Showing posts with label மகனின் பிறந்த நாள். Show all posts
Showing posts with label மகனின் பிறந்த நாள். Show all posts

Nov 27, 2010

51

ஆசிர்வாதங்களுக்காய் வேண்டி நிற்கிறோம்

  • Nov 27, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மனிதன் ஒரு தலைமுறை வாழ்வன் ஆனால் அவனின் நல்ல குணங்களில் அவன் எடுத்த பெயர் தலைமுறைகள் உள்ளவரை வாழும்.

    வணக்கம் நண்பர்களே இன்று எங்கள் வாழ்வின் மிக உன்னதமான நாள் ஆம் எங்கள் நினைவு முடிச்சுகளுக்குள் பின்னிக்கிடக்கும் எங்கள் அன்பு மகன் ஸ்ரீராம் பிறந்த தினம் இந்த நேரத்தில் முகம் அறியா நட்புகளோடு ஆசிர்வாதம் வேண்டி யாசித்து நிற்கிறோம். நல்லவர்கள் அருகில் இல்லையென்றாலும் அவர்களின் வாழ்த்துகள் துனை நிற்கும் என பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம் அந்த வார்த்தையில் நம்பிக்கை வைத்து உங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறோம்.



    செல்ல மகன் எங்கள் செல்வ மகன்



    செல்ல மகனே செல்வ மகனே-எங்கள்
    சிந்தை முழுவதும் அன்பு மகனே...

    தவமிருந்து பெற்ற செல்வமும் நீதானே-எங்கள்
    தவத்தின் வலிமையும் நீதானே...

    விதைத்த விருட்சமும் நீதானே-எங்கள்
    அறுவடை பலனும் நீதானே...

    இருமுடி கட்டும் சரணமும் நீதானே-எங்கள்
    இதயத் துடிப்பின் ஓசையும் நீதானே...

    வரம் தந்த சாமியும் நீதானே-எங்கள்
    வரமாய் வந்தவனும் நீதானே...

    பூவின் மகரந்தமும் நீதானே-எங்கள்
    புண்ணகையில் வந்து விழும் கர்வமும் நீதானே...

    நம் வீட்டின் பொக்கிஷம் நீதானே-எங்கள்
    உள்ளத்தின் வசந்தமும் நீதானே...










    இந்த உலகத்தில் யாரும் எதுவாக வேண்டுமானாலும் ஆகியிருக்க முடியும் ஆனால் ஒரு தகப்பனாக, தாயாக யாரும் அவதாரம் பூசி விட முடியாது அதற்கு இறைவனின் வரம் வேண்டும் அந்த வரமாய் நீ வந்ததால் மட்டுமே நானும் உன் தாயும் பிறந்த முழுப்பயனையும் அடைந்திருக்கிறோம், எங்கள் உறவே நீ தானாட! எங்கள் செல்வ மகனே நீ நீண்ட வாழ்வும், மங்காத வளமும், குறைவில்லா கல்வியும் பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறோம் நாங்கள் வாழும் மட்டும் வாழ்விற்கு பின்னும் எங்கள் ஆசிர்வாதம் என்றும் உன்னோடு இருக்கும். இந்த சமுதாயத்தில் சிறந்த மனிதனாக,மனிதம் உள்ளவனாக சிறந்து வாழ எங்கள் வாழ்த்துகள்.

    அன்புடன்
    அப்பா, அம்மா

    இனி ஒரு குட்டி விஷயத்தை பார்க்கலாம் பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் முதல் குழந்தைக்கும் கடைசி குழந்தைக்கும் மிகுந்த செல்வாக்கும் அவர்கள் மேல் கொஞ்சம் அலாதியான பிரியமும் பெற்றவர்களுக்கு இருக்கும் அதற்கு என்ன காரணம் இருக்குமென்று என்னைப்போன்ற ஒரு அண்ணனிடம் பேசினேன் அப்பொழுது அவர் ஒரு கருத்தை சொன்னார் அதாவது முதல் குழந்தை பிறக்கும் போது தன் ஆண்மையை நிருபித்த சந்ததி என்பதால் முதல் குழந்தை மேல் அதிக பாசம் இருக்குமாம் அடுத்தபடியாக பெண்ணை பொருத்தவரை முழுமையான மனுஷியாகிறால் அதாவது திருமணம் முடிந்து குழந்தை இல்லையென்றால் சமுதாயத்தின் பேச்சு வழக்குகள் உங்களுக்கு தெரியும் தானே. இனி கடைசிக்குழந்தையை பொருத்தவரை ஒரு ஆண் பெண்ணும் இப்பவும் எங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாக கருதுவதால் அந்த கடைசி குழந்தையின் மேலும் அதிகம் பாசம் இருக்குமாம் இப்போதெல்லாம் இந்த பிரச்சினை இல்லை இரண்டு குழந்தைகள் தானே பெற்றுக்கொள்கிறார்கள்.

    குறிப்பு ஓரிரு நிமிடம் நீங்கள் செய்யும் செலவு எங்கள் அன்பு மகனின் வழித்துனையாய் வாழ்வு முழுக்க உங்கள் ஆசிர்வாதம் கூடச்செல்லும்.
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர