Oct 22, 2010
24
Oct 22, 2010
ஜிஎஸ்ஆர்
மாறி வரும் காதல்,காமம், கலாச்சாரம்
ஒரு வரி கருத்து: இல்லறத்தாருக்கும், துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம் ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மான்ந்தம் கிடையாது.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சிலருக்கு பிடிக்காமல் போகலாம் சிலர் இந்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம், இன்னும் சிலர் படித்த சுவடே தெரியாமல் படித்துவிட்டுச் செல்லலாம். எது எப்படியிருந்தாலும் நான் எனக்கு தெரிந்த விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
நம் சமுதாயத்தை சீர்குலைப்பதில் சினிமாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது பொதுவாகவே நம் மக்கள் அப்படித்தான் செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், சினிமா செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பவும் அதிகமாகவே இருக்கிறது உடனே ஒன்றிரண்டு நபர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் அதற்காக உண்மை என்பது பொய்யாகிவிடாது.
நடு நிலையாய் இருக்க வேண்டிய செய்தித்தாள்கள் முதற்கொண்டு அதை வியாபார ரீதியாகவே ஒரு செய்தியை கவர்ச்சியுடன் வெளியிடுகின்றன, அதை விட தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளோ வெறும் ஆபாசத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு ஆடல் நிகழ்ச்சி அதில் இருக்கும் நடுவர் ஒரு பெண் தான் ஆனால் அவர் ஆடல் பற்றி குறிப்பிட்டு அவர் உடை குறைத்து தொப்புள் காண்பிக்கவேண்டும் என்பதை நேரடியாக கூறாமல் வேறு ஏதேதோ சொல்லி வற்புறுத்துகிறார் அவர்கள் என்ன செய்வார்கள் இந்த உலகம் மொத்தமும் அன்பு, பண்பு, பகுத்தறிவு இவையெல்லாவற்றையும் நடிப்பாகவும், நாடகமாகவும் மாற்றி பணம் சம்பாதிக்கும் குறிக்கோளையை கொண்டுள்ளன இதில் தமிழ் தொலைக்காட்சிகள் இந்த பணியை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.
எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் சினிமாவில் மட்டுமே காதல் காட்சிகளை கண்டிருக்கிறேன் ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிறையவே கண்டிருக்கிறேன் ஆனால் இந்த வகையான காதல், கள்ளக்காதல் இரண்டுமே வளர்ந்த நகரங்கள், கிராமங்கள் என பாகுபாடில்லாமல் வியாபித்து கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை இதில் கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும், செய்தித்தாள்களில் படித்ததும் அடங்கும்.
சில வருடங்கள் வேலை நிமித்தம் சென்னையில் வசித்திருக்கிறேன் அன்றைய காலக்கட்டத்தில் பொழுதுபோக்கிற்காக மெரினா பீச் செல்வது வழக்கம் ஆனால் நாளடைவில் அங்கு செல்வதென்பதை அருவருக்கும் வகையில் அமைந்தது அங்கு இரவு 8.30 மணியை தாண்டிவிட்டால் அங்கே கனஜோராக வியாபரம் தொடங்கிவிடும் இது அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியும் ஆனால் அவர்கள் அதை கண்டுகொண்டதாக கூட காட்டிக்கொள்ள மாட்டார்கள் சரி அவர்கள் தான் பிழைக்க வழியில்லை என்று நொண்டிசாக்கு சொல்கிறார்கள் சரி என விட்டுவிடுவோம் படிக்கும் கல்லூரி பெண்கள், இளைஞர்கள், இளைஞிகள் அவர்களும் அவர்கள் பங்குக்கு எந்தளவிற்கு இந்த சமுதாயத்தை சீர்குலைக்க முடியுமோ அந்தளவிற்கு சீர்குலைக்கிறார்கள் இதில் யாரை குற்றம் சொல்வது இளைஞனையா? இளைஞியையா? பெற்றவர்களையா? கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களையா? இல்லை எது நடந்தாலும் அதையும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கும் சராசரி மனிதனையா? எங்கு தொடங்குகிறது இந்த பிழை?
நான் நினைக்கிறேன் இந்த உலகத்தில் பலவிதமான மக்கள், பலவிதமான நாகரீகம் , பலவிதமான மதம், சாதி அமைப்பு இருக்கிறது ஆனாலும் ஒட்டுமொத்தமாக தமிழர்களின் கலாச்சாரம் மற்றவர்களால் மதிக்கக்கூடியாதாகவே இருக்கிறது அப்படித்தானே? நம்மில் தான் உறவுகளுக்கு மதிப்பும், முன்னுரிமையும் கொடுக்கபடுகிறது ஆனால் அதே நம் சமூகத்தில் குறுகிய நாட்களுக்குள் எத்தனை மாற்றம்? இது காலம் கொண்டுவந்ததா இல்லை மனிதன் மிருகமாகின்றான?
நம் மக்களில் தான் மாமா, அத்தை பெண்ணை திருமணம் செய்கிறோம், இன்னும் சிலர் தனது அக்கா மகள் அதாவது மருமகளை திருமணம் செய்கின்றனர் ஆனால் இதை பற்றி அண்டை மாநிலத்தவர்கள் கேட்டால் எப்படியாவது வியாக்கினயம் பேசி சமாளித்து விடுவோம் இன்னமும் இந்த மாதிரியான திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ஆனால் இதிலும் இஸ்லாம் மக்களை பற்றி கேட்கவே வேண்டாம் அவர்கள் இதற்கு வேறு ரீதியில் நமக்கு பதில் சொல்லி குழப்புவார்கள் நாம் அதற்குள் போகவேண்டாம் அதே நேரத்தில் நமது அண்டை மாநிலம் கேரளா அங்குள்ளவர்கள் நாம் நியாயப்படுத்தும் மாமா, அத்தை மகள், மகன், அல்லது அக்கா மகள் இந்த உறவுமுறையில் கூட திருமணம் செய்வதில்லை ஆனால் அங்கும் சில திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ஆனால் பெருமளவில் இல்லை என ஆறுதல் அடையளாம்.
சில நேரங்களில் செய்தித்தாள்களில் படிக்கிறோம் ஓரே வீட்டில் வசித்த சகோதர, சகோதரி வீட்டை எதிர்த்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்கின்றனர் சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா? நன்கு படித்தவர்கள், சகோதர,சகோதரி முறை தெரிந்தும் திருமணம் செய்பவர்களை முற்போக்கு சிந்தனைவாதிகளா? சட்டம் இருக்கிறது என்பதால் எந்தவித தவறுகளையும் செய்யலாமா? இன்னும் சிலர் இதற்கும் மேலே சென்று ஓரே பால் இனத்தவர்கள் ஒருமித்து வாழ்கிறார்கள் இதை என்ன சொல்வது, எங்கு தொடங்குகிறது இந்த தவறுகளுக்கான சூழல்? இது சரியா இல்லை மாற்றப்படவேண்டுமா?
காதலின் அர்த்தம் தெரியாமல் இளைய சமுதாயம் சீர்கெட்டு கிடக்கிறது இப்பொழுதெல்லாம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் காதல் செய்ய ஆரம்பிக்கின்றனர், காதல் என்றால் என்ன என்று உணர்வதற்குள்ளாகவே காதல்! உண்மையில் இது அவர்களுக்கு ஒரு சந்தோஷாமான நிகழ்வாக உணர்கிறார்கள் இப்படித்தான் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் இருவர் சராசரி வயது 15க்குள்ளே தான் இருந்திருக்கும் இருவருக்கும் காதல் அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் இருப்பிடத்துக்கும் நான் வசிக்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம் ஆறு கிலோமீட்டர் இருக்கும். ஆனால் என்ன செய்வதென்று அறியாத பாலகர்கள் சினிமாவில் தஞ்சம் சென்றடைவது போல நானும் என் நண்பனும் நிற்கும் இடத்தில் கண்ணில் பட்டார்கள் நமக்கு நமது பாகத்தில் உள்ளவர்களை முழுவதுமாக தெரியும் அதே போல நம்மையும் நன்கு அறிவார்கள். இந்த இருவருமே நம் கண்ணில் பட்டதே இல்லையே என கூப்பிட்டு விசாரித்தால் காதல் திருமணம் செய்ய வந்தார்களாம் சரி கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்தால் 150க்கு மேலே போகாது இதை வைத்துக்கொண்டு இவர்கள் புது வாழ்க்கை தொடங்க போகிறார்களாம், பின்னர் நாங்களே விசாரித்து அவர்கள் வீட்டிற்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்னரே அவர்கள் குடும்பத்தார்கள் நமது பாகத்திற்கு வந்து விட்டிருந்தார்கள்.
இனிமேல் தான் விஷயமே இருக்கிறது நான் முன்னமே சொன்ன அவர்கள் வயதை ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள், இருவரின் குடும்பத்தார் வந்ததும் கோபத்தில் அடித்து விட்டார்கள் அப்போழுது தான் நாம் சினிமாவில் காண்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக்கொண்டு பிரியமாட்டேன் என அடம்பிடிக்கிறார்கள் இது எதன் பாதிப்பு நீங்கள் தான் சொல்லவேண்டும்.
இனி இந்த கள்ளக்காதால் சாதரன ஒரு நபர் திருமணம் முடிந்தவர் அவர் அவர் மணைவி, கணவன் அல்லாத அல்லது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு காதல் அதற்கு பெயர் கள்ளக்காதால். இந்த காதலுக்கு இடத்திற்கு தகுந்தாற் போல இருவிதமான பெயர்கள் அழைக்கப்படுகிறது பிரபலமல்லாத ஒரு சராசரி நபர் இந்த தவறை செய்தால் இதற்கு பெயர் கள்ளக்காதல் அதே நேரத்தில் பிரபலமானவர்கள் இந்த தவறை செய்தால் அதற்கு பத்திரிக்கைகள் வழங்கும் பெயர் காதல் இந்த கள்ளக்காதல் தான் நெஞ்சை பதை பதைக்க செய்கிறது சமீபத்தில் நடந்த ஒரு சிறுவனின் கொலை, மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனின் கொலை, தலையில் அடித்து கொலை என புதிது புதிதான வக்கிரமான முறையில் கொலைகள் நடைபெறுவது இந்த கள்ளக்காதலில் தான். இதை பற்றி நான் அதிகம் எழுதப்போவதில்லை. என்னுடைய கேள்வி எதனால் இந்த மாற்றம் ஏற்படுகிறது எங்கு தவறு நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது ஆனாலும் இதில ஒரு விஷயம் இந்த கள்ளக்காதலில் குற்றவாளிகள் பெரும்பாலும் ஒரு பால் இனத்தவராகவே இருக்கின்றனர் என்பதை பத்திரிக்கைகள் விளம்படுத்தும் போது தான் நமக்கும் தெரிகிறது.
இனி நாம் மேலே பார்த்த இரண்டிலுமே சேராத காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல் இருக்கிறது அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம் ஆனால் பெரும்பாண்மையான செய்திகள் வெளிநாடுகளில் நடந்தவை தான் அதாவது பெற்ற மகளேயே வன்புணர்வு செய்து வீட்டிலே அடைத்து வைத்து கொடுமை படுத்தப்பட்டு பின்னர் சட்டத்தால் மீட்கப்பட்டதாக செய்திகளில் படிக்கிறோம் ஆனால் இதெல்லாம் வெளிநாடுகளில் தான் கலாச்சாரம் தெரியமால் மனித நேயம் இல்லாமல் , உறவு முறை தெரியாமல் சிதைக்கிறார்கள் என நினைத்திருந்த நேரத்தில் தான் மிக சமீபத்தில் ஒரு சம்பவம் அறிய நேர்ந்தது இதை வாசிக்கும் போது முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த யாரவது இருந்தால் இந்த உண்மை அவர்களுக்கு தெரியும் இது நடந்து பல வருடங்கள் இருக்கும். முதுகுளத்தூரில் இருக்கும் குடிகாரன் மனைவி இறந்த சில நாட்களிலியே குடித்து விட்டு 18 வயது கூட நிரம்பாத மகளை வன்புணர்வு செய்திருக்கிறான் பாவம் அந்த பெண் என்ன செய்வதென்றே தெரியாமல் சகித்திருக்கிறார்கள் இறுதியில் நடந்தது தான் ஆச்சரியம் கடைசியில் தகப்பனும் மகளுமே குடித்தனம் நடத்த தொடங்கிவிட்டனர் இப்போது அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருவருமே தாமாகவே பிடித்தவர்களோடு திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனராம் காரணம்? இந்த குடும்பத்தை பற்றி தெரிந்தவர்கள் எப்படி பெண் எடுப்பார்கள் இதில் தவறு யாரை சொல்வது குடிகார தகப்பனையா? பெற்ற தகப்பன் இப்படியான ஒரு தவறை செய்யும் போது அதை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்ணையா? இல்லை சந்தர்ப்ப சூழலையா? என்னைப்பொருத்த வரை நான் சந்தர்ப்ப சூழல் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் உங்கள் பதில் என்ன? எதை குற்றப்படுத்துவீர்கள்.
மனிதர்கள் தோன்றிய காலத்தில் மிருகம் போலத்தான் இருந்திருக்கிறான் ஆனால் நாளடைவில் எத்தனையோ மாற்றங்களை உணர்ந்திருக்கிறான் நல்லது கெட்டது, சரி,தவறு, உறவுகளுக்கு மரியாதை, முக்கியத்துவம் எல்லாமே படிப்படியாக வளர்ந்து தான் வந்திருக்கிறது ஆனால் வளர்ந்து வரும் சூழலில் மீண்டும் மிருகமாக ஐந்தறிவு ஜீவியை போல மாறுகிறார்களை எதனால் இந்த மாற்றம், இது தான் நாகரீகமா? முற்போக்கான எண்ணமா? உறவுகள் என்பது வெறும் பாலியல் சார்ந்ததா?
இந்த பதிவில் வரும் சில விஷயங்களை தவிர்க்க நினைக்கவே விரும்பினேன் ஆனால் தவிர்க்க முடியவில்லை முடிந்தவரை சொல்ல வந்த விஷயத்தை மட்டும் தான் தொட்டிருக்கிறேன் யாரும் இதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளவேண்டாம், இதை விழிப்புணர்வாக, இப்படியும் நடக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கவே இந்த பதிவு. நண்பர்களே இதை குறித்தான ஆரோக்கியமான சிந்தனைகளை முன்வையுங்கள், நடைமுறைக்குட்பட்ட பதிவு என்றென்னினால் அவசியம் பதிவிற்கு வாக்கும், பதிவை பற்றிய ஆரோக்கியமான கருத்தை உங்கள் விவாதமாக வைக்கவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சிலருக்கு பிடிக்காமல் போகலாம் சிலர் இந்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம், இன்னும் சிலர் படித்த சுவடே தெரியாமல் படித்துவிட்டுச் செல்லலாம். எது எப்படியிருந்தாலும் நான் எனக்கு தெரிந்த விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
நம் சமுதாயத்தை சீர்குலைப்பதில் சினிமாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது பொதுவாகவே நம் மக்கள் அப்படித்தான் செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், சினிமா செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பவும் அதிகமாகவே இருக்கிறது உடனே ஒன்றிரண்டு நபர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் அதற்காக உண்மை என்பது பொய்யாகிவிடாது.
நடு நிலையாய் இருக்க வேண்டிய செய்தித்தாள்கள் முதற்கொண்டு அதை வியாபார ரீதியாகவே ஒரு செய்தியை கவர்ச்சியுடன் வெளியிடுகின்றன, அதை விட தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளோ வெறும் ஆபாசத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு ஆடல் நிகழ்ச்சி அதில் இருக்கும் நடுவர் ஒரு பெண் தான் ஆனால் அவர் ஆடல் பற்றி குறிப்பிட்டு அவர் உடை குறைத்து தொப்புள் காண்பிக்கவேண்டும் என்பதை நேரடியாக கூறாமல் வேறு ஏதேதோ சொல்லி வற்புறுத்துகிறார் அவர்கள் என்ன செய்வார்கள் இந்த உலகம் மொத்தமும் அன்பு, பண்பு, பகுத்தறிவு இவையெல்லாவற்றையும் நடிப்பாகவும், நாடகமாகவும் மாற்றி பணம் சம்பாதிக்கும் குறிக்கோளையை கொண்டுள்ளன இதில் தமிழ் தொலைக்காட்சிகள் இந்த பணியை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.
எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் சினிமாவில் மட்டுமே காதல் காட்சிகளை கண்டிருக்கிறேன் ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிறையவே கண்டிருக்கிறேன் ஆனால் இந்த வகையான காதல், கள்ளக்காதல் இரண்டுமே வளர்ந்த நகரங்கள், கிராமங்கள் என பாகுபாடில்லாமல் வியாபித்து கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை இதில் கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும், செய்தித்தாள்களில் படித்ததும் அடங்கும்.
சில வருடங்கள் வேலை நிமித்தம் சென்னையில் வசித்திருக்கிறேன் அன்றைய காலக்கட்டத்தில் பொழுதுபோக்கிற்காக மெரினா பீச் செல்வது வழக்கம் ஆனால் நாளடைவில் அங்கு செல்வதென்பதை அருவருக்கும் வகையில் அமைந்தது அங்கு இரவு 8.30 மணியை தாண்டிவிட்டால் அங்கே கனஜோராக வியாபரம் தொடங்கிவிடும் இது அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியும் ஆனால் அவர்கள் அதை கண்டுகொண்டதாக கூட காட்டிக்கொள்ள மாட்டார்கள் சரி அவர்கள் தான் பிழைக்க வழியில்லை என்று நொண்டிசாக்கு சொல்கிறார்கள் சரி என விட்டுவிடுவோம் படிக்கும் கல்லூரி பெண்கள், இளைஞர்கள், இளைஞிகள் அவர்களும் அவர்கள் பங்குக்கு எந்தளவிற்கு இந்த சமுதாயத்தை சீர்குலைக்க முடியுமோ அந்தளவிற்கு சீர்குலைக்கிறார்கள் இதில் யாரை குற்றம் சொல்வது இளைஞனையா? இளைஞியையா? பெற்றவர்களையா? கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களையா? இல்லை எது நடந்தாலும் அதையும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கும் சராசரி மனிதனையா? எங்கு தொடங்குகிறது இந்த பிழை?
நான் நினைக்கிறேன் இந்த உலகத்தில் பலவிதமான மக்கள், பலவிதமான நாகரீகம் , பலவிதமான மதம், சாதி அமைப்பு இருக்கிறது ஆனாலும் ஒட்டுமொத்தமாக தமிழர்களின் கலாச்சாரம் மற்றவர்களால் மதிக்கக்கூடியாதாகவே இருக்கிறது அப்படித்தானே? நம்மில் தான் உறவுகளுக்கு மதிப்பும், முன்னுரிமையும் கொடுக்கபடுகிறது ஆனால் அதே நம் சமூகத்தில் குறுகிய நாட்களுக்குள் எத்தனை மாற்றம்? இது காலம் கொண்டுவந்ததா இல்லை மனிதன் மிருகமாகின்றான?
நம் மக்களில் தான் மாமா, அத்தை பெண்ணை திருமணம் செய்கிறோம், இன்னும் சிலர் தனது அக்கா மகள் அதாவது மருமகளை திருமணம் செய்கின்றனர் ஆனால் இதை பற்றி அண்டை மாநிலத்தவர்கள் கேட்டால் எப்படியாவது வியாக்கினயம் பேசி சமாளித்து விடுவோம் இன்னமும் இந்த மாதிரியான திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ஆனால் இதிலும் இஸ்லாம் மக்களை பற்றி கேட்கவே வேண்டாம் அவர்கள் இதற்கு வேறு ரீதியில் நமக்கு பதில் சொல்லி குழப்புவார்கள் நாம் அதற்குள் போகவேண்டாம் அதே நேரத்தில் நமது அண்டை மாநிலம் கேரளா அங்குள்ளவர்கள் நாம் நியாயப்படுத்தும் மாமா, அத்தை மகள், மகன், அல்லது அக்கா மகள் இந்த உறவுமுறையில் கூட திருமணம் செய்வதில்லை ஆனால் அங்கும் சில திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன ஆனால் பெருமளவில் இல்லை என ஆறுதல் அடையளாம்.
சில நேரங்களில் செய்தித்தாள்களில் படிக்கிறோம் ஓரே வீட்டில் வசித்த சகோதர, சகோதரி வீட்டை எதிர்த்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்கின்றனர் சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா? நன்கு படித்தவர்கள், சகோதர,சகோதரி முறை தெரிந்தும் திருமணம் செய்பவர்களை முற்போக்கு சிந்தனைவாதிகளா? சட்டம் இருக்கிறது என்பதால் எந்தவித தவறுகளையும் செய்யலாமா? இன்னும் சிலர் இதற்கும் மேலே சென்று ஓரே பால் இனத்தவர்கள் ஒருமித்து வாழ்கிறார்கள் இதை என்ன சொல்வது, எங்கு தொடங்குகிறது இந்த தவறுகளுக்கான சூழல்? இது சரியா இல்லை மாற்றப்படவேண்டுமா?
காதலின் அர்த்தம் தெரியாமல் இளைய சமுதாயம் சீர்கெட்டு கிடக்கிறது இப்பொழுதெல்லாம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் காதல் செய்ய ஆரம்பிக்கின்றனர், காதல் என்றால் என்ன என்று உணர்வதற்குள்ளாகவே காதல்! உண்மையில் இது அவர்களுக்கு ஒரு சந்தோஷாமான நிகழ்வாக உணர்கிறார்கள் இப்படித்தான் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் நம்மூரில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் இருவர் சராசரி வயது 15க்குள்ளே தான் இருந்திருக்கும் இருவருக்கும் காதல் அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் இருப்பிடத்துக்கும் நான் வசிக்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம் ஆறு கிலோமீட்டர் இருக்கும். ஆனால் என்ன செய்வதென்று அறியாத பாலகர்கள் சினிமாவில் தஞ்சம் சென்றடைவது போல நானும் என் நண்பனும் நிற்கும் இடத்தில் கண்ணில் பட்டார்கள் நமக்கு நமது பாகத்தில் உள்ளவர்களை முழுவதுமாக தெரியும் அதே போல நம்மையும் நன்கு அறிவார்கள். இந்த இருவருமே நம் கண்ணில் பட்டதே இல்லையே என கூப்பிட்டு விசாரித்தால் காதல் திருமணம் செய்ய வந்தார்களாம் சரி கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்தால் 150க்கு மேலே போகாது இதை வைத்துக்கொண்டு இவர்கள் புது வாழ்க்கை தொடங்க போகிறார்களாம், பின்னர் நாங்களே விசாரித்து அவர்கள் வீட்டிற்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்னரே அவர்கள் குடும்பத்தார்கள் நமது பாகத்திற்கு வந்து விட்டிருந்தார்கள்.
இனிமேல் தான் விஷயமே இருக்கிறது நான் முன்னமே சொன்ன அவர்கள் வயதை ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள், இருவரின் குடும்பத்தார் வந்ததும் கோபத்தில் அடித்து விட்டார்கள் அப்போழுது தான் நாம் சினிமாவில் காண்பது போல இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக்கொண்டு பிரியமாட்டேன் என அடம்பிடிக்கிறார்கள் இது எதன் பாதிப்பு நீங்கள் தான் சொல்லவேண்டும்.
இனி இந்த கள்ளக்காதால் சாதரன ஒரு நபர் திருமணம் முடிந்தவர் அவர் அவர் மணைவி, கணவன் அல்லாத அல்லது சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு காதல் அதற்கு பெயர் கள்ளக்காதால். இந்த காதலுக்கு இடத்திற்கு தகுந்தாற் போல இருவிதமான பெயர்கள் அழைக்கப்படுகிறது பிரபலமல்லாத ஒரு சராசரி நபர் இந்த தவறை செய்தால் இதற்கு பெயர் கள்ளக்காதல் அதே நேரத்தில் பிரபலமானவர்கள் இந்த தவறை செய்தால் அதற்கு பத்திரிக்கைகள் வழங்கும் பெயர் காதல் இந்த கள்ளக்காதல் தான் நெஞ்சை பதை பதைக்க செய்கிறது சமீபத்தில் நடந்த ஒரு சிறுவனின் கொலை, மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனின் கொலை, தலையில் அடித்து கொலை என புதிது புதிதான வக்கிரமான முறையில் கொலைகள் நடைபெறுவது இந்த கள்ளக்காதலில் தான். இதை பற்றி நான் அதிகம் எழுதப்போவதில்லை. என்னுடைய கேள்வி எதனால் இந்த மாற்றம் ஏற்படுகிறது எங்கு தவறு நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது ஆனாலும் இதில ஒரு விஷயம் இந்த கள்ளக்காதலில் குற்றவாளிகள் பெரும்பாலும் ஒரு பால் இனத்தவராகவே இருக்கின்றனர் என்பதை பத்திரிக்கைகள் விளம்படுத்தும் போது தான் நமக்கும் தெரிகிறது.
இனி நாம் மேலே பார்த்த இரண்டிலுமே சேராத காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல் இருக்கிறது அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம் ஆனால் பெரும்பாண்மையான செய்திகள் வெளிநாடுகளில் நடந்தவை தான் அதாவது பெற்ற மகளேயே வன்புணர்வு செய்து வீட்டிலே அடைத்து வைத்து கொடுமை படுத்தப்பட்டு பின்னர் சட்டத்தால் மீட்கப்பட்டதாக செய்திகளில் படிக்கிறோம் ஆனால் இதெல்லாம் வெளிநாடுகளில் தான் கலாச்சாரம் தெரியமால் மனித நேயம் இல்லாமல் , உறவு முறை தெரியாமல் சிதைக்கிறார்கள் என நினைத்திருந்த நேரத்தில் தான் மிக சமீபத்தில் ஒரு சம்பவம் அறிய நேர்ந்தது இதை வாசிக்கும் போது முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த யாரவது இருந்தால் இந்த உண்மை அவர்களுக்கு தெரியும் இது நடந்து பல வருடங்கள் இருக்கும். முதுகுளத்தூரில் இருக்கும் குடிகாரன் மனைவி இறந்த சில நாட்களிலியே குடித்து விட்டு 18 வயது கூட நிரம்பாத மகளை வன்புணர்வு செய்திருக்கிறான் பாவம் அந்த பெண் என்ன செய்வதென்றே தெரியாமல் சகித்திருக்கிறார்கள் இறுதியில் நடந்தது தான் ஆச்சரியம் கடைசியில் தகப்பனும் மகளுமே குடித்தனம் நடத்த தொடங்கிவிட்டனர் இப்போது அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருவருமே தாமாகவே பிடித்தவர்களோடு திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனராம் காரணம்? இந்த குடும்பத்தை பற்றி தெரிந்தவர்கள் எப்படி பெண் எடுப்பார்கள் இதில் தவறு யாரை சொல்வது குடிகார தகப்பனையா? பெற்ற தகப்பன் இப்படியான ஒரு தவறை செய்யும் போது அதை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்ணையா? இல்லை சந்தர்ப்ப சூழலையா? என்னைப்பொருத்த வரை நான் சந்தர்ப்ப சூழல் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் உங்கள் பதில் என்ன? எதை குற்றப்படுத்துவீர்கள்.
மனிதர்கள் தோன்றிய காலத்தில் மிருகம் போலத்தான் இருந்திருக்கிறான் ஆனால் நாளடைவில் எத்தனையோ மாற்றங்களை உணர்ந்திருக்கிறான் நல்லது கெட்டது, சரி,தவறு, உறவுகளுக்கு மரியாதை, முக்கியத்துவம் எல்லாமே படிப்படியாக வளர்ந்து தான் வந்திருக்கிறது ஆனால் வளர்ந்து வரும் சூழலில் மீண்டும் மிருகமாக ஐந்தறிவு ஜீவியை போல மாறுகிறார்களை எதனால் இந்த மாற்றம், இது தான் நாகரீகமா? முற்போக்கான எண்ணமா? உறவுகள் என்பது வெறும் பாலியல் சார்ந்ததா?
இந்த பதிவில் வரும் சில விஷயங்களை தவிர்க்க நினைக்கவே விரும்பினேன் ஆனால் தவிர்க்க முடியவில்லை முடிந்தவரை சொல்ல வந்த விஷயத்தை மட்டும் தான் தொட்டிருக்கிறேன் யாரும் இதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளவேண்டாம், இதை விழிப்புணர்வாக, இப்படியும் நடக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கவே இந்த பதிவு. நண்பர்களே இதை குறித்தான ஆரோக்கியமான சிந்தனைகளை முன்வையுங்கள், நடைமுறைக்குட்பட்ட பதிவு என்றென்னினால் அவசியம் பதிவிற்கு வாக்கும், பதிவை பற்றிய ஆரோக்கியமான கருத்தை உங்கள் விவாதமாக வைக்கவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 21, 2010
14
Oct 21, 2010
ஜிஎஸ்ஆர்
இமேஜ் ரீஸைசர் (Image Resizer)
ஒரு வரி கருத்து: சிறிய காரியங்களை சரியாக செய்யுங்கள் நாளடைவில் பெரிய காரியங்கள் தேடி வரும்
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் ஸ்டுடியோ, மற்றும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும்.
இந்த பதிவு பலருக்கு பயன்படும் ஆனால் எப்போது இதன் தேவை வருமென்று தெரியாது, அதனால் என்ன தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் தவறில்லை,என்னவென்றே தெரியவில்லை கடந்த சில பதிவுகள் தொடர்ச்சியான புகைப்படம் பற்றியதாகவே அமைந்துவிட்டது சரி இனி இந்த Resizer மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவுங்கள் சில நொடிகளில் இன்ஸ்டால் ஆகிவிடும்.
இந்த மென்பொருள் வாயிலாக உங்களிடம் இருக்கும் பலதரப்பட்ட அளவுகளில் உள்ள புகைப்படங்களை மிக எளிதாக ஒரே மாதிரியான அளவுகளுக்கு கொண்டுவந்துவிடலாம் பொதுவாக கணினியில் ஏதாவது ஒரு தகவலில் அடிப்படையில் புகைப்படத்தையும் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் மேலும் Access-ல் புகைப்படம் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருள் வாயிலாக மாற்றம் ஏற்படுத்திக்கொண்டு பயன்படுத்தலாம் காரணம் நம்மிடம் பத்து புகைப்படத்தை மட்டுமே நாம் பயன்படுத்த போகிறோம் என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை ஒவ்வொன்றாகவே செய்து முடித்துவிடலாம் ஆனால் ஒரு நிறுவணத்தில் இருக்கும் 5000 நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்த நினைத்தால் ஒவ்வொன்றையும் தனியாக செய்யமுடியாதல்லவா! சமீபத்தில் தான் இதன் தேவை நமக்கும் வந்தது.
இனி உங்கள் மென்பொருளை இயக்க தொடங்குங்கள் இதில் நீங்கள் ஒரு புகைப்படத்தையோ அல்லது மொத்தமாகவோ மாற்றும் வசதி இருக்கிறது . நான் இதில் பயன்படுத்தி இருக்கும் புகைப்படத்தின் அளவு 6x9 Ft ஆகும் ஆனால் சில நிமிடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் அளவிற்க்கு உங்கள் விருப்பம் போல மாற்றி கொடுத்துவிடும்.
(இந்த புகைப்படத்தை 5x8 Inch ஆக இருந்தது அதை நமது கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம் வாயிலாக மாற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்க)

இதில் பாருங்கள் பிரிவியூ என்பதில் படத்தின் அளவு பெரியது என்பதால் காண்பிக்கவில்லை ஆனால் அளவை மாற்றி கொடுத்துவிடும் நான் 6x9 Ft அளவுள்ள ஒரு புகைப்படத்தை உள்ளிட்டு 5X8 Inch ஆக மாற்றியிருக்கிறேன் மிக எளிமையானது பயன்படுத்தி பாருங்கள் ஆனால் இது போன்ற மென்பொருள்கள் எல்லா நண்பர்களுக்கும் தேவைப்படுமா என்பது தெரியவில்லை தேவைப்படும் நண்பர்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் ஸ்டுடியோ, மற்றும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும்.
இந்த பதிவு பலருக்கு பயன்படும் ஆனால் எப்போது இதன் தேவை வருமென்று தெரியாது, அதனால் என்ன தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் தவறில்லை,என்னவென்றே தெரியவில்லை கடந்த சில பதிவுகள் தொடர்ச்சியான புகைப்படம் பற்றியதாகவே அமைந்துவிட்டது சரி இனி இந்த Resizer மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவுங்கள் சில நொடிகளில் இன்ஸ்டால் ஆகிவிடும்.
இந்த மென்பொருள் வாயிலாக உங்களிடம் இருக்கும் பலதரப்பட்ட அளவுகளில் உள்ள புகைப்படங்களை மிக எளிதாக ஒரே மாதிரியான அளவுகளுக்கு கொண்டுவந்துவிடலாம் பொதுவாக கணினியில் ஏதாவது ஒரு தகவலில் அடிப்படையில் புகைப்படத்தையும் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் மேலும் Access-ல் புகைப்படம் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருள் வாயிலாக மாற்றம் ஏற்படுத்திக்கொண்டு பயன்படுத்தலாம் காரணம் நம்மிடம் பத்து புகைப்படத்தை மட்டுமே நாம் பயன்படுத்த போகிறோம் என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை ஒவ்வொன்றாகவே செய்து முடித்துவிடலாம் ஆனால் ஒரு நிறுவணத்தில் இருக்கும் 5000 நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்த நினைத்தால் ஒவ்வொன்றையும் தனியாக செய்யமுடியாதல்லவா! சமீபத்தில் தான் இதன் தேவை நமக்கும் வந்தது.
இனி உங்கள் மென்பொருளை இயக்க தொடங்குங்கள் இதில் நீங்கள் ஒரு புகைப்படத்தையோ அல்லது மொத்தமாகவோ மாற்றும் வசதி இருக்கிறது . நான் இதில் பயன்படுத்தி இருக்கும் புகைப்படத்தின் அளவு 6x9 Ft ஆகும் ஆனால் சில நிமிடங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் அளவிற்க்கு உங்கள் விருப்பம் போல மாற்றி கொடுத்துவிடும்.
(இந்த புகைப்படத்தை 5x8 Inch ஆக இருந்தது அதை நமது கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம் வாயிலாக மாற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்க)
இதில் பாருங்கள் பிரிவியூ என்பதில் படத்தின் அளவு பெரியது என்பதால் காண்பிக்கவில்லை ஆனால் அளவை மாற்றி கொடுத்துவிடும் நான் 6x9 Ft அளவுள்ள ஒரு புகைப்படத்தை உள்ளிட்டு 5X8 Inch ஆக மாற்றியிருக்கிறேன் மிக எளிமையானது பயன்படுத்தி பாருங்கள் ஆனால் இது போன்ற மென்பொருள்கள் எல்லா நண்பர்களுக்கும் தேவைப்படுமா என்பது தெரியவில்லை தேவைப்படும் நண்பர்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 19, 2010
27
Oct 19, 2010
ஜிஎஸ்ஆர்
சிறிய புகைப்படங்களை தரம் குறையாமல் பெரிதாக்கலாம்
ஒரு வரி கருத்து:களத்தில் குதியுங்கள் கைகள் அழுக்காகட்டும் அப்பொழுது தான் அடுத்த முறை கைகள் அழுக்காகமல் குதிக்க முடியும்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும் சில நேரங்களில் வலைத்தளங்களில் ஏதாவது புகைப்படம் தேடுவோம் ஆனால் அந்த படமோ அளவில் சிறியதாக இருக்கும் அதை பெரிதாக்க நினைத்தால் நிச்சியம் படத்தின் உருவம் மாறிப்போகும்.
இதை பற்றி நம்முடைய கடந்த பதிவான இமேஜ் கன்வெர்ட்டர் (Image Convertor)
ல் நண்பர்கள் எஸ்.கே
மற்றும் மாணவன்
இருவரும் ஒரு சந்தேகத்துடன் தீர்வையும் கேட்டிருந்தார்கள் பின்வருமாறு.
எஸ்.கே
எளிமை! சிறப்பாக உள்ளது! படம் தரம் குறையாமல் பெரிதாக்க மென்பொருள் உள்ளதா நண்பரே?
மாணவன்
”படம் தரம் குறையாமல் பெரிதாக்க மென்பொருள் உள்ளதா நண்பரே?”
நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்கான மென்பொருள் இருந்தால் பதிவிடவும் நண்பா...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி

இந்த பதிவு அவர்களுக்காகவும் மேலும் பலரை சென்றடையும் வகையில் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன். உண்மையை சொல்கிறேன் இந்த பதிவு என்னுடைய இரண்டு இரவுகளை தொலைத்திருக்கிறேன். நான் எழுதும் அதிக பதிவுகள் இரவில் மட்டுமே எழுதியிருக்கிறேன், இந்த பதிவை எழுதும் முன்பாக நிறைய ஆன்லைன் தளங்கள் மற்றும் இன்னும் சில மென்பொருள்கள் என நிறைய சோதித்து பார்த்த இறுதியில் கொஞ்சம் எனக்கு திருப்தியளித்தவுடன் இந்த பதிவை எழுதுகிறேன் இனி நீங்கள் இந்த Photo Enlarger
மென்பொருளை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவேண்டியது இல்லை நேரடியாக இயக்கலாம், தரவிறக்கி முடித்த பின்னர் SmillaEnlarger இருமுறை கிளிக்கினால் இயங்க தயாராகிவிடும. இந்த மென்பொருள் இப்போது பீட்டாவாகவே இருக்கிறது.
அதற்கு முன்பாக இந்த சின்ன விஷயத்தையும் படித்துவிடுங்கள் நீங்கள் பெரிதாக்க விரும்பும் படம் குறைந்த பட்ச தரமாவது இருக்கவேண்டும் படம் தரமில்லாத போது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு படத்தை மாற்றினாலும் படம் சிதைந்து போயிருக்கும். மேலும் இந்த மென்பொருள் எந்தளவிற்கு உங்களுக்கு தீர்வாய் அமையப்போகிறது என்பதும் எனக்கு தெரியாது இருப்பினும் ஓரளவிற்கு நிச்சிய்ம் இந்த பதிவு தீர்வு அளிப்பதாய் இருக்கும்.
இந்த மென்பொருளில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன நான் அடிப்படையை மட்டுமே எழுதுகிறேன் இனி நீங்களாகவே கொஞ்சம் முயன்று மற்ற விஷயங்களையும் பயன்படுத்தி பாருங்கள். இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் செய்யவேண்டியவற்றை நான் அடையாளமிட்டு எண்கள் கொடுத்துள்ளேன் அதன் படியே செய்து விடுங்கள் எண் 1ல் கிளிக்கி நீங்கள் விரும்பும் படத்தை உள்ளிடவும், எண் 2ல் அளவை கூட்டலாம் அல்லது கீழிருக்கும் Custom என்பதன் வழியாகவும் வேண்டிய அளவு கொடுக்கலாம், எண் 3ல் அளவை மாற்றவும் சேமிக்கவும் கொடுக்கும் கட்டளை, எண் 4ல் கிளிக்கி நீங்கள் கொடுத்த கட்டளை முடிவடைந்துவிட்டதா என பார்த்துக்கொள்ளலாம், எல்லாம் முடிந்தால் படத்தின் அளவு பெரியதாக இருக்கும் நீங்கள் கொடுத்த படத்தின் தரத்தை பொறுத்து அவுட்புட் இருக்கும்.

இல்லை எனக்கு படத்தை மொத்தமாக மாற்ற தேவையில்லை ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் பெரிதுபடுத்தி பார்க்க ஆசை அல்லது சேமிக்க ஆசை அதற்கும் வழி இருக்கிறது சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் நான் உங்களுக்காக மாற்றிய ஒரு பெரிய படத்தை இனைக்க நினைத்தேன் ஆனால் படத்தின் அளவு 7 எம்பி இருந்ததால் இனைத்தாலும் தளம் திறப்பதில் பிரச்சினை ஆகும் எனவே விட்டு விட்டேன். தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் வித்யாசம் உணர்வீர்கள்.

போட்டோஷாப் உபயோகிப்பவர்கள் எந்தவெரு புகைப்படத்தையும் போட்டோஷாப் வழியாகவே 10% அளவு அதிகரித்தாலும் பெரிய சிதைவு இருக்காது முயற்சித்து பாருங்கள் மறக்காமல் ரெசல்யூசன் 300 வைத்துக்கொள்ளுங்கள்.
போதுமான நேரமின்மையால் முழுமையாக எழுதமுடியவில்லை இருப்பினும் இதில் விரிவாக எழுதும் அளவிற்கு ஒன்றுமில்லை மிக எளிமையான மென்பொருள்.என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும் சில நேரங்களில் வலைத்தளங்களில் ஏதாவது புகைப்படம் தேடுவோம் ஆனால் அந்த படமோ அளவில் சிறியதாக இருக்கும் அதை பெரிதாக்க நினைத்தால் நிச்சியம் படத்தின் உருவம் மாறிப்போகும்.
இதை பற்றி நம்முடைய கடந்த பதிவான இமேஜ் கன்வெர்ட்டர் (Image Convertor)
ல் நண்பர்கள் எஸ்.கே
மற்றும் மாணவன்
இருவரும் ஒரு சந்தேகத்துடன் தீர்வையும் கேட்டிருந்தார்கள் பின்வருமாறு.
எஸ்.கே
எளிமை! சிறப்பாக உள்ளது! படம் தரம் குறையாமல் பெரிதாக்க மென்பொருள் உள்ளதா நண்பரே?
மாணவன்
”படம் தரம் குறையாமல் பெரிதாக்க மென்பொருள் உள்ளதா நண்பரே?”
நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்கான மென்பொருள் இருந்தால் பதிவிடவும் நண்பா...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி
இந்த பதிவு அவர்களுக்காகவும் மேலும் பலரை சென்றடையும் வகையில் இதை ஒரு பதிவாக எழுதுகிறேன். உண்மையை சொல்கிறேன் இந்த பதிவு என்னுடைய இரண்டு இரவுகளை தொலைத்திருக்கிறேன். நான் எழுதும் அதிக பதிவுகள் இரவில் மட்டுமே எழுதியிருக்கிறேன், இந்த பதிவை எழுதும் முன்பாக நிறைய ஆன்லைன் தளங்கள் மற்றும் இன்னும் சில மென்பொருள்கள் என நிறைய சோதித்து பார்த்த இறுதியில் கொஞ்சம் எனக்கு திருப்தியளித்தவுடன் இந்த பதிவை எழுதுகிறேன் இனி நீங்கள் இந்த Photo Enlarger
மென்பொருளை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவேண்டியது இல்லை நேரடியாக இயக்கலாம், தரவிறக்கி முடித்த பின்னர் SmillaEnlarger இருமுறை கிளிக்கினால் இயங்க தயாராகிவிடும. இந்த மென்பொருள் இப்போது பீட்டாவாகவே இருக்கிறது.
அதற்கு முன்பாக இந்த சின்ன விஷயத்தையும் படித்துவிடுங்கள் நீங்கள் பெரிதாக்க விரும்பும் படம் குறைந்த பட்ச தரமாவது இருக்கவேண்டும் படம் தரமில்லாத போது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு படத்தை மாற்றினாலும் படம் சிதைந்து போயிருக்கும். மேலும் இந்த மென்பொருள் எந்தளவிற்கு உங்களுக்கு தீர்வாய் அமையப்போகிறது என்பதும் எனக்கு தெரியாது இருப்பினும் ஓரளவிற்கு நிச்சிய்ம் இந்த பதிவு தீர்வு அளிப்பதாய் இருக்கும்.
இந்த மென்பொருளில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன நான் அடிப்படையை மட்டுமே எழுதுகிறேன் இனி நீங்களாகவே கொஞ்சம் முயன்று மற்ற விஷயங்களையும் பயன்படுத்தி பாருங்கள். இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் செய்யவேண்டியவற்றை நான் அடையாளமிட்டு எண்கள் கொடுத்துள்ளேன் அதன் படியே செய்து விடுங்கள் எண் 1ல் கிளிக்கி நீங்கள் விரும்பும் படத்தை உள்ளிடவும், எண் 2ல் அளவை கூட்டலாம் அல்லது கீழிருக்கும் Custom என்பதன் வழியாகவும் வேண்டிய அளவு கொடுக்கலாம், எண் 3ல் அளவை மாற்றவும் சேமிக்கவும் கொடுக்கும் கட்டளை, எண் 4ல் கிளிக்கி நீங்கள் கொடுத்த கட்டளை முடிவடைந்துவிட்டதா என பார்த்துக்கொள்ளலாம், எல்லாம் முடிந்தால் படத்தின் அளவு பெரியதாக இருக்கும் நீங்கள் கொடுத்த படத்தின் தரத்தை பொறுத்து அவுட்புட் இருக்கும்.
இல்லை எனக்கு படத்தை மொத்தமாக மாற்ற தேவையில்லை ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் பெரிதுபடுத்தி பார்க்க ஆசை அல்லது சேமிக்க ஆசை அதற்கும் வழி இருக்கிறது சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் நான் உங்களுக்காக மாற்றிய ஒரு பெரிய படத்தை இனைக்க நினைத்தேன் ஆனால் படத்தின் அளவு 7 எம்பி இருந்ததால் இனைத்தாலும் தளம் திறப்பதில் பிரச்சினை ஆகும் எனவே விட்டு விட்டேன். தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் வித்யாசம் உணர்வீர்கள்.
போட்டோஷாப் உபயோகிப்பவர்கள் எந்தவெரு புகைப்படத்தையும் போட்டோஷாப் வழியாகவே 10% அளவு அதிகரித்தாலும் பெரிய சிதைவு இருக்காது முயற்சித்து பாருங்கள் மறக்காமல் ரெசல்யூசன் 300 வைத்துக்கொள்ளுங்கள்.
போதுமான நேரமின்மையால் முழுமையாக எழுதமுடியவில்லை இருப்பினும் இதில் விரிவாக எழுதும் அளவிற்கு ஒன்றுமில்லை மிக எளிமையான மென்பொருள்.என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 17, 2010
13
Oct 17, 2010
ஜிஎஸ்ஆர்
இமேஜ் கன்வெர்ட்டர் (Image Convertor)
ஒரு வரி கருத்து: எந்த சமயத்திலும் முயற்சியை விடாதே, அப்பொழுது நிஜமாய் தோற்றுபோகிறாய்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் ஸ்டுடியோ, மற்றும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும்.
புகைப்படங்களை பொருத்தவரை நிறையவிதமான பார்மட்டுக்கள் இருக்கின்றன அதில் நாம் குறிப்பாக JPG, BMP, GIF என்பது போன்ற பார்மட்டுகளை நாம் வலைப்பூக்களில் பயன்படுத்துகிறோம் உதாரணமாக நாம் ஒரு ஸ்கீரின் ஷாட் எடுத்து நாம் மைக்ரோசாப்டின் பெயிண்டில் திறந்தால் அங்கு டிபால்ட்டாக இருக்கும் பார்மாட் BMP நல்ல தரமானாதாக இருக்கும் ஆனால் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் கொஞ்சம் தரம் மாறாமல் அளவை குறைக்க JPG பார்மட் பயன்படுத்தலாம் அதே நேரத்தில் போட்டோஷாப்பில் PSD எனும் பார்மட் இருக்கிறது அதன் அளவு இவை எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் அதில் இருக்கும் பயன்பாடுகளும் இருக்கும்.
நாம் இந்த பதிவின் வழியாக பார்க்கபோவது ஒரு பார்மட்டில் இருந்து வேறொரு பார்மட்டிற்கு எளிதாக எப்படி மாற்றுவது என்பதை பற்றித்தான் இதற்கு நிறைய மென்பொருள்கள் இனையத்தில் கிடைக்கின்றன ஆனால் இந்த மென்பொருள் ஒரே நேரத்தில் பலவிதமான பார்மட்டுகளை கையாலும் விதத்தில் இருக்கின்றன இதன் வழியாக JPG, BMP,GIF, GreyScale, Rotate இப்படி விதமான செயல்களை எளிதாக செய்யமுடியும்.
இனி இந்த இமேஜ் கன்வெர்ட்டர் Image Convertor தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மிக குறைந்த அளவுள்ள மென்பொருள்தான் இனி உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் இதன் ஷார்ட்கட் ஐகானை கிளிக்கினால் கீழிருக்கும் படத்தை போல வரும்.

இனி இடது பக்கம் இருக்கும் லோக்கல் டிஸ்க் வழியாக நீங்கள் மாற்ற விரும்பும் படங்களை தனியாகவோ அல்லது மொத்தமாகவோ தெரிவுசெய்து கன்வெர்ட் என்பதை கிளிக்கினால் போதும் எல்லாம் சில நொடிகளில் மாற்றிவிடலாம் இதன் வழியாக வேண்டுமானால் கலர் படங்களை கிரே கலராக மாற்றவும் படங்களை திருப்பும் வசதியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் விரும்புவீர்கள்.
போதுமான நேரமின்மையால் முழுமையாக எழுதமுடியவில்லை இருப்பினும் இதில் விரிவாக எழுதும் அளவிற்கு ஒன்றுமில்லை மிக எளிமையான மென்பொருள்.என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு புகைப்படம் பற்றியது நாம் அன்றாடம் எத்தனையோ விதமான காரணங்களுக்காக புகைப்படங்களை பயன்படுத்துகிறோம் அதிலும் ஸ்டுடியோ, மற்றும் வலைப்பூக்களில் புகைப்படம் அதிகமாக பயன்படுத்துகிறோம், இதனால் படிக்கும் நபர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருக்கும்.
புகைப்படங்களை பொருத்தவரை நிறையவிதமான பார்மட்டுக்கள் இருக்கின்றன அதில் நாம் குறிப்பாக JPG, BMP, GIF என்பது போன்ற பார்மட்டுகளை நாம் வலைப்பூக்களில் பயன்படுத்துகிறோம் உதாரணமாக நாம் ஒரு ஸ்கீரின் ஷாட் எடுத்து நாம் மைக்ரோசாப்டின் பெயிண்டில் திறந்தால் அங்கு டிபால்ட்டாக இருக்கும் பார்மாட் BMP நல்ல தரமானாதாக இருக்கும் ஆனால் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் கொஞ்சம் தரம் மாறாமல் அளவை குறைக்க JPG பார்மட் பயன்படுத்தலாம் அதே நேரத்தில் போட்டோஷாப்பில் PSD எனும் பார்மட் இருக்கிறது அதன் அளவு இவை எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் அதில் இருக்கும் பயன்பாடுகளும் இருக்கும்.
நாம் இந்த பதிவின் வழியாக பார்க்கபோவது ஒரு பார்மட்டில் இருந்து வேறொரு பார்மட்டிற்கு எளிதாக எப்படி மாற்றுவது என்பதை பற்றித்தான் இதற்கு நிறைய மென்பொருள்கள் இனையத்தில் கிடைக்கின்றன ஆனால் இந்த மென்பொருள் ஒரே நேரத்தில் பலவிதமான பார்மட்டுகளை கையாலும் விதத்தில் இருக்கின்றன இதன் வழியாக JPG, BMP,GIF, GreyScale, Rotate இப்படி விதமான செயல்களை எளிதாக செய்யமுடியும்.
இனி இந்த இமேஜ் கன்வெர்ட்டர் Image Convertor தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மிக குறைந்த அளவுள்ள மென்பொருள்தான் இனி உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் இதன் ஷார்ட்கட் ஐகானை கிளிக்கினால் கீழிருக்கும் படத்தை போல வரும்.
இனி இடது பக்கம் இருக்கும் லோக்கல் டிஸ்க் வழியாக நீங்கள் மாற்ற விரும்பும் படங்களை தனியாகவோ அல்லது மொத்தமாகவோ தெரிவுசெய்து கன்வெர்ட் என்பதை கிளிக்கினால் போதும் எல்லாம் சில நொடிகளில் மாற்றிவிடலாம் இதன் வழியாக வேண்டுமானால் கலர் படங்களை கிரே கலராக மாற்றவும் படங்களை திருப்பும் வசதியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் விரும்புவீர்கள்.
போதுமான நேரமின்மையால் முழுமையாக எழுதமுடியவில்லை இருப்பினும் இதில் விரிவாக எழுதும் அளவிற்கு ஒன்றுமில்லை மிக எளிமையான மென்பொருள்.என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 14, 2010
19
Oct 14, 2010
ஜிஎஸ்ஆர்
கணினியில் எந்த கோப்பையும் என்கிரிப்ட் செய்யலாம்
ஒரு வரி கருத்து: தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவிட்டால் தான் அது தோல்வி.
வணக்கம் நண்பர்களை இந்த பதிவு ஒரு மென்பொருளை அல்லது ஏதாவது ஒரு கோப்பு எதுவாக இருந்தாலும் எப்படி அதை வேறொரு விதமான பார்மட்டாக மாற்றி அதை என்கிரிப்ட் செய்து விடுவது உதாரணமாக உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது அதிகமான மென்பொருள்களின் எக்ஸ்டென்ஷன் .EXE என்பதாக இருக்கும் ஆனால் இந்த மென்பொருள் வழியாக நாம் என்கிரிப்ட் செய்துவிட்டால் அதன் எக்ஸ்டென்ஷன் . xcon என்பதாக இருக்கும் இது எல்லா மென்பொருளுக்கும், நாம் உபயோகபடுத்தும் எந்த கோப்பாக இருந்தாலும் என்கிரிப்ட் செய்தால் . xcon என்பதாகவே இருக்கும்.
இதனால் என்ன பயன் அவ்வளவு எளிதாக யாரும் திறக்க முடியாது ஏன் நீங்களே அதன் கடவுச்சொல்லை மறந்துவிட்டாலும் திறக்க முடியாது. நான் இதே போன்றதொரு வேறொரு வழிமுறையை நான் மே-29-2010 அன்று போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த மென்பொருள் பைல்களை வெளியில் காண்பிக்காது ஆனால் இது காண்பிக்கும் ஆனால் திறக்க முடியாது.
இனி இந்த Conceal Setup மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், நிறுவி முடிந்த்தும் நீங்கள் செய்ய வேண்டியதை கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு மென்பொருளை என்கிரிப்ட் செய்தவுடன் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் எந்த பைலை என்கிரிப்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதை இழுத்து பூட்டு இருக்கும் இடத்தில் விடவும்.

இப்போது இப்படியாக ஒரு சிறிய பாப் அப் வரும் அதில் நீங்கள் செய்யவேண்டியது Destination என்பதில் நீங்கள் உள்ளிடும் கோப்பு எந்த இடத்தில் மாற்றம் செய்து வரவேண்டும் Location என்பதை கொடுக்கவும் அடுத்தபடியாக கடவுச்சொல் இருமுறை ஒரே மாதிரியாக கொடுக்கவும் பின்னர் கொடுத்து முடித்ததும் மேலே இருக்கும் Save and Close என்பதை சொடுக்கினால் போதும் உங்கள் பைல் இப்போது என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் அப்படியே அதன் கீழே பாருங்கள் Delete Original File என்பதாக இருக்கிறது அதை வேண்டுமானால் பயன்படுத்துங்கள் அதை பயன்படுத்தினால் நீங்கள் உள்ளிடும் ஒரிஜினல் கோப்பு அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பு மட்டும் இருக்கும். முதலில் சோதனை செய்து பார்த்துவிட்டு பயன்படுத்துங்கள்.

இதே வழிமுறைதான் என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பு திறப்பதற்கும் முதலில் என்கிரிப்ட் செய்ய பூட்டு இட்ட இடத்தில் பைலை DRAG & DROP செய்தீர்கள் இப்போது சாவி இட்ட இடத்தில் DRAG & DROP செய்யப்போகிறீர்கள் அவ்வளவுதான்.
இதில் எந்த கோப்பையும் உள்ளிட முடிகிறது ஆனால் சாதரண போல்டரில் பைல்களை இட்டு மறைக்க நினைத்தால் முடிவதில்லை அதே நேரத்தில் மொத்த பைல்களையும் ஒரு போல்டரில் இட்டு அதை விண் ரார் கோப்பாக மாற்றிய பின்னர் மொத்த போல்டரையும் என்கிரிப்ட் செய்ய முடிகிறது பயன்படுத்தி பாருங்கள்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களை இந்த பதிவு ஒரு மென்பொருளை அல்லது ஏதாவது ஒரு கோப்பு எதுவாக இருந்தாலும் எப்படி அதை வேறொரு விதமான பார்மட்டாக மாற்றி அதை என்கிரிப்ட் செய்து விடுவது உதாரணமாக உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது அதிகமான மென்பொருள்களின் எக்ஸ்டென்ஷன் .EXE என்பதாக இருக்கும் ஆனால் இந்த மென்பொருள் வழியாக நாம் என்கிரிப்ட் செய்துவிட்டால் அதன் எக்ஸ்டென்ஷன் . xcon என்பதாக இருக்கும் இது எல்லா மென்பொருளுக்கும், நாம் உபயோகபடுத்தும் எந்த கோப்பாக இருந்தாலும் என்கிரிப்ட் செய்தால் . xcon என்பதாகவே இருக்கும்.
இதனால் என்ன பயன் அவ்வளவு எளிதாக யாரும் திறக்க முடியாது ஏன் நீங்களே அதன் கடவுச்சொல்லை மறந்துவிட்டாலும் திறக்க முடியாது. நான் இதே போன்றதொரு வேறொரு வழிமுறையை நான் மே-29-2010 அன்று போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த மென்பொருள் பைல்களை வெளியில் காண்பிக்காது ஆனால் இது காண்பிக்கும் ஆனால் திறக்க முடியாது.
இனி இந்த Conceal Setup மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், நிறுவி முடிந்த்தும் நீங்கள் செய்ய வேண்டியதை கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு மென்பொருளை என்கிரிப்ட் செய்தவுடன் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் எந்த பைலை என்கிரிப்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதை இழுத்து பூட்டு இருக்கும் இடத்தில் விடவும்.
இப்போது இப்படியாக ஒரு சிறிய பாப் அப் வரும் அதில் நீங்கள் செய்யவேண்டியது Destination என்பதில் நீங்கள் உள்ளிடும் கோப்பு எந்த இடத்தில் மாற்றம் செய்து வரவேண்டும் Location என்பதை கொடுக்கவும் அடுத்தபடியாக கடவுச்சொல் இருமுறை ஒரே மாதிரியாக கொடுக்கவும் பின்னர் கொடுத்து முடித்ததும் மேலே இருக்கும் Save and Close என்பதை சொடுக்கினால் போதும் உங்கள் பைல் இப்போது என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் அப்படியே அதன் கீழே பாருங்கள் Delete Original File என்பதாக இருக்கிறது அதை வேண்டுமானால் பயன்படுத்துங்கள் அதை பயன்படுத்தினால் நீங்கள் உள்ளிடும் ஒரிஜினல் கோப்பு அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பு மட்டும் இருக்கும். முதலில் சோதனை செய்து பார்த்துவிட்டு பயன்படுத்துங்கள்.
இதே வழிமுறைதான் என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பு திறப்பதற்கும் முதலில் என்கிரிப்ட் செய்ய பூட்டு இட்ட இடத்தில் பைலை DRAG & DROP செய்தீர்கள் இப்போது சாவி இட்ட இடத்தில் DRAG & DROP செய்யப்போகிறீர்கள் அவ்வளவுதான்.
இதில் எந்த கோப்பையும் உள்ளிட முடிகிறது ஆனால் சாதரண போல்டரில் பைல்களை இட்டு மறைக்க நினைத்தால் முடிவதில்லை அதே நேரத்தில் மொத்த பைல்களையும் ஒரு போல்டரில் இட்டு அதை விண் ரார் கோப்பாக மாற்றிய பின்னர் மொத்த போல்டரையும் என்கிரிப்ட் செய்ய முடிகிறது பயன்படுத்தி பாருங்கள்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 13, 2010
8
Oct 13, 2010
ஜிஎஸ்ஆர்
எந்திரன்! ஒரு விரிவான பார்வை!
ஒரு வரி கருத்து: உன் மனதில் இருக்கும் பாடலின் வரியை கூட எடுத்துக்கொடுப்பான் நண்பன்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு மிக நீளமானது படிப்பதற்கு கொஞ்சம் இல்லை, இல்லை நிறையவே பொருமை அவசியம் இதன் தலைப்பை பார்த்து வேறு ஏதாவது நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும். இந்த படைப்பு முழுவதும் காப்பி எடுக்கப்பட்டதுதான்
ஒரு ரோபோ என்பது நடைமுறையில் உண்மையான இயந்திர வடிவுடைய செயற்கையான முகவர் அல்லது காரகி ஆகும். செயல்முறைப்படி, அது ஒரு வழக்கமான மின்னாற்றல் இயக்கவியல் இயந்திரம் ஆகும், அது மேலும் கணினி வழிகாட்டுதல் மற்றும் மின்மம் சார்ந்த திட்டங்கள் பேரில் இடுபணிகளை தானாக நிறைவேற்றவல்ல திறன் படைத்ததாகும். மற்றுமொரு பொதுவான குணநலன் யாதெனில் அதன் தோற்றம் அல்லது அசைவுகள் மூலம் ஒரு ரோபோ அடிக்கடி தெரிவிக்கும் பொருள் ஆவது, அதற்கென்று ஒரு நோக்கம் அல்லது காரகம்-செயலாண்மை இருக்கின்றது என்பதே ஆகும்.
ரோபோ என்ற சொல்லானது இயற்பியலான ரோபோக்கள் நடைமுறையின்படி மெய்மையான மென்பொருள் காரகிகள், இரண்டையும் ஒருசேரக் குறிப்பிடும், ஆனால் அதில் பின்னால் சொல்லப்பட்டது வழக்கமாக பாட்ஸ் என்று அழைக்கப்படும். இயந்திரங்களுக்குரிய தகுதி ரோபோக்கள் பெற்றுள்ளதா என்பதில் கருத்தொற்றுமை ஏதும் இல்லை, ஆனால் பொதுவான ஒத்த கருத்து வல்லுனர்கள் மற்றும் பொது மக்களிடையே நிலவுவது யாதெனில் ரோபோக்கள் பின்வரும் மொத்த அல்லது ஒருசில வேலைகளை நிச்சயம் செய்யும்: சுற்றிலும் நகர்வது, இயந்திர கை, கால் போன்ற பக்க உறுப்புகளை இயக்குவது, சுற்றுப்புற சூழ்நிலைகளை உணர்ந்து அதற்கு தகுந்தாற் போல் கையாள்வது, நுண்ணறிவு நடத்தை முறையை வெளிப்படுத்துவது, அதிலும் குறிப்பாக மனிதர்கள் அல்லது பிறமிருகங்கள் நடந்து கொள்வதை அதேபோல் நடித்துக்காட்டுவது ஆகியனவாகும்.
அச்சொல்லால் குறிப்பிட்டுக் கூறுவதில் அதாவது பொதுப்படையான பயன்பாடு உணர்த்தும் தூரத்தில் இருந்து இயக்கும் வழிமுறைகளா, அல்லது பிரத்தியேகமான மென்பொருளால் மனிதர்களின் தலையீடு இன்றி அவைகளை கட்டுப்படுத்தப்படும் வழிமுறைகளா என்பதில் ஒரு சச்சரவு நிலவுகிறது. தென் ஆப்ரிக்காவில், ரோபோ என்பது ஒரு முறைப்படி இல்லாத மற்றும் பொதுவாக உபயோகிக்கப்படும் போக்குவரத்துக்கான விளக்குகளின் தொகுதி பற்றிய சொல்லைக் குறிக்கும்.
செயற்கையான உதவியாளர்கள் மற்றும் தோழர்கள் பற்றிய கதைகள் அவைகளை உருவாக்கியது பற்றியும் நெடுங்காலமாகவே நிலவி வருவதால் இருபதாம் நூற்றாண்டில்தான் முற்றிலும் தானியங்கும் இயந்திரங்கள் தோன்றி வந்தன. எண்மம் மற்றும் திட்டமிடுதல் அடிப்படையில் இயங்கும் ரோபோட், 1961 ல் முதன்முதலில் யுனிமேட் பெயரில் நிறுவப்பட்டது, அதுஒரு அச்சு வார்ப்புப் படிவ இயந்திரத்தில் உலோக வெப்பத் துண்டுகளைத் தூக்கிக் குவியல் குவியலாக அடுக்கி வைக்க பயன்படுத்தப்பட்டது. இன்றோ, வியாபார மற்றும் தொழில் ரீதியில் ரோபோக்கள் பல்வேறு பட்ட தொழில்களை செலவு பிடிக்காமல் அதிக துல்லியமாகவும் மனிதர்களைக் காட்டிலும் நம்பகமாகவும் செய்ய முடிகின்றது. மேலும் அவைகள் அழுக்கு படர்ந்த வேலைகள், மற்றும் அபாயகரமான வேலைகள் அல்லது மனிதர்களுக்கு ஊக்கம் குன்றிய மற்றும் பொருத்தமில்லாத வேலைகள் யாவும் முடித்துவிட பயன்படுகின்றன. ரோபோக்கள் பரவலாக பொருள் உற்பத்தி, ஒருங்கு திரட்டுதல், கட்டி வைத்தல், போக்கு வரவு, நிலம் அகழ்வது மற்றும் விண்வெளி ஆய்ந்து அறிதல், அறுவை உபகரணங்கள், ஆயுதங்கள் செய்தல், ஆய்வுக்கூட ஆராய்ச்சி, மற்றும் நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் பொருள்கள் செய்தல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.பல்வேறு நாடுகளில் இருக்கும் ரோபோகளின் எண்ணிக்கையை எவ்வளவு என்று ஒப்பிட்டுக் கூறுதல் மிகவும் கடினமானதாகும், ஏனெனில் ஒரு 'ரோபோ' பற்றிய வரையறைகள் பல்வகைகளாக உள்ளன. தரஅளவுப்பாடு பற்றிய ஒரு சர்வதேச அமைப்பு, ஐஎஸ்ஓ 8373 செய்துள்ள வரையறையானது: 'ரோபோ' என்பது "ஓர் சுயகட்டுப்பாடு கொண்டதும், மறுதிட்ட அமைப்பும் மற்றும் பல்நோக்கும் கொண்டதுமான இயந்திரமாகும். மேலும் அது திட்டஅமைப்பில் சூழ்ச்சித்திறன் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அச்சுகளில் இயங்கும் வல்லமை கொண்டதாகும். அவைகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது தானியங்கும் வகையிலோ அமையப் பெற்றிருக்கலாம். எல்லாமே தொழிலியல் தானியங்கு பயன்பாட்டிற்காகவே அமைந்துள்ளன. இந்த வரையறையை சர்வதேச ரோபோ இயல்முறைகள் பெடரேஷன், ஐரோப்பியன் ரோபோஇயல்முறைகள் ஆராய்ச்சி வலைதளம் (யூரோன்), மற்றும் பல்வேறு நாடுகளின் தரஅளவுக் குழுக்கள் யாவுமே பயன்படுத்தி வருகின்றன.
அமெரிக்க ரோபோடிக்ஸ் இன்ஸ்டிடியுட் (ஆர்ஐஏ) ரோபோ வரையறையை ஒரு பரந்த அளவில் பயன்படுத்துகின்றது: "பல்வகைச் சூழ்ச்சித்திறனாளுகையால் மறுதிட்ட அமைப்பு வாய்க்கப் பெற்று பொருள்கள், அதன் பிரிவுகள், கருவிகள் அல்லது பிரத்தியேகமான வழிமுறைகள் பல்வேறு திட்டங்களின் கருத்துக்களுக்காகவும் பல்வகையான செய்பணிகளை நிறைவேற்றவும் உள்ள இயந்திரமே ரோபோ ஆகும்." ஆர்ஐஏ ரோபோகளை நான்கு உட்பிரிவுகளாக வகுத்துள்ளது: சூழ்ச்சித்திறனால் மனிதக் கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இயக்குதல், தானியங்கு திறன் படைத்த வழிமுறைகள் கொண்ட முன்கூட்டியே நிர்ணயித்த சுழற்சிமுறைகள், ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தொடர்ந்து விசைவீச்சு வளைகோடுகள் வாயிலாக வழங்கிக் கட்டுப்பாடு மூலம் திட்டமிடும் தன்மை, மற்றும் நான்காவது வகைசார்ந்த ரோபோக்கள் சுற்றுப்புறச் சூழ்நிலையிலிருந்து தகவல் பெற்று அதற்கேற்ப நுண்ணறிவுடன் நகர்வது இவைகளே ஆகும்.
ஓவ்வொருவரையும் திருப்திப்படுத்தக் கூடிய வரையறை எதுவுமில்லை, பலர் அவர்களுக்குகந்ததையே கொண்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, ஜோசெப் எங்கள் பெர்கர் என்னும் ஒரு தொழில்துறை சார்ந்த ரோபோ இயல்முறைகளின் முன்னோடி, ஒருமுறை குறிப்பிட்டுச் சொன்னார்: "ஒரு ரோபோ என்னவென்று என்னால் வரையறை செய்ய முடியாது, ஆனால் அதில் ஒன்றைப் பார்த்த உடனே நான் தெரிந்துகொள்வேன். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தின்படி, ஒரு ரோபோ என்பது,"மனித முயற்சிகளுக்கு மாற்றாக உள்ள சுயமாக இயங்கும் இயந்திரமாகும். அது தோற்றத்தில் மனிதர்கள்போல இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதர்கள் போல காரியங்களை அது நிறைவேற்றும். மெர்ரியம்- வெப்ஸ்டர் அகராதியின்படி, "மனிதன் போலுள்ள ஓர் இயந்திரம் அது, நடப்பது, பேசுவது போன்ற சிக்கலான காரியங்களை நிறைவேற்றும்." என்ற வரையறையும் அல்லது "அது ஒரு வழிமுறை அடிக்கடி சிக்கலான செயல்களை தானாக மற்றும் மீண்டும் மீண்டும் நிறைவேற்றும்." அல்லது,"பின்புல இயக்கவிசையின் வழிகாட்டுதலில் தானியங்கு கட்டுப்பாடுகள் அது கொண்டதாகும்." என்ற வரையறைகளும் உள்ளன.
நவீன ரோபோக்கள் இறுக்கமான சுற்றுப்புறச் சூழ்நிலைக் கட்டுப்பாடுகள் மிக்கதாகும். ஒருங்கு கூடிய வரிசைகள் எதிர்பாராத தலையீடுகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். இதன் காரணமாக, பல மனிதர்கள் அபூர்வமாகவே ரோபோகளை எதிர்த்துப் போராடுகின்றனர். எனினும்,வீட்டுவேலைகள் செய்ய, ரோபோகளை குறிப்பாகத் துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்,|ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்,உபயோகிக்கின்றனர். மேலும் ராணுவத்திலும் ரோபோகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
தனிச்சிறப்பு அம்சங்களை வரையறை செய்தல்
"ரோபோ," வரையறை ஏதும் சரியாக இல்லாததால் ஒரு வகைமாதிரியான வரையறை, கூடுமானவரையில் பின்வரும் பல அம்சங்கள் பெற்றிருக்கும்.அது ஒரு மின்விசை இயந்திரமாகும். இயற்பியல் பொருள்களோடு கலந்துறவாடும் வல்லமை பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடும்பணி முடிக்கத்தக்க மின்ம இயக்க திட்டமிடும் அமைப்பும் கொண்டுள்ளது. வரிசைக்கிரமமாக பலஇடும்பணிகள் மற்றும் செயல்கள் யாவும் முடிக்கும்திறன் கொண்டுள்ளது.
மேலும் அதன் திறன் இயற்பியல் பொருள்களின் தரவுகளைக் கண்டவுடனே ஈர்த்துக்கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும், அப்பொருள்களின் சுற்றுப்புறச் சூழ்நிலை களின் உள்ளிட நிலைமைகளுக்கேற்ப, தரவுகளை நடைமுறைப் படுத்துவதும், பல்வேறு ஊக்கிகளுக்கு ஈடு கொடுப்பதற்கேற்பவும் அமைந்திருக்கும். இது ஓர் எளிய இயந்திர வழிமுறையான நெம்புகை, நீரமுக்கு இயந்திரம், அல்லது வேறு பொருள்களுக்கு மாறுபட்டு இருக்கும். அவைகளுக்கு நடைமுறைப்படியாற்றும் திறன் கிடையாது. அவைகள் பணிகளை வெறும் இயந்திர அமைப்பில் இயக்கவிசையுடன் மட்டுமே முடுக்கும்.

உளவியல் முகமை
ரோபோடிக் பொறியிலாளர்களுக்கு, ஒர் இயந்திரத்தின் இயல்தோற்றம் மட்டும் முக்கியம் கிடையாது, அதன் செயல்பாடுகள் எவ்வகையில் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதே முக்கியமாகும். அத்தகு கட்டுப்பாட்டு ஒழுங்கமைப்பு அதற்குரிய முகமையை அதுவாகவே பெற்றிருக்கும், எனவே அவ்வியந்திரம் ஒரு ரோபோ என்றழைக்கப்படும். ஒரு முக்கிய அம்சமானது, எவ்வகையில் தேர்வுகளை செய்வதென்ற திறனேயாகும். உயர்மட்ட- அறிவாற்றல் வேலைப்பாடுகள், இருப்பினும்,எறும்பு ரோபோகளுக்கு முக்கியமானதல்ல, என்பது காட்டப்பட்டுள்ளது.
தானாக ஒழுங்குமுறைப்படி இயங்கும் பொறியமைப்புடைய ஒருகார் ரோபோ வகை சார்ந்ததாகக் கருதப்பட மாட்டாது.
ஒரு தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனம் சிலசமயங்களில் ரோபோ (அல்லது டெலிரோபோ) என்றழைக்கப்படும்.
கணினியுடன் இயங்கும் ஒரு கார், பிக்டிராக் போன்றது, திட்டமிடல் அமைப்புடைய கிரமமுறையில், ஓட்டிச் செலுத்தப்படும். அதுஒரு ரோபோ என்று அழைக்கப் படும்.
சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் ஒருகார் சுற்றுப்புறச்சூழல்களை உணர்ந்தறியும் திறனுடன் ஓட்டும் தீர்மானங்கள் பெற்ற தகவலின் அடிப்படையில் அமைந்திருக்கும், அதாவது 1990களில் வந்த எர்னஸ்ட் டிக்மான்ன்ஸ் வாகனஓட்டியில்லாத கார்கள்போல! அல்லது டார்பா கிராண்ட் சாலென்ஜ் நுழைவுகளைப்போல இருப்பின், அதுஒரு ரோபோ என்று கருதப்படும்.
ஒரு புலனறிவுடைய ஆள்போன்ற கார்,கேஐடிடி கற்பனை போன்றது, அது தீர்மானங்கள் செய்யவல்லது, தடையில்லாமல் ஓடுவது, தங்குதடையின்றி பேசவல்லது, அது வழக்கமாக ஒரு ரோபோ என்று அழைக்கப்படும்.
இயற்பியல் முகமை
எவ்வாறாயினும், பலசாதாரண மனிதர்களுக்கு, இயந்திரம் என்பது கரங்கள் மற்றும் கைகால் பக்கஉறுப்புகள், யாவும் கட்டுப்படுத்தவல்லது எனதோற்றத்தில் தெரிந்தாலும்மனிதப்பண்பு கற்பிக்கின்ற அல்லது விலங்குப்பண்பு புகட்டுகின்றதாகவோ தோன்றிடலாம். (உதாரணம்.அசிமோ அல்லது அய்போ), அதைவேண்டுமானால் ஒரு ரோபோ என்று அழைக்கலாம்.
ஒரு பியானோ வாசிப்பாளன் அபூர்வமான இயல்புடைய ஒரு ரோபோ என்று கூறலாம்.
ஒரு சிஎன்சி மில்லிங் மிஷின்- உலோகத் தகட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம் - அதை அபூர்வமாக ஒரு ரோபோ என்றழைக்கலாம்.
ஒரு தொழிற்சாலையில் சுயஇயக்கமுடைய கரம் தொழிலியலான ரோபோ
தானே இயங்கும் சக்கரமுடைய அல்லது தடவழியில் செல்லும் வழிமுறை, சுயமாக வழிகாட்டிக் கொள்ளும் முதிரா இழைபொறியாயினும், அதை இயங்கு ரோபோ அல்லது சேவை ரோபோஎன்று கருதப்படலாம்.
ஒரு விலங்குருவான இயந்திர விளையாட்டுப் பொம்மை, ரோபோராப்டர்,எனும் பெயரில் அபூர்வமாக ஒரு ரோபோ ஆக அழைக்கப்படலாம்.
மனிதஉருவில் உள்ள இயந்திரம், அசிமோ போன்றது, ஒரு ரோபோ அல்லது சேவை ரோபோ என்று அழைக்கப்படலாம்.
மூன்று அச்சுகள் கொண்ட ஒரு சிஎன்சி மில்லிங் மிஷின்- உலோகத் தகட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம்-ரோபோ கரம்போல, கட்டுப்பாடுகொண்ட அமைப்பைக் கொண்டிருக்கும் அந்தக்கரமே அதைஒரு ரோபோ எனஅழைக்கக் காரணமாகும்.சிஎன்சி இயந்திரமோ ஒரு சாதாரண இயந்திரமாகவே கருதப்படும். கண்கள் பெற்றிருப்பதும் ஓர் இயந்திரம் ரோபோ என்று கூறுதற்குரிய வேற்றுமை அம்சமாகும்,மனிதர்கள் கண்களை உள்ளுணர்வால் புலனறிவுடைமையோடு தொடர்பு கொண்டுள்ளனர்.
எவ்வாறு இருப்பினும், மனிதப்பண்புகள் பெற்றிருப்பது மட்டுமே அளவைக் கட்டளை என போதாது, அவைகளால் ஒர்இயந்திரம் ரோபோ என்றழைக்கப் படவும் மாட்டாது. ஒரு ரோபோ எதையாவது ஒன்றைச் செய்தாகவேண்டும் அசையாத வடிவுடைய அசிமோவை நகர்த்துவது போல, இல்லையென்றால் அதை ஒரு ரோபோ என அழைக்கப் படமாட்டாது.
சொல்லாக்க விளக்கம்.
ரோபோ எனும் சொல் முதன்முதலில் செக் எழுத்தாளர் கரேல் கபேக் அவருடைய நாடகம் ஆர்.யு.ஆர்.(ரோச்சும்மின் அகில உலக ரோபோட்கள்), அதில் அறிமுகம் செய்தார்.ஆர் யு ஆர் என்பது ரோச்சும்மின் உலகளாவிய ரோபோகள், 1920.ல் அது வெளியிடப்பட்டது. நாடகமானது ஒரு தொழிற்சாலையில் உள்ள செயற்கையான மனிதர்கள் பற்றியதாகும். அவர்கள் ரோபோக்கள் என்று அழைக்கப்படுவர்,அவர்கள் நவீன கருத்துக்கள் ஆனா அன்டிரயிட்ஸ்- அதற்கு ஒத்து வந்தனர்,அதன்படி, அவர்கள் மனிதர்கள் போல தோற்றம் கொண்ட இயந்திரங்கள் ஆவார்கள். அவர்கள் தெளிவாக அவர்களுக்காக நினைப்பவர்கள் போல இருப்பர், அவர்கள் பணிபுரிய இன்புறுபவர்கள் போல தென்படுவர். நாடகத்தில் பிரச்சினை ரோபோக்கள் சுரண்டப்படுகின்றார்களா மற்றும் எப்படி பாவிக்கப்படுகின்றனர் அதன் விளைவுகள் என்ன என்பதுதான்.
எவ்வாறாயினும், கரேல் கபேக் அந்த வார்த்தையை முதன்முதல் புதிதாக புனைந்திடவில்லை. அவர் ஒரு சிறிய கடிதம் வாயிலாக ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்கு அடிச்சொல் வரலாறு அல்லது சொல்லாக்க விளக்கம் பற்றி குறிப்பிடுகையில் அவருடைய சகோதரர்,வர்ணம் பூசுபவரும் எழுத்தாளருமான, ஜோசெப் கபேக் தான், அச்சொல்லின் உண்மையான மூலகர்த்தா ஆவார் என்று கூறியுள்ளார். 1933ல், அவர் ஒரு செக் பத்திரிகை லிடோவே நோவினி அதில் எழுதிய கட்டுரையில், அவர் முதன்முதலாக இயந்திரஉயிர் இனங்களை லபோரி (லத்தீன் மொழியில் லபோர் என்றால் வேலை என்று பொருள்)என்றே அழைக்க நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும்,அவர் அந்த வார்த்தை பிடிக்காததால், தன் சகோதரர் ஜோசெப்பிடம் ஆலோசனை கலந்ததில் தெரிவிக்கப்பட்ட சொல்லே "ரோபோடி"யாகும். ரோபோட என்ற சொல்லானது வேலை அல்லது உழைப்பு அல்லது அடிமை உழைப்பாளி பொருள்படும், உருவகமாக செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் "கடும்தொழில்" அல்லது "கடும்உழைப்பு" என்றும் பொருள்பயக்கும். மரபு ரீதியில் ரோபோட என்பது ஓர் அடிமைத்தொழிலாளி தன் எஜமானனுக்கு, ஒரு வருடத்தில் ஆறு மாதங்கள் வேலைக்காலமாக பணியாற்ற வேண்டும். 1848ல் போஹெமியாவில், அடிமைத்தொழில் சட்டப்படி செல்லுபடி ஆகாது என்று அறிவிக்கப்பட்டது, ஆகையால் கபேக் ஆர்.யு.ஆர் நாடகம் எழுதிய போது,ரோபோ என்ற சொல்லானது வேலையின் பலவகைகளை உள்ளடக்கியது,ஆயினும் "அடிமைத்தனம்" என்ற சொல்லானது வழக்கொழிந்தாலும் அது தெரியப்படும் சொல்லாகவே இன்றளவும் உள்ளது.
ரோபாடிக்ஸ் என்ற சொல்லானது, இவ்வாய்வுத் துறையினை குறிப்பிடுவதாகும்,அது முதன்முதலில் (தற்செயலாக அமைந்த போதிலும்), எழுத்தாளர் ஐசக் அசிமோவ் தனது அறிவியல் கற்பனைக் கதையில் புதிதாக புனைந்துரைத்தார்.
சமூகத் தாக்கம்
ரோபோக்கள் நாளடைவில் முன்னேற்றம் மற்றும் உலகியலுக்கு ஒத்து வளர்ச்சி அடையவே நிபுணர்களும் கல்வியாளர்களும் ஒழுக்கக் கோட்பாடுகள் அடிப்படையில் தோன்றும் வினாக்களுக்கு விடைகாண அவர்கள் முற்பட்டனர்,ரோபோகளின் நடத்தையை கட்டுப்படுத்துவது எது என்பதையும் அவைகள் சமுதாயம் , பண்பாட்டியல்,ஒழுக்க நெறிமுறை, மற்றும் சட்டம் சார்ந்த உரிமைகள் கொண்டுள்ளனராஎன ஆராய்ந்து கொண்டு வருகின்றனர். ஒரு அறிவியல் குழு தெரிவித்தது யாதெனில் 2019வருவதற்குள் ஒரு ரோபோ மூளை உருவாகிவிடுவது இயலக்கூடியதாகும் என்பதேயாகும். 2050க்குள் ரோபோ நுண்ணறிவு கொண்ட வல் ஊடுவழிகள் பல காண இயலும் என்று ஆருடம் கணித்துள்ளனர். சமீப கால முன்னேற்றங்கள் ரோபோடிக் நடத்தை நடைமுறை அறிவடிப்படையைச் சார்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்து வருகின்றன.
வேர்நோர் விஞ்சே என்பார் எதிர்காலத்தில் கணனிகள் மற்றும் ரோபோக்கள் இரண்டும் மனிதர்களைவிட மிகவும் வினைத்திறம் கொண்டு திகழக் கூடும் என்று கருத்துக் கூறியுள்ளார் அவர் இதை "ஒரு தனிச் சிறப்புக்கூறு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு வேளை அது மனிதர்களுக்கு ஆபத்தாகவும் அமைந்து விடவும் கூடும். இதுஒரு தத்துவார்த்த ரீதியில் "தனிச் சிறப்புக்கூற்றியல்" என்று விளக்கப்படுகின்றது.
2009,ல் வல்லுனர்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு கணினிகளும், ரோபோட்களும் சுயாட்சி அந்தஸ்து பெறுமா, எனவும் அப்படி பெறும் பட்சத்தில் அவைகளின் திறன்கள் ஓர் அச்சுறுத்தல் அல்லது அபாயம் அளிக்குமா என விவாதித்தனர். அவர்கள் குறிப்பால் உணர்த்தியது என்னவெனில் சில ரோபோக்கள் பாதி-சுயாட்சி பல வடிவங்களில் அடைந்துள்ளதாகவும், அவைகளுக்குத் தேவையான எரிசக்தி மூலங்கள் அவைகளாகவே உற்பத்தி செய்து கொள்கின்றது எனவும் ஆயுதம் கொண்டு இலக்குகளைத் தாக்கும் திறன் சுயேட்சையாக பெற்றுள்ளது எனவும் கூறினார்கள். மேலும் அவர்கள் குறிப்பால் உணர்த்தியது சில கணினிகள் நச்சுக் கிருமிகளை அழிக்கும் வேலையை செய்யாமல் தப்பித்து விடுகின்றன எனவும் அவைகள் பெற்றுள்ளது "கரப்பான் பூச்சி நுண்ணறிவு" மட்டுமே எனவும் கூறினார்கள். மேலும் அவர்கள் குறிப்பால் தொடர்ந்து உணர்த்தியது என்னவெனில் அறிவியல் கதைகளில் வர்ணிக்கப்பட்ட சுய-விழிப்புணர்வு அரிதானது எனவும், ஆனால் அதே சமயம் பிற உள்ளார்ந்த அபாயகட்டங்கள் மற்றும் வீழ்த்தும் குழிகள் உள்ளதெனவும் கூறினார்கள். பல்வேறு ஊடக மூலங்கள் மற்றும் அறிவியலார்ந்த குழுக்கள் குறிப்பில் உணர்த்தியது மாறுபட்ட பகுதிகளில் தனித்தனி போக்குகள் மூலம் பெரும்அளவில் ரோபோடிக் செயல்பாட்டு முறைகள் மற்றும் சுயாட்சி அந்தஸ்து, அடைந்து அதனால் பல உள்ளார்ந்த கவலைகளைத் தோற்றுவிக்கக் கூடும் எனவும் கூறியுள்ளன.
சில நிபுணர்கள் மற்றும் கல்விஇயலார்கள் ரோபோகளை பயன்படுத்தினால் ராணுவ சண்டைகளுக்கு, சுயாட்சி மூலம் வழிவகுக்க நேரிடும் எனவும் வினா எழுப்பி உள்ளனர். தொழில் நுட்பம் சார்ந்த கவலைகளும் அதனுள் இருக்கின்றன எனவும் ஒருசில ஆயுதம் ஏந்திய ரோபோக்கள் பிற ரோபோகளால் கட்டுப்படுத்தப் படவும் வாய்ப்பு உள்ளதெனவும் தெரிவித்தனர். யு.எஸ்.கடற்படையின் நிதிஉதவி பெற்ற ஓர் அறிக்கையில் சொல்லப்பட்டது யாதெனில் ராணுவ ரோபோகள் அதிக சிக்கல் கொண்டதெனவும், ஆகையால் அவைகளுக்கு சுயாட்சி அளிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றும் பொழுது மிகுந்த கவனம் செலுத்தப்படுதல் இன்றியமையாதது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயாட்சி ரோபோக்கள் ஊடக கவனம் கவர்ந்து உள்ளமையால், ஒருசில கவலைகள் பொது மக்கள் தரப்பில் இருந்து வெளி வந்துள்ளன.பிரத்தியேகமாக ஒரு ரோபோ,ஈஏடிஆர், தொடர்ந்து எரிசக்தி உயிரினப் பிண்டம் மற்றும் ஆர்கானிக் எனும் உயிர்ப்பொருள் கூறு மூலம் பெறமுடியும் அப்பொருள்கள் யுத்த காலங்கள், பிற உள்ளூர் சுற்றுப்புறச் சூழல்களில் இருந்தும்பெற அவைகளால் முடியும் என்பதெல்லாம் அக்கவலைகள் ஆகும்.
செயற்கை நுண்ணறிவு முன்னேற்ற அமைப்பு இதுபற்றி தலைப்பை ஆழமாக ஆய்ந்து பார்த்து அதன் தலைவர் இந்த பிரச்சினை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
சிலர் கூறும் ஆலோசனைப்படி ஒரு "சிநேகித ஏஐ", உருவாக்க வேண்டும்; அதன்படி ஏற்கனவே உள்ள முன்னேற்றங்கள் உள்அடக்கி மேலும் உள்ளார்ந்த ரீதியில் சிநேகிதம், மனித இயல்பு கொண்டவாறு அது இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அமுலில் ஏற்கனவே இருக்கின்றன அதுவும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் ரோபோகளில் பாதுகாப்பு முறைமைகள்,மட்டும் 'சட்டங்களின்'தொகுப்புகள் பொருத்தப் படவேண்டும் என்று கட்டுப்பாடுகள் நிறைவேற்றி உள்ளன. அவைகள் அசிமோவின் ரோபோடிக்ஸ் மூன்று விதிகள் போல ஒத்திருக்கின்றன. 2009 ல் ஜப்பானிய அரசால் ரோபோ தொழில்துறைக் கொள்கைக் குழு அதிகாரப் பூர்வமாக ஓர்அறிக்கை விட்டது. சீன அதிகாரிகளும் ஆய்வாளர்களும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதன்படி ஒழுக்க நெறிமுறை விதிகள் பற்றிய தொகுதி, புதிய சட்டவடிவ வழிகாட்டும் நெறிமுறைகள் அடங்கிய "ரோபோ சட்ட வடிவ ஆய்வுகள்" அதில் உள்ளன. மேலும் ஒரு சிலர் தங்கள் கவலையையும் தெரியப்படுத்தி உள்ளனர். ரோபோ பற்றிய பொய்யான தகவல்கள் தெளிவாகவே சொல்லும் நிகழ்ச்சிகள் அப்படிப்பட்ட கவலைகளை வெளியிட வைத்தது.
தொழில் நுட்பப் போக்குகள்
2025களில், ஜப்பான் ரோபோ சேவைகளை முழு அளவில் வணிகமயமாகுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஜப்பானிய அரசாங்க முகமைகளால், அங்கு ஆய்வு தொழில்நுட்பமாக அதிலும் குறிப்பாக வணிக அமைச்சகத்தால் நடத்த அவ்வரசாங்கம் முன்வந்துள்ளது.
ரோபோக்கள் முன்னேற்றம் அடைய, முடிவில் ஒரு தரமான கணினி உள்ளியக்க முறைமை அவைகளுக்காகவே என்று வரவும் கூடும். ரோபோ கணினி உள்ளியக்க முறைமை (ஆர்ஒஎஸ்) ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு ஓபன் சோர்ஸ்-திறந்த மூலம்-திட்டங்களின் தொகுதி அடங்கியதாக உருவாக்கப்பட்டது, அதனுடன் மாசாசுசெட்ட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்,ஜெர்மனியின் முனிச் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் இரண்டும், இணைந்து பங்கு கொண்டன. ஆர்ஒஎஸ் ரோபோகளின் வழிச்செலவு,கைகால்கள் பற்றி குறிப்பான வன்பொருள் கவலைப்படாமல் ஒரு திட்டம் வழங்கி உள்ளது. உயர்-மட்ட அளவில் கட்டளைகள் பிம்பம் பற்றி கண்டறிதலும் மேலும் கதவுகள் திறக்கவும் அது கணினியில் வழங்கி உள்ளது. ஆர்ஒஎஸ் ரோபோ கணினி திறந்த உடனே, அதன் கைகால்கள் நீளம் அசைவு கொண்டே தேவையான தரவுகளைப் பெற்றுவிடும். இந்த தரவுகளை அது உயர்-மட்ட பதின்முறை இலக்கமானம் கணக்கிட சார்ந்து உள்ளது. மைக்ரோசோப்ட் கணினி நிறுவனம் தனது ரோபோடிக்ஸ் வளர்ச்சியாளர் ஸ்டுடியோ, துணைகொண்டு 2007. முதல் ஒரு "ரோபோக்கள் விண்டோஸ்" முறைமை ஒன்றை உருவாக்கி உள்ளது.
புதிய செயல்முறைகளும் திறன்களும்
கேட்டர்பில்லர் கம்பெனி ஒரு கொட்டும் டிரக் மனிதர் வாகன ஒட்டி இன்றி உருவாக்கியுள்ளது.
ஆராய்ச்சி ரோபோக்கள்இன்று பெரும்பாலும் ரோபோக்கள் தொழிற்சாலைகளில் அல்லது வீடுகளில், நிறுவப்பட்டதும் மட்டும் அல்லாமல் உடலுழைப்பு, உயிர் காக்கும் வேலைகள் மற்றும் புதுப்புதுவகை வேலைகள் செய்ய, பரிசோதனைச் சாலைகளில் உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. ரோபோடிக்ஸ் பற்றிய ஆய்வுகள் குறிப்பாக தொழில்துறை பணிகளுக்கு மட்டுமல்ல அதன் புதிய வகைகள் பற்றியும் ஆகும், மாற்றுவழிகள் அதன் வரைவுவகைகள், கண்டு புதியமுறைகளில் நினைத்து பார்க்கவும் ரோபோக்கள் வடிவமைப்பதும், உற்பத்தி செய்வதும் யாவும் அதில் அடங்கும். இந்த புதிய வகை ரோபோக்கள் மெய்யான உலகப் பிரச்சினைகளை தீர்க்க அவைகளை உணரும் கடைசிக் கட்டத்தில் உதவிகரமாக இருக்கும்.
நானோரோபோகள்: இன்னமும் தாற்காலிக பொது விளக்க தொழில்நுட்ப கோட்பாடாக உள்ளன. இயந்திரங்கள் உற்பத்தி செய்தல் அல்லது ரோபோக்கள் உற்பத்தி செய்தல் அல்லது நானோ மீட்டர் நெருக்கமாக (10−9 மீட்டர்கள் உற்பத்தி செய்தல் இவைகளைப் பற்றியே ஆராய்ச்சி செங்கின்றது. மேலும் இவைகள் நானோரோபோக்கள் அல்லது நானிடேஸ் என்று அழைக்கப்படும், அதுமட்டுமின்றி அணுத்திரண்ம இயந்திரங்களில் இருந்து கட்டமைக்கப்படும். இதுநாள் வரைக்கும், ஆய்வாளர்கள் இத்தகு சிக்கலான முறைகளில் சில பிரிவுகளை மட்டுமே உற்பத்தி செய்துள்ளனர்,உராயும் பொறி உறுப்புகள், முழுஉணர்வுக் கருவிகள்,செயற்கை சேர்ம அணுத்திரண்ம மோட்டார்கள் போன்றவற்றை செய்தனர்.ஆனாலும் வினைச்செயல்ஆற்றும் ரோபோக்கள் செய்யப்பட்டன.அவைகள் நானோபாட் ரோபோ கோப்பை போட்டிக்கென உரிய நுழைவுகளாக அமைந்திருந்தன.ஆராய்ச்சியாளர்கள் மொத்த ரோபோகளை ஒரு சிறிய நச்சுக் கிருமி அல்லது நுண்கிருமி,வடிவில் நுண்ணியதான அளவில் செய்ய நம்பிக்கை கொண்டிருந்தனர். இயலுமட்டும் பயன்பாடுகள் உள்ளடக்குவது: நுண்அறுவை சிகிச்சை (ஒரு தனிநபரின் செல்களில் நிகழ்த்துவது), மூடுபனி முன்னறிவிப்பு பயன்நோக்குக் கருவி செய்தல், பொருள் உற்பத்தி, ஆயுதங்கள் செய்தல், துப்புரவுப் பணிகள் செய்தல் இவைகளே ஆகும். சில பேர்கள் கூறுவதுண்டு நானோபாகள் மறு உற்பத்தி ஆகிக்கொண்டே போனால், இந்த பூமி ஒரு "சாம்பல் நிற வாத்தாகும்", ஆனால் மற்றவர்கள் இந்த பொது கோட்பாடு மற்றும் விளைவு யாவும் அறிவற்றதாகும் என்று எதிர்மறையாக வாதிப்பார்கள்.
மென்பொருள் ரோபோகள்ரோபோக்கள் சிலிகான் உடலால் இயன்றவை; (காற்று தசைனார்களால் இலகுவாக செயல் புரிபவை, மின்விசை செயல்பாட்டு போலிமேர்கள்), இரும்பு கலந்த நீர்க்கசிவு, இவைகளால் செய்யப்பட்டு சீழ்போன்ற அளவை முறையாலும் நரம்பு வலைதலங்களாலும் இயக்கப்பட்டு பார்ப்பதற்கும் உணர்வதற்கும் வித்தியாசமாக இருக்கும். இவைகள் இறுகிய எலும்பு கூடுகள் அமைப்பில் பல்வேறுபட்ட நடத்தைகளை செய்து காட்டும் வன்பொருள் ரோபோக்கள் விட மாறுபட்டிருக்கும்.
மறுவடிவமைப்பு கொண்ட ரோபோகள்ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் மூலம் ரோபோக்கள் செய்து அவைகளின் உடல் உருவை குறிப்பிட்ட பணிக்காக பொருந்தும்படி கற்பனைக் கதைகளில் வருவது போல செய்ய இயலும் என்றும் கூறியுள்ளனர்.T-1000. உண்மையான ரோபோக்கள் உலகஇயலுக்கு ஒத்திருந்தாலும் அவைகள் பெரும்பாலும், சிறு கனசதுர அலகுகள், என்றே இருக்கும் தங்கள் அயலார்களுக்கு ஏற்ப இசைந்து நகரும். எதுத்துக்காடாக சூபெர்பாட் அவ்வகை சார்ந்தவை ஆகும். பதின் இலக்கமானம் கணக்குப்படி வரிவடிவு கொண்ட அந்த ரோபோக்கள் மெய்ப்பாடாகி உள்ளன.
பெருந்திரள் ரோபோகள்பூச்சிவர்க்கம் சார்ந்த எறும்புகள், தேனீக்களால் ஈர்க்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய திரள்களின் காலனி உருமாதிரிகளை மேற்கொண்டு அவைகளின் நடத்தை அடிப்படையில் ஓர் பயனுள்ளபணி, உள்ஒளிந்து இருப்பதற்கு, சுத்தப்படுத்துவதை அல்லது ஒற்று அறிவதை, ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் வண்ணம் ரோபோக்கள் பெருந்திரளாக உண்டாக்குவர். ஒவ்வொரு ரோபோவும் மிக எளிமையாக இருக்கும், ஆனால் திரளாகத் தோன்றிவரும் நடத்தையானது அதிக சிக்கலானதாகும். ரோபோக்கள் மொத்த தொகுதி ஒரேஒரு ஒற்றை விநியோகமான முறைமை என்றே கருதப்படும்,எப்படி ஓர் எறும்புக் காலனி உன்னத உயிர்ப்பொருள் என்றும், பெருந்திரளாக நுண்ணறிவு வெளிப்படுத்துகின்றது என்றும் நினைக்கக்கூடிய அளவுக்கு இருக்கும். மிகப்பெரிய பெருந்திரள்கள் என உருவாக்கப்பட்டதில் உள்அடங்குவது, ஐ- ரோபோக்கள் பெருந்திரள்,எஸ்ஆர்ஐ/மொபைல் ரோபோகள்,சென்ட் ஐ பாட்ஸ் ப்ராஜெக்ட் மற்றும் ஓபன் சோர்ஸ்-திறந்த மூலம் நுண்ணிய ரோபோடிக் ப்ராஜெக்ட் பெரும்திரள், ஆகிய எல்லாம் கூட்டத்தின் நடத்தைகளை ஆய்ந்துஅறிய பயன்படும். பெருந்திரள் என்பது தோல்வியை அதிகம் தாங்கும் திறன் படைத்திருக்கும். ஒரு பெரிய ரோபோ தோல்வி அடையலாம் அதனால் குறிக்கோள் திட்டம் பாதிக்கப்படலாம்.பல ரோபோக்கள் தவறினாலும் ஒரு பெருந்திரள் தொடர்ந்திருக்கும். விண்வெளி ஆய்வு குறிக்கோள் திட்டங்கள் பொறுத்த மட்டிலும் இது கவர்ச்சிகரமாக அமைந்து இருக்கலாம், அதில் தோல்விகள் அதிகமாக விலை உயர்ந்து இருக்கும்
தீண்டும் இடைமுகப்பு ரோபோக்கள்ரோபோடிக் நடைமுறை மெய்மையான இடைமுகப்புகளின் வரைவுவகையில் உரிய பயன்பாடு இருக்கும். பிரத்தியேகமான ரோபோக்கள் தீண்டும் ஆராய்ச்சி சமுதாயத்தில் பரவலாக பயன்படும். இந்த ரோபோகள், "தீண்டி அறிந்து கொள்ளும் இடைமுகப்புகள்" எனப்படும்,மெய்மையான நடைமுறை சூழல்களில் தீண்டிப்பார்த்து பயன்படுத்தும் செயல்எதிர்ச்செயல் புரியும். ரோபோடிக் சக்திகள் "நடைமுறையில் மெய்மையில்" தோன்றும் பொருள்களின் இயந்திர பொதுப்பண்புகளை ஊக்குவிக்கும்,பயனாளிகள் தத்தம் தொடும் அல்லது தீண்டும் உணர்வால் அனுபவம் அடைவர். தீண்டும் இடைமுகப்புகள் ரோபோ-உதவி பெறும் மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
மாறுபடும் பண்பாட்டுப் புலனுணர்வுகள்
மொத்தமுள்ள ரோபோகளில் ஆசியாவில் சுமாராக பாதியளவு உள்ளன, ஐரோப்பாவில், 32%,வட அமெரிக்காவில், 16%,ஆஸ்திரேலியாவில், 1%, ஆப்ரிக்காவில் 1% உள்ளன,மீதம் மொத்தமுள்ளதில் 30% ஜப்பானில் உள்ளன. இதன் பொருளாவது அனைத்து நாடுகளில் உள்ளதில், ரோபோகளில் மிக அதிகம் ஜப்பானில் உள்ளது. உண்மையில் அந்நாடுதான் ரோபோடிக்ஸ்களில் உலகிலேயே முன்னணியில் உள்ளது. மேலும் அந்நாடு உலகின் ரோபோடிக்ஸ் தலைமையகமாக திகழ்வதாக சொல்லப்படுகின்றது.
ஜப்பானிலும், தென் கொரியாவிலும் , எதிர்கால ரோபோக்கள் பற்றிய கருத்துக்கள் முக்கியமாக நேர்முகமாகவே உள்ளன,ரோபோடிக்-ஆதரவு சமுதாயம் அமைக்கும் எண்ணம் பிரசித்தி பெற்ற 'அஸ்ட்ரோ பாய்' வாயிலாகவே தோன்றியது. ஆசிய சமுதாயங்களான ஜப்பான்,தென் கொரியா, மற்றும் சமீப காலமாக, சீனா, போன்றன நம்புவது ரோபோக்கள் மனிதனுக்கு இணையாக அமைந்திருப்பது என்பதால், அவைகள் வயதானவர்களை கவனிக்கவும், விளையாட உதவுவதும், செல்லப் பிராணிகளுக்கு மாற்றாக இருப்பதும் என வேலைகளை அதன்மூலம் நன்றாக நிறைவேற்றிக் கொள்ளுகின்றன.ஆசியப் பண்பாடுகளின் பொதுக்கருத்து என்னவெனில் ரோபோக்கள் முன்னேற, சமுதாயம் மேம்படும்,ஆனால் அக்கருத்து மேற்கு நாடுகளின் நம்பிக்கைக்கு எதிரானது.
ஜப்பானில் உள்ள மனிதஇயல் ரோபோக்கள் நிறுவனமான மிட்சுபிஷி குழுமம் கருத்து தெரிவிக்கையில்,"இது ஒரு புதிய யுகம் மலரும் தருணம்; மனிதர்களும் ரோபோகளும் ஒருங்கிணைந்து வாழும் நிலை உருவாகி உள்ளது." என்று கூறி உள்ளது.தென் கொரியா 2015-2020 காலத்திற்குள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரோபோ இருக்க குறிக்கோள் கொண்டுள்ளது. அப்போதுதான் ஜப்பான் நாட்டை தொழில்நுட்பத்தில் பிடிக்க முடியும் என்று நம்புகின்றது.
மேற்கத்திய நாடுகள் அக்கருத்துக்கு எதிராக உள்ளன,அவைகள் மேலும் ரோபோடிக்ஸ் வளர்ச்சி பற்றி அச்சம் கொண்டுள்ளன, ஊடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இலக்கியம் வாயிலாக மனிதர்களையே இடமாற்றம் செய்துவிடும் என்பதே அந்த அச்சத்திற்கு காரணம் ஆகும். ஒருசிலர் மேற்கு நாடுகளில் கருதுவது ரோபோக்கள் எதிகாலத்தில் மனிதர்களுக்கே 'அச்சுறுத்தல்' ஆகிவிடும் என்பதாகும், சமூகத்தில் மனிதர்களின் பங்கு பற்றிய சமய சார்பான கருத்துக்கள் அப்படி கருத வைக்கின்றன. தெளிவாக நோக்குகையில், இந்த எல்லைகோடுகள் புலப்படுவதில்லை, ஆயினும் ஒரு குறிப்பிடத்தக்க வேற்றுமை இரண்டு பண்பாட்டு நோக்கங்களிடையே உள்ளது.
சமகால பயன்பாடுகள்
தற்பொழுது இரு முக்கிய ரோபோகளின் வகைகள், அவைகளின் பயன் அடிப்படையில் உள்ளன: ஒன்று பொதுநோக்குடைய சுயாட்சி ரோபோகள் மற்றொன்று அர்ப்பணிப்பு கொண்ட ரோபோக்கள் ஆகும்.
ரோபோக்கள் அவைகள் கொண்ட நோக்கத்தின் பிரத்தியேகத் தன்மை ஒட்டி வகைப்படுத்தபட்டுள்ளன. ஒரு ரோபோ ஒரு குறிப்பிட்ட பணியைச் செம்மையாக செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும், பல பணிவரிசை செய்வது அதன் தன்மையில் கொஞ்சம் குறைந்து இருக்கலாம். ஆனாலும், எல்லா ரோபோகளும் அதற்கென உள்ள இயல்பில் மறுதிட்டமிடுதல் மூலம் வேறுபட்டு நடக்கக் கூடும், ஒருசில மட்டும் தனது உடல்உருவம் வரையறைக்குள் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ஒரு தொழிற்சாலைக்குள்ளேயே ரோபோ செய்யும் வேலைகள் ஆவன, வெட்டுதல், பற்றவைத்து சீறாக்குதல்,பசை ஒட்டுதல், தரை சவாரி வேலையை செய்தல், அப்பொழுது ஒரு பொருளை ஓரிடம் எடுத்து மற்றோரிடம் வைத்தல், அச்சடிக்கப்பட்ட சுற்றுப்பாதை கொண்ட பலகையில் வேலை செய்தல் ஆகியன யாவும் திறம்பட செய்யும்.

பொது-நோக்குடைய சுயாட்சி ரோபோக்கள்தன் இச்சையாக பல வேலைகளைச் செய்யும். பொது-நோக்குடைய சுயாட்சி ரோபோக்கள் தெரிந்த இடங்களில் சுயமாக வழிச்செலவுகள் செய்யும், மீண்டும் மறுசக்தி ஊட்டும் வேலையையும் செய்யும், மின்ம இயக்கம் கொண்ட கதவுகளில் இடைமுகப்பு வேலையும் செய்யும், உயரத்தில் கூலம் தூக்கிகளையும் இயக்கும், மேலும் பல அடிப்படை வேலைகளையும் செய்யும். கணனிகள் போல, பொதுநோக்குடைய ரோபோக்கள் வலைத்தளங்களை, இணைக்கும் வேலையும் செய்யும்,மென்பொருள்கள் அதற்குரிய துணைப்பொருள்கள் அவைகளின் பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். அவைகள் மனிதர்களை பொருள்களை அடையாளம் காணும்,அவைகளுடன் பேசும்,தோழமையோடு பழகும்,சுற்றுப்புறம் சூழல்களை உற்று கவனிக்கும்,எச்சரிக்கை மணிகளுக்கு ஈடு கொடுக்கும்,வழங்கும் பொருள்களை எடுத்துச் செல்லும்,பிற பயனான பணிகளைச் செய்யும். பொது-நோக்குடைய சுயாட்சி ரோபோக்கள் பலவேறுபட்ட வேலைகளை ஒரேசமயம் செய்யக்கூடும் அல்லது ஒரேநாளில் பல்வேறுபட்ட நேரங்களில் பல்வேறுபட்ட பாத்திரங்களில் பணிகள் செய்யும். ஒருசில ரோபோக்கள் மனிதர்கள் போல போலியாக பேசும், சில அவர்கள் போல தோற்றம், கொண்டும் இருக்கும், இப்படிப்பட்ட ரோபோக்கள் மனித இயல்பு கொண்டதென கருதப்படும்.
அர்ப்பணிப்பு கொண்ட ரோபோக்கள்2006 ல் சேவை ரோபோ 3,540,000 எண்ணிக்கையிலும், தொழில்துறையில் ரோபோ 950,000எண்ணிக்கையிலும் பயன்பாட்டில் உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட அளவீட்டின்படி ஒரு மில்லியன் ரோபோக்கள் உலகெங்கிலும் 2008, முதல்பாதியில் இயக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.அதில் பாதி ஆசியாவிலும் 32% ஐரோப்பாவிலும்,16% வட அமெரிக்காவிலும், 1% ஆஸ்திரேலியாவிலும் ,மற்றும் 1% ஆப்ரிக்காவிலும் உள்ளது. தொழில் துறை மற்றும் சேவை ரோபோக்கள் அவைகள் செய்யும் வேலையை பொறுத்து சுமாராக இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்வகைப்படி ஒரு ரோபோ அதிகமாக உற்பத்தி,துல்லியம்,மற்றும் தாங்கும்திறன் மனிதர்களைக் காட்டிலும் கொண்டுள்ளன; இரண்டாவது வகைப்படி அழுக்கான, அபாயமான, உற்சாகம் குறைந்த வேலைகளை அதுவும் மனிதர்கள் விரும்பாததை ரோபோக்கள் செய்கின்றன.
அதிகமாக உற்பத்தி,துல்லியம்,மற்றும் தாங்கும் திறன்பல தொழிற்சாலை சம்பந்தப்பட்ட வேலைகள் இப்பொழுது ரோபோக்கள் மூலமாக நடைபெறுகின்றன. இது விலை குறைந்த மொத்த உற்பத்திப் பொருள்கள், தானியங்கி வாகனங்கள் மற்றும் மின்ம இயக்கம் சார்ந்த பொருள்கள் உள்பட செய்து முடிக்க ஏதுவாகின்றது. ஒரே இடத்தில் இயந்திரங்கள் இயக்குபவர்களால் ரோபோகளுக்கு பெரிய அளவில் சந்தைகள் ஏற்பட்டுள்ளன. 2006 ல், சேவை ரோபோ 3,540,000 எண்ணிக்கையிலும், தொழில்துறையில் ரோபோ 950,000எண்ணிக்கையிலும் உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட அளவீட்டின் படி ஒரு மில்லியன் ரோபோக்கள் உலகெங்கிலும் 2008, முதல் பாதியில் இயக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதில் பாதி ஆசியாவிலும் 32% ஐரோப்பாவிலும், 16% வட அமெரிக்காவிலும், 1% ஆஸ்திரேலியாவிலும், மற்றும் 1% ஆப்ரிக்காவிலும் உள்ளது.
தொழிற்சாலையின் ரோபோக்கள் பற்றிய சில எடுத்துக் காட்டுகள்கார் உற்பத்தி: கார் உற்பத்தி கடந்த மூன்று பத்தாண்டுகளாக தொழிற்சாலையில் ரோபோக்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஒரு வித்தியாசமான தொழிற்சாலையில் தொழிலியல் ரோபோகள் நூற்றுக்கணக்கில் தானியங்கு உற்பத்தி வரிசையில், பத்து மனிதத் தொழிலாளர்களுக்கு ஒரு ரோபோ வீதம் என்ற அடிப்படையில் உள்ளன. தானியங்கு உற்பத்தி வரிசையில், ஒரு வாகன அடிப்பகுதி அது கொண்டு செல்லும் வழியில் அதாவது அதன் கன்வேயரிலேயே, பற்ற வைத்து சீராக்கப் படுவதும்,பசை ஓட்டப்படுவதும், வர்ணம் அடிக்கப்படுவதும் இறுதியில் எல்லாம் ஒருங்கு சேர்க்கப்படுவதும் வரிசைக் கிரமத்தில் அதற்கென உள்ள ரோபோ நிலையங்களில் நடக்கின்றன.
சிப்பம் கட்டுதல்: தொழில்இயல் ரோபோகள் பரவலான முறையில் உற்பத்திப் பொருள்களை, கட்டுகட்டும் வேலையை செய்திட பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, கன்வேயர் பெல்ட்டில் இருந்து புட்டிகள் வைக்கும் பெட்டிகளை, உரிய இடத்தில் வைத்திடவும் இயந்திரங்கள் உள்ள மையத்தில் பொருள்கள் ஏற்றி வைப்பதும் அல்லது இறக்கி வைப்பதும் போன்ற பணிகளை அவைகள் செவ்வனே செய்கின்றன.
மின்ம இயக்கப் பொருள்கள்: மின்ம இயக்கப் பொருள்கள் மொத்தமாக-உற்பத்தி செய்ய ரோபோக்கள் உதவுகின்றன.அச்சிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைகள் கொண்ட பலகைகள் (பிசிபிகள்) பிரத்தியேகமாக எடுத்துக் கொண்டுபோய்-வைக்கும் ரோபோக்கள் மூலம் செய்யப்படுகின்றன, எஸ்சிஎஆர்எ-இயக்கும் ரோபோக்கள் மிகச்சிறிய மின்ம கூட்டுப் பொருள்கள் கச்சைஇழைகள் அல்லது தட்டங்கள்-டிரேக்கள் இடத்திலிருந்து, பிசிபியில் வெகுதுல்லியமாக வைத்திடும் வேலையை செய்து முடிக்கின்றது.அத்தகைய ரோபோக்கள் நூற்று ஆயிரக்கணக்கில் கூட்டுப் பொருள்களை ஒரு மணிக்குள், ஒரு மனிதன் செயல்படுவதை விட வேகத்தில், துல்லியத்தில், மற்றும் நம்பகத்தில் சரியாக செய்கின்றன.
தானியங்கி வழிகாட்டும் வாகனங்கள் (ஏஜிவீகள்): தானியங்கி வழிகாட்டும் வாகனங்கள், என்பவை சுயமாக அசையும் ரோபோக்கள் ஆகும், அவைகள் தரையில் உள்ள குறிகள் அல்லது கம்பிகள் வழி செல்லும், பார்வைப்புலன் அல்லது லேசர்கள் பயன்படுத்தும், பொருட்களை பெரும் வசதியான இடங்களில் கிடங்குகள், சரக்கேற்றும் துறைமுகங்கள், அல்லது மருத்துவமனைகள் போன்ற இடங்களில் வேலை செய்யும்.
தொடக்க ஏஜிவி-பாங்கு ரோபோக்கள் செய்பணிகளுக்குத் தக்கவாறு துல்லியமாக வரையறை செய்யப்பட்டிருக்கும், ஒவ்வொரு முறையும் அதேவழியில் இயங்கிவரும். நுண்ணறிவோ அல்லது மிகக்கொஞ்சமாகவோ ஈடுகட்டும் திறன் ரோபோகளுக்குத் தேவைப் படுகின்றது. அப்படிப்பட்ட (புலனுணர்வுப் பொறிகள்) அவைகளின் புறக்கூறு (உணர்விகள்) என்றே அடிப்படையில் அமைந்துள்ளன. ஏஜிவிகளின் குறைபாடுகள் என்னவென்றால் அவைகளின் பாதைகள் சுலபத்தில் மாற்ற இயலாத வண்ணம் இருக்கும் ஏதேனும் தடங்கல்கள் வந்தாலும் மாற்ற இயலாது. ஒரு ஏஜிவி பாதிக்கப்பட்டாலும், மொத்த இயக்கமே அதனால் நின்று போகும்.
இடைக்கால ஏஜிவி-தொழில்நுட்பங்கள் முக்கோண வடிவ அளவீட்டின்படி அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் உதவியுடன் தரையிலோ அல்லது கூரையிலோ ஸ்கேன்னிங் செய்திட இயலும். பல தொழிற்சாலைகளில், முக்கோண வடிவ அளவீடு முறைகள் அதிக பராமரிப்புச் செலவு பிடிக்க வைக்கும், அதன்படி அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் இரண்டினையும் தினமும் சுத்தபடுத்த வேண்டும். கூடவே, ஒரு பொறியின் கைப்பிடி அல்லது பெரிய ஊடுபொருள் தடங்கலானால், அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் சீர்குலைந்தால் ஏஜிவிகளே இழந்து போகலாம். அடிக்கடி அத்தகைய ஏஜிவிகள் மனித-வாசமில்லாத சூழல்களில் பயன்படுத்தவே வடிவமைக்கப்படுகின்றது.
புதிதான ஏஜிவிகள், ஸ்பெசி-மைண்டர் ,எடிஎஎம்,டுக்,பட்ரோல்-பாட் கோபர், யாவுமே மக்கள்-சிநேகித வேலையிடங்கள் கொண்டுள்ளன. அவைகள் வழிச்செலவிற்கு இயற்கையான அம்சங்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. 0}முப்பரிமாண ஸ்கேன்னர்கள் அல்லது பிற புலனுணர்வு அறியும் முறைகள் இரு அல்லது மூன்று பரிமாணங்கள் மூலம் சூழல்களை அறிந்தாலும் அடுக்கடுக்கான பிழைகளை குறைக்கச் செய்தாலும் அவைகளின் நடப்பு நிலைமையை கணிப்புச்-சுட்டு கணக்கீடுகளால் மட்டுமே காண இயலும். சில ஏஜிவிகள் சுற்றுப்புறச் சூழல்களை ஸ்கானிங் லேசர்கள் மூலம் வரைபடங்கள் உருவாக்க முடியும்,அதை (எஸ்எல்எஎம்)ஒருங்கமை உள்ளிட அமைப்பு மற்றும் வரைபடங்கள் செய்தல் என்பர், அந்த வரைபடங்கள் மெய்யான நேரத்திற்குள் பயன்படுத்தி பிற பாதைகளில் பயணித்து பதின்முறை இலக்கமானம்படி தடங்கல்கள் நீக்க முடியும். அவைகள் சிக்கலான சூழல்களில் இயங்க முடியும்.மறுபடி திருப்பி- செய்யாத மறுபடி கிரமமாக திருப்பி-வாராத பணிகளை நிறைவேற்றும். அதாவது நிழல்படத்திரையை பாதி-அரிதில் கடத்தி பரிசோதனைச் சாலைக்கு அனுப்புதல், மருத்துவமனைகளில் மாதிரிச் சான்றுகள் அளித்தல், கிடங்குகளில் சரக்குகளை கையாளுதல் போன்ற பணிகளைச் செய்யும். இயக்கவிசை கொண்ட பிரதேசங்களில், அதாவது பொறிகளின் பிடிகள், உள்ள கிடங்குகளில் ஏஜிவிகள் மேலும் கூடுதலான யுக்திகள் தேவைப்படும். ஒருசில காட்சிப்-புலம் கொண்ட முறைமைகளில் மட்டுமே அப்படிப்பட்ட சூழல்கள்களில் நம்பகமாக பயணிக்க இயலும்.
அழுக்கான,அபாயகரமான,சோர்வான,அணுக இயலாத பணிகள்பல வேலைகளை மனிதர்கள் ரோபோக்கள் வசமே விட்டு உள்ளனர். அவைகள் உற்சாகம் இல்லாத வேலையாக இருக்கலாம், வீடு சுத்தப்படுத்துவது, அல்லது எரிமலை உள்ளே ஆய்வு நடத்தும் அபாயகரமானதாகவும் இருக்கலாம். பிறவேலைகள் இயற்பியல் ரீதியில் முடியாததாக இருக்கலாம், அதாவது பிற கிரகங்கள் செல்வது, நீளமான குழாய்களின் உட்புறம் சுத்தப்படுத்துதல், குடல்பகுதியில் அறுவை சிகிச்சை செய்தல் போன்றனவாகும்.
தொலைரோபோகள்: என்பது மனிதனால் செல்ல முடியாத இடத்தில் ஒரு வேலையை நிறைவேற்ற வைக்க, அபாயகரமானதாகவோ,நீண்ட தூரமாகவோ, அல்லது அணுக முடியாத இடமாகவோ இருந்தால்,தொலை ரோபோக்கள் பயன்படுத்த படுகின்றது. ஒரு முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் வரிசைக் கிரமமான அசைவுகளைக் காட்டிலும், ஒரு தொலைரோபோ மனித இயக்கம் செய்பவர்களால் கட்டுப்படுத்தப்படும். அந்த ரோபோ வேறொரு அறையிலோ அல்லது வேறொரு நாட்டிலோ. அல்லது வேறொரு அளவிலோ அந்த இயக்குபவரால் முடுக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு சிக்கலான குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்ய ரோபோ அந்த அறுவை மருத்துவரை நோயாளியின் உடலுள் செல்ல வேண்டி ஒரு சிறு அளவில் திறந்த அறுவை செய்ய நேரிடலாம், அதனால் குறிப்பிடத்தக்க முறையில் குணமடையும் நேரம் குறுகியதாக இருக்கலாம். அதேபோல ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய, இயக்குபவர் சிறிய ரோபோ அனுப்பி அதை செய்து முடிக்கலாம். பல நூலாசிரியர்கள் நீளமான பேனா என்ற ஒரு முறைமையை பயன் படுத்தி புத்தகங்களில் தூரத்தில் இருந்தே கையெழுத்து இடுவர். தொலை தூரத்தில் ரோபோக்கள் உள்ள விமானம், ஆளில்லாத ஆகாயத்தில் பறக்கும் விண்கலம் போல ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றது. இந்த விமான ஒட்டி இல்லாத வானூர்திகள் தரைநிலம் மற்றும் நெருப்பு இலக்குகள் தேடிச் செல்லும் திறன் கொண்டவையாகும். நூற்றுக்கணக்கான ரோபோகள் அதாவது பாக்பாட் மற்றும் போஸ்டர்-மில்லேர் தலான் போன்றவைகள் இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் யு.எஸ்.ராணுவத்தால் தெருஓர குண்டுகள் வலுவிழக்க பயன்படுத்தப் படுகின்றன.(ஐஈடிகள்) எனப்படும் அபிவிருத்தியான வெடிக்கும் வழிமுறைகள் உபயோகிக்கப்படும் செயல்முறையை வேறு பெயரில் அழைப்பர். அதுவே (ஈஒடி) எனப்படும் வெடிக்கும் ஆயுதங்கள் இறுதியாக ஒழித்துக்கட்டுதல் என்ற பேரில் அது நடத்தப்படுகின்றது.
தானியங்கும் கனி அறுவடை இயந்திரங்கள் தோப்புகளில் கனி அறுவடை செய்ய அதுவும் மனிதர்கள் செய்வதைக் காட்டிலும் குறைந்த செலவில் முடிக்க உதவுகின்றன.
இல்லத்தில்விலைகள் வீழ்ச்சி அடையவும் ரோபோக்கள் சுறுசுறுப்பு அடையவும் மற்றும் சுயாட்சி பெறவும், எளிமையான முறையில் ரோபோக்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என அர்ப்பணிக்கப்பட்டு உருவாக்கப்படுவதால் அவைகள் மில்லியன் இல்லங்களில் உபயோகத்தில் உள்ளன. அவைகள் சுலபமான ஆனால் விரும்பத்தகாத வேலைகளான, முழு சுத்திகரிப்புப் பணி மற்றும் தரை கழுவும்பணி, மற்றும் தோட்டத்தில் புல்வெளியை வெட்டிச் சமச்சீராக்குதல் போன்றனவற்றை செய்கின்றன. ஒருசிலர் இத்தகைய ரோபோக்கள் புத்திக் கூர்மை உடையதாகவும் ஆனால் அதேசமயம் கேளிக்கையாகவும் இருக்கும் காரணத்தால், அவைகளை நன்கு விற்க முடிகின்றது.
முதியோர்களைக் கவனித்தல் மக்கள் தொகையில் பல நாடுகளில், மூப்பு என்பது அதிகரிப்பதால் பிரத்தியேகமாக ஜப்பான் போன்ற நாடுகளில் எண்ணிகையில் முதியோர்களை கவனித்தல், என்ற வேலைக்காக நியமிக்கப்படும் இளைய மக்கள் குறைவாக இருக்கின்றனர். முதியோர்களுக்காக மனிதர்கள்தான் சிறந்த கவனிப்பாளர்கள் எனினும், அப்படிப்பட்டவர்கள் கிடைக்காத பட்சத்தில், ரோபோக்கள் படிப்படியாக அறிமுகம் செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
குழாய்கள்,கால்வாய்கள் சுத்திகரிப்பு அபாயகரமான, இறுக்கமான கட்டிடத்தின் இடங்களில் குழாய்கள், கால்வாய்கள் போன்றவற்றை சுத்தப்படுத்த மணிக்கணக்கில் ஆகும், சிறுசிறு இடங்கள் எனில் கையால் பிரஷ்களை கொண்டு முடித்து விடலாம். பல கால்வாய் சுத்திகரிப்பாளர்களால் ரோபோக்கள் தொழில் துறைகளில், நிறுவனங்களில் அவைகளை சுத்திகரிப்புச் சந்தைகள் ஆக்கும் வண்ணம் செய்து வருகின்றனர், வேலையை விரைந்து முடிக்க அவர்களால் முடிகின்றது, பணியாட்கள் தீங்கு தரும் என்சைம்கள் நச்சு ஆவி மூலம் பெறுவதை தவிர்க்கவும் முடிகின்றது. அதிக-பாதுகாப்புள்ள நிறுவனங்களான தூதரகங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில், கால்வாய்ச் சுத்திகரிப்புப் பணிகள், அவைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படா வண்ணம் செய்து முடிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள், பிறஅரசாங்க கட்டிடங்கள் போன்றவற்றில் அபாயகரமான, புற்றுநோய்க் கதிர்இயக்கச் சூழல்கள் மேலும் அணுவாற்றல் கொதிகலன்கள் சுத்தப்படுத்த, இத்தகைய சுத்திகரிக்கும் ரோபோக்கள் கனடா போன்ற நாடுகளில் வேலை இடங்கள் பாதுகாப்பிற்காக தேவைப்படுகின்றன.
திறனார்ந்த பிரச்சினைகள்ரோபோக்கள் பற்றிய பயன்களும், கவலைகளும், பரவலான அளவில் நூல்களில் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன. ஒரு பொதுவான விவாதப்பொருள் என்னவெனில் தன்னுணர்வும் நுண்ணறிவும் கொண்ட நிபுணத்துவ ரோபோகள், மூலம் ஒரே அடியாக மனிதகுலமே வேர் அறுக்கப்பட்டுவிடுமோ என்பதுதான். (காண்க: தி தேர்மினடோர், ரன் வே, ப்ளேட் ரன்னெர், ரோபோ கப் , ரெப்லிகட்டர்,(ஸ்டார் கேட்) தி ரெப்லி கடோர்ஸ் இன் ஸ்டார் கேட், தி சைக் லான்ஸ் இன் பட்டல் ஸ்டார் காலகடிக்க , தி மாட்ரிக்ஸ் , THX 1138 ரோபோ ) சில கற்பனைக் கதையில்வரும் ரோபோக்கள் கொல்லவும்,அழிக்கவும், திட்டங்கள் கொண்டுள்ளன; பிற உன்னத மனித நுண்ணறிவும் ஆற்றல்கள் பெற்றுள்ளதால் மென்பொருள் வன்பொருள் இரண்டும் மேம்படுத்தி செயல்படுகின்றன. எடுத்துக் காட்டுகள் பிரசித்தி பெற்ற ஊடகம் வாயிலாக வெளிவந்த, ரெட் பிளானெட் போன்றவற்றில் ரோபோக்கள் எப்படி தீங்கு செய்ய வல்லது என சித்திரிக்கப் பட்டுள்ளது... மற்றுமொரு பொது விவாதப்பொருள் விளைவு பற்றியதாகும்,அதை சிலசமயம் "விசித்திர பள்ளத்தாக்கு" அதில் வெளிவந்த இருப்பு கொள்ள முடியாமல் பார்த்த உடனே வெறுப்பு கொள்ளக் கூடிய அளவில் ரோபோக்கள் மனிதர்கள் போல குரலும் எழுப்புகின்றன. பிரான்கேன்ஸ்டீன் (1818), அடிக்கடி முதல் அறிவியல் நாவல், என அழைக்கப்படும். அதில் ரோபோ பற்றிய கருத்து பொருளோடு ஒத்திருக்கும் வண்ணம் அமைந்து ஓர் அரக்கன் போல் ஆகி படைத்தவனையே பின்தள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது. ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், ரோபோக்கள் வெறும் விதூஷகர்களாக மட்டுமல்லாமல், மனிதனோடு உடன்வசிக்கும் மனிதவடிவினர்களாக சித்திரிக்கப்பட்டன. அவைகள் இன்னமும் தொழிற்சாலையில் பணிபுரிகின்றன, ஆனாலும் இத்தகைய ரோபோக்கள் தினம்தோறும் வாழ்பவர்கள் போல வேலைகள் நிறைவேற்றுகின்றன.
மனுவேல் தே லண்ட தனது குறிப்பில் கூறியுள்ளார்" சுறுசுறுப்பான ஏவுகணைகள்", தானாக விழும் குண்டுகள், இவைகளில் செயற்கை புலனுணர்வு உள்ளமையால் ரோபோக்கள் என்று அவைகளை அழைக்கலாம், ஏனெனில் அவைகள் சுயமான தீர்மானங்கள் செய்யம் வல்லமை படைத்திருக்கின்றன. அவர் மேலும் நம்புவதாவது இதுஒரு முக்கியமான ஆபத்தான போக்கினை வெளிப்படுத்துகின்றது அதன்படி மனிதர்கள் முக்கியமான தீர்மானங்களை இயந்திரங்கள் எடுக்க அவைகளை அவைகளிடமே ஒப்படைத்துள்ளனர்.
சூறையாடும் ரோபோக்கள் வேண்டுமானால் கேளிக்கை மதிப்பு, கொண்டிருக்கலாம் ஆனால் அத்தகைய ரோபோக்கள் பாதுகாப்பு இன்றி பயன்படுத்தினால் அவைகள் உண்மையில் அபாயங்களை ஏற்படுத்தலாம். ஒரு பளுவான தொழில்துறை சார்ந்த ரோபோ, சக்தி நிறைந்து ஏவி விடப்பட நிலையில் அது ஆருடம் கணிக்க இயலாத நடத்தையால் தீங்கு செய்யக் கூடியதாக அமையலாம்,எடுத்துக் காட்டாக, ஒரு மனிதன் பாதத்தை மிதிக்கலாம் அல்லது ஒரு மனிதன் மேலே விழுந்து விடலாம். பெரும்பாலும் தொழில்துறை ரோபோக்கள் உள்ளே ஒரு பாதுகாப்பு வேலியோடு இயங்கலாம்,அதன் மூலம் அவைகள் மற்ற மனித தொழிலாளர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்படலாம். ஆனால் எல்லா ரோபோக்கள் அப்படி இருக்காது. இரண்டு ரோபோ-காரணமான இறப்புகள் குறிப்பிடவேண்டும்; ஒன்று ராபர்ட் வில்லியம்ஸ் உடையது மற்றொன்று கெஞ்சி உரடாவின் உடையதாகும். இதில் ராபர்ட் வில்லியம்ஸ் ஒரு ரோபாடிக் கரத்தினால் அடிபட்டு, மிச்சிகன் பிளாட் ராக் என்ற இடத்தில் உள்ள ஒரு வார்ப்பட அச்சு வேலை செய்யும் போது, ஜனவரி 25, 1979. நாள் இறந்தார். 37-வயதான- கெஞ்சி உரடா,என்ற ஒரு ஜப்பானிய தொழிற்சாலை வேலையாள், 1981ல் இறந்தார்; உரடா வழக்கமான பாதுகாப்பு பணியினை ரோபோ பால் செய்து கொண்டிருந்தார், அதை சரிவர மூடும் வேலையை புறக்கணித்ததால் தற்செயலாக மாவரைக்கும் இயந்திரத்தினுள் தள்ளப்பட்டார்.
வரலாறுபல புராதன புராண இலக்கியங்கள் செயற்கை மனிதர்களை, அதாவது இயந்திர பணியாளர்களைப் பற்றி கூறுகின்றன கிரேக்கக் கடவுள் ஹெப்கேஸ்துஸ், (வுல்கன் முதல் ரோமன்கள் வரை) , யூதர்களின் மரபுவழிக் கதைகள்படி, களிமண் கோலம் நோர்ஸ் மரபு வழிக்கதைகள்படி, களிமண் அரக்கர்கள், பிக் மாலியன் புராணப்படி மகிழ்வு தேநீர் என்னும் சிலை இவைகள் யாவும் உயிருடன் இருந்து உலாவியதாக கூறப் படுகின்றன. கிரேக்க நாடகத்தில், துஸ் எக்ஸ் மச்சினா ஒரு நாடக உத்தியாக பயன்படுத்தப் வந்தது, அதன்படி, ஒரு தெய்வீக உரு கம்பிகளால் இயக்கப்பட்டு வெளித்தோற்றத்தில் இயலாது என்ற பிரச்சினை தீர்க்க உதவும் என்ற நம்பிக்கை நிலவியது.
கி மு நான்காம் நூற்றாண்டில், கிரேக்க கணிதஇயல் அறிஞர், தரன்டம் சார்ந்த, ஆர்சிடாஸ் தம் ஆராய்ச்சியின் அடிக்கோளில் ஓர் இயந்திர நீராவி-இயக்கத்தில் பறவையைக் கண்டார், அதற்கு பெயர் "மாடப்புறா" என வைத்தார். அலெக்சாண்டிரியாவின் ஹீரோ (10–70 AD)பல்வேறு பயனாளி-உருவாக்கும் தானியங்கும் கருவிகளைக் கண்டுபிடித்தார், அந்த இயந்திரங்களுக்கு சக்தி காற்றின் அழுத்தத்தால், நீராவியால், மற்றும் நீரால் பெறும்படி செய்தார். சு சாங் 1088 ல் சீனாவில் ஒரு கடிகார கோபுரம் எழுப்பினார். அதில் இயந்திர சிறு உருவச்சிலைகள் வைத்து மணிகள் காட்ட கூட்டு ஒலியை உண்டாக்கச் செய்தார்.
அல்-ஜசரி (1136–1206), என்னும் முஸ்லிம் கண்டுபிடிப்பாளர் ஆர்ட்டுகிட் வம்சாவளி காலத்தில், ஏராளமான தானியங்கு கருவிகளை வடிவமைத்து உருவாக்கினார், அவர் கண்டு பிடித்தவைகளில் நீரால், தானியங்கும் இசைக்கருவி மற்றும் முதலாவதான திட்ட அமைப்பு கொண்ட மனித உருவுடைய ரோபோகள் 1206.ல் யாவும் அடங்கும். ரோபோட்கள் நான்கு பாடகர்களாக ஏரியில் செல்லும் படகில் இருந்துகொண்டு, அரசவை மதுவிருந்துகளில் விருந்தினர்களை மகிழ்ச்சி அடையச் செய்தனர். அவரது இயந்திர இயக்கவிசையின்படி, ஒரு திட்ட அமைப்பு கொண்ட முரசு இயந்திரம் முறுக்காணிகள், கல்வகை (சுற்று உருளைகள்) மூலம் ஒரு சிறு நெம்புகோல் வாயிலாக இசையை எழுப்பும் அந்தக் கருவியை தட்டுதலால் இசை உண்டாக்கும் தண்ணுமைக் கருவி என்பர். முரசறைவோன் பல்வேறு சந்தங்களுக்கேற்ப பல்வேறு முரசு வகைகளை முறுக்காணிகளை இடம்பெயர்த்தி நகர்த்தி இயக்குவான்.
துவக்க நவீன வளர்ச்சிகள்லியனார்டோ டா வின்சி (1452–1519) பல திட்டப் படங்களை மனித உருவில் 1495. ஆண்டில் வரைந்து காட்டினார். டா வின்சியின் குறிப்புப் புத்தகங்களிலிருந்து, 1950களில் மறுகண்டு பிடிக்கப் பட்டவைகளில், உள்ள வரைவுப்படங்கள் மூலம் ஒரு இயந்திர மாவீரன், தற்பொழுது அதை லியனார்டோவின் ரோபோட் என அழைக்கின்றனர், அது அமர்வது, கைகள் அசைப்பது, தலையை, தன தாடையை அசைப்பது எப்படி என்பதெல்லாம் சித்திரிக்கப்பட்டு இருந்தன. அந்த வரைவானது அவருடைய விற்றுவியன் மனிதன் நூலில் பதிவு செய்துள்ள உடற்கூற்று இயல் ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்திருந்தது. அவரே அதை உருவாக்க முயற்சித்தாரா என்பது சரவரத் தெரியவில்லை. 1738 மற்றும் 1739ல் ஜக்குயிஸ் டி வௌகேன்சன் ஆளுயுரத் தானியங்குகள்: குழல் ஊதி, குழாய் ஊதி, மற்றும் ஒரு குள்ள வாத்து யாவையும் காட்சியில் வைத்துக் காட்டினார். அவருடைய இயந்திரக் குள்ளவாத்து இறக்கைகளை படபடவென்று அடித்துக் காட்டியது, கழுத்தை நீட்டியது, பார்வையாளார்களின் கையில் இருந்து உணவை வாங்கி உட்கொண்டது, ஒரு மறைவுப்பகுதியில் இருந்து கழிவுப் பொருளையும் வெளியேற்றியது. 1700 களில், சிக்கலான இயந்திர பொம்மைகள் மற்றும் விலங்குகள் ஜப்பானில் செய்துகாட்டப்பட்டதாக 1796ல் வெளிவந்த படவிளக்கத்துடன் கொண்ட இயந்திரங்கள் கரகுறி ஜுய் நூலில் இடம்பெற்றுள்ளது.(சித்திர விளக்க இயந்திரம்,1796)
நவீன வளர்ச்சிகள்ஜப்பானிய கைவினைஞர் ஹிசசிகே டனாக (1799–1881), "ஜப்பானின் எடிசன்" என்றும் "கரகுறி கீமன் " என்றும் பாராட்டப்பட்டார், அவர் அதிசிக்கலான இயந்திர பொம்மைகளை பரிவாரமாக உருவாக்கினார், சில தேநீர் வழங்கியது, சில அம்பறாத்தூணியில் இருந்து அம்புகளைச் சுட்டுஎறிந்தது, சில ஜப்பானிய பாத்திரத்தை வர்ணம் பூசி வரைந்தது. 1898 ல் நிகோல் டேஸ்ல பொதுவில் ஒரு ரேடியோ கட்டுப்பாட்டில் உள்ள வெடிக்கண்ணியை விளக்கிக் காட்டினார். "தொலை தூர தானியங்கு முறைமை" அடிப்படையில் பெற்ற காப்புரிமைகள் பேரில் டேஸ்ல யு.எஸ் கடற்படைக்காக ஒரு ஆயுத முறையை உருவாக்க முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார்.
1926,ல் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கார்பரேஷேன் டெலிவாக்ஸ் என்னும், முதல்ரோபோ உருவாக்கி ஒரு பயனுள்ள வேலையை செய்ய வைத்தது. பிற எண்ணிக்கையில் ஏராளமாக உள்ள எளிய ரோபோகளை அவர்கள் டெலி வோக்ஸ்ல் பின்பற்றினார்கள், அதில் ஒன்று ராஸ்துஸ் ஆகும், அது ஒரு கருப்பு மனிதனின் செப்பனிடாத பிம்பம் கொண்டிருந்தது. 1930களில், அவர்கள் மனித உருக்கொண்ட ரோபோவை எலெக்ட்ரோ என்ற பெயரில் பொருட்காட்சி நோக்கங்களுக்காக உருவாகினார்கள், அந்த நோக்கங்களுள் உலகச் சந்தைகள் 1939 மற்றும்1940 அடங்கும். 1928ல், ஜப்பானின் முதல் ரோபோ ககுடென்சொக்கு,உயிரியலார் மகொடோ நிஷிமுரா என்பவரால், வரையப்பட்டு வடிவமைக்கப்பட்டது.
முதல் மின்ம சுயமாக இயங்கும் ரோபோகள் பர்டன் நரம்பியல் நிறுவனம், பிரிஸ்டல், இங்கிலாந்து சார்ந்த வில்லியம் கிரே வால்ட்டர் என்பவரால் உருவாக்கப்பட்டன. அவைகளுக்கு பெயர்கள் எல்மர் மற்றும் எல்சி என்று இடப்பட்டன. இந்த ரோபோக்கள் ஒளியை உணர்ந்து வெளிப்புற பொருள்களோடு, தொடர்பு கொண்டிருக்கும்; மேலும் இவைகளை தூண்டுதலாகக் கொண்டு பயணிக்கும்.
முதல் உண்மையான நவீன ரோபோ, மின்ம ரீதியில் திட்டமிட்டு இயங்க வடிவமைத்துக் கண்டு பிடித்தவர் ஜார்ஜ் தேவோல் ஆவார், அவர் அதை 1954 ஆண்டு கண்டு பிடித்தார், இறுதியில் அதனை யுனிமேட் என்றே அழைத்தார். தேவோல் முதல் யுனிமேட் ரோபோட்டை ஜெனரல் மோட்டோர்ஸ்க்கு 1960ல், விற்றார்.அது நியூ ஜெர்சி, ட்ரென்டன், எனுமிடத்தில் உள்ள இயந்திர சாதனத்தில் நிறுவப்பட்டது. அது அச்சு வார்ப்புரு இயந்திரத்தில் உள்ள உலோக வெப்பத் துண்டுகளை தூக்கி குவியலாக வைக்கும்.
இலக்கியம்ரோபோடிக் கதாபாத்திரங்கள், அண்ட்ராயிட்கள் (செயற்கை ஆண்கள்/ பெண்கள்), அல்லது ஜிநாயட்கள் (செயற்கை பெண்கள்)மற்றும் சய்போர்க்கள் (மேலும் "பயோனிக் ஆண்கள்/பெண்கள்" அல்லது குறிப்பிடத் தகுந்த இயந்திர அபிவிருத்திகள் கொண்டமனிதர்கள் ) இவைகள் எல்லாம் ஒரு மூலப் பொருளாக அறிவியல் கற்பனைக் கதைகளில் ஆகிவிட்டன.
இயந்திர வேலைக்காரர்கள் பற்றிய முதல் குறிப்பு மேற்கத்திய இலக்கியத்தில் ஹோமரின் இலியட் நூலில் வருகின்றது. XVIIIவது புத்தகத்தில், ஹிபாஈஸ்டுஸ், நெருப்புக் கடவுள், கதாநாயகன் அசில்லஸ்சுக்கு ஒரு புதிய போர்க்கவசம் உருவாக்கி ரோபோட்டால் உதவி செய்யப்படுவதாக எழுதியுள்ளார். ரியு வின் மொழிபெயர்ப்பின் படி, "தங்க கன்னியர் சேவகிகள் எஜமானருக்கு உதவ விரைந்தனர். உண்மையான பெண்கள் போல அவர்கள் தோற்றம் அளித்தனர். அவர்களால் பேச இயலாது. கைகால்கள் தூக்கி நுண்ணறிவுடன் செயல்பட முடியும். கைவினையால் அழிவிலாத கடவுளர்களால் பயிற்சியும் பெற்றனர்." ஒருவேளை, "ரோபோட்" அல்லது "அன்ராயிட்" போன்ற வார்த்தைகளால் விளக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் மனிதர் தோற்றம் கொண்ட இயந்திர சாதனங்கள் ஆவர்.
இசாக் அசிமோவ் (1920–1992), என்பவரே ரோபோக்கள் பற்றிய கதைகள் பொறுத்த மட்டில் விளைவு வளமிக்க ஆசிரியர் ஆவார். அசிமோவ் ரோபோகளுக்கு அளிக்கப்படும் உன்னத தொகுப்பான அறிவுரைகள் பற்றிய பிரச்சினையை ஜாக்கிரதையாகக் கருதினார், அதன்படி, ரோபோடிக்குகள் பற்றிய மூன்று விதிமுறைகளை வகுத்தார்: ஒரு ரோபோ ஒரு மனிதனுக்குத் தீங்கிழைக்காது. ஆனால் மனிதன் தீங்கு செய்தாலும் செயலற்று இருக்கும். மனிதர்கள் இடும் கட்டளைகள்படி முதல்விதிக்கு விலக்காக இருக்கும் பட்சத்தில்கீழ்படிந்து நடக்க வேண்டும், அந்த விதிக்கு முரண்பட்டிருந்தால் ரோபோ தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,அந்த பாதுகாப்பு அதன் சுய நிலையை காக்கும் வண்ணம் இருத்தல் வேண்டும், அது முதலாம் மற்றும் இரண்டாம் விதிக்கு முரண்பட்டு இருக்கக் கூடாது. அவருடைய "சுற்றிலும் ஓடு" என்ற 1942 ஆண்டு சிறு கதையில் அறிமுகம் செய்யப்பட்டதாகும், அதற்கு முன்னதாக வெளிவந்த கதைகளில் அக்கருத்துக்கள் முன்கூட்டியே குறிப்பிடப்பட்டு இருந்தன. பிறகு, அசிமோவ் பூஜ்ய விதியாக சேர்த்தது: "ஒரு ரோபோ மனித இனத்தை கெடுதல் செய்யாது, அல்லது தான் செயலற்று இருந்து, மனிதன் கெடுதல் செய்ய அனுமதிக்கும்."; பிற விதிமுறைகள் யாவும் இதற்கு ஒப்பவே கிரமமாக அமைந்து இருக்கும்.
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் படி, அசிமோவின் "பொய்யன்" என்ற சிறுகதையில், முதல் பத்தியில், (1941) குறிப்பிடப்பட்டதன்படி, முதல்விதியில் தொடக்கத்தில் ரோபோ வியல் என்ற சொல்பதிவாகி இருந்தது. அசிமோவ் ஆரம்பத்தில் இதை அறியவில்லை; அவர் இயந்திர இயல், நீரியல் ஆய்வு, போன்ற செயல்முறை அறிவின் கிளைகளைகளைக் குறிப்பிடும் சொற்களோடு ஒத்த சொல்லாக இருந்ததென்று பாவித்திருந்தார். நன்றி: wikipedia
என்ன நண்பர்களை இந்த பதிவின் வாயிலாக எந்திரன் குறித்தான சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொண்டிருபீர்கள் தானே.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு மிக நீளமானது படிப்பதற்கு கொஞ்சம் இல்லை, இல்லை நிறையவே பொருமை அவசியம் இதன் தலைப்பை பார்த்து வேறு ஏதாவது நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும். இந்த படைப்பு முழுவதும் காப்பி எடுக்கப்பட்டதுதான்
ஒரு ரோபோ என்பது நடைமுறையில் உண்மையான இயந்திர வடிவுடைய செயற்கையான முகவர் அல்லது காரகி ஆகும். செயல்முறைப்படி, அது ஒரு வழக்கமான மின்னாற்றல் இயக்கவியல் இயந்திரம் ஆகும், அது மேலும் கணினி வழிகாட்டுதல் மற்றும் மின்மம் சார்ந்த திட்டங்கள் பேரில் இடுபணிகளை தானாக நிறைவேற்றவல்ல திறன் படைத்ததாகும். மற்றுமொரு பொதுவான குணநலன் யாதெனில் அதன் தோற்றம் அல்லது அசைவுகள் மூலம் ஒரு ரோபோ அடிக்கடி தெரிவிக்கும் பொருள் ஆவது, அதற்கென்று ஒரு நோக்கம் அல்லது காரகம்-செயலாண்மை இருக்கின்றது என்பதே ஆகும்.
ரோபோ என்ற சொல்லானது இயற்பியலான ரோபோக்கள் நடைமுறையின்படி மெய்மையான மென்பொருள் காரகிகள், இரண்டையும் ஒருசேரக் குறிப்பிடும், ஆனால் அதில் பின்னால் சொல்லப்பட்டது வழக்கமாக பாட்ஸ் என்று அழைக்கப்படும். இயந்திரங்களுக்குரிய தகுதி ரோபோக்கள் பெற்றுள்ளதா என்பதில் கருத்தொற்றுமை ஏதும் இல்லை, ஆனால் பொதுவான ஒத்த கருத்து வல்லுனர்கள் மற்றும் பொது மக்களிடையே நிலவுவது யாதெனில் ரோபோக்கள் பின்வரும் மொத்த அல்லது ஒருசில வேலைகளை நிச்சயம் செய்யும்: சுற்றிலும் நகர்வது, இயந்திர கை, கால் போன்ற பக்க உறுப்புகளை இயக்குவது, சுற்றுப்புற சூழ்நிலைகளை உணர்ந்து அதற்கு தகுந்தாற் போல் கையாள்வது, நுண்ணறிவு நடத்தை முறையை வெளிப்படுத்துவது, அதிலும் குறிப்பாக மனிதர்கள் அல்லது பிறமிருகங்கள் நடந்து கொள்வதை அதேபோல் நடித்துக்காட்டுவது ஆகியனவாகும்.
அச்சொல்லால் குறிப்பிட்டுக் கூறுவதில் அதாவது பொதுப்படையான பயன்பாடு உணர்த்தும் தூரத்தில் இருந்து இயக்கும் வழிமுறைகளா, அல்லது பிரத்தியேகமான மென்பொருளால் மனிதர்களின் தலையீடு இன்றி அவைகளை கட்டுப்படுத்தப்படும் வழிமுறைகளா என்பதில் ஒரு சச்சரவு நிலவுகிறது. தென் ஆப்ரிக்காவில், ரோபோ என்பது ஒரு முறைப்படி இல்லாத மற்றும் பொதுவாக உபயோகிக்கப்படும் போக்குவரத்துக்கான விளக்குகளின் தொகுதி பற்றிய சொல்லைக் குறிக்கும்.
செயற்கையான உதவியாளர்கள் மற்றும் தோழர்கள் பற்றிய கதைகள் அவைகளை உருவாக்கியது பற்றியும் நெடுங்காலமாகவே நிலவி வருவதால் இருபதாம் நூற்றாண்டில்தான் முற்றிலும் தானியங்கும் இயந்திரங்கள் தோன்றி வந்தன. எண்மம் மற்றும் திட்டமிடுதல் அடிப்படையில் இயங்கும் ரோபோட், 1961 ல் முதன்முதலில் யுனிமேட் பெயரில் நிறுவப்பட்டது, அதுஒரு அச்சு வார்ப்புப் படிவ இயந்திரத்தில் உலோக வெப்பத் துண்டுகளைத் தூக்கிக் குவியல் குவியலாக அடுக்கி வைக்க பயன்படுத்தப்பட்டது. இன்றோ, வியாபார மற்றும் தொழில் ரீதியில் ரோபோக்கள் பல்வேறு பட்ட தொழில்களை செலவு பிடிக்காமல் அதிக துல்லியமாகவும் மனிதர்களைக் காட்டிலும் நம்பகமாகவும் செய்ய முடிகின்றது. மேலும் அவைகள் அழுக்கு படர்ந்த வேலைகள், மற்றும் அபாயகரமான வேலைகள் அல்லது மனிதர்களுக்கு ஊக்கம் குன்றிய மற்றும் பொருத்தமில்லாத வேலைகள் யாவும் முடித்துவிட பயன்படுகின்றன. ரோபோக்கள் பரவலாக பொருள் உற்பத்தி, ஒருங்கு திரட்டுதல், கட்டி வைத்தல், போக்கு வரவு, நிலம் அகழ்வது மற்றும் விண்வெளி ஆய்ந்து அறிதல், அறுவை உபகரணங்கள், ஆயுதங்கள் செய்தல், ஆய்வுக்கூட ஆராய்ச்சி, மற்றும் நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் பொருள்கள் செய்தல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.பல்வேறு நாடுகளில் இருக்கும் ரோபோகளின் எண்ணிக்கையை எவ்வளவு என்று ஒப்பிட்டுக் கூறுதல் மிகவும் கடினமானதாகும், ஏனெனில் ஒரு 'ரோபோ' பற்றிய வரையறைகள் பல்வகைகளாக உள்ளன. தரஅளவுப்பாடு பற்றிய ஒரு சர்வதேச அமைப்பு, ஐஎஸ்ஓ 8373 செய்துள்ள வரையறையானது: 'ரோபோ' என்பது "ஓர் சுயகட்டுப்பாடு கொண்டதும், மறுதிட்ட அமைப்பும் மற்றும் பல்நோக்கும் கொண்டதுமான இயந்திரமாகும். மேலும் அது திட்டஅமைப்பில் சூழ்ச்சித்திறன் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அச்சுகளில் இயங்கும் வல்லமை கொண்டதாகும். அவைகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது தானியங்கும் வகையிலோ அமையப் பெற்றிருக்கலாம். எல்லாமே தொழிலியல் தானியங்கு பயன்பாட்டிற்காகவே அமைந்துள்ளன. இந்த வரையறையை சர்வதேச ரோபோ இயல்முறைகள் பெடரேஷன், ஐரோப்பியன் ரோபோஇயல்முறைகள் ஆராய்ச்சி வலைதளம் (யூரோன்), மற்றும் பல்வேறு நாடுகளின் தரஅளவுக் குழுக்கள் யாவுமே பயன்படுத்தி வருகின்றன.
அமெரிக்க ரோபோடிக்ஸ் இன்ஸ்டிடியுட் (ஆர்ஐஏ) ரோபோ வரையறையை ஒரு பரந்த அளவில் பயன்படுத்துகின்றது: "பல்வகைச் சூழ்ச்சித்திறனாளுகையால் மறுதிட்ட அமைப்பு வாய்க்கப் பெற்று பொருள்கள், அதன் பிரிவுகள், கருவிகள் அல்லது பிரத்தியேகமான வழிமுறைகள் பல்வேறு திட்டங்களின் கருத்துக்களுக்காகவும் பல்வகையான செய்பணிகளை நிறைவேற்றவும் உள்ள இயந்திரமே ரோபோ ஆகும்." ஆர்ஐஏ ரோபோகளை நான்கு உட்பிரிவுகளாக வகுத்துள்ளது: சூழ்ச்சித்திறனால் மனிதக் கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இயக்குதல், தானியங்கு திறன் படைத்த வழிமுறைகள் கொண்ட முன்கூட்டியே நிர்ணயித்த சுழற்சிமுறைகள், ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தொடர்ந்து விசைவீச்சு வளைகோடுகள் வாயிலாக வழங்கிக் கட்டுப்பாடு மூலம் திட்டமிடும் தன்மை, மற்றும் நான்காவது வகைசார்ந்த ரோபோக்கள் சுற்றுப்புறச் சூழ்நிலையிலிருந்து தகவல் பெற்று அதற்கேற்ப நுண்ணறிவுடன் நகர்வது இவைகளே ஆகும்.
ஓவ்வொருவரையும் திருப்திப்படுத்தக் கூடிய வரையறை எதுவுமில்லை, பலர் அவர்களுக்குகந்ததையே கொண்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, ஜோசெப் எங்கள் பெர்கர் என்னும் ஒரு தொழில்துறை சார்ந்த ரோபோ இயல்முறைகளின் முன்னோடி, ஒருமுறை குறிப்பிட்டுச் சொன்னார்: "ஒரு ரோபோ என்னவென்று என்னால் வரையறை செய்ய முடியாது, ஆனால் அதில் ஒன்றைப் பார்த்த உடனே நான் தெரிந்துகொள்வேன். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தின்படி, ஒரு ரோபோ என்பது,"மனித முயற்சிகளுக்கு மாற்றாக உள்ள சுயமாக இயங்கும் இயந்திரமாகும். அது தோற்றத்தில் மனிதர்கள்போல இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதர்கள் போல காரியங்களை அது நிறைவேற்றும். மெர்ரியம்- வெப்ஸ்டர் அகராதியின்படி, "மனிதன் போலுள்ள ஓர் இயந்திரம் அது, நடப்பது, பேசுவது போன்ற சிக்கலான காரியங்களை நிறைவேற்றும்." என்ற வரையறையும் அல்லது "அது ஒரு வழிமுறை அடிக்கடி சிக்கலான செயல்களை தானாக மற்றும் மீண்டும் மீண்டும் நிறைவேற்றும்." அல்லது,"பின்புல இயக்கவிசையின் வழிகாட்டுதலில் தானியங்கு கட்டுப்பாடுகள் அது கொண்டதாகும்." என்ற வரையறைகளும் உள்ளன.
நவீன ரோபோக்கள் இறுக்கமான சுற்றுப்புறச் சூழ்நிலைக் கட்டுப்பாடுகள் மிக்கதாகும். ஒருங்கு கூடிய வரிசைகள் எதிர்பாராத தலையீடுகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். இதன் காரணமாக, பல மனிதர்கள் அபூர்வமாகவே ரோபோகளை எதிர்த்துப் போராடுகின்றனர். எனினும்,வீட்டுவேலைகள் செய்ய, ரோபோகளை குறிப்பாகத் துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்,|ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்,உபயோகிக்கின்றனர். மேலும் ராணுவத்திலும் ரோபோகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
தனிச்சிறப்பு அம்சங்களை வரையறை செய்தல்
"ரோபோ," வரையறை ஏதும் சரியாக இல்லாததால் ஒரு வகைமாதிரியான வரையறை, கூடுமானவரையில் பின்வரும் பல அம்சங்கள் பெற்றிருக்கும்.அது ஒரு மின்விசை இயந்திரமாகும். இயற்பியல் பொருள்களோடு கலந்துறவாடும் வல்லமை பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடும்பணி முடிக்கத்தக்க மின்ம இயக்க திட்டமிடும் அமைப்பும் கொண்டுள்ளது. வரிசைக்கிரமமாக பலஇடும்பணிகள் மற்றும் செயல்கள் யாவும் முடிக்கும்திறன் கொண்டுள்ளது.
மேலும் அதன் திறன் இயற்பியல் பொருள்களின் தரவுகளைக் கண்டவுடனே ஈர்த்துக்கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும், அப்பொருள்களின் சுற்றுப்புறச் சூழ்நிலை களின் உள்ளிட நிலைமைகளுக்கேற்ப, தரவுகளை நடைமுறைப் படுத்துவதும், பல்வேறு ஊக்கிகளுக்கு ஈடு கொடுப்பதற்கேற்பவும் அமைந்திருக்கும். இது ஓர் எளிய இயந்திர வழிமுறையான நெம்புகை, நீரமுக்கு இயந்திரம், அல்லது வேறு பொருள்களுக்கு மாறுபட்டு இருக்கும். அவைகளுக்கு நடைமுறைப்படியாற்றும் திறன் கிடையாது. அவைகள் பணிகளை வெறும் இயந்திர அமைப்பில் இயக்கவிசையுடன் மட்டுமே முடுக்கும்.
உளவியல் முகமை
ரோபோடிக் பொறியிலாளர்களுக்கு, ஒர் இயந்திரத்தின் இயல்தோற்றம் மட்டும் முக்கியம் கிடையாது, அதன் செயல்பாடுகள் எவ்வகையில் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதே முக்கியமாகும். அத்தகு கட்டுப்பாட்டு ஒழுங்கமைப்பு அதற்குரிய முகமையை அதுவாகவே பெற்றிருக்கும், எனவே அவ்வியந்திரம் ஒரு ரோபோ என்றழைக்கப்படும். ஒரு முக்கிய அம்சமானது, எவ்வகையில் தேர்வுகளை செய்வதென்ற திறனேயாகும். உயர்மட்ட- அறிவாற்றல் வேலைப்பாடுகள், இருப்பினும்,எறும்பு ரோபோகளுக்கு முக்கியமானதல்ல, என்பது காட்டப்பட்டுள்ளது.
தானாக ஒழுங்குமுறைப்படி இயங்கும் பொறியமைப்புடைய ஒருகார் ரோபோ வகை சார்ந்ததாகக் கருதப்பட மாட்டாது.
ஒரு தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனம் சிலசமயங்களில் ரோபோ (அல்லது டெலிரோபோ) என்றழைக்கப்படும்.
கணினியுடன் இயங்கும் ஒரு கார், பிக்டிராக் போன்றது, திட்டமிடல் அமைப்புடைய கிரமமுறையில், ஓட்டிச் செலுத்தப்படும். அதுஒரு ரோபோ என்று அழைக்கப் படும்.
சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் ஒருகார் சுற்றுப்புறச்சூழல்களை உணர்ந்தறியும் திறனுடன் ஓட்டும் தீர்மானங்கள் பெற்ற தகவலின் அடிப்படையில் அமைந்திருக்கும், அதாவது 1990களில் வந்த எர்னஸ்ட் டிக்மான்ன்ஸ் வாகனஓட்டியில்லாத கார்கள்போல! அல்லது டார்பா கிராண்ட் சாலென்ஜ் நுழைவுகளைப்போல இருப்பின், அதுஒரு ரோபோ என்று கருதப்படும்.
ஒரு புலனறிவுடைய ஆள்போன்ற கார்,கேஐடிடி கற்பனை போன்றது, அது தீர்மானங்கள் செய்யவல்லது, தடையில்லாமல் ஓடுவது, தங்குதடையின்றி பேசவல்லது, அது வழக்கமாக ஒரு ரோபோ என்று அழைக்கப்படும்.
இயற்பியல் முகமை
எவ்வாறாயினும், பலசாதாரண மனிதர்களுக்கு, இயந்திரம் என்பது கரங்கள் மற்றும் கைகால் பக்கஉறுப்புகள், யாவும் கட்டுப்படுத்தவல்லது எனதோற்றத்தில் தெரிந்தாலும்மனிதப்பண்பு கற்பிக்கின்ற அல்லது விலங்குப்பண்பு புகட்டுகின்றதாகவோ தோன்றிடலாம். (உதாரணம்.அசிமோ அல்லது அய்போ), அதைவேண்டுமானால் ஒரு ரோபோ என்று அழைக்கலாம்.
ஒரு பியானோ வாசிப்பாளன் அபூர்வமான இயல்புடைய ஒரு ரோபோ என்று கூறலாம்.
ஒரு சிஎன்சி மில்லிங் மிஷின்- உலோகத் தகட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம் - அதை அபூர்வமாக ஒரு ரோபோ என்றழைக்கலாம்.
ஒரு தொழிற்சாலையில் சுயஇயக்கமுடைய கரம் தொழிலியலான ரோபோ
தானே இயங்கும் சக்கரமுடைய அல்லது தடவழியில் செல்லும் வழிமுறை, சுயமாக வழிகாட்டிக் கொள்ளும் முதிரா இழைபொறியாயினும், அதை இயங்கு ரோபோ அல்லது சேவை ரோபோஎன்று கருதப்படலாம்.
ஒரு விலங்குருவான இயந்திர விளையாட்டுப் பொம்மை, ரோபோராப்டர்,எனும் பெயரில் அபூர்வமாக ஒரு ரோபோ ஆக அழைக்கப்படலாம்.
மனிதஉருவில் உள்ள இயந்திரம், அசிமோ போன்றது, ஒரு ரோபோ அல்லது சேவை ரோபோ என்று அழைக்கப்படலாம்.
மூன்று அச்சுகள் கொண்ட ஒரு சிஎன்சி மில்லிங் மிஷின்- உலோகத் தகட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம்-ரோபோ கரம்போல, கட்டுப்பாடுகொண்ட அமைப்பைக் கொண்டிருக்கும் அந்தக்கரமே அதைஒரு ரோபோ எனஅழைக்கக் காரணமாகும்.சிஎன்சி இயந்திரமோ ஒரு சாதாரண இயந்திரமாகவே கருதப்படும். கண்கள் பெற்றிருப்பதும் ஓர் இயந்திரம் ரோபோ என்று கூறுதற்குரிய வேற்றுமை அம்சமாகும்,மனிதர்கள் கண்களை உள்ளுணர்வால் புலனறிவுடைமையோடு தொடர்பு கொண்டுள்ளனர்.
எவ்வாறு இருப்பினும், மனிதப்பண்புகள் பெற்றிருப்பது மட்டுமே அளவைக் கட்டளை என போதாது, அவைகளால் ஒர்இயந்திரம் ரோபோ என்றழைக்கப் படவும் மாட்டாது. ஒரு ரோபோ எதையாவது ஒன்றைச் செய்தாகவேண்டும் அசையாத வடிவுடைய அசிமோவை நகர்த்துவது போல, இல்லையென்றால் அதை ஒரு ரோபோ என அழைக்கப் படமாட்டாது.
சொல்லாக்க விளக்கம்.
ரோபோ எனும் சொல் முதன்முதலில் செக் எழுத்தாளர் கரேல் கபேக் அவருடைய நாடகம் ஆர்.யு.ஆர்.(ரோச்சும்மின் அகில உலக ரோபோட்கள்), அதில் அறிமுகம் செய்தார்.ஆர் யு ஆர் என்பது ரோச்சும்மின் உலகளாவிய ரோபோகள், 1920.ல் அது வெளியிடப்பட்டது. நாடகமானது ஒரு தொழிற்சாலையில் உள்ள செயற்கையான மனிதர்கள் பற்றியதாகும். அவர்கள் ரோபோக்கள் என்று அழைக்கப்படுவர்,அவர்கள் நவீன கருத்துக்கள் ஆனா அன்டிரயிட்ஸ்- அதற்கு ஒத்து வந்தனர்,அதன்படி, அவர்கள் மனிதர்கள் போல தோற்றம் கொண்ட இயந்திரங்கள் ஆவார்கள். அவர்கள் தெளிவாக அவர்களுக்காக நினைப்பவர்கள் போல இருப்பர், அவர்கள் பணிபுரிய இன்புறுபவர்கள் போல தென்படுவர். நாடகத்தில் பிரச்சினை ரோபோக்கள் சுரண்டப்படுகின்றார்களா மற்றும் எப்படி பாவிக்கப்படுகின்றனர் அதன் விளைவுகள் என்ன என்பதுதான்.
எவ்வாறாயினும், கரேல் கபேக் அந்த வார்த்தையை முதன்முதல் புதிதாக புனைந்திடவில்லை. அவர் ஒரு சிறிய கடிதம் வாயிலாக ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்கு அடிச்சொல் வரலாறு அல்லது சொல்லாக்க விளக்கம் பற்றி குறிப்பிடுகையில் அவருடைய சகோதரர்,வர்ணம் பூசுபவரும் எழுத்தாளருமான, ஜோசெப் கபேக் தான், அச்சொல்லின் உண்மையான மூலகர்த்தா ஆவார் என்று கூறியுள்ளார். 1933ல், அவர் ஒரு செக் பத்திரிகை லிடோவே நோவினி அதில் எழுதிய கட்டுரையில், அவர் முதன்முதலாக இயந்திரஉயிர் இனங்களை லபோரி (லத்தீன் மொழியில் லபோர் என்றால் வேலை என்று பொருள்)என்றே அழைக்க நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும்,அவர் அந்த வார்த்தை பிடிக்காததால், தன் சகோதரர் ஜோசெப்பிடம் ஆலோசனை கலந்ததில் தெரிவிக்கப்பட்ட சொல்லே "ரோபோடி"யாகும். ரோபோட என்ற சொல்லானது வேலை அல்லது உழைப்பு அல்லது அடிமை உழைப்பாளி பொருள்படும், உருவகமாக செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் "கடும்தொழில்" அல்லது "கடும்உழைப்பு" என்றும் பொருள்பயக்கும். மரபு ரீதியில் ரோபோட என்பது ஓர் அடிமைத்தொழிலாளி தன் எஜமானனுக்கு, ஒரு வருடத்தில் ஆறு மாதங்கள் வேலைக்காலமாக பணியாற்ற வேண்டும். 1848ல் போஹெமியாவில், அடிமைத்தொழில் சட்டப்படி செல்லுபடி ஆகாது என்று அறிவிக்கப்பட்டது, ஆகையால் கபேக் ஆர்.யு.ஆர் நாடகம் எழுதிய போது,ரோபோ என்ற சொல்லானது வேலையின் பலவகைகளை உள்ளடக்கியது,ஆயினும் "அடிமைத்தனம்" என்ற சொல்லானது வழக்கொழிந்தாலும் அது தெரியப்படும் சொல்லாகவே இன்றளவும் உள்ளது.
ரோபாடிக்ஸ் என்ற சொல்லானது, இவ்வாய்வுத் துறையினை குறிப்பிடுவதாகும்,அது முதன்முதலில் (தற்செயலாக அமைந்த போதிலும்), எழுத்தாளர் ஐசக் அசிமோவ் தனது அறிவியல் கற்பனைக் கதையில் புதிதாக புனைந்துரைத்தார்.
சமூகத் தாக்கம்
ரோபோக்கள் நாளடைவில் முன்னேற்றம் மற்றும் உலகியலுக்கு ஒத்து வளர்ச்சி அடையவே நிபுணர்களும் கல்வியாளர்களும் ஒழுக்கக் கோட்பாடுகள் அடிப்படையில் தோன்றும் வினாக்களுக்கு விடைகாண அவர்கள் முற்பட்டனர்,ரோபோகளின் நடத்தையை கட்டுப்படுத்துவது எது என்பதையும் அவைகள் சமுதாயம் , பண்பாட்டியல்,ஒழுக்க நெறிமுறை, மற்றும் சட்டம் சார்ந்த உரிமைகள் கொண்டுள்ளனராஎன ஆராய்ந்து கொண்டு வருகின்றனர். ஒரு அறிவியல் குழு தெரிவித்தது யாதெனில் 2019வருவதற்குள் ஒரு ரோபோ மூளை உருவாகிவிடுவது இயலக்கூடியதாகும் என்பதேயாகும். 2050க்குள் ரோபோ நுண்ணறிவு கொண்ட வல் ஊடுவழிகள் பல காண இயலும் என்று ஆருடம் கணித்துள்ளனர். சமீப கால முன்னேற்றங்கள் ரோபோடிக் நடத்தை நடைமுறை அறிவடிப்படையைச் சார்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்து வருகின்றன.
வேர்நோர் விஞ்சே என்பார் எதிர்காலத்தில் கணனிகள் மற்றும் ரோபோக்கள் இரண்டும் மனிதர்களைவிட மிகவும் வினைத்திறம் கொண்டு திகழக் கூடும் என்று கருத்துக் கூறியுள்ளார் அவர் இதை "ஒரு தனிச் சிறப்புக்கூறு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு வேளை அது மனிதர்களுக்கு ஆபத்தாகவும் அமைந்து விடவும் கூடும். இதுஒரு தத்துவார்த்த ரீதியில் "தனிச் சிறப்புக்கூற்றியல்" என்று விளக்கப்படுகின்றது.
2009,ல் வல்லுனர்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு கணினிகளும், ரோபோட்களும் சுயாட்சி அந்தஸ்து பெறுமா, எனவும் அப்படி பெறும் பட்சத்தில் அவைகளின் திறன்கள் ஓர் அச்சுறுத்தல் அல்லது அபாயம் அளிக்குமா என விவாதித்தனர். அவர்கள் குறிப்பால் உணர்த்தியது என்னவெனில் சில ரோபோக்கள் பாதி-சுயாட்சி பல வடிவங்களில் அடைந்துள்ளதாகவும், அவைகளுக்குத் தேவையான எரிசக்தி மூலங்கள் அவைகளாகவே உற்பத்தி செய்து கொள்கின்றது எனவும் ஆயுதம் கொண்டு இலக்குகளைத் தாக்கும் திறன் சுயேட்சையாக பெற்றுள்ளது எனவும் கூறினார்கள். மேலும் அவர்கள் குறிப்பால் உணர்த்தியது சில கணினிகள் நச்சுக் கிருமிகளை அழிக்கும் வேலையை செய்யாமல் தப்பித்து விடுகின்றன எனவும் அவைகள் பெற்றுள்ளது "கரப்பான் பூச்சி நுண்ணறிவு" மட்டுமே எனவும் கூறினார்கள். மேலும் அவர்கள் குறிப்பால் தொடர்ந்து உணர்த்தியது என்னவெனில் அறிவியல் கதைகளில் வர்ணிக்கப்பட்ட சுய-விழிப்புணர்வு அரிதானது எனவும், ஆனால் அதே சமயம் பிற உள்ளார்ந்த அபாயகட்டங்கள் மற்றும் வீழ்த்தும் குழிகள் உள்ளதெனவும் கூறினார்கள். பல்வேறு ஊடக மூலங்கள் மற்றும் அறிவியலார்ந்த குழுக்கள் குறிப்பில் உணர்த்தியது மாறுபட்ட பகுதிகளில் தனித்தனி போக்குகள் மூலம் பெரும்அளவில் ரோபோடிக் செயல்பாட்டு முறைகள் மற்றும் சுயாட்சி அந்தஸ்து, அடைந்து அதனால் பல உள்ளார்ந்த கவலைகளைத் தோற்றுவிக்கக் கூடும் எனவும் கூறியுள்ளன.
சில நிபுணர்கள் மற்றும் கல்விஇயலார்கள் ரோபோகளை பயன்படுத்தினால் ராணுவ சண்டைகளுக்கு, சுயாட்சி மூலம் வழிவகுக்க நேரிடும் எனவும் வினா எழுப்பி உள்ளனர். தொழில் நுட்பம் சார்ந்த கவலைகளும் அதனுள் இருக்கின்றன எனவும் ஒருசில ஆயுதம் ஏந்திய ரோபோக்கள் பிற ரோபோகளால் கட்டுப்படுத்தப் படவும் வாய்ப்பு உள்ளதெனவும் தெரிவித்தனர். யு.எஸ்.கடற்படையின் நிதிஉதவி பெற்ற ஓர் அறிக்கையில் சொல்லப்பட்டது யாதெனில் ராணுவ ரோபோகள் அதிக சிக்கல் கொண்டதெனவும், ஆகையால் அவைகளுக்கு சுயாட்சி அளிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றும் பொழுது மிகுந்த கவனம் செலுத்தப்படுதல் இன்றியமையாதது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுயாட்சி ரோபோக்கள் ஊடக கவனம் கவர்ந்து உள்ளமையால், ஒருசில கவலைகள் பொது மக்கள் தரப்பில் இருந்து வெளி வந்துள்ளன.பிரத்தியேகமாக ஒரு ரோபோ,ஈஏடிஆர், தொடர்ந்து எரிசக்தி உயிரினப் பிண்டம் மற்றும் ஆர்கானிக் எனும் உயிர்ப்பொருள் கூறு மூலம் பெறமுடியும் அப்பொருள்கள் யுத்த காலங்கள், பிற உள்ளூர் சுற்றுப்புறச் சூழல்களில் இருந்தும்பெற அவைகளால் முடியும் என்பதெல்லாம் அக்கவலைகள் ஆகும்.
செயற்கை நுண்ணறிவு முன்னேற்ற அமைப்பு இதுபற்றி தலைப்பை ஆழமாக ஆய்ந்து பார்த்து அதன் தலைவர் இந்த பிரச்சினை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
சிலர் கூறும் ஆலோசனைப்படி ஒரு "சிநேகித ஏஐ", உருவாக்க வேண்டும்; அதன்படி ஏற்கனவே உள்ள முன்னேற்றங்கள் உள்அடக்கி மேலும் உள்ளார்ந்த ரீதியில் சிநேகிதம், மனித இயல்பு கொண்டவாறு அது இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அமுலில் ஏற்கனவே இருக்கின்றன அதுவும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் ரோபோகளில் பாதுகாப்பு முறைமைகள்,மட்டும் 'சட்டங்களின்'தொகுப்புகள் பொருத்தப் படவேண்டும் என்று கட்டுப்பாடுகள் நிறைவேற்றி உள்ளன. அவைகள் அசிமோவின் ரோபோடிக்ஸ் மூன்று விதிகள் போல ஒத்திருக்கின்றன. 2009 ல் ஜப்பானிய அரசால் ரோபோ தொழில்துறைக் கொள்கைக் குழு அதிகாரப் பூர்வமாக ஓர்அறிக்கை விட்டது. சீன அதிகாரிகளும் ஆய்வாளர்களும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதன்படி ஒழுக்க நெறிமுறை விதிகள் பற்றிய தொகுதி, புதிய சட்டவடிவ வழிகாட்டும் நெறிமுறைகள் அடங்கிய "ரோபோ சட்ட வடிவ ஆய்வுகள்" அதில் உள்ளன. மேலும் ஒரு சிலர் தங்கள் கவலையையும் தெரியப்படுத்தி உள்ளனர். ரோபோ பற்றிய பொய்யான தகவல்கள் தெளிவாகவே சொல்லும் நிகழ்ச்சிகள் அப்படிப்பட்ட கவலைகளை வெளியிட வைத்தது.
தொழில் நுட்பப் போக்குகள்
2025களில், ஜப்பான் ரோபோ சேவைகளை முழு அளவில் வணிகமயமாகுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஜப்பானிய அரசாங்க முகமைகளால், அங்கு ஆய்வு தொழில்நுட்பமாக அதிலும் குறிப்பாக வணிக அமைச்சகத்தால் நடத்த அவ்வரசாங்கம் முன்வந்துள்ளது.
ரோபோக்கள் முன்னேற்றம் அடைய, முடிவில் ஒரு தரமான கணினி உள்ளியக்க முறைமை அவைகளுக்காகவே என்று வரவும் கூடும். ரோபோ கணினி உள்ளியக்க முறைமை (ஆர்ஒஎஸ்) ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு ஓபன் சோர்ஸ்-திறந்த மூலம்-திட்டங்களின் தொகுதி அடங்கியதாக உருவாக்கப்பட்டது, அதனுடன் மாசாசுசெட்ட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்,ஜெர்மனியின் முனிச் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் இரண்டும், இணைந்து பங்கு கொண்டன. ஆர்ஒஎஸ் ரோபோகளின் வழிச்செலவு,கைகால்கள் பற்றி குறிப்பான வன்பொருள் கவலைப்படாமல் ஒரு திட்டம் வழங்கி உள்ளது. உயர்-மட்ட அளவில் கட்டளைகள் பிம்பம் பற்றி கண்டறிதலும் மேலும் கதவுகள் திறக்கவும் அது கணினியில் வழங்கி உள்ளது. ஆர்ஒஎஸ் ரோபோ கணினி திறந்த உடனே, அதன் கைகால்கள் நீளம் அசைவு கொண்டே தேவையான தரவுகளைப் பெற்றுவிடும். இந்த தரவுகளை அது உயர்-மட்ட பதின்முறை இலக்கமானம் கணக்கிட சார்ந்து உள்ளது. மைக்ரோசோப்ட் கணினி நிறுவனம் தனது ரோபோடிக்ஸ் வளர்ச்சியாளர் ஸ்டுடியோ, துணைகொண்டு 2007. முதல் ஒரு "ரோபோக்கள் விண்டோஸ்" முறைமை ஒன்றை உருவாக்கி உள்ளது.
புதிய செயல்முறைகளும் திறன்களும்
கேட்டர்பில்லர் கம்பெனி ஒரு கொட்டும் டிரக் மனிதர் வாகன ஒட்டி இன்றி உருவாக்கியுள்ளது.
ஆராய்ச்சி ரோபோக்கள்இன்று பெரும்பாலும் ரோபோக்கள் தொழிற்சாலைகளில் அல்லது வீடுகளில், நிறுவப்பட்டதும் மட்டும் அல்லாமல் உடலுழைப்பு, உயிர் காக்கும் வேலைகள் மற்றும் புதுப்புதுவகை வேலைகள் செய்ய, பரிசோதனைச் சாலைகளில் உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. ரோபோடிக்ஸ் பற்றிய ஆய்வுகள் குறிப்பாக தொழில்துறை பணிகளுக்கு மட்டுமல்ல அதன் புதிய வகைகள் பற்றியும் ஆகும், மாற்றுவழிகள் அதன் வரைவுவகைகள், கண்டு புதியமுறைகளில் நினைத்து பார்க்கவும் ரோபோக்கள் வடிவமைப்பதும், உற்பத்தி செய்வதும் யாவும் அதில் அடங்கும். இந்த புதிய வகை ரோபோக்கள் மெய்யான உலகப் பிரச்சினைகளை தீர்க்க அவைகளை உணரும் கடைசிக் கட்டத்தில் உதவிகரமாக இருக்கும்.
நானோரோபோகள்: இன்னமும் தாற்காலிக பொது விளக்க தொழில்நுட்ப கோட்பாடாக உள்ளன. இயந்திரங்கள் உற்பத்தி செய்தல் அல்லது ரோபோக்கள் உற்பத்தி செய்தல் அல்லது நானோ மீட்டர் நெருக்கமாக (10−9 மீட்டர்கள் உற்பத்தி செய்தல் இவைகளைப் பற்றியே ஆராய்ச்சி செங்கின்றது. மேலும் இவைகள் நானோரோபோக்கள் அல்லது நானிடேஸ் என்று அழைக்கப்படும், அதுமட்டுமின்றி அணுத்திரண்ம இயந்திரங்களில் இருந்து கட்டமைக்கப்படும். இதுநாள் வரைக்கும், ஆய்வாளர்கள் இத்தகு சிக்கலான முறைகளில் சில பிரிவுகளை மட்டுமே உற்பத்தி செய்துள்ளனர்,உராயும் பொறி உறுப்புகள், முழுஉணர்வுக் கருவிகள்,செயற்கை சேர்ம அணுத்திரண்ம மோட்டார்கள் போன்றவற்றை செய்தனர்.ஆனாலும் வினைச்செயல்ஆற்றும் ரோபோக்கள் செய்யப்பட்டன.அவைகள் நானோபாட் ரோபோ கோப்பை போட்டிக்கென உரிய நுழைவுகளாக அமைந்திருந்தன.ஆராய்ச்சியாளர்கள் மொத்த ரோபோகளை ஒரு சிறிய நச்சுக் கிருமி அல்லது நுண்கிருமி,வடிவில் நுண்ணியதான அளவில் செய்ய நம்பிக்கை கொண்டிருந்தனர். இயலுமட்டும் பயன்பாடுகள் உள்ளடக்குவது: நுண்அறுவை சிகிச்சை (ஒரு தனிநபரின் செல்களில் நிகழ்த்துவது), மூடுபனி முன்னறிவிப்பு பயன்நோக்குக் கருவி செய்தல், பொருள் உற்பத்தி, ஆயுதங்கள் செய்தல், துப்புரவுப் பணிகள் செய்தல் இவைகளே ஆகும். சில பேர்கள் கூறுவதுண்டு நானோபாகள் மறு உற்பத்தி ஆகிக்கொண்டே போனால், இந்த பூமி ஒரு "சாம்பல் நிற வாத்தாகும்", ஆனால் மற்றவர்கள் இந்த பொது கோட்பாடு மற்றும் விளைவு யாவும் அறிவற்றதாகும் என்று எதிர்மறையாக வாதிப்பார்கள்.
மென்பொருள் ரோபோகள்ரோபோக்கள் சிலிகான் உடலால் இயன்றவை; (காற்று தசைனார்களால் இலகுவாக செயல் புரிபவை, மின்விசை செயல்பாட்டு போலிமேர்கள்), இரும்பு கலந்த நீர்க்கசிவு, இவைகளால் செய்யப்பட்டு சீழ்போன்ற அளவை முறையாலும் நரம்பு வலைதலங்களாலும் இயக்கப்பட்டு பார்ப்பதற்கும் உணர்வதற்கும் வித்தியாசமாக இருக்கும். இவைகள் இறுகிய எலும்பு கூடுகள் அமைப்பில் பல்வேறுபட்ட நடத்தைகளை செய்து காட்டும் வன்பொருள் ரோபோக்கள் விட மாறுபட்டிருக்கும்.
மறுவடிவமைப்பு கொண்ட ரோபோகள்ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் மூலம் ரோபோக்கள் செய்து அவைகளின் உடல் உருவை குறிப்பிட்ட பணிக்காக பொருந்தும்படி கற்பனைக் கதைகளில் வருவது போல செய்ய இயலும் என்றும் கூறியுள்ளனர்.T-1000. உண்மையான ரோபோக்கள் உலகஇயலுக்கு ஒத்திருந்தாலும் அவைகள் பெரும்பாலும், சிறு கனசதுர அலகுகள், என்றே இருக்கும் தங்கள் அயலார்களுக்கு ஏற்ப இசைந்து நகரும். எதுத்துக்காடாக சூபெர்பாட் அவ்வகை சார்ந்தவை ஆகும். பதின் இலக்கமானம் கணக்குப்படி வரிவடிவு கொண்ட அந்த ரோபோக்கள் மெய்ப்பாடாகி உள்ளன.
பெருந்திரள் ரோபோகள்பூச்சிவர்க்கம் சார்ந்த எறும்புகள், தேனீக்களால் ஈர்க்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய திரள்களின் காலனி உருமாதிரிகளை மேற்கொண்டு அவைகளின் நடத்தை அடிப்படையில் ஓர் பயனுள்ளபணி, உள்ஒளிந்து இருப்பதற்கு, சுத்தப்படுத்துவதை அல்லது ஒற்று அறிவதை, ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் வண்ணம் ரோபோக்கள் பெருந்திரளாக உண்டாக்குவர். ஒவ்வொரு ரோபோவும் மிக எளிமையாக இருக்கும், ஆனால் திரளாகத் தோன்றிவரும் நடத்தையானது அதிக சிக்கலானதாகும். ரோபோக்கள் மொத்த தொகுதி ஒரேஒரு ஒற்றை விநியோகமான முறைமை என்றே கருதப்படும்,எப்படி ஓர் எறும்புக் காலனி உன்னத உயிர்ப்பொருள் என்றும், பெருந்திரளாக நுண்ணறிவு வெளிப்படுத்துகின்றது என்றும் நினைக்கக்கூடிய அளவுக்கு இருக்கும். மிகப்பெரிய பெருந்திரள்கள் என உருவாக்கப்பட்டதில் உள்அடங்குவது, ஐ- ரோபோக்கள் பெருந்திரள்,எஸ்ஆர்ஐ/மொபைல் ரோபோகள்,சென்ட் ஐ பாட்ஸ் ப்ராஜெக்ட் மற்றும் ஓபன் சோர்ஸ்-திறந்த மூலம் நுண்ணிய ரோபோடிக் ப்ராஜெக்ட் பெரும்திரள், ஆகிய எல்லாம் கூட்டத்தின் நடத்தைகளை ஆய்ந்துஅறிய பயன்படும். பெருந்திரள் என்பது தோல்வியை அதிகம் தாங்கும் திறன் படைத்திருக்கும். ஒரு பெரிய ரோபோ தோல்வி அடையலாம் அதனால் குறிக்கோள் திட்டம் பாதிக்கப்படலாம்.பல ரோபோக்கள் தவறினாலும் ஒரு பெருந்திரள் தொடர்ந்திருக்கும். விண்வெளி ஆய்வு குறிக்கோள் திட்டங்கள் பொறுத்த மட்டிலும் இது கவர்ச்சிகரமாக அமைந்து இருக்கலாம், அதில் தோல்விகள் அதிகமாக விலை உயர்ந்து இருக்கும்
தீண்டும் இடைமுகப்பு ரோபோக்கள்ரோபோடிக் நடைமுறை மெய்மையான இடைமுகப்புகளின் வரைவுவகையில் உரிய பயன்பாடு இருக்கும். பிரத்தியேகமான ரோபோக்கள் தீண்டும் ஆராய்ச்சி சமுதாயத்தில் பரவலாக பயன்படும். இந்த ரோபோகள், "தீண்டி அறிந்து கொள்ளும் இடைமுகப்புகள்" எனப்படும்,மெய்மையான நடைமுறை சூழல்களில் தீண்டிப்பார்த்து பயன்படுத்தும் செயல்எதிர்ச்செயல் புரியும். ரோபோடிக் சக்திகள் "நடைமுறையில் மெய்மையில்" தோன்றும் பொருள்களின் இயந்திர பொதுப்பண்புகளை ஊக்குவிக்கும்,பயனாளிகள் தத்தம் தொடும் அல்லது தீண்டும் உணர்வால் அனுபவம் அடைவர். தீண்டும் இடைமுகப்புகள் ரோபோ-உதவி பெறும் மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
மாறுபடும் பண்பாட்டுப் புலனுணர்வுகள்
மொத்தமுள்ள ரோபோகளில் ஆசியாவில் சுமாராக பாதியளவு உள்ளன, ஐரோப்பாவில், 32%,வட அமெரிக்காவில், 16%,ஆஸ்திரேலியாவில், 1%, ஆப்ரிக்காவில் 1% உள்ளன,மீதம் மொத்தமுள்ளதில் 30% ஜப்பானில் உள்ளன. இதன் பொருளாவது அனைத்து நாடுகளில் உள்ளதில், ரோபோகளில் மிக அதிகம் ஜப்பானில் உள்ளது. உண்மையில் அந்நாடுதான் ரோபோடிக்ஸ்களில் உலகிலேயே முன்னணியில் உள்ளது. மேலும் அந்நாடு உலகின் ரோபோடிக்ஸ் தலைமையகமாக திகழ்வதாக சொல்லப்படுகின்றது.
ஜப்பானிலும், தென் கொரியாவிலும் , எதிர்கால ரோபோக்கள் பற்றிய கருத்துக்கள் முக்கியமாக நேர்முகமாகவே உள்ளன,ரோபோடிக்-ஆதரவு சமுதாயம் அமைக்கும் எண்ணம் பிரசித்தி பெற்ற 'அஸ்ட்ரோ பாய்' வாயிலாகவே தோன்றியது. ஆசிய சமுதாயங்களான ஜப்பான்,தென் கொரியா, மற்றும் சமீப காலமாக, சீனா, போன்றன நம்புவது ரோபோக்கள் மனிதனுக்கு இணையாக அமைந்திருப்பது என்பதால், அவைகள் வயதானவர்களை கவனிக்கவும், விளையாட உதவுவதும், செல்லப் பிராணிகளுக்கு மாற்றாக இருப்பதும் என வேலைகளை அதன்மூலம் நன்றாக நிறைவேற்றிக் கொள்ளுகின்றன.ஆசியப் பண்பாடுகளின் பொதுக்கருத்து என்னவெனில் ரோபோக்கள் முன்னேற, சமுதாயம் மேம்படும்,ஆனால் அக்கருத்து மேற்கு நாடுகளின் நம்பிக்கைக்கு எதிரானது.
ஜப்பானில் உள்ள மனிதஇயல் ரோபோக்கள் நிறுவனமான மிட்சுபிஷி குழுமம் கருத்து தெரிவிக்கையில்,"இது ஒரு புதிய யுகம் மலரும் தருணம்; மனிதர்களும் ரோபோகளும் ஒருங்கிணைந்து வாழும் நிலை உருவாகி உள்ளது." என்று கூறி உள்ளது.தென் கொரியா 2015-2020 காலத்திற்குள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரோபோ இருக்க குறிக்கோள் கொண்டுள்ளது. அப்போதுதான் ஜப்பான் நாட்டை தொழில்நுட்பத்தில் பிடிக்க முடியும் என்று நம்புகின்றது.
மேற்கத்திய நாடுகள் அக்கருத்துக்கு எதிராக உள்ளன,அவைகள் மேலும் ரோபோடிக்ஸ் வளர்ச்சி பற்றி அச்சம் கொண்டுள்ளன, ஊடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இலக்கியம் வாயிலாக மனிதர்களையே இடமாற்றம் செய்துவிடும் என்பதே அந்த அச்சத்திற்கு காரணம் ஆகும். ஒருசிலர் மேற்கு நாடுகளில் கருதுவது ரோபோக்கள் எதிகாலத்தில் மனிதர்களுக்கே 'அச்சுறுத்தல்' ஆகிவிடும் என்பதாகும், சமூகத்தில் மனிதர்களின் பங்கு பற்றிய சமய சார்பான கருத்துக்கள் அப்படி கருத வைக்கின்றன. தெளிவாக நோக்குகையில், இந்த எல்லைகோடுகள் புலப்படுவதில்லை, ஆயினும் ஒரு குறிப்பிடத்தக்க வேற்றுமை இரண்டு பண்பாட்டு நோக்கங்களிடையே உள்ளது.
சமகால பயன்பாடுகள்
தற்பொழுது இரு முக்கிய ரோபோகளின் வகைகள், அவைகளின் பயன் அடிப்படையில் உள்ளன: ஒன்று பொதுநோக்குடைய சுயாட்சி ரோபோகள் மற்றொன்று அர்ப்பணிப்பு கொண்ட ரோபோக்கள் ஆகும்.
ரோபோக்கள் அவைகள் கொண்ட நோக்கத்தின் பிரத்தியேகத் தன்மை ஒட்டி வகைப்படுத்தபட்டுள்ளன. ஒரு ரோபோ ஒரு குறிப்பிட்ட பணியைச் செம்மையாக செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும், பல பணிவரிசை செய்வது அதன் தன்மையில் கொஞ்சம் குறைந்து இருக்கலாம். ஆனாலும், எல்லா ரோபோகளும் அதற்கென உள்ள இயல்பில் மறுதிட்டமிடுதல் மூலம் வேறுபட்டு நடக்கக் கூடும், ஒருசில மட்டும் தனது உடல்உருவம் வரையறைக்குள் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ஒரு தொழிற்சாலைக்குள்ளேயே ரோபோ செய்யும் வேலைகள் ஆவன, வெட்டுதல், பற்றவைத்து சீறாக்குதல்,பசை ஒட்டுதல், தரை சவாரி வேலையை செய்தல், அப்பொழுது ஒரு பொருளை ஓரிடம் எடுத்து மற்றோரிடம் வைத்தல், அச்சடிக்கப்பட்ட சுற்றுப்பாதை கொண்ட பலகையில் வேலை செய்தல் ஆகியன யாவும் திறம்பட செய்யும்.
பொது-நோக்குடைய சுயாட்சி ரோபோக்கள்தன் இச்சையாக பல வேலைகளைச் செய்யும். பொது-நோக்குடைய சுயாட்சி ரோபோக்கள் தெரிந்த இடங்களில் சுயமாக வழிச்செலவுகள் செய்யும், மீண்டும் மறுசக்தி ஊட்டும் வேலையையும் செய்யும், மின்ம இயக்கம் கொண்ட கதவுகளில் இடைமுகப்பு வேலையும் செய்யும், உயரத்தில் கூலம் தூக்கிகளையும் இயக்கும், மேலும் பல அடிப்படை வேலைகளையும் செய்யும். கணனிகள் போல, பொதுநோக்குடைய ரோபோக்கள் வலைத்தளங்களை, இணைக்கும் வேலையும் செய்யும்,மென்பொருள்கள் அதற்குரிய துணைப்பொருள்கள் அவைகளின் பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். அவைகள் மனிதர்களை பொருள்களை அடையாளம் காணும்,அவைகளுடன் பேசும்,தோழமையோடு பழகும்,சுற்றுப்புறம் சூழல்களை உற்று கவனிக்கும்,எச்சரிக்கை மணிகளுக்கு ஈடு கொடுக்கும்,வழங்கும் பொருள்களை எடுத்துச் செல்லும்,பிற பயனான பணிகளைச் செய்யும். பொது-நோக்குடைய சுயாட்சி ரோபோக்கள் பலவேறுபட்ட வேலைகளை ஒரேசமயம் செய்யக்கூடும் அல்லது ஒரேநாளில் பல்வேறுபட்ட நேரங்களில் பல்வேறுபட்ட பாத்திரங்களில் பணிகள் செய்யும். ஒருசில ரோபோக்கள் மனிதர்கள் போல போலியாக பேசும், சில அவர்கள் போல தோற்றம், கொண்டும் இருக்கும், இப்படிப்பட்ட ரோபோக்கள் மனித இயல்பு கொண்டதென கருதப்படும்.
அர்ப்பணிப்பு கொண்ட ரோபோக்கள்2006 ல் சேவை ரோபோ 3,540,000 எண்ணிக்கையிலும், தொழில்துறையில் ரோபோ 950,000எண்ணிக்கையிலும் பயன்பாட்டில் உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட அளவீட்டின்படி ஒரு மில்லியன் ரோபோக்கள் உலகெங்கிலும் 2008, முதல்பாதியில் இயக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.அதில் பாதி ஆசியாவிலும் 32% ஐரோப்பாவிலும்,16% வட அமெரிக்காவிலும், 1% ஆஸ்திரேலியாவிலும் ,மற்றும் 1% ஆப்ரிக்காவிலும் உள்ளது. தொழில் துறை மற்றும் சேவை ரோபோக்கள் அவைகள் செய்யும் வேலையை பொறுத்து சுமாராக இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்வகைப்படி ஒரு ரோபோ அதிகமாக உற்பத்தி,துல்லியம்,மற்றும் தாங்கும்திறன் மனிதர்களைக் காட்டிலும் கொண்டுள்ளன; இரண்டாவது வகைப்படி அழுக்கான, அபாயமான, உற்சாகம் குறைந்த வேலைகளை அதுவும் மனிதர்கள் விரும்பாததை ரோபோக்கள் செய்கின்றன.
அதிகமாக உற்பத்தி,துல்லியம்,மற்றும் தாங்கும் திறன்பல தொழிற்சாலை சம்பந்தப்பட்ட வேலைகள் இப்பொழுது ரோபோக்கள் மூலமாக நடைபெறுகின்றன. இது விலை குறைந்த மொத்த உற்பத்திப் பொருள்கள், தானியங்கி வாகனங்கள் மற்றும் மின்ம இயக்கம் சார்ந்த பொருள்கள் உள்பட செய்து முடிக்க ஏதுவாகின்றது. ஒரே இடத்தில் இயந்திரங்கள் இயக்குபவர்களால் ரோபோகளுக்கு பெரிய அளவில் சந்தைகள் ஏற்பட்டுள்ளன. 2006 ல், சேவை ரோபோ 3,540,000 எண்ணிக்கையிலும், தொழில்துறையில் ரோபோ 950,000எண்ணிக்கையிலும் உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட அளவீட்டின் படி ஒரு மில்லியன் ரோபோக்கள் உலகெங்கிலும் 2008, முதல் பாதியில் இயக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதில் பாதி ஆசியாவிலும் 32% ஐரோப்பாவிலும், 16% வட அமெரிக்காவிலும், 1% ஆஸ்திரேலியாவிலும், மற்றும் 1% ஆப்ரிக்காவிலும் உள்ளது.
தொழிற்சாலையின் ரோபோக்கள் பற்றிய சில எடுத்துக் காட்டுகள்கார் உற்பத்தி: கார் உற்பத்தி கடந்த மூன்று பத்தாண்டுகளாக தொழிற்சாலையில் ரோபோக்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஒரு வித்தியாசமான தொழிற்சாலையில் தொழிலியல் ரோபோகள் நூற்றுக்கணக்கில் தானியங்கு உற்பத்தி வரிசையில், பத்து மனிதத் தொழிலாளர்களுக்கு ஒரு ரோபோ வீதம் என்ற அடிப்படையில் உள்ளன. தானியங்கு உற்பத்தி வரிசையில், ஒரு வாகன அடிப்பகுதி அது கொண்டு செல்லும் வழியில் அதாவது அதன் கன்வேயரிலேயே, பற்ற வைத்து சீராக்கப் படுவதும்,பசை ஓட்டப்படுவதும், வர்ணம் அடிக்கப்படுவதும் இறுதியில் எல்லாம் ஒருங்கு சேர்க்கப்படுவதும் வரிசைக் கிரமத்தில் அதற்கென உள்ள ரோபோ நிலையங்களில் நடக்கின்றன.
சிப்பம் கட்டுதல்: தொழில்இயல் ரோபோகள் பரவலான முறையில் உற்பத்திப் பொருள்களை, கட்டுகட்டும் வேலையை செய்திட பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, கன்வேயர் பெல்ட்டில் இருந்து புட்டிகள் வைக்கும் பெட்டிகளை, உரிய இடத்தில் வைத்திடவும் இயந்திரங்கள் உள்ள மையத்தில் பொருள்கள் ஏற்றி வைப்பதும் அல்லது இறக்கி வைப்பதும் போன்ற பணிகளை அவைகள் செவ்வனே செய்கின்றன.
மின்ம இயக்கப் பொருள்கள்: மின்ம இயக்கப் பொருள்கள் மொத்தமாக-உற்பத்தி செய்ய ரோபோக்கள் உதவுகின்றன.அச்சிடப்பட்ட சுற்றுவட்டப் பாதைகள் கொண்ட பலகைகள் (பிசிபிகள்) பிரத்தியேகமாக எடுத்துக் கொண்டுபோய்-வைக்கும் ரோபோக்கள் மூலம் செய்யப்படுகின்றன, எஸ்சிஎஆர்எ-இயக்கும் ரோபோக்கள் மிகச்சிறிய மின்ம கூட்டுப் பொருள்கள் கச்சைஇழைகள் அல்லது தட்டங்கள்-டிரேக்கள் இடத்திலிருந்து, பிசிபியில் வெகுதுல்லியமாக வைத்திடும் வேலையை செய்து முடிக்கின்றது.அத்தகைய ரோபோக்கள் நூற்று ஆயிரக்கணக்கில் கூட்டுப் பொருள்களை ஒரு மணிக்குள், ஒரு மனிதன் செயல்படுவதை விட வேகத்தில், துல்லியத்தில், மற்றும் நம்பகத்தில் சரியாக செய்கின்றன.
தானியங்கி வழிகாட்டும் வாகனங்கள் (ஏஜிவீகள்): தானியங்கி வழிகாட்டும் வாகனங்கள், என்பவை சுயமாக அசையும் ரோபோக்கள் ஆகும், அவைகள் தரையில் உள்ள குறிகள் அல்லது கம்பிகள் வழி செல்லும், பார்வைப்புலன் அல்லது லேசர்கள் பயன்படுத்தும், பொருட்களை பெரும் வசதியான இடங்களில் கிடங்குகள், சரக்கேற்றும் துறைமுகங்கள், அல்லது மருத்துவமனைகள் போன்ற இடங்களில் வேலை செய்யும்.
தொடக்க ஏஜிவி-பாங்கு ரோபோக்கள் செய்பணிகளுக்குத் தக்கவாறு துல்லியமாக வரையறை செய்யப்பட்டிருக்கும், ஒவ்வொரு முறையும் அதேவழியில் இயங்கிவரும். நுண்ணறிவோ அல்லது மிகக்கொஞ்சமாகவோ ஈடுகட்டும் திறன் ரோபோகளுக்குத் தேவைப் படுகின்றது. அப்படிப்பட்ட (புலனுணர்வுப் பொறிகள்) அவைகளின் புறக்கூறு (உணர்விகள்) என்றே அடிப்படையில் அமைந்துள்ளன. ஏஜிவிகளின் குறைபாடுகள் என்னவென்றால் அவைகளின் பாதைகள் சுலபத்தில் மாற்ற இயலாத வண்ணம் இருக்கும் ஏதேனும் தடங்கல்கள் வந்தாலும் மாற்ற இயலாது. ஒரு ஏஜிவி பாதிக்கப்பட்டாலும், மொத்த இயக்கமே அதனால் நின்று போகும்.
இடைக்கால ஏஜிவி-தொழில்நுட்பங்கள் முக்கோண வடிவ அளவீட்டின்படி அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் உதவியுடன் தரையிலோ அல்லது கூரையிலோ ஸ்கேன்னிங் செய்திட இயலும். பல தொழிற்சாலைகளில், முக்கோண வடிவ அளவீடு முறைகள் அதிக பராமரிப்புச் செலவு பிடிக்க வைக்கும், அதன்படி அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் இரண்டினையும் தினமும் சுத்தபடுத்த வேண்டும். கூடவே, ஒரு பொறியின் கைப்பிடி அல்லது பெரிய ஊடுபொருள் தடங்கலானால், அடையாளக் குறி நிலையம் அல்லது வரைகுறி கட்டங்கள் சீர்குலைந்தால் ஏஜிவிகளே இழந்து போகலாம். அடிக்கடி அத்தகைய ஏஜிவிகள் மனித-வாசமில்லாத சூழல்களில் பயன்படுத்தவே வடிவமைக்கப்படுகின்றது.
புதிதான ஏஜிவிகள், ஸ்பெசி-மைண்டர் ,எடிஎஎம்,டுக்,பட்ரோல்-பாட் கோபர், யாவுமே மக்கள்-சிநேகித வேலையிடங்கள் கொண்டுள்ளன. அவைகள் வழிச்செலவிற்கு இயற்கையான அம்சங்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. 0}முப்பரிமாண ஸ்கேன்னர்கள் அல்லது பிற புலனுணர்வு அறியும் முறைகள் இரு அல்லது மூன்று பரிமாணங்கள் மூலம் சூழல்களை அறிந்தாலும் அடுக்கடுக்கான பிழைகளை குறைக்கச் செய்தாலும் அவைகளின் நடப்பு நிலைமையை கணிப்புச்-சுட்டு கணக்கீடுகளால் மட்டுமே காண இயலும். சில ஏஜிவிகள் சுற்றுப்புறச் சூழல்களை ஸ்கானிங் லேசர்கள் மூலம் வரைபடங்கள் உருவாக்க முடியும்,அதை (எஸ்எல்எஎம்)ஒருங்கமை உள்ளிட அமைப்பு மற்றும் வரைபடங்கள் செய்தல் என்பர், அந்த வரைபடங்கள் மெய்யான நேரத்திற்குள் பயன்படுத்தி பிற பாதைகளில் பயணித்து பதின்முறை இலக்கமானம்படி தடங்கல்கள் நீக்க முடியும். அவைகள் சிக்கலான சூழல்களில் இயங்க முடியும்.மறுபடி திருப்பி- செய்யாத மறுபடி கிரமமாக திருப்பி-வாராத பணிகளை நிறைவேற்றும். அதாவது நிழல்படத்திரையை பாதி-அரிதில் கடத்தி பரிசோதனைச் சாலைக்கு அனுப்புதல், மருத்துவமனைகளில் மாதிரிச் சான்றுகள் அளித்தல், கிடங்குகளில் சரக்குகளை கையாளுதல் போன்ற பணிகளைச் செய்யும். இயக்கவிசை கொண்ட பிரதேசங்களில், அதாவது பொறிகளின் பிடிகள், உள்ள கிடங்குகளில் ஏஜிவிகள் மேலும் கூடுதலான யுக்திகள் தேவைப்படும். ஒருசில காட்சிப்-புலம் கொண்ட முறைமைகளில் மட்டுமே அப்படிப்பட்ட சூழல்கள்களில் நம்பகமாக பயணிக்க இயலும்.
அழுக்கான,அபாயகரமான,சோர்வான,அணுக இயலாத பணிகள்பல வேலைகளை மனிதர்கள் ரோபோக்கள் வசமே விட்டு உள்ளனர். அவைகள் உற்சாகம் இல்லாத வேலையாக இருக்கலாம், வீடு சுத்தப்படுத்துவது, அல்லது எரிமலை உள்ளே ஆய்வு நடத்தும் அபாயகரமானதாகவும் இருக்கலாம். பிறவேலைகள் இயற்பியல் ரீதியில் முடியாததாக இருக்கலாம், அதாவது பிற கிரகங்கள் செல்வது, நீளமான குழாய்களின் உட்புறம் சுத்தப்படுத்துதல், குடல்பகுதியில் அறுவை சிகிச்சை செய்தல் போன்றனவாகும்.
தொலைரோபோகள்: என்பது மனிதனால் செல்ல முடியாத இடத்தில் ஒரு வேலையை நிறைவேற்ற வைக்க, அபாயகரமானதாகவோ,நீண்ட தூரமாகவோ, அல்லது அணுக முடியாத இடமாகவோ இருந்தால்,தொலை ரோபோக்கள் பயன்படுத்த படுகின்றது. ஒரு முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் வரிசைக் கிரமமான அசைவுகளைக் காட்டிலும், ஒரு தொலைரோபோ மனித இயக்கம் செய்பவர்களால் கட்டுப்படுத்தப்படும். அந்த ரோபோ வேறொரு அறையிலோ அல்லது வேறொரு நாட்டிலோ. அல்லது வேறொரு அளவிலோ அந்த இயக்குபவரால் முடுக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு சிக்கலான குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்ய ரோபோ அந்த அறுவை மருத்துவரை நோயாளியின் உடலுள் செல்ல வேண்டி ஒரு சிறு அளவில் திறந்த அறுவை செய்ய நேரிடலாம், அதனால் குறிப்பிடத்தக்க முறையில் குணமடையும் நேரம் குறுகியதாக இருக்கலாம். அதேபோல ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய, இயக்குபவர் சிறிய ரோபோ அனுப்பி அதை செய்து முடிக்கலாம். பல நூலாசிரியர்கள் நீளமான பேனா என்ற ஒரு முறைமையை பயன் படுத்தி புத்தகங்களில் தூரத்தில் இருந்தே கையெழுத்து இடுவர். தொலை தூரத்தில் ரோபோக்கள் உள்ள விமானம், ஆளில்லாத ஆகாயத்தில் பறக்கும் விண்கலம் போல ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றது. இந்த விமான ஒட்டி இல்லாத வானூர்திகள் தரைநிலம் மற்றும் நெருப்பு இலக்குகள் தேடிச் செல்லும் திறன் கொண்டவையாகும். நூற்றுக்கணக்கான ரோபோகள் அதாவது பாக்பாட் மற்றும் போஸ்டர்-மில்லேர் தலான் போன்றவைகள் இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் யு.எஸ்.ராணுவத்தால் தெருஓர குண்டுகள் வலுவிழக்க பயன்படுத்தப் படுகின்றன.(ஐஈடிகள்) எனப்படும் அபிவிருத்தியான வெடிக்கும் வழிமுறைகள் உபயோகிக்கப்படும் செயல்முறையை வேறு பெயரில் அழைப்பர். அதுவே (ஈஒடி) எனப்படும் வெடிக்கும் ஆயுதங்கள் இறுதியாக ஒழித்துக்கட்டுதல் என்ற பேரில் அது நடத்தப்படுகின்றது.
தானியங்கும் கனி அறுவடை இயந்திரங்கள் தோப்புகளில் கனி அறுவடை செய்ய அதுவும் மனிதர்கள் செய்வதைக் காட்டிலும் குறைந்த செலவில் முடிக்க உதவுகின்றன.
இல்லத்தில்விலைகள் வீழ்ச்சி அடையவும் ரோபோக்கள் சுறுசுறுப்பு அடையவும் மற்றும் சுயாட்சி பெறவும், எளிமையான முறையில் ரோபோக்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு என அர்ப்பணிக்கப்பட்டு உருவாக்கப்படுவதால் அவைகள் மில்லியன் இல்லங்களில் உபயோகத்தில் உள்ளன. அவைகள் சுலபமான ஆனால் விரும்பத்தகாத வேலைகளான, முழு சுத்திகரிப்புப் பணி மற்றும் தரை கழுவும்பணி, மற்றும் தோட்டத்தில் புல்வெளியை வெட்டிச் சமச்சீராக்குதல் போன்றனவற்றை செய்கின்றன. ஒருசிலர் இத்தகைய ரோபோக்கள் புத்திக் கூர்மை உடையதாகவும் ஆனால் அதேசமயம் கேளிக்கையாகவும் இருக்கும் காரணத்தால், அவைகளை நன்கு விற்க முடிகின்றது.
முதியோர்களைக் கவனித்தல் மக்கள் தொகையில் பல நாடுகளில், மூப்பு என்பது அதிகரிப்பதால் பிரத்தியேகமாக ஜப்பான் போன்ற நாடுகளில் எண்ணிகையில் முதியோர்களை கவனித்தல், என்ற வேலைக்காக நியமிக்கப்படும் இளைய மக்கள் குறைவாக இருக்கின்றனர். முதியோர்களுக்காக மனிதர்கள்தான் சிறந்த கவனிப்பாளர்கள் எனினும், அப்படிப்பட்டவர்கள் கிடைக்காத பட்சத்தில், ரோபோக்கள் படிப்படியாக அறிமுகம் செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
குழாய்கள்,கால்வாய்கள் சுத்திகரிப்பு அபாயகரமான, இறுக்கமான கட்டிடத்தின் இடங்களில் குழாய்கள், கால்வாய்கள் போன்றவற்றை சுத்தப்படுத்த மணிக்கணக்கில் ஆகும், சிறுசிறு இடங்கள் எனில் கையால் பிரஷ்களை கொண்டு முடித்து விடலாம். பல கால்வாய் சுத்திகரிப்பாளர்களால் ரோபோக்கள் தொழில் துறைகளில், நிறுவனங்களில் அவைகளை சுத்திகரிப்புச் சந்தைகள் ஆக்கும் வண்ணம் செய்து வருகின்றனர், வேலையை விரைந்து முடிக்க அவர்களால் முடிகின்றது, பணியாட்கள் தீங்கு தரும் என்சைம்கள் நச்சு ஆவி மூலம் பெறுவதை தவிர்க்கவும் முடிகின்றது. அதிக-பாதுகாப்புள்ள நிறுவனங்களான தூதரகங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில், கால்வாய்ச் சுத்திகரிப்புப் பணிகள், அவைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படா வண்ணம் செய்து முடிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள், பிறஅரசாங்க கட்டிடங்கள் போன்றவற்றில் அபாயகரமான, புற்றுநோய்க் கதிர்இயக்கச் சூழல்கள் மேலும் அணுவாற்றல் கொதிகலன்கள் சுத்தப்படுத்த, இத்தகைய சுத்திகரிக்கும் ரோபோக்கள் கனடா போன்ற நாடுகளில் வேலை இடங்கள் பாதுகாப்பிற்காக தேவைப்படுகின்றன.
திறனார்ந்த பிரச்சினைகள்ரோபோக்கள் பற்றிய பயன்களும், கவலைகளும், பரவலான அளவில் நூல்களில் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன. ஒரு பொதுவான விவாதப்பொருள் என்னவெனில் தன்னுணர்வும் நுண்ணறிவும் கொண்ட நிபுணத்துவ ரோபோகள், மூலம் ஒரே அடியாக மனிதகுலமே வேர் அறுக்கப்பட்டுவிடுமோ என்பதுதான். (காண்க: தி தேர்மினடோர், ரன் வே, ப்ளேட் ரன்னெர், ரோபோ கப் , ரெப்லிகட்டர்,(ஸ்டார் கேட்) தி ரெப்லி கடோர்ஸ் இன் ஸ்டார் கேட், தி சைக் லான்ஸ் இன் பட்டல் ஸ்டார் காலகடிக்க , தி மாட்ரிக்ஸ் , THX 1138 ரோபோ ) சில கற்பனைக் கதையில்வரும் ரோபோக்கள் கொல்லவும்,அழிக்கவும், திட்டங்கள் கொண்டுள்ளன; பிற உன்னத மனித நுண்ணறிவும் ஆற்றல்கள் பெற்றுள்ளதால் மென்பொருள் வன்பொருள் இரண்டும் மேம்படுத்தி செயல்படுகின்றன. எடுத்துக் காட்டுகள் பிரசித்தி பெற்ற ஊடகம் வாயிலாக வெளிவந்த, ரெட் பிளானெட் போன்றவற்றில் ரோபோக்கள் எப்படி தீங்கு செய்ய வல்லது என சித்திரிக்கப் பட்டுள்ளது... மற்றுமொரு பொது விவாதப்பொருள் விளைவு பற்றியதாகும்,அதை சிலசமயம் "விசித்திர பள்ளத்தாக்கு" அதில் வெளிவந்த இருப்பு கொள்ள முடியாமல் பார்த்த உடனே வெறுப்பு கொள்ளக் கூடிய அளவில் ரோபோக்கள் மனிதர்கள் போல குரலும் எழுப்புகின்றன. பிரான்கேன்ஸ்டீன் (1818), அடிக்கடி முதல் அறிவியல் நாவல், என அழைக்கப்படும். அதில் ரோபோ பற்றிய கருத்து பொருளோடு ஒத்திருக்கும் வண்ணம் அமைந்து ஓர் அரக்கன் போல் ஆகி படைத்தவனையே பின்தள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது. ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், ரோபோக்கள் வெறும் விதூஷகர்களாக மட்டுமல்லாமல், மனிதனோடு உடன்வசிக்கும் மனிதவடிவினர்களாக சித்திரிக்கப்பட்டன. அவைகள் இன்னமும் தொழிற்சாலையில் பணிபுரிகின்றன, ஆனாலும் இத்தகைய ரோபோக்கள் தினம்தோறும் வாழ்பவர்கள் போல வேலைகள் நிறைவேற்றுகின்றன.
மனுவேல் தே லண்ட தனது குறிப்பில் கூறியுள்ளார்" சுறுசுறுப்பான ஏவுகணைகள்", தானாக விழும் குண்டுகள், இவைகளில் செயற்கை புலனுணர்வு உள்ளமையால் ரோபோக்கள் என்று அவைகளை அழைக்கலாம், ஏனெனில் அவைகள் சுயமான தீர்மானங்கள் செய்யம் வல்லமை படைத்திருக்கின்றன. அவர் மேலும் நம்புவதாவது இதுஒரு முக்கியமான ஆபத்தான போக்கினை வெளிப்படுத்துகின்றது அதன்படி மனிதர்கள் முக்கியமான தீர்மானங்களை இயந்திரங்கள் எடுக்க அவைகளை அவைகளிடமே ஒப்படைத்துள்ளனர்.
சூறையாடும் ரோபோக்கள் வேண்டுமானால் கேளிக்கை மதிப்பு, கொண்டிருக்கலாம் ஆனால் அத்தகைய ரோபோக்கள் பாதுகாப்பு இன்றி பயன்படுத்தினால் அவைகள் உண்மையில் அபாயங்களை ஏற்படுத்தலாம். ஒரு பளுவான தொழில்துறை சார்ந்த ரோபோ, சக்தி நிறைந்து ஏவி விடப்பட நிலையில் அது ஆருடம் கணிக்க இயலாத நடத்தையால் தீங்கு செய்யக் கூடியதாக அமையலாம்,எடுத்துக் காட்டாக, ஒரு மனிதன் பாதத்தை மிதிக்கலாம் அல்லது ஒரு மனிதன் மேலே விழுந்து விடலாம். பெரும்பாலும் தொழில்துறை ரோபோக்கள் உள்ளே ஒரு பாதுகாப்பு வேலியோடு இயங்கலாம்,அதன் மூலம் அவைகள் மற்ற மனித தொழிலாளர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்படலாம். ஆனால் எல்லா ரோபோக்கள் அப்படி இருக்காது. இரண்டு ரோபோ-காரணமான இறப்புகள் குறிப்பிடவேண்டும்; ஒன்று ராபர்ட் வில்லியம்ஸ் உடையது மற்றொன்று கெஞ்சி உரடாவின் உடையதாகும். இதில் ராபர்ட் வில்லியம்ஸ் ஒரு ரோபாடிக் கரத்தினால் அடிபட்டு, மிச்சிகன் பிளாட் ராக் என்ற இடத்தில் உள்ள ஒரு வார்ப்பட அச்சு வேலை செய்யும் போது, ஜனவரி 25, 1979. நாள் இறந்தார். 37-வயதான- கெஞ்சி உரடா,என்ற ஒரு ஜப்பானிய தொழிற்சாலை வேலையாள், 1981ல் இறந்தார்; உரடா வழக்கமான பாதுகாப்பு பணியினை ரோபோ பால் செய்து கொண்டிருந்தார், அதை சரிவர மூடும் வேலையை புறக்கணித்ததால் தற்செயலாக மாவரைக்கும் இயந்திரத்தினுள் தள்ளப்பட்டார்.
வரலாறுபல புராதன புராண இலக்கியங்கள் செயற்கை மனிதர்களை, அதாவது இயந்திர பணியாளர்களைப் பற்றி கூறுகின்றன கிரேக்கக் கடவுள் ஹெப்கேஸ்துஸ், (வுல்கன் முதல் ரோமன்கள் வரை) , யூதர்களின் மரபுவழிக் கதைகள்படி, களிமண் கோலம் நோர்ஸ் மரபு வழிக்கதைகள்படி, களிமண் அரக்கர்கள், பிக் மாலியன் புராணப்படி மகிழ்வு தேநீர் என்னும் சிலை இவைகள் யாவும் உயிருடன் இருந்து உலாவியதாக கூறப் படுகின்றன. கிரேக்க நாடகத்தில், துஸ் எக்ஸ் மச்சினா ஒரு நாடக உத்தியாக பயன்படுத்தப் வந்தது, அதன்படி, ஒரு தெய்வீக உரு கம்பிகளால் இயக்கப்பட்டு வெளித்தோற்றத்தில் இயலாது என்ற பிரச்சினை தீர்க்க உதவும் என்ற நம்பிக்கை நிலவியது.
கி மு நான்காம் நூற்றாண்டில், கிரேக்க கணிதஇயல் அறிஞர், தரன்டம் சார்ந்த, ஆர்சிடாஸ் தம் ஆராய்ச்சியின் அடிக்கோளில் ஓர் இயந்திர நீராவி-இயக்கத்தில் பறவையைக் கண்டார், அதற்கு பெயர் "மாடப்புறா" என வைத்தார். அலெக்சாண்டிரியாவின் ஹீரோ (10–70 AD)பல்வேறு பயனாளி-உருவாக்கும் தானியங்கும் கருவிகளைக் கண்டுபிடித்தார், அந்த இயந்திரங்களுக்கு சக்தி காற்றின் அழுத்தத்தால், நீராவியால், மற்றும் நீரால் பெறும்படி செய்தார். சு சாங் 1088 ல் சீனாவில் ஒரு கடிகார கோபுரம் எழுப்பினார். அதில் இயந்திர சிறு உருவச்சிலைகள் வைத்து மணிகள் காட்ட கூட்டு ஒலியை உண்டாக்கச் செய்தார்.
அல்-ஜசரி (1136–1206), என்னும் முஸ்லிம் கண்டுபிடிப்பாளர் ஆர்ட்டுகிட் வம்சாவளி காலத்தில், ஏராளமான தானியங்கு கருவிகளை வடிவமைத்து உருவாக்கினார், அவர் கண்டு பிடித்தவைகளில் நீரால், தானியங்கும் இசைக்கருவி மற்றும் முதலாவதான திட்ட அமைப்பு கொண்ட மனித உருவுடைய ரோபோகள் 1206.ல் யாவும் அடங்கும். ரோபோட்கள் நான்கு பாடகர்களாக ஏரியில் செல்லும் படகில் இருந்துகொண்டு, அரசவை மதுவிருந்துகளில் விருந்தினர்களை மகிழ்ச்சி அடையச் செய்தனர். அவரது இயந்திர இயக்கவிசையின்படி, ஒரு திட்ட அமைப்பு கொண்ட முரசு இயந்திரம் முறுக்காணிகள், கல்வகை (சுற்று உருளைகள்) மூலம் ஒரு சிறு நெம்புகோல் வாயிலாக இசையை எழுப்பும் அந்தக் கருவியை தட்டுதலால் இசை உண்டாக்கும் தண்ணுமைக் கருவி என்பர். முரசறைவோன் பல்வேறு சந்தங்களுக்கேற்ப பல்வேறு முரசு வகைகளை முறுக்காணிகளை இடம்பெயர்த்தி நகர்த்தி இயக்குவான்.
துவக்க நவீன வளர்ச்சிகள்லியனார்டோ டா வின்சி (1452–1519) பல திட்டப் படங்களை மனித உருவில் 1495. ஆண்டில் வரைந்து காட்டினார். டா வின்சியின் குறிப்புப் புத்தகங்களிலிருந்து, 1950களில் மறுகண்டு பிடிக்கப் பட்டவைகளில், உள்ள வரைவுப்படங்கள் மூலம் ஒரு இயந்திர மாவீரன், தற்பொழுது அதை லியனார்டோவின் ரோபோட் என அழைக்கின்றனர், அது அமர்வது, கைகள் அசைப்பது, தலையை, தன தாடையை அசைப்பது எப்படி என்பதெல்லாம் சித்திரிக்கப்பட்டு இருந்தன. அந்த வரைவானது அவருடைய விற்றுவியன் மனிதன் நூலில் பதிவு செய்துள்ள உடற்கூற்று இயல் ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்திருந்தது. அவரே அதை உருவாக்க முயற்சித்தாரா என்பது சரவரத் தெரியவில்லை. 1738 மற்றும் 1739ல் ஜக்குயிஸ் டி வௌகேன்சன் ஆளுயுரத் தானியங்குகள்: குழல் ஊதி, குழாய் ஊதி, மற்றும் ஒரு குள்ள வாத்து யாவையும் காட்சியில் வைத்துக் காட்டினார். அவருடைய இயந்திரக் குள்ளவாத்து இறக்கைகளை படபடவென்று அடித்துக் காட்டியது, கழுத்தை நீட்டியது, பார்வையாளார்களின் கையில் இருந்து உணவை வாங்கி உட்கொண்டது, ஒரு மறைவுப்பகுதியில் இருந்து கழிவுப் பொருளையும் வெளியேற்றியது. 1700 களில், சிக்கலான இயந்திர பொம்மைகள் மற்றும் விலங்குகள் ஜப்பானில் செய்துகாட்டப்பட்டதாக 1796ல் வெளிவந்த படவிளக்கத்துடன் கொண்ட இயந்திரங்கள் கரகுறி ஜுய் நூலில் இடம்பெற்றுள்ளது.(சித்திர விளக்க இயந்திரம்,1796)
நவீன வளர்ச்சிகள்ஜப்பானிய கைவினைஞர் ஹிசசிகே டனாக (1799–1881), "ஜப்பானின் எடிசன்" என்றும் "கரகுறி கீமன் " என்றும் பாராட்டப்பட்டார், அவர் அதிசிக்கலான இயந்திர பொம்மைகளை பரிவாரமாக உருவாக்கினார், சில தேநீர் வழங்கியது, சில அம்பறாத்தூணியில் இருந்து அம்புகளைச் சுட்டுஎறிந்தது, சில ஜப்பானிய பாத்திரத்தை வர்ணம் பூசி வரைந்தது. 1898 ல் நிகோல் டேஸ்ல பொதுவில் ஒரு ரேடியோ கட்டுப்பாட்டில் உள்ள வெடிக்கண்ணியை விளக்கிக் காட்டினார். "தொலை தூர தானியங்கு முறைமை" அடிப்படையில் பெற்ற காப்புரிமைகள் பேரில் டேஸ்ல யு.எஸ் கடற்படைக்காக ஒரு ஆயுத முறையை உருவாக்க முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார்.
1926,ல் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கார்பரேஷேன் டெலிவாக்ஸ் என்னும், முதல்ரோபோ உருவாக்கி ஒரு பயனுள்ள வேலையை செய்ய வைத்தது. பிற எண்ணிக்கையில் ஏராளமாக உள்ள எளிய ரோபோகளை அவர்கள் டெலி வோக்ஸ்ல் பின்பற்றினார்கள், அதில் ஒன்று ராஸ்துஸ் ஆகும், அது ஒரு கருப்பு மனிதனின் செப்பனிடாத பிம்பம் கொண்டிருந்தது. 1930களில், அவர்கள் மனித உருக்கொண்ட ரோபோவை எலெக்ட்ரோ என்ற பெயரில் பொருட்காட்சி நோக்கங்களுக்காக உருவாகினார்கள், அந்த நோக்கங்களுள் உலகச் சந்தைகள் 1939 மற்றும்1940 அடங்கும். 1928ல், ஜப்பானின் முதல் ரோபோ ககுடென்சொக்கு,உயிரியலார் மகொடோ நிஷிமுரா என்பவரால், வரையப்பட்டு வடிவமைக்கப்பட்டது.
முதல் மின்ம சுயமாக இயங்கும் ரோபோகள் பர்டன் நரம்பியல் நிறுவனம், பிரிஸ்டல், இங்கிலாந்து சார்ந்த வில்லியம் கிரே வால்ட்டர் என்பவரால் உருவாக்கப்பட்டன. அவைகளுக்கு பெயர்கள் எல்மர் மற்றும் எல்சி என்று இடப்பட்டன. இந்த ரோபோக்கள் ஒளியை உணர்ந்து வெளிப்புற பொருள்களோடு, தொடர்பு கொண்டிருக்கும்; மேலும் இவைகளை தூண்டுதலாகக் கொண்டு பயணிக்கும்.
முதல் உண்மையான நவீன ரோபோ, மின்ம ரீதியில் திட்டமிட்டு இயங்க வடிவமைத்துக் கண்டு பிடித்தவர் ஜார்ஜ் தேவோல் ஆவார், அவர் அதை 1954 ஆண்டு கண்டு பிடித்தார், இறுதியில் அதனை யுனிமேட் என்றே அழைத்தார். தேவோல் முதல் யுனிமேட் ரோபோட்டை ஜெனரல் மோட்டோர்ஸ்க்கு 1960ல், விற்றார்.அது நியூ ஜெர்சி, ட்ரென்டன், எனுமிடத்தில் உள்ள இயந்திர சாதனத்தில் நிறுவப்பட்டது. அது அச்சு வார்ப்புரு இயந்திரத்தில் உள்ள உலோக வெப்பத் துண்டுகளை தூக்கி குவியலாக வைக்கும்.
இலக்கியம்ரோபோடிக் கதாபாத்திரங்கள், அண்ட்ராயிட்கள் (செயற்கை ஆண்கள்/ பெண்கள்), அல்லது ஜிநாயட்கள் (செயற்கை பெண்கள்)மற்றும் சய்போர்க்கள் (மேலும் "பயோனிக் ஆண்கள்/பெண்கள்" அல்லது குறிப்பிடத் தகுந்த இயந்திர அபிவிருத்திகள் கொண்டமனிதர்கள் ) இவைகள் எல்லாம் ஒரு மூலப் பொருளாக அறிவியல் கற்பனைக் கதைகளில் ஆகிவிட்டன.
இயந்திர வேலைக்காரர்கள் பற்றிய முதல் குறிப்பு மேற்கத்திய இலக்கியத்தில் ஹோமரின் இலியட் நூலில் வருகின்றது. XVIIIவது புத்தகத்தில், ஹிபாஈஸ்டுஸ், நெருப்புக் கடவுள், கதாநாயகன் அசில்லஸ்சுக்கு ஒரு புதிய போர்க்கவசம் உருவாக்கி ரோபோட்டால் உதவி செய்யப்படுவதாக எழுதியுள்ளார். ரியு வின் மொழிபெயர்ப்பின் படி, "தங்க கன்னியர் சேவகிகள் எஜமானருக்கு உதவ விரைந்தனர். உண்மையான பெண்கள் போல அவர்கள் தோற்றம் அளித்தனர். அவர்களால் பேச இயலாது. கைகால்கள் தூக்கி நுண்ணறிவுடன் செயல்பட முடியும். கைவினையால் அழிவிலாத கடவுளர்களால் பயிற்சியும் பெற்றனர்." ஒருவேளை, "ரோபோட்" அல்லது "அன்ராயிட்" போன்ற வார்த்தைகளால் விளக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் மனிதர் தோற்றம் கொண்ட இயந்திர சாதனங்கள் ஆவர்.
இசாக் அசிமோவ் (1920–1992), என்பவரே ரோபோக்கள் பற்றிய கதைகள் பொறுத்த மட்டில் விளைவு வளமிக்க ஆசிரியர் ஆவார். அசிமோவ் ரோபோகளுக்கு அளிக்கப்படும் உன்னத தொகுப்பான அறிவுரைகள் பற்றிய பிரச்சினையை ஜாக்கிரதையாகக் கருதினார், அதன்படி, ரோபோடிக்குகள் பற்றிய மூன்று விதிமுறைகளை வகுத்தார்: ஒரு ரோபோ ஒரு மனிதனுக்குத் தீங்கிழைக்காது. ஆனால் மனிதன் தீங்கு செய்தாலும் செயலற்று இருக்கும். மனிதர்கள் இடும் கட்டளைகள்படி முதல்விதிக்கு விலக்காக இருக்கும் பட்சத்தில்கீழ்படிந்து நடக்க வேண்டும், அந்த விதிக்கு முரண்பட்டிருந்தால் ரோபோ தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,அந்த பாதுகாப்பு அதன் சுய நிலையை காக்கும் வண்ணம் இருத்தல் வேண்டும், அது முதலாம் மற்றும் இரண்டாம் விதிக்கு முரண்பட்டு இருக்கக் கூடாது. அவருடைய "சுற்றிலும் ஓடு" என்ற 1942 ஆண்டு சிறு கதையில் அறிமுகம் செய்யப்பட்டதாகும், அதற்கு முன்னதாக வெளிவந்த கதைகளில் அக்கருத்துக்கள் முன்கூட்டியே குறிப்பிடப்பட்டு இருந்தன. பிறகு, அசிமோவ் பூஜ்ய விதியாக சேர்த்தது: "ஒரு ரோபோ மனித இனத்தை கெடுதல் செய்யாது, அல்லது தான் செயலற்று இருந்து, மனிதன் கெடுதல் செய்ய அனுமதிக்கும்."; பிற விதிமுறைகள் யாவும் இதற்கு ஒப்பவே கிரமமாக அமைந்து இருக்கும்.
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் படி, அசிமோவின் "பொய்யன்" என்ற சிறுகதையில், முதல் பத்தியில், (1941) குறிப்பிடப்பட்டதன்படி, முதல்விதியில் தொடக்கத்தில் ரோபோ வியல் என்ற சொல்பதிவாகி இருந்தது. அசிமோவ் ஆரம்பத்தில் இதை அறியவில்லை; அவர் இயந்திர இயல், நீரியல் ஆய்வு, போன்ற செயல்முறை அறிவின் கிளைகளைகளைக் குறிப்பிடும் சொற்களோடு ஒத்த சொல்லாக இருந்ததென்று பாவித்திருந்தார். நன்றி: wikipedia
என்ன நண்பர்களை இந்த பதிவின் வாயிலாக எந்திரன் குறித்தான சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொண்டிருபீர்கள் தானே.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 12, 2010
14
Oct 12, 2010
ஜிஎஸ்ஆர்
வலைப்பதிவு திறக்கும் நேரம் அறிய(Web Page Loading Time)
ஒரு வரி கருத்து: புன்னகை பிறக்கும் உதட்டில் தான் கோபமும் பிறக்கிறது.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவு எழுதும் நண்பர்களுக்கு அவர்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை அறிவதை பற்றிய பதிவாகும்.
நாம் கூகுலில் ஏதாவது தேடினால் அவர்கள் தேடித்தர எடுத்துக்கொள்ளும் நேரத்தை காண்பிப்பார்கள் ஆனால் இது அது போன்றதல்ல நம்ம வலைத்தளம் தரவிறங்க ஆகும் நேரத்தை கணக்கெடுத்து தரும் மற்றபடி நம் தளத்தில் நிரந்தரமாக நிறுவும் வசதி இல்லை, இதற்கு இரண்டு தளங்கள் உதவுகின்றன.
இனி numion.com சென்று உங்கள் தளத்தின் முகவரியை கொடுத்தால் போதும் உங்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ள ஆகும் நேரத்தை அறியலாம்.
இது என் வலைத்தளம் திறக்க ஆகும் நேரம்

நம் பிரபல வலைத்திரட்டி இன்ட்லி திறக்கும் நேரம்

பிரபல கூகுள் திறக்க ஆகும் நேரம்

நம் மதிப்பிற்குறிய நண்பர் பிகேபி தளம் திறக்கும் ஆகும் நேரம்

இனி உங்கள் தளத்தோடு மற்ற தளங்களை ஒப்பிட iwebtool.com சென்று உங்கள் தளம் மற்றும் ஒப்பிட வேண்டிய தளத்தின் முகவரி கொடுத்தால் போதும் இதில் பத்து தளங்களை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும்.

என்ன நண்பர்களை உங்கள் தளம் திறக்க ஆகும் நேரத்தை கணக்கிட்டு பார்த்தீர்களா இனி எப்படி உங்கள் தளத்தின் திறக்கும் வேகத்தை கூட்டுவது என இனையத்தில் தேடுங்கள் பதில் கிடைக்கும் மேலும் அவசியமில்லாத நிரலிகளை இனைக்காதீர்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவு எழுதும் நண்பர்களுக்கு அவர்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை அறிவதை பற்றிய பதிவாகும்.
நாம் கூகுலில் ஏதாவது தேடினால் அவர்கள் தேடித்தர எடுத்துக்கொள்ளும் நேரத்தை காண்பிப்பார்கள் ஆனால் இது அது போன்றதல்ல நம்ம வலைத்தளம் தரவிறங்க ஆகும் நேரத்தை கணக்கெடுத்து தரும் மற்றபடி நம் தளத்தில் நிரந்தரமாக நிறுவும் வசதி இல்லை, இதற்கு இரண்டு தளங்கள் உதவுகின்றன.
இனி numion.com சென்று உங்கள் தளத்தின் முகவரியை கொடுத்தால் போதும் உங்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ள ஆகும் நேரத்தை அறியலாம்.
இது என் வலைத்தளம் திறக்க ஆகும் நேரம்
நம் பிரபல வலைத்திரட்டி இன்ட்லி திறக்கும் நேரம்
பிரபல கூகுள் திறக்க ஆகும் நேரம்
நம் மதிப்பிற்குறிய நண்பர் பிகேபி தளம் திறக்கும் ஆகும் நேரம்
இனி உங்கள் தளத்தோடு மற்ற தளங்களை ஒப்பிட iwebtool.com சென்று உங்கள் தளம் மற்றும் ஒப்பிட வேண்டிய தளத்தின் முகவரி கொடுத்தால் போதும் இதில் பத்து தளங்களை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும்.
என்ன நண்பர்களை உங்கள் தளம் திறக்க ஆகும் நேரத்தை கணக்கிட்டு பார்த்தீர்களா இனி எப்படி உங்கள் தளத்தின் திறக்கும் வேகத்தை கூட்டுவது என இனையத்தில் தேடுங்கள் பதில் கிடைக்கும் மேலும் அவசியமில்லாத நிரலிகளை இனைக்காதீர்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 11, 2010
6
Oct 11, 2010
ஜிஎஸ்ஆர்
இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் (IP Address)
ஒரு வரி கருத்து: எந்த காயத்திற்கும் நண்பன் மருந்தாவான் ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்துக்கு மருந்து இல்லை.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நீங்கள் பெரிதாக கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை இது உங்களுக்கு பெரிதாக பயனபட போவதுமில்லை இருப்பினும் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.ஒரு வீட்டுக்கு ஒரு முகவரி இருப்பது போல ஒவ்வொரு கணினிக்கும் ஒரு ஐபி அட்ரஸ் இருக்கும் ஆனால் சாதரண கணினி பயன்பாட்டாளர்களுக்கு இதனுடைய அவசியம் வரப்போவதில்லை இருப்பினும் அந்த இனைய வரைமுறை விலாசத்தை எப்படி அறிந்துகொள்வது என பார்க்கலாம்.
Start –> Run -> cmd என டைப் செய்து கமாண்ட் விண்டோ திறக்கவும்.

இனி இப்படி திறக்கும் இதில் நீங்கள் செய்யவேண்டியது ipconfig என டைப் செய்து ஒரு எண்டர் கொடுக்கவும் இனி உங்கள் கணினியில் IP ADDRESS (ஐபி முகவரி) இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் வந்திருக்கும் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.
வேறொரு வழிமுறையவும் பாருங்கள் முன்னர் பார்த்தது போலதான் ஆனால் இதில் Iipconfig/all என்பதாக டைப் செய்யவேண்டும் இதில் கூடுதலான தகவல்களை பெறலாம்.

சரி நீங்கள் உங்கள் கணினியின் IP ADDRESS (ஐபி முகவரி) இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் மாற்ற நினைக்கிறீர்கள் அதற்கு என்ன செய்வது என பார்க்கலாம் மேலே பார்த்தது போல Start - >Run - > cmd என டைப் செய்து ipconfig/release அல்லது ipconfig /renew என டைப் செய்து ஒரு எண்டர் கொடுத்தால் மாறிவிடும் இதிலிருந்து வெளிவர exit என டைப் செய்தால் போதும்.

என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நீங்கள் பெரிதாக கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை இது உங்களுக்கு பெரிதாக பயனபட போவதுமில்லை இருப்பினும் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.ஒரு வீட்டுக்கு ஒரு முகவரி இருப்பது போல ஒவ்வொரு கணினிக்கும் ஒரு ஐபி அட்ரஸ் இருக்கும் ஆனால் சாதரண கணினி பயன்பாட்டாளர்களுக்கு இதனுடைய அவசியம் வரப்போவதில்லை இருப்பினும் அந்த இனைய வரைமுறை விலாசத்தை எப்படி அறிந்துகொள்வது என பார்க்கலாம்.
Start –> Run -> cmd என டைப் செய்து கமாண்ட் விண்டோ திறக்கவும்.
இனி இப்படி திறக்கும் இதில் நீங்கள் செய்யவேண்டியது ipconfig என டைப் செய்து ஒரு எண்டர் கொடுக்கவும் இனி உங்கள் கணினியில் IP ADDRESS (ஐபி முகவரி) இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் வந்திருக்கும் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.
வேறொரு வழிமுறையவும் பாருங்கள் முன்னர் பார்த்தது போலதான் ஆனால் இதில் Iipconfig/all என்பதாக டைப் செய்யவேண்டும் இதில் கூடுதலான தகவல்களை பெறலாம்.
சரி நீங்கள் உங்கள் கணினியின் IP ADDRESS (ஐபி முகவரி) இனைய வரைமுறை (நெறிமுறை) விலாசம் மாற்ற நினைக்கிறீர்கள் அதற்கு என்ன செய்வது என பார்க்கலாம் மேலே பார்த்தது போல Start - >Run - > cmd என டைப் செய்து ipconfig/release அல்லது ipconfig /renew என டைப் செய்து ஒரு எண்டர் கொடுத்தால் மாறிவிடும் இதிலிருந்து வெளிவர exit என டைப் செய்தால் போதும்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 10, 2010
27
Oct 10, 2010
ஜிஎஸ்ஆர்
இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (Internet Download Manager)
ஒரு வரி கருத்து: பூமியில் முற்றும் துறந்த முனிவனும் இல்லை. எல்லாம் கற்று தெளிந்த ஞானியும் இல்லை.
வணக்கம் நண்பர்களே நம்முடைய கடந்த பதிவில் நண்பர் ம.தி.சுதா அவர்கள் இப்படியாக ஒரு கேள்வியை கேட்டிருந்தார் இந்த நேரத்தில் இதை பற்றி எழுத ஒரு வாய்ப்பு கொடுத்த நண்பருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

நாம் சாதரணமாக இனையதளங்களில் நமக்கு தேவையான டேட்டாக்களை நேரடியாக நாம் பிரவுசரில் இருந்தே தரவிறக்கி விடுவோம் ஆனால் அதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படலாம் அதற்கு தீர்வாக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம் இதை தரவிறக்கி இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், தரவிறக்க வேகத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும் இதனை போல இன்னும் சில மென்பொருள்கள் இருக்கின்றன வருங்காலத்தில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இப்போது இந்த மென்பொருள் டிபால்ட்டாக மாறிவிடும் ஒரு வேளை அப்படி ஆகவில்லையென்றாலும் கவலையில்லி தரவிறக்க வேண்டிய மென்பொருளயோ அல்லது இன்ன பிற தகவல்களையோ கீழிருக்கும் படத்தில் இருப்பது போல் செலக்ட் செய்து கொடுத்து விடுங்கள்.

இபோது உங்களிடம் இப்போதே டவுன்லோட் செய்யவா அல்லது பின்னர் செய்யலாமா எனக் கேட்க்கும் உங்கள் விருப்பம் போல தெரிவு செய்துகொள்ளுங்கள் தரவிறக்கம் சேமிக்க வேண்டிய இடத்தை தேவையானால் மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்போது பைல் டவுன்லோட் ஆவதை பாருங்கள் எப்படி வேகமாக ஆகிறது என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

தரவிறக்கம் முடிந்ததும் கீழிருக்கும் படத்தை போல் வரும் திறந்து பார்த்துக்கொள்ளுங்கள் நிச்சியமாக நல்ல வேகமாக தரவிறக்க முடியும்.

மேலும் இதில் உள்ள வசதிகளை பயன்படுத்தி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே நம்முடைய கடந்த பதிவில் நண்பர் ம.தி.சுதா அவர்கள் இப்படியாக ஒரு கேள்வியை கேட்டிருந்தார் இந்த நேரத்தில் இதை பற்றி எழுத ஒரு வாய்ப்பு கொடுத்த நண்பருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.
நாம் சாதரணமாக இனையதளங்களில் நமக்கு தேவையான டேட்டாக்களை நேரடியாக நாம் பிரவுசரில் இருந்தே தரவிறக்கி விடுவோம் ஆனால் அதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படலாம் அதற்கு தீர்வாக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம் இதை தரவிறக்கி இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், தரவிறக்க வேகத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும் இதனை போல இன்னும் சில மென்பொருள்கள் இருக்கின்றன வருங்காலத்தில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இப்போது இந்த மென்பொருள் டிபால்ட்டாக மாறிவிடும் ஒரு வேளை அப்படி ஆகவில்லையென்றாலும் கவலையில்லி தரவிறக்க வேண்டிய மென்பொருளயோ அல்லது இன்ன பிற தகவல்களையோ கீழிருக்கும் படத்தில் இருப்பது போல் செலக்ட் செய்து கொடுத்து விடுங்கள்.

இபோது உங்களிடம் இப்போதே டவுன்லோட் செய்யவா அல்லது பின்னர் செய்யலாமா எனக் கேட்க்கும் உங்கள் விருப்பம் போல தெரிவு செய்துகொள்ளுங்கள் தரவிறக்கம் சேமிக்க வேண்டிய இடத்தை தேவையானால் மாற்றிக்கொள்ளுங்கள்.
இப்போது பைல் டவுன்லோட் ஆவதை பாருங்கள் எப்படி வேகமாக ஆகிறது என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
தரவிறக்கம் முடிந்ததும் கீழிருக்கும் படத்தை போல் வரும் திறந்து பார்த்துக்கொள்ளுங்கள் நிச்சியமாக நல்ல வேகமாக தரவிறக்க முடியும்.
மேலும் இதில் உள்ள வசதிகளை பயன்படுத்தி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Oct 9, 2010
15
Oct 9, 2010
ஜிஎஸ்ஆர்
எளிமையான யூடியூப் வீடியோ டவுன்லோட் தரவிறக்கம்
ஒரு வரி கருத்து: கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதிலை மாறாக நம் தாய் இருக்கிறாள்.
வணக்கம் நண்பர்களே யூடியுப் வீடீயோவை தரவிறக்க எத்தனையோ தளங்கள் இருந்தாலும் சில நேரங்களில் பதில் எர்ரர் என்பதை பதிலாக இருக்கிறது அதற்கு தீர்வாக இந்த பதிவை எழுதிகிறேன் இது நிறைய நண்பர்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் தெரியாத நண்பர்கள் இருக்க்கூடுமே அவர்களுக்கு பயன்படட்டும் இதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் நான் இரண்டு வழிமுறைகளை மட்டுமே எழுதப்போகிறேன்.
இது ஒரு யூடியுப் டவுன்லோடர் மென்பொருள் இது 4எம்பி அளவுள்ளதாகும் தரவிறக்கி யூடியுப் டவுன்லோடர்இதை வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட் ஐகானாக வந்து அமர்ந்திருக்கும்.
இனி அதை திறப்பதன் மூலம் அதில் உங்கள் யூடியுப் உரலை ஒட்டி டவுன்லோட் என்பதை கிளிக்கினால் போதும் வீடியோ டவுண்டோட் தரவிறங்க தொடங்கிவிடும் ஆனால் இதில் ஒரு குறை இருக்கிறது வீடியோவை MP4 ஆக மட்டுமே தரவிறக்க முடியும்.

இது ஒரு நெருப்பு நரி ஆட் ஆன் இதை தரவிறக்க யூடியுப் டவுன்லோடர் நெருப்பு நரி ஆட் ஆன் செல்லவும் இங்கு நான் கீழிருக்கும் படத்தில் அடையாளப்படுத்தியுள்ள அந்த Easy Youtube Video Downloader தரவிறக்கவும்.

கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்போது உங்கள் யூடியுப் தளத்தில் புதிதாக ஒரு தெரிவு வந்திருக்கிறது பார்த்தீர்களா அதில் மூன்று வகையான தெரிவுகள் இருக்கின்றன அதன் வழியாக 3GP, MP3, MP4 என எந்த பார்மட்டிலும் தரவிறக்கலாம் இதை போல நிறைய ஆட் ஆன்கள் இருக்கின்றன ஆனால் எனக்கு இது தான் எளிமையான வழிமுறையாகவும் சிறப்பானதாகவும் இருக்கிறது.

என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே யூடியுப் வீடீயோவை தரவிறக்க எத்தனையோ தளங்கள் இருந்தாலும் சில நேரங்களில் பதில் எர்ரர் என்பதை பதிலாக இருக்கிறது அதற்கு தீர்வாக இந்த பதிவை எழுதிகிறேன் இது நிறைய நண்பர்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் தெரியாத நண்பர்கள் இருக்க்கூடுமே அவர்களுக்கு பயன்படட்டும் இதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் நான் இரண்டு வழிமுறைகளை மட்டுமே எழுதப்போகிறேன்.
இது ஒரு யூடியுப் டவுன்லோடர் மென்பொருள் இது 4எம்பி அளவுள்ளதாகும் தரவிறக்கி யூடியுப் டவுன்லோடர்இதை வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட் ஐகானாக வந்து அமர்ந்திருக்கும்.
இனி அதை திறப்பதன் மூலம் அதில் உங்கள் யூடியுப் உரலை ஒட்டி டவுன்லோட் என்பதை கிளிக்கினால் போதும் வீடியோ டவுண்டோட் தரவிறங்க தொடங்கிவிடும் ஆனால் இதில் ஒரு குறை இருக்கிறது வீடியோவை MP4 ஆக மட்டுமே தரவிறக்க முடியும்.
இது ஒரு நெருப்பு நரி ஆட் ஆன் இதை தரவிறக்க யூடியுப் டவுன்லோடர் நெருப்பு நரி ஆட் ஆன் செல்லவும் இங்கு நான் கீழிருக்கும் படத்தில் அடையாளப்படுத்தியுள்ள அந்த Easy Youtube Video Downloader தரவிறக்கவும்.
கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்போது உங்கள் யூடியுப் தளத்தில் புதிதாக ஒரு தெரிவு வந்திருக்கிறது பார்த்தீர்களா அதில் மூன்று வகையான தெரிவுகள் இருக்கின்றன அதன் வழியாக 3GP, MP3, MP4 என எந்த பார்மட்டிலும் தரவிறக்கலாம் இதை போல நிறைய ஆட் ஆன்கள் இருக்கின்றன ஆனால் எனக்கு இது தான் எளிமையான வழிமுறையாகவும் சிறப்பானதாகவும் இருக்கிறது.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Subscribe to:
Posts(Atom)








