Aug 30, 2010

12

எதற்கும் ஒரு ஷார்ட்கட்

  • Aug 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு உட்கார வேண்டி வரும்.

    அன்பின் நண்பர்களுக்கு வணக்கம் இன்று ஒரு அருமையான, எளிமையான மென்பொருளை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் நாம் வழக்கமாக சில கணினி பயன்பாட்டுகளுக்கு ரன் கமெண்ட் பயன்படுத்துவது வழக்கம் இதன் வழியாக சில பயன்பாடுகளை எளிதாகவும் வேகமாகவும் செய்யமுடியும் இது பற்றி சில் நண்பர்களுக்கு தெரிந்திருக்கும் சிலருக்கு தெரிந்திருக்காது ஆனால் நமது நோக்கமோ நமக்கு தெரிந்த விஷயங்களை தெரியாத நண்பர்களுக்கும் சென்றடைய செய்வதேயாகும்.

    நமது கணினியில் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருளையோ அல்லது அலுவலக பைல்களையோ எப்படி வேகமாக திறப்பது என்பது பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருந்தேன் இந்த பதிவிற்கும் ஏற்கனவே எழுதிய ரன் கட்டளைகள் உருவாக்கலாம் என்கிற பதிவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது நீங்கள் வாசித்து முடிக்கும் போது உணர்ந்துகொள்வீர்கள்.

    என் பழைய பதிவுகள்

    ரன் கட்டளைகள் உருவாக்கலாம்

    அஸைன் ஷார்ட்கட் கீ

    இந்த பதிவு எழுத காரணமாயிருந்த அன்புச் சகோதரிக்கு நன்றி, இரண்டு நாட்களுக்கு முன்னர் என் சகோதரி அண்ணா எக்ஸ்பி இயங்குதளத்தில் நாம் Srat – Run திறக்கும் டயலாக் பெட்டியின் அளவை கொஞ்சம் பெரிதுபடுத்த முடியுமா எனக் கேட்டார் நான் அதன் அளவை கூட்டுவதால் என்ன நண்மை என கேட்ட போதுதான் வழக்கமாக கணினியில் உள்ள அனைத்து பைல்களையும் ரன் கமெண்ட் வழியாகவே திறப்பதாகவும் கொஞ்சம் நீளமான பெயர் வரும் போது எழுத்துக்கள் மறைந்து விடுவதால் டைப் செய்வதில் பிரச்சினை வருவதாகவும் சொன்னார்.



    உதாரணத்துக்கு உங்கள் கணினியில் E:\Gsr\Software\Hacking Software\Recourse Hacker\ResourseHacker.Exe என்கிற இடத்திற்கு செல்லவேண்டும,என்ன சகோதரி சொல்வது போல பகுதிக்கு மேல் எழுத்துக்கள் மறைந்துவிடும் தானே? சரி அதை கொஞ்சம் முயற்சி செய்து பார்க்ககலாமேவென வழக்கம் போல ரிசோர்ஸ் ஹேக்கர் மென்பொருள் கொண்டு முயற்சித்தேன் ரிஜிஸ்டரி மாற்றமெல்லாம் செய்து பார்த்தேன் இறுதியில் கணினியின் இயக்கத்தில் தான் பிரச்சினை உண்டானது பின்னர் ஒரு வழியாய் பிரச்சினையை சரி செய்துவிட்டு கொஞ்சம் இனையத்தில் இதற்கான மாற்று வழிமுறை இருக்கிறாதவென தேடியபோது தான் ஒரு மாற்று மென்பொருளை கண்டேன் இனி ரன் கமெண்ட் மென்பொருள் தரவிறக்கம் செய்யவும் வெறும் 483 கேபி தான் இனி வழக்கம் போல உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

    இனி உங்கள் கணினியில் புதிதாக ஒரு நீல நிறத்தில் ஒரு கமெண்ட் பெட்டி வந்து அமர்ந்துகொள்ளும் கீழிருக்கும் படத்தை பாருங்கள் இனி நாம் ரன் கமெண்டில் மேற்க்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும் இதன் வழியாகவே மேற்கொள்ளலாம்.



    இதனை நமது எலியால் வலது கிளிக் செய்து இதன் மெனுவை திறக்கலாம்.



    இனி இதில் நமக்கு தேவையான நிறத்தை கொடுக்க எழுத்தின் வண்ணம் மாற்ற இதிலிருக்கும் செட்டப் வசதியை பயன்படுத்தலாம், மேலும் சில வசதிகள் இருக்கிறது பயன்படுத்தி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், நமக்கு தேவையில்லையென்றால் மறைத்து விடலாம் தேவையான இடத்திற்க்கு மாற்றிக்கொள்ள அதன் மேல் கர்சரை வைத்து இழுத்துச் செல்லலாம் வசதி இருக்கிறது வேண்டிய அளவிற்கு நீளத்தை வலது பக்கம் இருந்து இழுப்பதன் மூலம் முழு ஸ்கீரீன் அளவிற்கு வேண்டுமானாலும் பெரிதுபடுத்தலாம்.



    இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நான் ஒரு பைலை இதன் வழியாகவே திறந்திந்திருக்கிறேன் இதில் என்ன விஷேசம் என்றால் நாம் E:\G என அடிக்கும் போதே E:\GSR_G என வந்துவிடும், அடுத்து H என அழுத்தினாலே Hacking Software வந்துவிடும், அடுத்து R என அழுத்தும் போதே Recourse Hacker என வந்துவிடும், அடுத்து R என அழுத்தினால் Resizer வந்துவிடும், அடுத்து R என அழுத்தினால் RSHacker என்பதும் வந்துவிடும் ஒரு வேளை வராத போது முதல் எழுத்தோடு அடுத்த எழுத்தையும் கொடுக்கவும் உதாரணத்துக்கு ஒரு இடத்தில் GSR,GNR என இரு போல்டர்கள் இருந்தால் நீங்கள் முதல் இரு எழுத்தையும் கொடுக்க வேண்டிவரும் அதாவது GS அல்லது GN இப்படியாக கொடுக்கவும். இதன் வழியாகவே உங்களுக்கு தேவையான புதிய கமெண்ட்கள் உருவாக்கலாம் அதற்கான வசதியும் இருக்கிறது.



    இதில் நீங்கள் Library திறப்பதன் மூலம் உங்களுக்கு வேண்டிய கணினியில் இருக்கும் மென்பொருள் அல்லது ஏதாவது பைல்களுக்கு New Magic word வழியாக நீங்களாக ஒரு சுருக்க பெயர் கொடுத்து அதன் வழியாக எளிதாக பைல்களை திறக்கலாம் நீங்கள் விரும்பும் இனையதளத்தின் முகவரியையும் இது போல சுருக்கமாக மாற்றிக்கொள்ளலாம் நான் எனது தளமான http://gsr-gentle.blogspot.com என்பதை திறக்க gsr என கொடுத்தாலே போதும் தளம் திறந்துவிடும் மொத்தத்தில் இது ஒரு குட்டி சூப்பர் மென்பொருள்.



    என்ன நண்பர்களே இந்த பதிவு நிச்சியம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென்றே நம்புகிறேன் இனிமேல் எந்த பைலையும் நீங்கள் ரன் கமெண்ட் வழியாக திறக்க முடியும் என்ன இதற்கு கொஞ்சம் ஞாபகசக்தி இருந்தால் போதும் எந்த பைலையும் பல கிளிக் சென்று திறக்கமால் ரன் கமெண்ட் வழியாகவே எளிதாக திறக்கலாம் நான் மேலே கொடுத்துள்ள என் பழைய பதிவான ரன் கட்டளைகள் உருவாக்கலாம் என்பதன் வழியாக நீங்கள் உருவாக்கும் கட்டளைகளையும் இதன் வழியாகவே மேற்கொள்ளலாம். இந்த பதிவு உங்களோடு நின்று விடாமல் மேலும் பலருக்கு சென்றடைய உங்கள் வாக்கும் கருத்துரையும் உதவும் உங்களுக்கு பிடித்திருந்தால் அவசியம் ஒரு நிமிடம் செலவழித்து வாக்கு அளிக்கவும் நாம் வாக்களிக்கவில்லை என்றாலும் வேறு யாராவது வாக்களிப்பார்கள் என நினைத்து விட வேண்டாம் காரணம் உங்களை போலவே அவர்களும் நினைக்க வாய்ப்பிருக்கிறது

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 20, 2010

    38

    பதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை

  • Aug 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • வணக்கம் நண்பர்களே இதை படிக்கும் எத்தனை நபர்கள் எனக்கு ஆதரவாக உதவபோகிறீர்கள் என தெரியாது இருப்பினும் சக பதிவு எழுதும் ஒருவன் என்கிற நம்பிக்கையில் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு எழுதுகிறேன் பதிவுலகத்தில் பலரும் படைப்புகளை திருடுகிறார்கள் என்னுடைய எத்தனையோ பதிவுகள் திருடப்பட்டிருக்கின்றன ஆனால் எனது சொந்த படைப்பையே நான் மற்றவர்களிடம் இருந்து கவர்ந்து எழுதியது என்கிற குற்ற்ச்சாட்டு இதுதான் பதிவுலகத்தில் முதல் முறை என நினைக்கிறேன்.

    நான் இந்த பதிவுலகத்திற்கு எழுத வந்து சரியாக ஆறு மாத காலம் இருக்கும் இறுதியில் நானகாவே எழுதுவதை நிறுத்திவிட்டேன் பல முறை என் பதிவுகளை பலரும் காப்பி எடுத்து அவர்கள் தளத்தில் அச்சு பிசகாமல் ஒட்டியிருப்பார்கள் ஆனால் நானும் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை நேற்று இப்படித்தான் ஓய்வு நேரத்தில் நான் வலைப்பக்கம் வந்த போது http://illamai.blogspot.com/ என்கிற தளத்தில் நான் எழுதிய ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு (http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html) மற்றும் தாலிக்கு அர்த்தம் என்ன? (http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html) இரண்டு பதிவுகளும் அச்சு பிசகாமல் எழுத பட்டிருந்தது என்ன ஒரு வித்யாசம் எனக்கு ஆரம்ப காலத்தில் எனக்கு பிளாக்கரில் படம் கூட இனைக்க தெரியாது அதனால் அன்று நான் படங்கள் இனைக்கவில்லை இப்போதும் தேவையென்றால் மட்டுமே அதிலும் தொழில்நுட்ப பதிவுகளுக்கு மட்டுமே படங்கள் இனைப்பேன் என் தளத்தை ஆரம்ப காலத்தில் இருந்து வாசிப்பவர்களுக்கு தெரியும்.

    இது பற்றி http://illamai.blogspot.com கருத்துரையில் கேட்டிருந்தேன் அதற்கு அவர்கள் எனது தளத்தில் எனது தளத்தில் இந்த http://gsr-gentle.blogspot.com/2010/08/html.html பதிவில் கீழே உள்ளவாறு பதில் எழுதியிருந்தார்கள்.

    \\ தங்கள் சொல்லுவதை நானும் பாா்த்தேன் இருப்பினும் இது தங்கள் எழுதவில்லை இது எனது நண்பா் விவேகானந்த என்பவா் எழுதியது... தங்களும் அதனை கவா்ந்து தான் உங்கள் தளத்தில் போட்டு உள்ளீா்ள் ஏன் நான் இதே பதிவு FRIDAY, MARCH 26, 2010 இட்டுள்ளேன் தங்கள் இதே பதிவை Sunday, August 1, 2010 தங்கள் இட்டுள்ளீா்கள்... ஏன் இதே பதிவை http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html இந்த முகவரியில் உள்ளது இதில் மட்டும் அல்ல இப்படி பல முகவரியில் உள்ளது.... அனால் இதற்கு தங்கள் உரிமை கோருவது... தவறு... என கருதுகிறேன்.

    நன்றியுடன்
    இளமை\\

    பதிலிலும் அவரால் அவர் நண்பர்தான் இதை எழுதினார் என்பதாக கூட சரியான விளக்கத்தை தரவில்லை இதில் நீங்கள் கவணிக்க வேண்டியது பதிவின் நேரத்தை பார்க்கலாம் அதே நேரத்தில் பதிவின் நேரம் என்பதை நானும் பல நேரங்களில் மீள் பதிவிற்காக நேரம் தேதி மாற்றுவது வழக்கம் இதற்கு பிளாக்கர் நம்மை அனுமதிக்கும் ஆனால் அந்த பதிவிற்கான கருத்துரையில் நாம் நேரத்தையோ அல்லது தேதியையோ மாற்ற முடியாது என்பது நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு அதையும் கவணித்து பாருங்கள் ஆனால் இதிலும் தாலிக்கு அர்த்தம் என்ன? என்கிற பதிவை பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை.

    இது உங்கள் பார்வைக்கு தயவுசெய்து கொஞ்சம் கவணித்து பார்க்கவும் நண்பர்களே

    ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு
    http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html (நான் எழுதியது)
    http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html
    http://illamai.blogspot.com/2010/03/blog-post_26.html

    தாலிக்கு அர்த்தம் என்ன?
    http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_17.html (நான் எழுதியது)
    http://illamai.blogspot.com/2010/03/blog-post_8724.html

    இறுதியில் நான் http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html சென்று அவரிடம் கீழே உள்ளவற்றை நான் கருத்துரை இட்டிருக்கிறேன்.

    \\அன்புள்ள நண்பருக்கு நான் ஞானசேகர் http://gsr-gentle.blogspot.com (புரியாத கிறுக்கல்கள் எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறேன் நான் என் தளத்தில் எழுதிய , தாலிக்கு அர்த்தம் என்ன http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_17.html, ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html இந்த இரண்டு பதிவுகளையும் நேற்று 19/08/10 எதார்த்தமாக http://illamai.blogspot.com/ காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருந்தது அதை பற்றி நான் அவரிடம் கேட்ட போது அவர் எனக்கு இப்படியாக (தங்கள் சொல்லுவதை நானும் பாா்த்தேன் இருப்பினும் இது தங்கள் எழுதவில்லை இது எனது நண்பா் விவேகானந்த என்பவா் எழுதியது... தங்களும் அதனை கவா்ந்து தான் உங்கள் தளத்தில் போட்டு உள்ளீா்ள் ஏன் நான் இதே பதிவு FRIDAY, MARCH 26, 2010 இட்டுள்ளேன் தங்கள் இதே பதிவை Sunday, August 1, 2010 தங்கள் இட்டுள்ளீா்கள்... ஏன் இதே பதிவை http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html இந்த முகவரியில் உள்ளது இதில் மட்டும் அல்ல இப்படி பல முகவரியில் உள்ளது.... அனால் இதற்கு தங்கள் உரிமை கோருவது... தவறு... என கருதுகிறேன்.



    நன்றியுடன்

    இளமை)

    இப்படியாக பதில் வந்தது நீங்கள் உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவை நீங்கள் எழுதியது தானா? நான் உங்கள் தளத்தை காப்பி எடுத்திருக்கிறேனா?


    எனது பதிவில் கருத்துரையில் இருக்கும் தேதியை பாருங்கள் http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_13.html யார் முதலில் எழுதியிருக்கிறார்கள் என தெரியும் மேலும் ஒரு பதிவை மீள் பதிவாக இடுவதற்கு நான் நேரம் தேதி மாற்றுவது வழக்கம்\\

    நண்பர்களே அவசியம் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன் ஒரு நண்பனாக ஏற்காவிட்டாலும் சக வலைப்பதிவன் என்கிற முறையிலாவது உதவவும்.


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 11, 2010

    10

    பிளாக்கரின் கமெண்ட்டில் HTML பயன்படுத்தலாம்

  • Aug 11, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கையால் வீசி எறியப்பட்ட்தை மீண்டும் ஒருவன் காலால் தான் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.

    இந்த பதிவு நாம் ஏதாவது ஒரு வலைத்தளத்தில் கருத்துரை இடும் போது ஏதாவது ஒரு தேவைக்காக வேறு ஒரு தளத்தின் முகவரியை கொடுக்க நினைத்தால் அதை அப்படியே காப்பி எடுத்து ஒட்டி விடுவது வழக்கம் சரி இனிமே அந்த மாதிரி இல்லாமல் சாதரணமா நீங்கள் உங்கள் பதிவுகளில் ஏதாவது ஒரு வலைத்தளத்திற்கோ அல்லது மென்பொருளுக்கோ இனைப்பு கொடுப்பீர்களே அது போல கருத்துரை பெட்டியிலும் கொடுக்கலாம்.

    உதாரணம் இங்கே பாருங்கள்

    இது உங்கள் பதிவின் உள்ளே பயன்படுத்த


    <a href="http://இனைக்கவிரும்பும் தளம்" target="_blank">கொடுக்க விரும்பும் பெயர்</a></li>


    பிளாக்கர் கருத்துரைக்கு மட்டும்


    <a href="இனைக்கவிரும்பும் தளம்">தளத்திற்கு நீங்கள் கொடுக்க விரும்பும் பெயர்</a>



    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    14

    நோட்பேட் ஆங்கிலம் படிக்கும்

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நான் எழுந்திருப்பதற்காகவே ஒவ்வொரு முறையும் விழுகிறோம்.

    வணக்கம் நண்பர்களே கடந்த சில நாட்களாகவே ஒன்றும் எழுதவில்லை அதற்காக பணிச்சுமை என்பதல்ல காரணம், ஏதோ ஒன்று தடுத்தது சரி நாமா எழுதாம இருந்த என்ன ஆகபோகுதுனு நினைச்சா அறுபது மின்னஞ்சல்களுக்கு மேல் ஏன் எழுதவில்லை என்பதாக விசாரிப்புகள் (ச்சும்மா தான் யாரும் மின்னஞ்சல் அனுப்பவும் இல்லை ஏன் நீங்க எழுதவில்லையென கேட்கவும் இல்லை) சரி இன்று ஏதாவது எழுதனும்னு நினைச்சு உட்கார்ந்த ஒன்னுமே எழுத தோனமாட்டுது சரி இங்கதான் ஏகப்பட்ட பயலுக சும்மா என்னத்தையாவது போட்டு பதிவுங்கிற பெயரில் வெளியிடுறாங்கே அதுவும் பிரபல பகுதிக்கு வந்திருக்கே சரி நாமளும் ஒரு படத்தை போட்டு வைப்போனு இரண்டு படத்தை மட்டும் இனைத்து அதற்கு தலைப்பு வயது வந்தவர்கள் மட்டும் (Adult Only) என்கிற பெயரோடு வெளியிட்டேன் சும்மா சொல்லக்கூடாது நல்லாவே ஹிட்ஸ் வந்துச்சுங்க சரி நம்ம தளத்துக்கு இதெல்லாம் சரி வராதுனு அந்த பதிவை அழித்து விட்டேன.

    நான் மட்டும் தான் இப்படியா

    நான் பதிவு எழுத வந்த நாட்கள் முதல் பெரிய பரபரப்போ அல்லது எனக்கென நண்பர்கள் கூட்டோ இல்லாமல் இருந்தாலும் (இபோழுதும் அப்படித்தான்) என் பதிவுகள் வாசகர்களின் ஆதரவு கொண்டு பெரும்பாலனவை பிரபல பதிவாகியிருக்கின்றன அதே நேரத்தில் நல்ல பதிவுகள் கூட புறக்கனிக்கப்பட்டிருக்கின்றன அந்த நேரத்தில் கொஞ்சம் வெறுப்பாக இருக்கும் ஆனால் எழுத்து சிரங்கு பிடித்தவன் போல மீண்டும் நானகவே எழுதியிருக்கிறேன் ஒரு சில வலைப்பதிவுகளில் என் தளத்தையும் இனைத்திருந்தார்கள் அவர்களுக்கு என் நன்றியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    காப்பி எடுத்தா தப்பா

    நான் வலைப்பூவில் எழுத வந்த நாள் முதலாகவே என் பதிவுகள் பல தளங்களிலும் அச்சு பிசகாமல் காப்பி பேஸ்ட் செய்திருப்பார்கள் ஆனால் என் பதிவு பல தளங்களில் காணப்படுவது சந்தோஷம் தான் ஆனால் என் பதிவுகளை காப்பி எடுப்பவர்கள் குறைந்தபட்ச நாகரீகமாக நன்றி என்பதை கூட உபயோகபடுத்துவதில்லை இது பற்றி காப்பி எடுக்கப்பட்ட என் பதிவுகள் என எழுதியிருந்தேன், சாதரணமாக ஒரு பதிவை காப்பி எடுக்கப்பட்டுவிட்டது என்றாலே உடனே ஆவேசத்தில் பதிவை எழுதுவார்கள் உடனே அவர்களுக்கு வேண்டியவர்கள் பெரிய வீர வசணங்களை எல்லாம் எழுதுவார்கள் ஆனால் நமக்கெல்லாம் வீரவசனம் பேசுவதற்கெல்லாம் யாருமில்லை,சரி இப்பதான் நாம இத்தனை பதிவு எழுதியிருக்கிறோமே யாராவது காப்பி எடுத்திருக்கிறார்களா என கடந்த ஒரு மாத பதிவுகளை மட்டும் மேலோட்டமாக ச்சும்மா தேடிபார்த்தேன் அதிலும் இத்தனை பதிவுகள் பிற தளங்களில் காணப்படுகிறது சில தளங்களில் நன்றி: http://gsr-gentle.blogspot.com என குறிப்பிட்டுள்ளார்கள் அதேபோல் என் பதிவின் சாயல் உள்ளவற்றை நான் இங்கு எழுதவில்லை(அதுவும் நிறைய இருக்கிறது)

    எந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்

    http://gsr-gentle.blogspot.com/2010/08/blog-post_05.html
    http://usetamil.forumotion.com/-f4/---t6985.htm

    வின்ராரில் கோப்பை வெட்டி பூட்டு போடலாம்

    http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_29.html
    http://usetamil.forumotion.com/-f4/--t6875.htm

    புரொபசனல் கன்வெர்ட்டர் இலவசம்

    http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_26.html
    http://kksamy-kksamy.blogspot.com/2010/07/blog-post_7448.html

    நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்

    http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_25.html
    http://usetamil.forumotion.com/-f4/--t6783.htm

    டாஸ்க் பார், நோட்டிபிகேசன் ஏரியா, குயிக் லாஞ்ச் பிரச்சினைக்கு தீர்வு

    http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_18.html
    http://sayanthan1988.blogspot.com/2010/07/blog-post_18.html

    பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை

    http://gsr-gentle.blogspot.com/2010/07/blog-post_13.html
    http://sayanthan1988.blogspot.com/2010/07/format.html

    5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

    http://gsr-gentle.blogspot.com/2010/07/51.html
    http://usetamil.forumotion.com/-f4/51---t6431.htm
    http://www.eegarai.net/-f18/51---t33559.htm

    சந்தோஷம் தான்

    நான் எழுதிய பதிவுகளில் முக்கால்வாசிக்கும் மேலாக பல தளங்களில் காணப்படுகிறது அதில் சில நேரடியான காப்பி சிலவை சில வார்த்தை மாற்றங்கள் இவையெல்லாம் நிச்சியம் சந்தோஷமே,நான் இதுவரை உபயோகமுள்ள பதிவுகளை தான் எழுதியிருக்கிறேன் என்பதற்கு ஆதாரம் உபயோகமில்லாத பதிவு என்றால் யாராவது காப்பி எடுப்பார்களா?

    எனக்கு மட்டும் ஏன் இப்படி

    நான் எழுத ஆரம்பித்த நாட்கள் முதலாகவே மின்னஞ்சல் சந்தாதாரர்கள் மெல்ல மெல்ல அதிகரித்தே வந்திருக்கிறார்கள் ஆனால் பாலோவர்களாக இருந்தவர்கள் கூட சிலர் நம் தளத்தை விட்டு வெளியேறுகிறார்கள் இது எதனால் என்பது சத்தியமாக எனக்கு புரியவில்லை ஒரு வேளை இதை பற்றி தெரியாமல் இருக்குமோ அல்லது வேறேதும் பயம் (மின்னஞ்சலை களவாடி விடுவோமோ என்கிற அச்சம்) இருக்குமோ(அதெலாம் ஒன்றும் செய்யமுடியாது நண்பர்களே), உங்களுக்கு ஒரு வேளை சந்தேகம் இருந்தால் இது பற்றி முன்னர் நீங்கள் பதிவுலக வாசகரா என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் பாருங்கள்.

    வாக்கும் கருத்துரையும்

    கடைசியில் இந்த பதிவுலக பித்து என்னையும் பிடித்துவிட்டதென்றே நினைக்க தோன்றுகிறது சில பதிவுகளை நாம் எழுதினால் அது புரிந்து கொள்ளாலாமலே முடங்கி போய்விடுகிறது ஆனால் உபயோகமில்லாத பதிவை எழுதுறாங்கே ஆனால் அவைங்களுக்கு உடனே பார்த்த பதிவு அருமை, சூப்பர்,ஒரு நல்ல விஷயம் வெளிவரனும்னா உங்களோட சப்போர்ட் அவசியம் நான் நிரந்த வாசகன் எல்லா பதிவுகளும் பிரமாதம் மண்ணாங்கட்டி என்றால் மட்டும் போதாது ஒரு நிமிடம் செலவழித்து அந்த பதிவு மேலும் பலரை சென்றடைய அவசியம் உங்கள் வாக்கும் கருத்துரையும் தேவை. உங்களை சொல்லி குற்றமில்லை நாம் தான் எப்போதும் நல்ல விஷங்களை அங்கீகரிப்பதில்லையே!

    சரி நண்பர்களே இனி பதிவை பற்றியான விஷயத்துக்குள் வந்து விடுகிறேன் Start->Run-> டைப் notepad திறந்துகொள்ளுங்கள் இனி கீழிருக்கும் நிரலை காப்பி எடுத்து உங்கள் நோட்பேடில் ஒட்டி சேமிக்கும் போது .VBS என்கிற எக்ஸ்டென்ஷனில் சேமியுங்கள் அதாவது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து உதாரணத்துக்கு gsr.vbs என சேமித்தால் போதும்

    Dim message, sapi
    message=InputBox("Enter the text you want spoken","Speak This")
    Set sapi=CreateObject("sapi.spvoice")
    sapi.Speak message



    இனி மேலிருக்கும் படத்தில் உள்ளது போல நோட்பேட் மாறியிருக்கும் அடுத்தாக உங்கள் சுண்டெலியால் இருமுறை கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் நீங்கள் படிக்க வேண்டிய டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்து ஓக்கே கொடுத்தால் போதும் நோட்பேட் படிக்க ஆரம்பித்துவிடும்.

    என்ன நண்பர்களே உங்கள் வாக்குகளும் கருத்துரையும் தான் ஒரு தளத்தின் மிகச்சிறந்த மதிப்பீடாக இருக்கமுடியும் நீங்கள் அளிக்கும் ஒரு வாக்கின் மூலம் அந்த பதிவு மேலும் பலரை சென்றடைய வாய்ப்பிருக்கிறது நீங்கள் எழுதும் பதிவை பற்றிய கருத்துரைகள் மேலும் அதன் நம்பகத்தன்மையை உறுதிபடுத்துவதாக இருக்கும் முடிந்தவரை நல்ல பதிவுகளை ஆதரியுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 8, 2010

    11

    பிளாக்கர் கருத்துரை பெட்டியில் தமிழ் யுனிகோட் வசதி

  • Aug 8, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நம்மை தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை எவ்வளவோ மேலானது.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பூ எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் உதவுமென்று நம்புகிறேன் சில நண்பர்கள் என் தளத்திலேயே தமிழில் கருத்துரை எழுதும் வசதி இனைத்தால் நன்றாயிருக்குமே என்றும் மேலும் தமிழ் எழுத்து முறை தெரியாதவர்களுக்கு கருத்துரை எழுத வசதியாய் இருக்கும் என்றர்கள் ஆனால் எனக்கோ அது பற்றி தெரியாது இன்று எதேச்சையாய் இந்த தளத்தில் அந்த வசதி இனைக்கபட்டிருப்பதை கண்டு அவருக்கு இரண்டு கருத்துரையில் இதை பற்றி கேட்டிருந்தேன் ஆனால் அவரோ நாம் எழுதிய கேள்வியை கூட வெளியிடவில்லை சரி நாமகவே முயற்சித்து விடலாமே என முயற்சி செய்தேன் எனக்கு இந்த வலைப்பூவில் பெரிதாக ஒன்றும் தெரியாது ஆனாலும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பது உண்மைதானே.

    இனி நீங்கள் கூகுள் யுனிகோட் சென்று அங்கு உங்களுக்கு தேவையான வண்ணம் மற்றும் அளவு போன்றவற்றை தெரிவு செய்து அங்கு கிடைக்கும் நிரலை காப்பி எடுத்துக் கொள்ளுங்கள்,வேண்டுமானால் இந்த கீழிருக்கும் கோடிங்கை காப்பி எடுத்தும் பயன்படுத்தலாம் உங்களுக்கு தேவையான நீளம்,அகலம்,வண்ணம் போன்றவற்றை இதிலேயே மாற்றிக்கொள்ளலாம்.


    <script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/103159279678197997651/googleindictransliteration.xml&synd=open&w=600&h=170&title=Google+Indic+Transliterator&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>


    இனி உங்கள் பிளாக்கர் கணக்கில் உள்ளே நுழைந்து உங்கள் டெம்ப்ளேட் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அடுத்ததாகDesign->Etil HTML->Expand widget Templates என்பதில் ஒரு டிக் மார்க் குறி ஏற்படுத்தியதும் அங்கு Crtl+F என்கிற கீ பயன்படுத்துவதன் மூலம் <data:blogCommentMessage/> என்பதை கண்டுபிடியுங்கள் அதற்கு கீழாக உங்களிடம் இருக்கும் நிரலை கீழே ஒட்டி விடுங்கள் சந்தேகத்திற்கு படமும் இனைத்துள்ளேன் பார்க்கவும்.





    என்ன நண்பர்களே இனி தமிழ் டைப்பிங் தெரியாவிட்டாலும் உங்களுக்கு பிடித்த படைப்பாளிகளின் பதிவுகளுக்கு கருத்துரை எழுதலாம் தானே மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் தமிழில் எழுதுவதன் மூலம் விடை காணலாம் தானே, இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் பதிவிற்கு வாக்கும் கருத்துரையும் அளித்து மேலும் பலரை சென்றடைய உதவவும் இது உங்களால் முடியும்தானே?

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 6, 2010

    10

    வசந்த கால நினைவுகள்

  • Aug 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: காதல் வந்தால் அம்மைத் தழும்பும் அதிர்ஷட குறியாகும்.

    நண்பர்களே எனக்கு தெரியும் என் கணினி சார்ந்த பதிவுகளே உங்களிடம் பல முறை வெறுக்கப்பட்டிருக்கிறது இந்த நிலையில் இதற்கு நீங்கள் வாக்கோ கருத்தோ அளிக்க மாட்டீர்கள் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன் இருப்பினும் சில நேரங்களில் எனக்கு தோன்றியதை நான் எழுதுவேன் மன்னிகவும். மேலும் இன்று தான் எதேச்சையாகா சரி இது வரை நம் பதிவுக்கு யார் தான் வாக்களித்திருக்கிறார்கள் என பார்த்த போது என் கணிப்பு தவறவில்லை பெரும்பாலான வாக்குகளை அளித்தவர்கள் வாசக நண்பர்களே உங்களுக்கு நன்றி சொல்லி அந்நியபடுத்த விரும்பவில்லை மாறாக தொடர்ந்து இனைந்திருங்கள் இந்த தளம் உங்கள் தளமாக நினைத்து நீங்கள் விரும்பம் ஆக்கங்களை எழுதி அனுப்பினால் உங்கள் பெயரிலேயே வெளியிட தயாராய் இருக்கிறேன்.

    வசந்த கால நினைவுகள்

    நீ சூடி உதிர்ந்த
    பூவின் ஸ்பரிசம்
    இன்னமும்
    என் நினைவுகளில்

    முதன் முதலில்
    சந்தித்த போது – நீ
    பார்த்த பார்வை
    இன்னமும் நினைவுகளில்

    பள்ளிக்கு செல்லும் போது
    உன் ரெட்டை ஜடை பின்னல்
    இன்னமும் ஆழமாக
    என் நினைவுகளில்

    யாரும் இல்லா வழியில்
    உனக்காய் காத்திருந்த
    நிமிடங்கள்-இன்னமும்
    என் நினைவுகளில்

    நீ தூரமாய் நின்று
    புன்ன்கைத்த நிமிடம்
    இன்னமும் மறக்க முடியாமல்
    என் நினைவுகளில்

    இப்படி எல்லாமே
    நினைவுக்குள் மரிக்காமால்
    நினைவுகளாய் நிகழ்வுகள்
    வந்து வந்து போகின்றன

    ஏனெனில்
    மேகம் தொடும் விண்மீன்களாய்
    பல காலமாய்
    நிதர்சனமாய் வாழ்ந்து விட்டன

    எஞ்சியிருப்பது – நீ
    வாழ்ந்த இதயமும்
    தொலைந்த நிமிடமும்
    இன்னமும் என் நினைவுகளில்


    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 5, 2010

    13

    எந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்

  • Aug 5, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: திறமைகளை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தினால் அதை விட சிறப்பு ஏதுமில்லை.

    இந்த பதிவு நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்கிற ஆவலுடன் எழுதுகிறேன் தவறான, வியாபார நோக்கத்தோடு செயல்படும் நபர்கள் இதை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள் எந்த விஷயத்திற்கும் மாற்று வழி உண்டு என்பதற்க்கு இதுவும் உதாரணமே, சரி நண்பர்களே பதிவுக்கு செல்லலாம்.

    நீங்கள் சில நேரங்களில் ஏதாவது தகவலை இனையத்தில் தேடுவீர்கள் , ஒரு வழியாய் தேடி கண்டுபிடித்து சென்றால் அவர்கள் படிக்க மட்டுமே அனுமதித்திருப்பார்கள் அந்த மாதிரியான தளத்தில் உங்கள் சுண்டெலியின் வலது கிளிக்கில் டெக்ஸ்ட்டை காப்பி எடுப்பதோ அல்லது செலக்ட் செய்வதை கூட அவர்கள் தடை செய்திருப்பார்கள் உங்களுக்கு குறைந்தபட்சம் பின்னாளில் உதவுவதற்காக ஒரு காப்பி எடுத்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம் என நினைத்தால் அதுவும் உங்களால் முடியாது, அப்படிப்பட்ட நேரத்தில் உங்களுக்கு உதவத்தான் நான் சில வழிமுறைகளை பரிந்துரைக்க போகிறேன் ஆனால் தயவுசெய்து தகவல் திருட்டுக்கு உபயோகபடுத்தாதீர்கள்.

    என் தள பதிவுகள் பகுதிக்கு மேலாக பல இடங்களில் காப்பி எடுத்து பிரசுரிக்க பட்டிருக்கிறது ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் நம் தளத்தின் பெயரை கூட வெளியிடவில்லை பரவாயில்லை நாம் எழுதுவது நாலு பேருக்கு உதவத்தானே என மனதை தேற்றிக்கொண்டு விடுவேன் அதனால் தான் யாரையும் பெரிதாக கவணத்தில் எடுத்துக்கொள்வதில்லை ஆனால் வியாபார நோக்கத்தோடு செயல்படும் போது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்கிறது அந்த கோபத்தில் முன்னர் ஒருமுறை காப்பி எடுக்கப்ப்ட்ட என பதிவுகள் என ஒரு பதிவை எழுதியிருந்தேன் பின்னாளில் நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

    சரி இனி அதுபோல் உள்ள தளங்களில் உங்களுக்கு தேவையான தகவலை காப்பி எடுக்க ஐந்து வழிமுறைகள் இருக்கிறது

    1)அந்த தளத்தின் தேவையான பக்கத்தை இமேஜ் ஆக மாற்றி தமிழ் OCR மென்பொருள் வழியாக எளிதாக பிரித்தெடுக்கலாம் ஆனால் இது உங்களுக்கு கால விரயம் அதிகமாகும்.

    2)அந்த தளத்தில் Ctrl+A அழுத்தி Ctrl+C அழுத்துவதன் மூலம் தகவலை காப்பி எடுத்து ஒரு நோட்பேடில் அல்லது வேறு ஏதாவது வேர்டு பைலில் பேஸ்ட் செய்து உங்களுக்கு தேவையான தகவலை காப்பி எடுத்துக்கொள்ளலாம்.

    3)அந்த தளத்தின் Source Code காப்பி எடுத்து அதில் HTML கோடிங்கை நீக்குவதன் மூலம் தகவலை காப்பி எடுக்கலாம் ஆனால் இதுவும் கணினி தொழில்நுட்பம் சார்ந்தவர்களுக்கு எளிதாக இருக்கும்.

    4)உங்கள் பிரவுசரில் ஜாவா எனாபில் செய்திருந்தால் டிசாபிள் செய்து காப்பி எடுக்கலாம்.

    5)இந்த வழிமுறை எவருக்கும் எளிமையாக இருக்கும் நான் கீழே கொடுக்கும் ஜாவா நிரலை காப்பி எடுத்து நீங்கள் காப்பி எடுக்க விரும்பும் தளத்தை திறந்த பின்னர் அதிலிருக்கும் அட்ரஸை அழித்து விட்டு அதற்கு பதிலாக இந்த ஜாவா நிரலை ஒட்டி ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள் இனி அந்த தளத்தில் வேண்டிய எந்த தகவலையும் நீங்கள் காப்பி எடுக்க முடியும்(மேலும் ஒரு சின்ன ட்டிரிக் அந்த தளத்தில் தகவல்களை அழிக்கவும் முடியும் ஆனால் இது உங்கள் கணினியில் மட்டுமே இந்த மாற்றம் நிகழும் இதனால் அந்த தளத்தை எந்த வித்த்திலும் பாதிக்காது) ஆனால் ஒன்று நிச்சியம் திருடானாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

    JavaScript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0



    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்திருக்குமென்று நம்புகிறேன் இது உங்களுக்கு பிடித்திருந்தால் பயணுள்ளது என நினைத்தால் நீங்கள் கற்றுக்கொண்டிருந்தால் அவசியம் பதிவிற்கான வாக்கும் கருத்துரையும் அளிக்கவும் அது மேலும் பலரை சென்றடைய உதவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 4, 2010

    12

    கணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்

  • Aug 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:வஞ்சகம் முதலில் ஜாக்கிரதையாக இருந்தாலும் கடைசியில் காட்டி கொடுத்து விடும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகபடுமா என்பது சந்தேகம் தான் இருப்பினும் தெரிந்துகொள்ள விரும்புவர்கள் தொடரலாம் அதற்கு முன் ஒரு சின்ன விஷயத்தை பார்த்துவிடலாம் இந்த வலைப்பதிவு எழுத வந்து ஐந்து மாதம் ஆகிறது என நினைக்கிறேன் இது எனது 99வது பதிவு ஆனால் இந்த ஐந்து மாத காலத்தில் நான் கற்றுக்கொண்டது நாம் என்ன தான் நல்ல பதிவுகள் எழுதினாலும் அதை படிக்கிறார்களோ இல்லையோ அல்லது பயனுள்ளதா என்பதை காட்டிலும் நமக்கான ஒரு நண்பர் கூட்டத்தை உருவாக்க வேண்டும் உங்களுக்கென நண்பர் கூட்டம் இருந்தால் மட்டுமே பிரபல பதிவு, முன்னனி பதிவுகளில் இடம் பிடிக்க முடியும் நீங்கள் எழுத வந்ததும் அல்லது எழுத நினைக்கும் முன்பே தொடர்ச்சியாக உங்களால் முடிந்த அளவிற்கு வாக்களித்து கொண்டே இருங்கள், கருத்துரையும் சேர்த்து தான் அதன் வழியாக உங்களை நிறைய நபர்கள் அடையாளம் காண வழி உண்டு இப்படித்தான் பல பதிவுகள் பிரபல பதிவுகளாகவும் முன்னனி பதிவுகளாகவும் இடம் பிடிக்கிறது, மேலும் சில பல பிரபல விளக்கென்னைகள் என நினைப்பவர்கள் அவர்களுக்கு வேண்டிய சில விளக்கென்னைகளை தவிர மற்றவர்களுக்கு வாக்கோ கருத்தோ அளிக்க மாட்டார்கள் அதனால் முடிந்தவரை பிரபலங்கள் என சொல்லிதிரியும் விளக்கென்னை பதிவர்களின் பதிவிற்கு வாக்களிப்பதை விட நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு திரும்ப வாக்களிக்கும் நபர்களை அடையாளம் கண்டு வாக்கு அல்லது கருத்துரை அளியுங்கள். அதெல்லாம் முடியாது நான் நல்ல தகவல்கள் தான் எழுதுகிறேன் விரும்புவர்கள் தானாக வந்து படிப்பார்கள், வாக்கு அளிப்பார்கள், கருத்துரை அளிப்பார்கள் என நினைத்தால் என் வலைப்பதிவு போலத்தான் உங்கள் வலைப்பதிவும் இருக்கும்.

    என் பதிவை சராசரியாக ஒவ்வொரு பதிவையும் 400 முதல் சில பதிவுகள் 1400 நபர்கள் வரை படித்திருக்கிறார்கள் இதில் மின்னஞ்சல் வழியாக வருபவர்கள் 200க்கும் குறைவில்லாமல் இருக்கிறார்கள் என் பதிவு உபயோகமானது என்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது ஆனால் எனக்கு புரியாத விஷயம் இத்தனை நபர்கள் படிக்கும் போது குறைந்த்பட்சம் ஒரு 20 பேருக்காவது வாக்கும் கருத்துரையும் அளிக்க மனம் வரவில்லையே என்கிற வேதனை இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வாசகர் அல்லது நட்பு வட்டாரத்தை உருவாக்கி வைத்துள்ளனர் அந்த விஷயத்தில் நான் தவறி விட்டேன்.

    சரி நண்பர்களே நான் கீழே கொடுத்திருக்கும் வார்த்தைகள் கணினியில் நாம் சில இடங்களில் உபயோகிக்கும் வார்த்தைகள் அதற்கான முழு விரிவாக்கத்தையும் கொடுத்துள்ளேன் இதை எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றி.

