்
    நிஜத்தினில் பதில்கள் இல்லையே!

    குறிப்பு : சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவை பல மடங்கு அதிகரிக்கும், பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், என் பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் சென்றடைய நீங்களும் மனது வையுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    4 Comments
    Comments

    4 Responses to “மேல்மட்டம் கீழ்மட்டம்”

    ம.தி.சுதா said...
    October 31, 2010 at 11:04 PM

    ஃஃஃஃஃவெட்டி போட்டாலும்
    வேடிக்கை பார்க்கும் கூட்டம் அங்கே
    சரிந்தவன் உதிரம் கண்டு
    துடிதுடிக்கும் கூட்டம் இங்கேஃஃஃஃ
    எம் அவலத்துக்காய் உணர்வு கொண்டமைக்கு நன்றி சகோதரா...


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 11:35 AM

    @Anonymousபெயரை வெளிப்படுத்தியே கருத்துரை இடுங்களேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 11:36 AM

    @ம.தி.சுதாஎன்ன செய்ய நண்பா கவிதை எழுத தெரிந்த எனக்கு என் மக்களை காக்க முடியவில்லையே


    தர்சிகன் said...
    January 18, 2011 at 4:00 PM

    ஆகா அருமை அருமை...


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர