Mar 25, 2010

8

எங்கே என் தேசம்

  • Mar 25, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஓரு வரி கருத்து:பேச்சு மனிதனின் இயற்கை குணம் அதில் எழுதிய மொழியிலிருக்கும் செயற்கை குணம் இருக்காது

    நம்ம நாடு ஊழல் பட்டியலில் உலகிலேயே பத்தொன்பதவாது நாடாக இருக்கிறதாம் இன்னும் சில ஆண்டுகளில் நாம் வல்லரசாக மாறுகிறோமோ இல்லையோ நிச்சியம் ஊழல் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துவிடுவோமோ என பயமாயிருக்கிறது இந்த நேரத்தில் இந்தியன் என்கிற படத்தில் உள்ள வசனம் தான் ஞாபகம் வருகிறது எல்லா நாடுகளிலும் ஊழல் இருக்கதான் செய்கிறது என்ன அங்கெல்லாம் அதாவது ஒரு வேலையை வரம்பு மீறி செய்துமுடிக்க கைக்கூலி இங்கே ஒருவன் அவன் வேலையே செய்வதற்கே கைக்கூலி கொடுக்கவேண்டும்

    எங்கே என் தேசம்

    அறிஞர் அண்ணாவின்
    கையிலிருக்கும் புத்தகம் வாசிக்கும்
    காக்கைக்கும் தெரிந்திருக்கும்
    நம் தேசத்தின் அவலம்

    காஷ்மீர் யுத்தத்தில்
    தொடங்கியது பேரம்
    எதிரிகளை அழிக்க செல்ல
    வாங்கிய வாகனத்தில் ஊழல்

    விவாசாயிக்கு உரம்
    மானையத்தில் வழங்குவோமென
    துருக்கி கம்பெனியில்
    வாங்காத யூரியாவில் ஊழல்

    பணம் பண்ணலாமென
    கனவோடு பங்கு வர்த்தகம்
    சென்றால் அங்கேயும்
    பங்கு பத்திர ஊழல்

    உலகத்தை உள்ளங்கையில்
    நிறுத்திய அலைபேசியில்
    அலைக்கற்றை வழங்கியதில்
    முறைகேடான ஊழல்

    பொங்கலுக்கு புதுச்சேலை
    கிடைக்குமென காத்திருந்த
    பொக்கைவாய் கிழவியின்
    சந்தோஷத்திலும் ஊழல்

    பேருந்தில் சில்லரை
    இல்லையென்கிற பெயரில்
    நாம் அறிந்தே நடக்கும்
    பகற்கொள்ளை ஊழல்

    இறந்தவனே அலறி எழுந்து
    ஆச்சரியப்படும்
    அளவிற்கு இருந்தது
    சுடுகாட்டு ஊழல்

    யுத்தத்தில்
    இறந்தவனை- அடக்கம்
    செய்த சவப்பெட்டியிலும்
    சவப்பெட்டி ஊழல்

    எங்கே போய் சொல்ல
    நம் பாதுகாப்புக்காக
    வாங்கிய பீரங்கியிலும்
    இருந்ததாம் ஊழல்


    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்



    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    8 Comments
    Comments

    8 Responses to “எங்கே என் தேசம்”

    ஜிஎஸ்ஆர் said...
    April 20, 2010 at 9:41 AM

    @buruhaniibrahim

    தங்களை போன்றவர்களின் அன்பும் ஊக்கமும் மேலும் என்னை எழுத தூண்டுகிறது என்றால் அது மிகையில்லை


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Kumar said...
    August 18, 2010 at 10:58 PM

    மக்கள் தான் ஊழலுக்கு அடிப்படை காரணம். தேர்தலில் அதிகம் செலவழிக்கும் வேட்பாளர்க்கு தான் வோட்டு போடுவார்கள். வெற்றி பெற்றவன் போட்ட Investmenta எடுக்காம மக்கள் சேவையா பண்ணுவான்??

    காமராஜர், கக்கன் போன்ற போன்ற ஊழலுக்கு எதிரானா அரசியல்வாதிகளை தோற்கடித்த பெருமை நம் மக்களுக்கு உண்டு. கருணாநிதி மக்களின் இந்த சரியான நாடிய பிடிச்சு சக்க போடு போடுறாரு...


    ஜிஎஸ்ஆர் said...
    August 21, 2010 at 9:11 AM

    @Kumar உண்மைதான் நண்பரே மக்களாகிய நாமும் ஊழலுக்கு ஒரு காரணமாகத்தான் இருக்கிறோம்

    \\மக்கள் தான் ஊழலுக்கு அடிப்படை காரணம். தேர்தலில் அதிகம் செலவழிக்கும் வேட்பாளர்க்கு தான் வோட்டு போடுவார்கள். வெற்றி பெற்றவன் போட்ட Investmenta எடுக்காம மக்கள் சேவையா பண்ணுவான்??

    காமராஜர், கக்கன் போன்ற போன்ற ஊழலுக்கு எதிரானா அரசியல்வாதிகளை தோற்கடித்த பெருமை நம் மக்களுக்கு உண்டு. கருணாநிதி மக்களின் இந்த சரியான நாடிய பிடிச்சு சக்க போடு போடுறாரு... \\

    \\வெற்றி பெற்றவன் போட்ட Investmenta எடுக்காம மக்கள் சேவையா பண்ணுவான்??\\

    அதைத்தானே வந்ததும் பண்றாங்க

    \\காமராஜர், கக்கன் போன்ற போன்ற ஊழலுக்கு எதிரானா அரசியல்வாதிகளை தோற்கடித்த பெருமை நம் மக்களுக்கு உண்டு. \\

    அந்த பெருமை நம் மக்களையே சேரும் நமக்குத்தான் நல்லவர்களேயே பிடிக்காதே

    \\கருணாநிதி மக்களின் இந்த சரியான நாடிய பிடிச்சு சக்க போடு போடுறாரு.\\

    நானும் இதை ஆமோதிக்கிறேன்


    ம.தி.சுதா said...
    October 31, 2010 at 11:10 PM

    ஃஃஃஃஃபொங்கலுக்கு புதுச்சேலை
    கிடைக்குமென காத்திருந்த
    பொக்கைவாய் கிழவியின்
    சந்தோஷத்திலும் ஊழல்ஃஃஃஃஃ
    அருமை என்ன ஒரு எடுத்தக் காட்டு


    ஜிஎஸ்ஆர் said...
    November 1, 2010 at 11:50 AM

    @ம.தி.சுதாநம் அரசியல்வாதிகள் தான் யார் வயிற்றில் அடித்தாவது தன் 21 பரமபரை வாழ கொள்ளையடிக்கிறார்களே


    Vengatesh TR said...
    November 28, 2010 at 1:27 PM

    .ஊழலுக்குள்ளே பிறக்கிறோம்(வரதட்சனை), ஊழலுக்குள்ளே வாழ்கிறோம்(govt), ஊழலுக்குள்ளே சாகிறோம்(LIC) !


    .தான் வாங்கும் லஞ்சத்தில், தினமும் பாதி-அளவை நல்ல-செயல்களை செய்ய செலவிட முற்பட்டாலே போதும், விஞ்ஞானத்தில் நமது தேசத்தின் பெயர் கட்டாயம் முதல் இடம் பிடிக்கும் !


    .ஊழலை பகிர்ந்து கொண்டதற்கு, நன்றி நண்பரே !


    Vengatesh TR said...
    November 28, 2010 at 1:29 PM

    .மன்னிக்கவும், பொருள் பிழை ஆகிவிட்டது


    .ஊழலை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு, நன்றி நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:20 AM

    @சிகப்பு மனிதன்பரவாயில்லை நண்பரே


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர