Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts
Jan 10, 2012
3
Jan 10, 2012
ஜிஎஸ்ஆர்
தங்க நாணயம் 99
ஒரு வரி கருத்து: மனிதன் பிறப்பது மெய்ஞனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது குறும்படங்களை தான்.. உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது 10 நிமிடத்திற்குள் எத்தனை அழகாய் ஆழமாய் அந்த உணர்வுகளை நமக்குள் உள்வாங்க வைத்துவிடுகிறார்கள் அதிலும் கனேஷ்குமார் டீம் ஒன்று இருக்கிறது அவர்களின் நகைச்சுவை குறும்படங்கள் நன்றாயிருக்கும் நேரமிருந்தால் பாருங்களேன்.
நான் விரும்பும் தளங்களில் pkp
, urssimbu
, www.mybloggertricks.com
இவைகளும் அடங்கும் இதில் பிகேபி
குறித்தும் சிலம்பரசன்
குறித்தும் சில பதிவுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் ஆனால் பலமுறை பாகிஸ்தான் நண்பர் Mohammad Mustafa Ahmedzai எழுதும் www.mybloggertricks.com
குறித்து ஏதாவது ஒரு பதிவில் வெளிப்படுத்த நினைப்பேன் ஆனால் குறிப்பிடுவதற்கான இடம் இல்லாததால் இதுவரை அவரை பற்றி குறிப்பிடமுடியவில்லை மேலும் அவர் எழுதுவது எல்லாமே பிளாக்கர் தொழில்நுட்பம், HTML நிரல்கள் தான் என்பதால் அதை எடுத்து மீண்டும் ஒரு மறுபதிப்பு செய்வதில் விருப்பமில்லை இவருடைய தள பதிவுகள் அதிலும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவுகள் பரவலாய் இனையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பேதமில்லாமல் பரவிக்கிடக்கிறது. மேலும் பிளாக்கர் தொழில்நுட்ப தளங்களின் தகவல்களுக்கு பிளாக்கர் தொழில்நுட்ப தளங்கள்
.
இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் Mohammad Mustafa Ahmedzai
ஒரு குட்டி கதையை தன் தளத்தில் சொல்லியிருந்தார் அதையே கொஞ்சம் சுருக்கமாக நமது நடையில் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு வேளை நான் விரும்பியது போல யோசித்த்து போல உங்களையும் யோசிக்க வைக்கலாம்.
ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் 80% நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலைபார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள் ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவணம் செய்யும் கூலித்தொழிலாளி தன் குழந்தையுடன் குடும்ப சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார் உடனே மேனேஜர் அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார் மேலும் கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.
ஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித்தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டுவிடுகிறார்கள் விடிந்த்தும் கூலித்தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார் அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார் அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்போதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.
கூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்கிறார் அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார் அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான் ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.
இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு (தெருக்கோடிக்கு அல்ல) ஆசைப்படும். நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்.
உலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும் பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத்தான் இருக்கும்.
எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல பெரும் கோடீஸ்வரர்களிலும் சில விதி விலக்குகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு : வார்ன் பப்பட், பில்கேட்ஸ் போன்றவர்கள் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதற்கு தயாராய் இருக்கிறார்கள் அதிலும் வார்ன் பப்பட் கிட்டத்தட்ட தன் பெருவாரியான சொத்துக்களை டிரஸ்டுகளுக்கும் பொது நலன்களுக்கும் கொடுத்துவிட்டார் சமீபத்தில் கூட தன்னிடம் இருப்பதில் 1 மில்லியன் டாலர்கள் மட்டும் எனக்கு போதும் என்பதாக ஒரு செய்தி வந்திருந்தது இவர்களை போல செய்து விட யாருக்கும் மனம் வரும்?
இன்னொருவர் இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரு மேஜிக்கல் போன் (ஐபோன்) சொந்தக்கார்ர் முன்னவர்கள் தன்னிடம் இருப்பதை டிரஸ்டுகளுக்கு அள்ளிக்கொடுத்தனர் ஆனால் இவரோ இவர் வரும் முன்பே இயங்கிகொண்டிருந்த டிரஸ்டையும் தான் வந்ததும் நிறுத்தி விட்டார்...பார்த்தீர்களா மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்...
இந்த வாழ்க்கையில இப்ப இருக்கிற இந்த நிமிடம் நமக்கு சொந்தமானது முடிந்தவரை எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே நமக்கு நிம்மதி வந்துவிடும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவச்சு வாழ பழகுவோம்?...பதிவு கோர்வையில்லாமல் இருக்கலம் ஆனால் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிருங்களேன்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது குறும்படங்களை தான்.. உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது 10 நிமிடத்திற்குள் எத்தனை அழகாய் ஆழமாய் அந்த உணர்வுகளை நமக்குள் உள்வாங்க வைத்துவிடுகிறார்கள் அதிலும் கனேஷ்குமார் டீம் ஒன்று இருக்கிறது அவர்களின் நகைச்சுவை குறும்படங்கள் நன்றாயிருக்கும் நேரமிருந்தால் பாருங்களேன்.
நான் விரும்பும் தளங்களில் pkp
, urssimbu
, www.mybloggertricks.com
இவைகளும் அடங்கும் இதில் பிகேபி
குறித்தும் சிலம்பரசன்
குறித்தும் சில பதிவுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் ஆனால் பலமுறை பாகிஸ்தான் நண்பர் Mohammad Mustafa Ahmedzai எழுதும் www.mybloggertricks.com
குறித்து ஏதாவது ஒரு பதிவில் வெளிப்படுத்த நினைப்பேன் ஆனால் குறிப்பிடுவதற்கான இடம் இல்லாததால் இதுவரை அவரை பற்றி குறிப்பிடமுடியவில்லை மேலும் அவர் எழுதுவது எல்லாமே பிளாக்கர் தொழில்நுட்பம், HTML நிரல்கள் தான் என்பதால் அதை எடுத்து மீண்டும் ஒரு மறுபதிப்பு செய்வதில் விருப்பமில்லை இவருடைய தள பதிவுகள் அதிலும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவுகள் பரவலாய் இனையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பேதமில்லாமல் பரவிக்கிடக்கிறது. மேலும் பிளாக்கர் தொழில்நுட்ப தளங்களின் தகவல்களுக்கு பிளாக்கர் தொழில்நுட்ப தளங்கள்
.
இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் Mohammad Mustafa Ahmedzai
ஒரு குட்டி கதையை தன் தளத்தில் சொல்லியிருந்தார் அதையே கொஞ்சம் சுருக்கமாக நமது நடையில் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு வேளை நான் விரும்பியது போல யோசித்த்து போல உங்களையும் யோசிக்க வைக்கலாம்.
ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் 80% நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலைபார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள் ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவணம் செய்யும் கூலித்தொழிலாளி தன் குழந்தையுடன் குடும்ப சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார் உடனே மேனேஜர் அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார் மேலும் கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.
ஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித்தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டுவிடுகிறார்கள் விடிந்த்தும் கூலித்தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார் அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார் அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்போதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.கூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்கிறார் அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார் அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான் ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.
இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா? இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு (தெருக்கோடிக்கு அல்ல) ஆசைப்படும். நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்.
உலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும் பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத்தான் இருக்கும்.
எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல பெரும் கோடீஸ்வரர்களிலும் சில விதி விலக்குகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு : வார்ன் பப்பட், பில்கேட்ஸ் போன்றவர்கள் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதற்கு தயாராய் இருக்கிறார்கள் அதிலும் வார்ன் பப்பட் கிட்டத்தட்ட தன் பெருவாரியான சொத்துக்களை டிரஸ்டுகளுக்கும் பொது நலன்களுக்கும் கொடுத்துவிட்டார் சமீபத்தில் கூட தன்னிடம் இருப்பதில் 1 மில்லியன் டாலர்கள் மட்டும் எனக்கு போதும் என்பதாக ஒரு செய்தி வந்திருந்தது இவர்களை போல செய்து விட யாருக்கும் மனம் வரும்?
இன்னொருவர் இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரு மேஜிக்கல் போன் (ஐபோன்) சொந்தக்கார்ர் முன்னவர்கள் தன்னிடம் இருப்பதை டிரஸ்டுகளுக்கு அள்ளிக்கொடுத்தனர் ஆனால் இவரோ இவர் வரும் முன்பே இயங்கிகொண்டிருந்த டிரஸ்டையும் தான் வந்ததும் நிறுத்தி விட்டார்...பார்த்தீர்களா மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்...
இந்த வாழ்க்கையில இப்ப இருக்கிற இந்த நிமிடம் நமக்கு சொந்தமானது முடிந்தவரை எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே நமக்கு நிம்மதி வந்துவிடும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவச்சு வாழ பழகுவோம்?...பதிவு கோர்வையில்லாமல் இருக்கலம் ஆனால் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிருங்களேன்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 12, 2010
20
Nov 12, 2010
ஜிஎஸ்ஆர்
கடவுள் வெறும் மாயையா?
ஒரு வரி கருத்து: நம்பிக்கை என்கிற அச்சானியின் துனையோடு தான் வாழ்க்கையின் சக்கரம் சுழல்கிறது.
வணக்கம் நண்பர்களே என்னுடைய கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்கிற பதிவில் நண்பர் இப்படியான ஒரு கருத்தையும் எழுதி கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
வருணன் said...
வணக்கம் நண்பரே..
தீபாவளி வாழ்த்துக்கள்..
மிகவும் நல்ல பதிவு.
//...சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!...//
இங்கு இது எனக்கு மிக பிடித்த கருத்து.....
இருந்தபோதும்..
நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆனால் காலையில் பத்திரிக்கை பார்க்கும் போது ஜோதிடம் சார்ந்த விடயங்கலை கட்டாயம் பார்ப்பேன் என்னை பொறுத்தவரை கடவுள் என்பது எமது உள் உணர்வெ இவ்வாரான ஜோதிடம் சார்ந்த விடயங்கலை படிக்கும் போது அது அதற்கு எற்றவாறு என்னை வழிநடத்துகின்றது.அதாவது குற்றம் செய்த மனம் குறுகுக்கும் என்பர்களே அது போலதான்.ஆனால் ஜொசித்துப் பார்த்தால் உள் உணர்வு(எனக்குள் இருக்கும் கடவுள்)கடவுளை நம்புகிறது போலதன் இறுக்கிறது. எதொ எனது அறிவினால் கடவுள் இருக்குரார இல்லையா என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை....
உங்களால் முடிந்தால் இதற்கான முடிவை எழுதுங்கள்....
மிகச் சாதாரணமாக கேள்வியை கேட்டுவிட்டார் இதற்கு ஒரு முடிவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதில் எழுதுவது, என்பது என்னால் நிச்சியமாக முடியாது காரணம் இந்த உலகத்தில் ஒரு பக்கம் கடவுள் இருக்கிறார் என்பதான வாதங்கள் மறுபக்கம் கடவுள் இல்லை என்பதான மறுப்பு வாதங்கள், இன்னொரு பக்கம் நான் வழிபடுவது மட்டுமே கடவுள் என வாதங்கள் என பல காலங்களாக இருந்துகொண்டு வருகிறது ஆனால் இந்த மூன்று தரப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது! இந்த மூவராலுமே யாவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.
கடவுளை எவரும் காணவில்லை வெறும் புராணங்களிலும் இதிகாசகங்களிலும் படித்ததை மட்டும் வைத்து கடவுள் இருக்கிறார் எனவோ அல்லது இல்லையென்ற முடிவுக்கோ வந்துவிட முடியாது. என்னைப் பொறுத்த வரை அது ஒரு உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
பிறக்கும் போதே யாரும் நாத்திகனாகவோ அல்லது ஆத்திகனாகவோ இருப்பதில்லை அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவர்களாகவே மாறியிருக்க வேண்டும். மிக சமீபத்தில் கூட ஒரு பகுத்தறிவாளர் ஒருவர் கடவுள் இல்லையென்று அவர் வாழ் நாளில் விவாதித்த மொத்த விஷயங்களையும் கருத்துகளையும் ஒட்டு மொத்தமாக மறந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்! ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு? இந்த விஷயம் தான் ஒருவரின் நம்பிக்கை இந்த உணர்வுக்கு பெயர் தான் கடவுள்.
கடவுளை மறுப்பவரும், கடவுளை நினைப்பவரும், கடவுளை பற்றிய புரிதலை நம்பிக்கையின் அடிப்படையில் தான் விவாதிக்கிறார்கள். இந்த பூமியில் இயற்கையை நாம் படைத்தோமா? அல்லது இல்லாத ஒரு உயிரைத்தான் படைத்திருக்கிறோமா? ஆனால் இயற்கையை நம்புவோம்,இரு வேறு உயிர்களை இனைத்து புதிதாய் ஒரு உயிர் உருவாக்குவோம் ஆனால் இது வரை உலகத்தில் இல்லாத உயிரை படைத்திருக்கிறோமா?
நம்பிக்கையும், உணர்வும் தான் கடவுள் என்பதற்கான சில உதாரணங்களை பார்ப்போம். கடவுள் இருக்கிறார் என நம்பும் நம் மக்கள் அனைவரும் அறிவியல் படித்தவரும் இல்லை கடவுள் இல்லையென்பவர்கள் எல்லம் மொத்தமாக அறிவியலையும் அர்த்த சாஸ்திரத்தையும் கற்று தெளிந்தவரும் இல்லை. இப்போது நான் இதை சொல்ல வருவதன் காரணம் ஒருவரின் நம்பிக்கையே கடவுள் இருக்கிறானவோ அல்லது இல்லையென்கிற விஷயத்தில் அடிப்படையாக இருக்கிறது.
கடவுளை மறுப்பவர்களின் பார்வையில் மூட நம்பிக்கையாகவோ அல்லது அறிவியல் பூர்வமாக விவாதிக்கும் சில விஷயங்களை பார்ப்போம். சாதரணமாக திருவிழாக் காலங்களில் கோவிலில் நேர்த்திகடனாக செய்யும் பூக்குளி மிதித்தல், அலகு குத்துதல் இன்னும் எத்தனையோ விதமான நேர்த்திகடன்கள், வழிபாடுகள் செய்யும் நபர்கள் அதை செய்யும் முன் அறிவியலை உணர்ந்து தான் செய்கிறார்களா? அல்லது நம்பிக்கையில் செய்கிறார்களா? சின்னதாக ஒரு குண்டூசி குத்தி விட்டால் வேதனைப்படும் நம்மில் பலரும் கண்டிருக்க கூடும் திருவிழாக்களில் மக்களின் நேர்த்திகடனின் பெயரில் செய்யும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இப்படியெல்லாம் சொல்வதால் நான் மூட நம்பிக்கையுள்ளவனாக நீங்கள் நினைத்தால் அதற்காக கவலையில்லை நம்மை எல்லோரையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தி இருக்கிறது அது இயற்கை, இந்த இயற்கையை மிஞ்சிய சக்தி ஒன்றுமில்லை இதை நம்புவர்கள் இயற்கைக்கு “கடவுள்” என பெயர் வைத்து அழைக்கலாம் இல்லை என மறுப்பவர்கள் இருக்கலாம் அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் “கடவுள் இல்லை” என்பதாக இருக்கும் இங்கேயும் ஒருவரின் நம்பிக்கை தான் கடவுள் உண்டு அல்லது இல்லை என்கிற விஷயத்தை ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் வைக்கிறது.
எனக்கு தெரிந்த உறவினர் அவரோ எந்தவித படிப்பறிவும் இல்லாதவர் அவருக்கு அறிவியலை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது ஒரு முறை அவர் கோவிலில் வழிபட சென்ற போது அவருக்கு சாமி வந்துவிட்டதென அவர் ஆடிய போது அவரின் நாக்கில் ஒரு பெரிய சூடத்தை கொளுத்தி வைத்தார்கள் அதை எரிந்து முடியும் வரை நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் அவரிடம் உங்களுக்கு சூடத்தை நாவில் எரிய விடும் போது சுடவில்லையா எனக்கேட்ட போது அவரோ எப்போது எரிந்தது என்பது போல பார்த்தார் நானும் அன்று முதல் இப்பவும் இந்த நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் நான் கவணிக்கிறேன் இந்த உணர்வு தான் ஒரு வேளை கடவுளின் சக்தி என்பதாக இருக்குமோ? சரி ஒருவேளை இதில் அறிவியல் பூர்வமான ஏதாவது சங்கதி இருந்தாலும் இது எப்படி அவருக்கு தெரிந்தது? சரி அப்படியே இருந்தாலும் நாம் அதை செய்வோமா? இதுவும் நம்பிக்கையின் பெயரில் தான் நடக்கிறது.
இனி அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை பார்ப்போம் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதும் அதே நேரத்தில் மின்சாரம் செல்லும் இரண்டு கம்பிகளில் ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும் காக்கை, குருவி, இன்ன பிற உயிர்களுக்கு ஒன்றுமே ஆகாது என்பது படித்தவர் முதல் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் இதைப்பற்றி பாடப்புத்தகத்திலும் படித்திருக்கிறோம் ஆனாலும் நம்மில் யாரவாது அறிவியாலால் நிருபிக்கபட்ட ஒரு உண்மையை உணர்ந்து நாம் மின்சார கம்பியை பிடிப்போமா? அப்படியானல் அறிவியலை நாம் நம்பவில்லையா?!
இன்னும் ஒரு விஷயத்தை பார்க்கலாம் நாம் யாருமே நம் தாயின் வயிற்றில் கருவரையில் இருக்கும் போது இவள் தான் தாய் என அறிந்திருக்கவில்லை ஆனால் வளர்ந்து வரும் போது நாமாகவே நம் தாயை அடையாளம் காண்கிறோம், உள்ளத்தால் உணர்கிறோம். இப்பொழுதும் குழந்தைகளை கவணித்து பாருங்கள் தாயின் அசைவுகளையும் அன்பையும் உணர்ந்து தாயின் அரவனைப்பை விரும்புவார்கள் இப்படித்தான் கடவுளும் அது ஒரு உணர்வு, நம்பிக்கை, தன்னை மறக்கும் அமானுஷ்ய நேரம் என பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்.
நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டது போல நம்மில் கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் அல்லது ஆரோக்கியமான கருத்துக்களை வைக்க நினைத்தால் தயங்காமல் எழுதுங்கள் உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே என்னுடைய கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்கிற பதிவில் நண்பர் இப்படியான ஒரு கருத்தையும் எழுதி கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
வருணன் said...
வணக்கம் நண்பரே..
தீபாவளி வாழ்த்துக்கள்..
மிகவும் நல்ல பதிவு.
//...சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!...//
இங்கு இது எனக்கு மிக பிடித்த கருத்து.....
இருந்தபோதும்..
நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆனால் காலையில் பத்திரிக்கை பார்க்கும் போது ஜோதிடம் சார்ந்த விடயங்கலை கட்டாயம் பார்ப்பேன் என்னை பொறுத்தவரை கடவுள் என்பது எமது உள் உணர்வெ இவ்வாரான ஜோதிடம் சார்ந்த விடயங்கலை படிக்கும் போது அது அதற்கு எற்றவாறு என்னை வழிநடத்துகின்றது.அதாவது குற்றம் செய்த மனம் குறுகுக்கும் என்பர்களே அது போலதான்.ஆனால் ஜொசித்துப் பார்த்தால் உள் உணர்வு(எனக்குள் இருக்கும் கடவுள்)கடவுளை நம்புகிறது போலதன் இறுக்கிறது. எதொ எனது அறிவினால் கடவுள் இருக்குரார இல்லையா என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை....
உங்களால் முடிந்தால் இதற்கான முடிவை எழுதுங்கள்....
மிகச் சாதாரணமாக கேள்வியை கேட்டுவிட்டார் இதற்கு ஒரு முடிவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதில் எழுதுவது, என்பது என்னால் நிச்சியமாக முடியாது காரணம் இந்த உலகத்தில் ஒரு பக்கம் கடவுள் இருக்கிறார் என்பதான வாதங்கள் மறுபக்கம் கடவுள் இல்லை என்பதான மறுப்பு வாதங்கள், இன்னொரு பக்கம் நான் வழிபடுவது மட்டுமே கடவுள் என வாதங்கள் என பல காலங்களாக இருந்துகொண்டு வருகிறது ஆனால் இந்த மூன்று தரப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது! இந்த மூவராலுமே யாவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.
கடவுளை எவரும் காணவில்லை வெறும் புராணங்களிலும் இதிகாசகங்களிலும் படித்ததை மட்டும் வைத்து கடவுள் இருக்கிறார் எனவோ அல்லது இல்லையென்ற முடிவுக்கோ வந்துவிட முடியாது. என்னைப் பொறுத்த வரை அது ஒரு உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
பிறக்கும் போதே யாரும் நாத்திகனாகவோ அல்லது ஆத்திகனாகவோ இருப்பதில்லை அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவர்களாகவே மாறியிருக்க வேண்டும். மிக சமீபத்தில் கூட ஒரு பகுத்தறிவாளர் ஒருவர் கடவுள் இல்லையென்று அவர் வாழ் நாளில் விவாதித்த மொத்த விஷயங்களையும் கருத்துகளையும் ஒட்டு மொத்தமாக மறந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்! ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு? இந்த விஷயம் தான் ஒருவரின் நம்பிக்கை இந்த உணர்வுக்கு பெயர் தான் கடவுள்.
கடவுளை மறுப்பவரும், கடவுளை நினைப்பவரும், கடவுளை பற்றிய புரிதலை நம்பிக்கையின் அடிப்படையில் தான் விவாதிக்கிறார்கள். இந்த பூமியில் இயற்கையை நாம் படைத்தோமா? அல்லது இல்லாத ஒரு உயிரைத்தான் படைத்திருக்கிறோமா? ஆனால் இயற்கையை நம்புவோம்,இரு வேறு உயிர்களை இனைத்து புதிதாய் ஒரு உயிர் உருவாக்குவோம் ஆனால் இது வரை உலகத்தில் இல்லாத உயிரை படைத்திருக்கிறோமா?
நம்பிக்கையும், உணர்வும் தான் கடவுள் என்பதற்கான சில உதாரணங்களை பார்ப்போம். கடவுள் இருக்கிறார் என நம்பும் நம் மக்கள் அனைவரும் அறிவியல் படித்தவரும் இல்லை கடவுள் இல்லையென்பவர்கள் எல்லம் மொத்தமாக அறிவியலையும் அர்த்த சாஸ்திரத்தையும் கற்று தெளிந்தவரும் இல்லை. இப்போது நான் இதை சொல்ல வருவதன் காரணம் ஒருவரின் நம்பிக்கையே கடவுள் இருக்கிறானவோ அல்லது இல்லையென்கிற விஷயத்தில் அடிப்படையாக இருக்கிறது.
கடவுளை மறுப்பவர்களின் பார்வையில் மூட நம்பிக்கையாகவோ அல்லது அறிவியல் பூர்வமாக விவாதிக்கும் சில விஷயங்களை பார்ப்போம். சாதரணமாக திருவிழாக் காலங்களில் கோவிலில் நேர்த்திகடனாக செய்யும் பூக்குளி மிதித்தல், அலகு குத்துதல் இன்னும் எத்தனையோ விதமான நேர்த்திகடன்கள், வழிபாடுகள் செய்யும் நபர்கள் அதை செய்யும் முன் அறிவியலை உணர்ந்து தான் செய்கிறார்களா? அல்லது நம்பிக்கையில் செய்கிறார்களா? சின்னதாக ஒரு குண்டூசி குத்தி விட்டால் வேதனைப்படும் நம்மில் பலரும் கண்டிருக்க கூடும் திருவிழாக்களில் மக்களின் நேர்த்திகடனின் பெயரில் செய்யும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இப்படியெல்லாம் சொல்வதால் நான் மூட நம்பிக்கையுள்ளவனாக நீங்கள் நினைத்தால் அதற்காக கவலையில்லை நம்மை எல்லோரையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தி இருக்கிறது அது இயற்கை, இந்த இயற்கையை மிஞ்சிய சக்தி ஒன்றுமில்லை இதை நம்புவர்கள் இயற்கைக்கு “கடவுள்” என பெயர் வைத்து அழைக்கலாம் இல்லை என மறுப்பவர்கள் இருக்கலாம் அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் “கடவுள் இல்லை” என்பதாக இருக்கும் இங்கேயும் ஒருவரின் நம்பிக்கை தான் கடவுள் உண்டு அல்லது இல்லை என்கிற விஷயத்தை ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் வைக்கிறது.
எனக்கு தெரிந்த உறவினர் அவரோ எந்தவித படிப்பறிவும் இல்லாதவர் அவருக்கு அறிவியலை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது ஒரு முறை அவர் கோவிலில் வழிபட சென்ற போது அவருக்கு சாமி வந்துவிட்டதென அவர் ஆடிய போது அவரின் நாக்கில் ஒரு பெரிய சூடத்தை கொளுத்தி வைத்தார்கள் அதை எரிந்து முடியும் வரை நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் அவரிடம் உங்களுக்கு சூடத்தை நாவில் எரிய விடும் போது சுடவில்லையா எனக்கேட்ட போது அவரோ எப்போது எரிந்தது என்பது போல பார்த்தார் நானும் அன்று முதல் இப்பவும் இந்த நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் நான் கவணிக்கிறேன் இந்த உணர்வு தான் ஒரு வேளை கடவுளின் சக்தி என்பதாக இருக்குமோ? சரி ஒருவேளை இதில் அறிவியல் பூர்வமான ஏதாவது சங்கதி இருந்தாலும் இது எப்படி அவருக்கு தெரிந்தது? சரி அப்படியே இருந்தாலும் நாம் அதை செய்வோமா? இதுவும் நம்பிக்கையின் பெயரில் தான் நடக்கிறது.
இனி அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை பார்ப்போம் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதும் அதே நேரத்தில் மின்சாரம் செல்லும் இரண்டு கம்பிகளில் ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும் காக்கை, குருவி, இன்ன பிற உயிர்களுக்கு ஒன்றுமே ஆகாது என்பது படித்தவர் முதல் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் இதைப்பற்றி பாடப்புத்தகத்திலும் படித்திருக்கிறோம் ஆனாலும் நம்மில் யாரவாது அறிவியாலால் நிருபிக்கபட்ட ஒரு உண்மையை உணர்ந்து நாம் மின்சார கம்பியை பிடிப்போமா? அப்படியானல் அறிவியலை நாம் நம்பவில்லையா?!
இன்னும் ஒரு விஷயத்தை பார்க்கலாம் நாம் யாருமே நம் தாயின் வயிற்றில் கருவரையில் இருக்கும் போது இவள் தான் தாய் என அறிந்திருக்கவில்லை ஆனால் வளர்ந்து வரும் போது நாமாகவே நம் தாயை அடையாளம் காண்கிறோம், உள்ளத்தால் உணர்கிறோம். இப்பொழுதும் குழந்தைகளை கவணித்து பாருங்கள் தாயின் அசைவுகளையும் அன்பையும் உணர்ந்து தாயின் அரவனைப்பை விரும்புவார்கள் இப்படித்தான் கடவுளும் அது ஒரு உணர்வு, நம்பிக்கை, தன்னை மறக்கும் அமானுஷ்ய நேரம் என பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்.
நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டது போல நம்மில் கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் அல்லது ஆரோக்கியமான கருத்துக்களை வைக்க நினைத்தால் தயங்காமல் எழுதுங்கள் உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Subscribe to:
Posts(Atom)