    ADSL - Asymmetric Digital Subscriber Line
    AGP - Accelerated Graphics Port
    ALU - Arithmetic Logic Unit
    AMD - Advanced Micro Devices
    ASCII - American Standard Code for Information Interchange
    ASIC - Application Specific Integrated Circuit
    ASPI - Advanced SCSI Programming Interface
    AT - Advanced Technology
    ATX - Advanced Technology Extended
    BIOS - Basic Input Output System
    BNC - Barrel Nut Connector
    CAS - Column Address Signal
    CD - Compact Disk
    CDR - Compact Disk Recorder
    CDRW - Compact Disk Re-Writer
    CD-ROM - Compact Disk - Read Only Memory
    CFM - Cubic Feet per Minute
    CMOS - Complementary Metal Oxide Semiconductor
    CPU - Central Processing Unit
    DDR - Double Data Rate
    DDR-SDRAM - Double Data Rate - Synchronous Dynamic Random Access Memory
    DIMM - Dual Inline Memory Module
    DRAM - Dynamic Random Access Memory
    DPI - Dots Per Inch
    DVD - Digital Versatile Disc
    DVD-RAM - Digital Versatile Disk - Random Access Memory
    ECC - Error Correction Code
    EDO - Extended Data Out
    EEPROM - Electrically Erasable Programmable Read-Only Memory
    EPROM - Erasable Programmable Read-Only Memory
    FC-PGA - Flip Chip Pin Grid Array
    FDC - Floppy Disk Controller
    FDD - Floppy Disk Drive
    FPS - Frame Per Second
    FPU - Floating Point Unit
    FSAA - Full Screen Anti-Aliasing
    FSB - Front Side Bus
    GB - Gigabytes
    GBps - Gigabytes per second or Gigabits per second
    GDI - Graphical Device Interface
    GHz - GigaHertz
    HDD - Hard Disk Drive
    HSF - Heatsink-Fan
    IC - Integrated Circuit
    IDE - Integrated Drive Electronics
    IRQ - Interrupt Request
    LAN - Local Are Network
    LCD - Liquid Crystal Display
    LDT - Lightning Data Transport
    LED - Light Emitting Diode
    MAC - Media Access Control
    MB - MotherBoard or Megabyte
    MBps - Megabytes Per Second
    Mbps - Megabits Per Second or Megabits Per Second
    MHz - MegaHertz
    MIPS - Million Instructions Per Second
    MMX - Multi-Media Extensions
    NAS - Network Attached Storage
    NAT - Network Address Translation
    NIC - Network Interface Card
    OC - Overclock (Over Clock)
    PC - Personal Computer
    PCB - Printed Circuit Board
    PCI - Peripheral Component Interconnect
    PDA - Personal Digital Assistant
    PCMCIA - Peripheral Component Microchannel Interconnect Architecture
    PGA - Professional Graphics Array
    PLD - Programmable Logic Device
    PM - Private Message / Private Messaging
    PnP - Plug 'n Play
    POST - Power On Self Test
    PPPoA - Point-to-Point Protocol over ATM
    PPPoE - Point-to-Point Protocol over Ethernet
    PQI - PQI Corporation
    PSU - Power Supply Unit
    RAID - Redundant Array of Inexpensive Disks
    RAM - Random Access Memory
    RAMDAC - Random Access Memory Digital Analog Convertor
    RDRAM - Rambus Dynamic Random Access Memory
    ROM - Read Only Memory
    RPM - Revolutions Per Minute
    SASID - Self-scanned Amorphous Silicon Integrated Display
    SCA - SCSI Configured Automatically
    SCSI - Small Computer System Interface
    SDRAM - Synchronous Dynamic Random Access Memory
    SECC - Single Edge Contact Connector
    SODIMM - Small Outline Dual Inline Memory Module
    SPARC - Scalable Processor ArChitecture
    SOHO - Small Office Home Office
    SRAM - Static Random Access Memory
    SSE - Streaming SIMD Extensions
    SVGA - Super Video Graphics Array
    TB - Terabytes
    TBps - Terabytes per second
    TEC - Thermoelectric Cooler
    UART - Universal Asynchronous Receiver/Transmitter
    USB - Universal Serial Bus
    UTP - Unshieled Twisted Pair
    VCD - Video CD
    VPN - Virtual Private Network
    WAN - Wide Area Network
    XGA - Extended Graphics Array
    XMS - Extended Memory Specification


    இதிலிருந்து ஒரு பத்து வார்த்தைகளையாவது தாங்கள் புரிந்து கொண்டிருந்தால் எனக்கு சந்தோஷமே நூறாவது பதிவாக வீடியோவில் சில மாற்றங்கள் எடிட் செய்வது பற்றி பதிவிட இருக்கிறேன் நிச்சியம் அது ஒரு சிறப்பு பதிவாக இருக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    4

    திரைக் காப்பும் கடவுச் சொல்லும் (Screen Saver & Password)

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நூல்களும் நண்பர்களும் குறைவாக இருந்தாலும் தரமாக இருக்க வேண்டும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நாம் கணினியை பயன்படுத்தாத இடைவெளியில் திரைக் காப்பும் (Screen Saver) அதனுடன் கடவுச்சொல்லும் இடுவது என்பதை பற்றித்தான், இது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் நீங்கள் விரும்பும் படத்தையே திரைக் காப்பாக வைத்துக்கொள்ளலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம்.

    கணினியின் டெஸ்க்டாப்பில் (யாரவது இதன் தமிழ் பதம் கொடுங்களேன்) ஏதாவது ஒரு இடத்தில் உங்கள் சுண்டெலியின் வலது கிளிக்கில் பிராப்பர்ட்டிஸ் (இதன் தமிழ் பதம் பண்புகள் என அகராதிகளில் இருக்கிறது தெரிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்) திறக்கவும் அதில் ஸ்கீர்ன் சேவர் டேப் திறந்து (முடிந்த வரை தமிழில் எழுத விருப்பம் ஆனால் சிலருக்கு இது புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது சில இடங்களில் தவிர்க்க முடியவில்லை மன்னிக்கவும்) My Picture Screen saver என்பதை தெரிவு செய்யவும் வழக்கமாக இது உங்கள் D வட்டில் My Picture என்னும் போல்டருக்குள் இருக்கும் போட்டோக்களை எடுத்துக்கொண்டு செயல்படும் நீங்கள் வேண்டுமானால் Settings திறப்பதன் மூலம் வேறு இடங்களில் இருக்கும் படங்களை தெரிவு செய்யலாம் அதற்கான படம் இனைத்திருக்கிறேன் பாருங்கள் புரியும்.

    செட்டிங்ஸ்ல் ஒரு படத்திருக்கும் அடுத்த படம் திரையில் தோன்றுவதற்கான கால அளவை மாற்றிக்கொள்ளவும் விருப்பம் இருந்தால் மட்டும் மேலும் படத்தின் அளவு மாற்றலாம் மேலும் சில செட்டிங்குகள் விரும்பினால் மாற்றலாம்.





    உங்கள் கணினியில் நீங்கள் கடவுச்சொல் கொடுத்திருந்தால் On Resume, Password Protect என்பதை தெரிவு செய்யலாம் மேலும் கீழிருக்கும் Power பட்டனை திறப்பதன் மூலம் சில மாற்றங்கள் மேற்கொள்ளலாம். மேலும் Appearance டேப் திறந்து அதன் வழியாக உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் போல்டர் அளவு கூட்டி குறைக்கலாம் எழுத்தின் மாதிரியை மாற்றலாம் அளவை பெரிதாக்கலாம் இப்படி இன்னும் எத்தனையோ விஷயங்கள் இதனுள் அடங்கி கிடக்கின்றன நீங்களாகவே முயற்சி செய்து பாருங்கள் வேண்டுமானல் இதையே சில பதிவுகளாக இடும் அளவிற்கு இதற்குள் விஷயம் இருக்கிறது

    வேகம் குறைந்த கணினிகளில் ஸ்கிரீன்சேவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது சில நேரங்களில் கணினி உறை நிலைக்கு சென்று விடும் வாய்ப்பு இருக்கிறது.

    மன்னிக்கவும் நண்பர்களே விரிவாக எழுத முடியவில்லை இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னுட்டத்தில் கேள்வியாக பதியவும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களை போல மற்றவர்களும் பயணடைய பதிவிற்கு வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் பலரை சென்றடைய உதவலாமே?

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 3, 2010

    9

    நிறுவல் முன்னிருப்பு இடம் மாற்றலாம் (Default Installation Location Change)

  • Aug 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பெரிய விளைவுகளுக்குக் காரணமான நிகழ்ச்சிகள் எப்போதும் சிறிய சூழ்நிலைகளிலிருந்து தான் உருவாகின்றன.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்கள் கணினியில் சாதரணமாக மென்பொருள் நிறுவும் போது C:வட்டுவில் சென்று பதியும் ஆனால் ஒரு சின்ன மாற்றத்தை உங்கள் பதிவகத்தில் (ரிஜிஸ்டரியில்) ஏர்படுத்துவதன் மூலம் மென்பொருள் நிறுவலை D: அல்லது நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றலாம் நண்பா என் கணினியில் ஓரே வட்டாக இருக்கிறது எப்படி பிரிப்பது என கேள்வி கேட்பவர்கள் எனது பழைய பதிவான வன்தட்டை (Hard Drive) துண்டு துண்டா வெட்டலாம் பதிவு உங்களுக்கு உதவலாம்.

    சரி இப்போது பதிவகத்தை (ரிஜிஸ்டரியை) திறப்பதற்காக Start-Run Type regedit திறந்து நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய இடம் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion என்பதை கிளிக்கி வலது பக்கம் இருக்கும் பலகத்தில் Program FilesDirஇருமுறை உங்கள் சுண்டெலியால் கிளிக்கி திறக்கும் (அல்லது வலது கிளிக்கில் Modify என்பதை தெரிவு செய்வதன் மூலமும் செய்யலாம்) மேல்மீட்பு (Pop Up) பெட்டியில் C என்பதற்கு பதிலாக D அல்லது நீங்கள் விரும்பும் வட்டின் வெயர் கொடுக்கவும்.





    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்திருக்குமென்றே நம்புகிறேன் இந்த தகவல் உங்களை போல மற்றவர்களுக்கும் சென்றடைய பதிவிற்கு வாக்கும் பதிவை பற்றியதான உங்களை கருத்தையும் எழுதுவதன் தகவலை உறுதிபடுத்தலாமே.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 2, 2010

    15

    கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி

  • Aug 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அறிவு ஒன்றுதான் குறைந்துகொண்டே போகும் பலனுக்கு ஆளாகாமல் இருக்கும் உற்பத்திக் கருவி.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமீபத்தில் நமது அண்ணா பல்கலைக்கழகம் கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளுக்கு தமிழாக்கம் கொடுத்துள்ளார்கள் இது அவர்களின் மிகப்பெரிய உழைப்பு இத்தனை வார்த்தைகளை தமிழ்படுத்துவது என்பது சாதரண காரியம் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    சில வார்த்தைகளை மட்டும் நான் உதாரணத்துக்கு கீழே கொடுத்திருக்கிறேன் அவர்கள் கிட்டதட்ட 4300 வார்த்தைகளுக்கு தமிழ் அறிஞர்களின் துனையோடு தமிழில் தொகுத்திருக்கிறார்கள்.

    adaptor - பொருத்தி
    add-on - கூட்டு உறுப்பு
    amplifier - பெருக்கி, மிகைப்பி
    analog - ஒப்புமை
    animation - அசைவூட்டம்
    assembler - பொறிமொழியாக்கி
    compile - தொகு
    dial-up - அழை, சுழற்று
    direct data entry - நேரடித் தரவுப் பதிவு
    disable – முடக்கு
    disclaimer - உரிமைத் துறப்பு
    disk duplication - வட்டு நகலாக்கம்
    display - காட்சியகம்
    ink jet printer - மை பீச்சு அச்சுப்பொறி
    integer - முழுஎண்
    keyboard - சாவிப் பலகை
    monitor - திரையகம்
    server - சேவையகம்
    string length - சர நீளம்
    suffix - பின்னொட்டு
    superconductor - மீக்கடத்தி
    synchronization - ஒத்தியக்கம்
    system loader - அமைப்பு ஏற்றி
    system loader - அமைப்பு ஏற்றி
    systems security - அமைப்புக் காப்பு
    tab - தத்தல்
    tag - அடையாள ஒட்டு
    task - பணிக்கடம்
    task panel - பணிக்கடச் சட்டகம்
    virus - நச்சுநிரல்


    இனி இது பற்றி மொத்த தகவலுக்காக இந்த பிடிஎப்தரவிறக்கி படித்து பயன்பெறுங்கள் நாமும் கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளை முடிந்தவரை தமிழில் எழுத முயற்சிப்போம்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Aug 1, 2010

    10

    ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு

  • Aug 1, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எல்லோவற்றையும் பார்க்கும் கண்கள் தன்னைப் பார்த்து கொள்வதில்லை

    பெண்களுக்கு எதிரானவனோ அல்லது பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு எதிராணவனோ இல்லை, காரணம் எனது பார்வையில் பெண்கள் பெருமையாகவே மதிக்கப்படுகிறார்கள் என்பதே பெண்கள் மதிக்கபடுவதையே ஆண்களும் விரும்புகின்றனர்

    ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்க்கு மரியாதையும் மதிப்பும் இருந்துகொண்டேதான் இருக்கிறது அந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்தால் நமக்கு வீரப்பெண்மனி ஜான்சி ராணியோ அல்லது வேலு நாச்சியாரோ கிடைத்திருப்பார்களா இல்லை அன்னை தெரசா தான் கிடைத்திருப்பாரா?

    ஒரு ஆண் ஒரு பெண்ணை மிகவும் மதிப்போடு தான் பார்க்கிறான், நீங்க சொல்லலாம் பேருந்தில் தொடங்கி அலுவலகம் வரை தொல்லை, இருக்காதான் செய்கிறது அவை எல்லாம் வக்கிரம் கொண்ட ஆண் சமூகம் தானே இப்படி செய்கிறது சரி நானும் உங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன் யாரோ ஒரிருவர் தவறு செய்வதால் மொத்த ஆண்களையும் குற்றம் சொல்வதா ஆண் என்பதால் பெற்ற தகப்பனை வெறுத்து விடுகிறோமா என்ன?

    சரி எத்தனையோ இடங்களில் ஆண்களும் பெண்களால் பாதிக்கபட்டுகொண்டுதான் இருக்கின்றனர் என்ன வெளியில் சொல்வதில்லை எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி இருப்பான் என்ன கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைனு சொல்லிகிட்டு போவான் அது தான் அவனோட தன்னம்பிக்கை எந்த பிரச்சினையானளும் அதை சமூகம் அறிந்துவிடக்கூடாது என நினைத்து பிரச்சினைகளை மறந்து விடுவான் அல்லது மறைத்து விடுவான் ஆனால் பெண்கள் அப்படியில்லை சின்ன பிரச்சினை என்றாலும் மற்றவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடத்தான் செய்கிறார்கள் ஒருவிதத்தில் பெண்களின் கண்ணீர்தான் அவர்களின் மிகப்பெரிய ஆயுதமும் அதே நேரத்தில் பலவீணமும் என்ன சரிதானே?

    பெண்களின் மேல் அதிக அன்பும் போற்றுதலும் வைத்திருக்கிறான் என்பதை நான் இப்படித்தான் எடுத்துகொள்கிறேன் பெண்ணின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டாடிக்கொண்டே தான் இருக்கிறான் ஒரு பெண் பருவ மாற்றம் அடைந்து பூப்படைந்துவிட்டால் அதை விழாவாக கொண்டாடுகிறார்கள் அடுத்து திருமணம் முடிந்து ஒரு வாரிசை சுமக்க ஆரம்பிதவுடன் எத்தனை சடங்ககள் சம்பிராதாயங்கள் செய்கின்றான் பெண் தாயாகும் போது அதை இந்த உலகம் எத்தனை சந்தோஷமாக கொண்டாடுகிறது யாராவது அதை வெறுக்கிறார்களா என்ன?

    ஆண்கள் பெண்களை வெரும் அழகுப்பொருள்களாக மட்டுமே பார்க்கின்றனர் இருக்கலாம் ஆண்கள் அழகு என்பதை ஆராதிக்கதானே செய்கின்றனர் உங்கள் அழகை ஆராதிப்பது உங்களுக்கு பெருமைதானே உங்கள் அழகை மெருகூட்டதானே வித விதமான ஆடைகள் சிகையலங்காரங்கள் ஆபரணங்கள் இப்படி எல்லாமே சரி நீங்களே சொல்லுங்க ஒரு பெண்ணுக்கு எது அழகு? 10,000ரூபாய் பட்டுச்சேலையும் 10பவன் நெக்லஸ் போட்டால் பெண்களுக்கு அழகு வந்துவிடுமா, இல்லை நாகரீகம் என்கிற பெயரில் அரைகுறை ஆடையும் டிஸ்கோ பப்பு என இருந்தால் அது அழகா ஒரு பெண்ணுக்கு மாங்கலயம் என்பது எவ்வளவு அழகு தெரியுமா 10பவன் நகையில இல்லாத அழகு ஒரு ஆண் கட்டும் மஞ்சல் கயிறில் இருக்கிறது தெரியுமா? அது உங்களை கட்டுபடுத்துவதற்கு அல்ல அப்பொழுதும் உங்களை போற்றவை காக்கவே ஒரு தாலி கயிரு கழுத்தில் கிடந்தா ரோட்டுல போறவங்க பார்த்தாலும் அடுத்த நிமிஷமே தாலி கண்ணில் பட்டதுமே அவனையறியாமல் அவன் தலை குணியும் அந்த தாலி உங்களுக்கு பெருமைதானே? அது உங்களை காக்கும் வேலிதானே இப்பெல்லாம் பெண்கள் தாலியை மறைத்துகொள்கிறார்கள் அதுதான் நாகரீகத்தின் உச்சமா என்ன தாலிதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் ஏன் திருமணம் செய்துகொள்கிறீர்கள் தவிர்த்து விடலாமே?

    சரி உடை விஷயத்தில் தான் எவ்வளவு மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு சேலையில் இல்லாத அழகா அரைகுறை ஆடையில் இருக்கிறது ஒரு பெண்ணின் குணத்தை அவளின் உடையும் வெளிப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா எது நாகரீகம்? நாகரீகம் பிறந்த காலத்தில உடை இல்லாத போது துணிகளுக்கு பதிலாக இலைகளை கட்டிகொண்டு நடந்தனரே பின்னர் படிப்படியார் ஆடை தரித்து தங்கள் உடலை மறைத்துகொண்டனரே அப்படி வளர்ந்த நாகரீகம் மீண்டும் உள்ள ஆடைகளை குறைப்பது தான் நாகரீகமா என்ன உங்களின் உடைகளே கொண்டு இந்த சமுதாயம் மதிப்பிடும் என்பது தெரியாதா ஆள் பாதி ஆடை பாதி என்பதன் அர்த்தம் படித்த நல்ல பதவியில் உள்ள பெண்களுக்கு கூடவா தெரியாது இல்லை நாகரீகம் கண்னை மறைத்து விட்டதா. சிலர் நாகரீகம் எனும் பெயரில் அரைகுறை ஆடை இட்டு காண்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கை வைக்கிறார்கள் சரி நீங்களே சொல்லுங்க அழகா சேலை உடுத்தி மங்களகரமாய் இருப்பது அழகா இல்லை அரைகுறை ஆடையுடன் பார்ப்பவரின் உணர்ச்சிகளை தூண்டுவது அழகா?

    அந்த காலத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்க்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள் நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்க்ள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை சரி குடும்ப நல நீதிமன்றம் வரை வந்திருக்கிறார்களே பிரச்சினைதான் என்னவென்று பார்த்தால் எனது கணவன் நான் டிவி பார்க்கும்போது டிவியை அனைத்துவிட்டார் என்றோ தூங்கும் போது குறட்டை விட்டார் எனவோ இருக்கும் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடிகிறது விட்டுக்கொடுத்தல் சகிப்பு தன்மை புரிந்துகொள்ளும் தன்மை இவை எல்லாவற்றையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் நான் தொலைபேசியில் அழைதால் பேசவில்லை கடைக்கு அழைத்தேன் வரவில்லை இதெல்லாம் ஒரு காரணமா?

    உங்களுக்கு தெரியாதாத இந்த காலத்தில் பொருளாதார தேவை என்பது மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது நீங்கள் உங்கள் கனவனோ அல்லது மனைவியையோ அலைபேசியில் அழைக்கிறீர்கள் ஒரு வேளை அலுவலக உயரதிகாரியிடம் அலுவலக பணியில் இருக்கும் போது எடுத்து பேச முடியாது இது ஆண் பெண் இருவருக்கும் தான் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் எடுத்து பேச முடியாது சத்தம் கேக்காத்தும் ஒரு காரணமாக இருக்கலாம் இதையெல்லாம் புரிந்துகொள்ள கூடிய விஷயம்தானே இதெல்லாம் ஒரு பிரச்சினை என்று குடும்ப நீதிமன்றம் செல்வது சரிதானா?

    சரி அடுத்தது ஒருவர் மேல் ஒருவர் சந்தேகம் ஒரு குடும்பத்தில் பண பிரச்சினை வேறு சில பிரச்சினைகள் எல்லாமே நாம் தீர்த்து விடலாம் சந்தேகம் எனும் பேய் நுழைந்தால் பின்னர் எல்லாவற்றிலுமே சந்தேகம்தான் சுருக்கமாக சொல்லப்போனால் மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி அப்படித்தான் தொட்டதுக்கெல்லம் குற்றம் அதுக்காக தவறுகளை கண்டும் காணாமல் செல்வதில்லை இந்த உலகத்தில இருக்கிற எல்லா உயிரினங்களும் மற்ற சக உயிரிணங்கள் மீது அன்பு வச்சுருக்கு ஆனால் அவற்றுக்கு எல்லாம் ஐந்தறிவுதான் மனிதர்களாகிய நமக்கு ஆறாவது அறிவும் உண்டு இருந்தும் என்ன செய்ய நாம் தான் எதையும் ஆரய்ந்து பார்ப்பதில்லையே.

    கணவன் மனைவி சம்பாஷனைகள் குறைந்து வருகிறது காரணம் இருவரும் வேலைக்கு சென்று வருவதால் இருவருக்குமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உளைச்சல் இருக்கதான் செய்யும் ஆனால் இதில் ஆண்கள் மட்டும் மனைவியிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு அது உண்மைதான் ஒருவேளை அது அவனின் ஆளுமையை உணர்த்துவதற்காக கூட அப்படி நடக்கலாம் என்னைப்பொருத்த வரை ஆனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பா இருங்க மனம் விட்டுப்பேசுங்க, சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்க விட்டுக்கொடுக்குறதால பெரிசா என்னங்க இழந்துற போறோம் விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்

    ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும்,பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிஞ்சுக்குங்க நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை சரி ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம் இல்லையென்றால் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம் கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும் உங்களுக்கு தெரியுமா உளவியாலகவும் மருத்துவ உலக் அடிப்படையில் பார்த்தாலும் ஒரு ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் விரும்புகின்றனர் சரி நம்ம வீட்ட எடுத்துக்குவோம் நீங்க ஒரு தாய் உங்களுக்கு உங்க மகன் மேல் கொஞ்சம் அதிகமாகவே அன்பு இருக்கதான் செய்யும் சரி நீங்கள் ஒரு தந்தை உங்களுக்கு மகள் மேல் அன்பு அதிகாமவே தான் இருக்கும் இதற்கு பெரிய ஆராய்சியெல்லாம் தேவையில்லை நம்மை நாம் புரிந்துகொள்ள் முயற்சித்தாலே புரிந்துவிடும்

    ஒரு ஆண் அல்லது பெண் இருவருக்குமே அழகு என்பது வெரும் நிறத்திலோ அல்லது விலையுயர்ந்த ஆடையிலோ ஆபரணங்களிலோ இல்லை அது நிரந்திரமும் இல்லை அது தானே இயற்கை வயது கூடும் தோறும் வாலிபம் மாறிக்கொண்டேதானே வருகிறது. புற அழகை விட்டு அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் அன்பால் ஆளுமை செய்வோம் விட்டுக்கொடுப்போம் ஆணும் பெண்ணும் ஒன்றுதான் பால் மட்டுமே வேற என்பதை புரிந்துகொள்வோம் ஒன்று படுவோம் மேம்படுவோம்


    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    12

    நினைவுகளில் வாழும் அப்பா

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: இருக்கும் வரை தெரியாது இல்லாததின் அருமை.

    எல்லோருக்கும் போலதான் எனக்கும் அப்பா ஆனால் நான் அவர்மேல் அன்பு வச்சிருந்தேன் ஆனால் எனக்கு வெளிக்காட்ட தெரியல ஆனால் அப்பா இறந்த பின் தான் அவரின் அருமை புரிந்தது. நண்பர்களே நம் அப்பா,அம்மா தான் நம் நிகழ்கால தெய்வங்கள் இருக்கும் போது காட்டாத பாசம் மரித்த பின் சொல்லி அழுவதில் பயனில்லை. இந்த பதிவு பல மாதங்களுக்கு முன்னர் எழுதியது நம் தளத்தை தினம் வாசிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

    அப்பா:

    எப்படி எப்படியெல்லாமோ
    கேள்விக்கனை கொண்டு
    எனை துளைத்தெடுப்பாள்- அம்மா
    ஒரேயொரு
    நேர் பார்வையில்- என்
    மன நிலை புரிந்துகொள்வார் - அப்பா

    அப்பாவிடம்
    அதிகம் பேசியதில்லை
    யாரோ சொல்லி கேட்டிருக்கிறேன்
    என்னைப்பற்றி
    ஏதோவெரு சமயம் பெருமையாக
    அப்பா பேசியதாக

    அம்மாவிடம்
    எதிர் வாதம் செய்யும் நான்
    அப்பாவின் முகம் வாடும் போது
    உணர்ந்திருக்கிறேன் என் தவறை

    உன் அப்பா
    எத்தனை நல்லவராக
    இருக்கிறார் - என
    நண்பர்கள் என்னிடம்
    சொல்லும் போதுதான்
    எனக்கு தெரிந்தது
    எத்தனை பேருக்கு
    கிடைக்காத அப்பா
    எனக்கு மட்டும் கிடைத்திருக்கிறாறென

    கேட்ட வரம்
    உடனே கொடுக்க முடியாத
    கடவுள்தான்
    என்னை மகனாக படைத்தார்
    என் அப்பாவுக்கு
    வேண்டுவென வேண்டும் சமயத்தில்
    எனக்கு கிடைத்திட

    குழந்தை பருவத்தில்
    கைப்பிடித்து நடைபயில
    சொல்லி கொடுத்து
    நான் தனியே நடந்தபோது
    என்னைப்பற்றி
    என்னவெல்லாம் நினைத்திருப்பார்?
    என் கால் தடுமாறி
    விழும்போது பதறிப்போகும் அப்பா

    இன்று
    நான் தவிக்கின்ற போது பதறாமல் இறுக்கிறார்
    மீளா துயிலில்

    நண்பர்களோடு பேசும்போதெல்லாம்
    கர்வத்தோடு
    சொல்லியிருக்கிறேன்
    என் அப்பாவின் சிந்தையெல்லாம்
    என்னை பற்றியதானிருக்குமென்று

    இன்று!
    அப்பா இறந்த பின்னர்
    நான் யாரென்று எனக்கும் தெரியவில்லை
    அனைத்து கொள்ள ஆதரவும் இல்லை

    அப்பா இறந்த போது
    யார் யாரோ
    துக்கம் விசாரித்தார்கள்
    நாங்கள் இருக்கிறோம் என்றார்கள்
    என்றாலும்
    என் அப்பாவைப்போல்
    யார் இருக்க முடியும்?

    அப்பா உயிரோடு இருந்தவரை
    அவர் மீது - என்
    பாசத்தை வெளிக்காட்டியதேயில்லை
    அவரின் இழப்பு தாங்காது
    கதறி அழுதபோது
    கண்ணீர் துடைக்க- என்
    அருமை அப்பாவும் இல்லை

    அப்பா உயிரோடு இருந்தவரை
    இழப்பு எதுவுமில்லை
    இறப்புக்கு பின்
    இழப்பதற்கு எதுவுமில்லை


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர