Jun 2, 2010

8

நானே கேள்வியும் பதிலுமாவேன்

  • Jun 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: உன் இதயம் ரோஜா மலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.

    வணக்கம் நண்பர்களே இது சின்ன ஒரு கேள்வி பதில் போலத்தான் இருக்கும் எல்லாமே நீங்கள் முன்னமே படித்ததுதான் ச்சும்மா ஒரு ஞாபகத்துக்கு, இதில் கேள்வி கேட்பவர் நீங்கள் பதில் சொல்பவன் நான்.

    கேள்வி: என்ன நண்பா நல்ல இருக்கிங்களா?
    பதில்: கடவுள் அருளால் நலமாய் இருக்கிறேன்

    கேள்வி: உங்கள் சுய விபரம் சொல்ல முடியுமா?
    பதில்: என்னை பற்றி சொல்ல என்ன இருக்கு நண்பா இருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்லனுமே “ ஒன்றுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தாய் காட்ட முயற்சிக்கும் சராசரிகளில் நானும் ஒருவன்”

    கேள்வி: உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா?
    பதில்: நானும் எனக்கு தெரிந்ததை கவிதை என கிறுக்கியிருக்கிறேன் இனி படித்து விட்டு நீங்கள் தான் சொல்லவேண்டும் ராஜா சின்ன ரோஜா , தேவதையை கண்ட நாள் , மேல்மட்டம் கீழ்மட்டம் , தாய்க்கு தாயவோம் , அப்பா , பழைய டயரி கிறுக்கல் ,இளைஞனே மாற்றிக்காட்டு

    கேள்வி: தொழில் நுட்ப பதிவுகள் மட்டும் தான் எழுதுவீர்களா சமுதாயம் சார்ந்த பதிவுகள் எழுதியிருக்கிறீர்களா?
    பதில்: பொதுவான பதிவுகள் சில எழுதியிருக்கிறேன் அவற்றில் சிலவற்றிற்கு தொடுப்பு தருகிறேன் தவறிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.வாழ்க்கையில் எதிரி நீச்சல் , ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு , தாலிக்கு அர்த்தம் என்ன , வாழத்தான் வாழ்க்கை , கடவுள் நல்லவனா கெட்டவனா

    கேள்வி: கணினியில் வைரஸ் இருக்கிறதா என அறிவதற்கு ஏதாவது எளிமையான வழி சொல்லமுடியுமா?
    பதில்: உங்கள் கணினியில் டாஸ்க் மேனேஜரை திறந்து Performance திறந்து அதில் CPU Usage கணினியில் வேறு எந்த புரோகிராம் இயங்காத நிலையில் அது எடுத்துக்கொள்ளும் மெமரி அளவு பூஜ்ஜியமாக இருக்கும் மேலும் Process என்பதை திறந்து அதில் இயங்கும் பைல்கள் குறித்து கூகுளில் தேடிப்பார்த்தால் தெரிந்துவிடும்.

    கேள்வி: இனையத்தில் பாதுகாப்பாக உலவுவது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
    பதில்: நான் இது பற்றி நம் தளத்திலேயே எழுதியிருக்கிறேன்.

    கேள்வி: உங்களுக்கு வலையில் எழுதுவதன் மூலம் வருவாய் வருகிறதா?
    பதில்: இல்லை.

    கேள்வி: நீங்கள் வலையுலகத்தில் பிரபலமாகி இருக்கிறீர்களா?
    பதில்: இது வரை 54 நபர்களை நண்பர்களாக பெற்றிருக்கிறேன் 111 மின்னஞ்சல் சந்தாதாரரை பெற்றிருக்கிறேன் இவர்களை தவிர என்னை யாருக்கும் தெரியாது.

    கேள்வி: தொடர்ந்து எழுத ஆர்வம் இருக்கிறதா?
    பதில்: ஆதரவு இருக்கும் வரை எழுதலாம் என நினைக்கிறேன்.

    கேள்வி: வலைத்தளத்தில் மூலம் பிற எழுத்து துறைகளில் இதுவரை வாய்ப்பு வந்திருக்கிறதா?
    பதில்: சமீபத்தில் ஒரு வாய்ப்பு வந்தது அது பற்றி ஆலோசித்து கொண்டிருக்கிறேன் இன்னும் முடிவு செய்யவில்லை.

    கேள்வி: உங்கள் வாசகர்கள் உங்களின் எந்தமாதிரியான பதிவை விரும்புகிறார்கள்?
    பதில்: இந்த பதிவில் அவர்கள் கருத்துரையை தெரிவிப்பார்களேயானால் அவர்கள் விருப்பம் போலவே எழுதலாம்.

    கேள்வி: உங்களுக்கு எதை பற்றி எழுத ஆர்வம் இருக்கிறது?
    பதில்: நல்ல விஷயங்களை பற்றி மட்டுமே எழுத விரும்புகிறேன்.

    கேள்வி: வலையுலகத்தின் வாயிலாக முகம் அறியா பிரபலங்களுடன் பேசியிருக்கிறீர்களா?
    பதில்: தமிழில் மிக பிரபல திரட்டி ஒன்று என்னிடம் மின்னஞ்சலில் உரையாடியதும் மேலும் என்னுடன் பேசவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் ஆனால் இதுவரை அவர்களிடம் பேசியதில்லை.

    கேள்வி: உங்கள் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
    பதில்: நல்ல விஷயங்களை ஆதரிப்பதன் மூலம் அது நிறைய பேருக்கு சென்றடைய நீங்களும் துனையாய் இருங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    May 30, 2010

    20

    குறுந்தகடில் எழுதுவதற்கான ஆல் இன் ஆல் மென்பொருள்

  • May 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இவற்றை முறிக்கும் போது ஒலி இருக்காது ஆனால் பெரும் வலியை ஏற்படுத்தும்.

    நண்பர்களே சில நேரங்களில் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளை விட பலமடங்கு சிறந்ததாக இலவச மென்பொருள் இருக்கும் அந்த வகையினை சேர்ந்தது தான் இந்த மென்பொருளும் இதன் பெயர் BurnAware Free 3.0 என்பதாகும் தற்போது இது பீட்டா வெர்சன், வேண்டுமென்றால் BurnAware Free 2.4.7 என்பதை தரவிறக்கி பயன்படுத்தவும்.

    சரி இதுல என்ன பெரிசா இருக்கு இதன் வழியாக ISO Disc, UDF Disc, Boot Disk, Blue-Ray Disk, Audio CD, MP3Disc, DVD Video, Image Disc இப்படி எது வேண்டுமானலும் இந்த மென்பொருள் கொண்டு எளிதாக எரித்து விடலாம், முக்கியமாக ISO Disc ஆக மாற்றுவது எளிது ஒரு நேரத்தில் நானும் ஒரு ISO Disc மாற்ற தெரியாமல் நண்பர் முகமது இஸ்மாயில் உதவினார் ஆனால் இந்த மென்பொருள் இருந்தால் உங்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமலே ISO Disc எரித்து விடலாம் இந்த ISO Disc பூட் சிடி தயாரிப்பதற்கு பயன்படும.



    மேலும் இதில் Disc Erase வசதியும் இருப்பதாக சொல்கிறார்கள் அதை நான் முயற்சி செய்து பார்கவில்லை, மற்றும் ஒரு குறுந்தகடை உங்கள் டிரைவில் இட்டு இந்த புரோகிராம் வழியாக Disc Info என்பதை தெரிவு செய்தால் அதில் உங்கள் டிரைவின் பப்பர் வேகம் மற்றும் உங்கள் குறுந்தகடை படிக்க எடுக்கும் வேகம் போன்றவற்றை அழகாக சொல்லி விடும்.

    இதன் அளவு வெறும் 3.8 MB தான் ஆனால் இதன் செயல்பாடுகள் நல்ல திறனுடன் இருக்கிறது சில பெரியவர்கள் சொல்வார்கள் கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்று அது மாதிரிதான் இந்த மென்பொருள். நண்பர்களே அவசியம் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஒரு வேளை தரவிறக்க விரும்பாதவர்கள் இந்த தள முகவரியாவது குறித்து வைத்துக் கொள்ளுங்களேன் எப்பொழுதுதாவது தேவைப்படும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    May 29, 2010

    8

    போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி

  • May 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்,குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்.

    நண்பர் MHM NIMZATH அவர்கள் (பயனுள்ள தகவல்களை தந்தீர்கள் நன்றி.Folder ஐ Delete செய்யாமல் ஆக்குவது எப்படி? என்னை நீங்கள் மண்னிக்க வேண்டும் உங்களுடைய தகவல்களை நான் எனது இணையபக்கத்தில் இணைக்கவுள்ளேன்) இப்படியாக ஒரு கருத்துரையோடு ஒரு கேள்வியையும் எழுதியிருந்தார் சரி அவருக்காகவும் இன்னும் நமது நண்பர்களுக்காகவும் ஒரு பதிவாக எழுதிவிடாலமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு.

    நாம் சாதரணமாக நம் கணினியின் வன்தட்டை இரண்டு அல்லது மூன்றாக பிரித்திருப்போம் முடிந்தவரை மூன்றாக பிரித்திருந்தால் நல்லது. இனி நீங்கள் பாதுகாப்பாக வைக்க நினைக்கும் போல்டர் டிரைவ் என்பது G:யில் இருக்கிறது என வைத்துக்கொள்வோம், இப்போது G:யை திறந்தவுடன் Gsr எனும் போல்டர் உள்ளது பின் அதன் உள்ளே உங்களின் எல்லா டேட்டாக்களும் வெவ்வேறு போல்டர்களிம் பெயர்களிலும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

    இனி நீங்கள் செய்யவேண்டியது

    ren Gsr Gsr.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} இதை காப்பி எடுத்து நோட்பேட் திறக்கவும் பேஸ்ட் செய்யவும் LOCK KEY எனும் பெயரில் BAT-ஆக சேமிக்கவும் BAT என்பது Extension குறிப்பதாகும் இதற்காக ஒன்றும் குழம்ப வேண்டியதுஇல்லை Just LOCK KEY.BAT என அடித்து சேமித்தால் போதுமானது.(Gsr என்கிற இத்தில் உங்கள் போல்டரின் பெயர் வரவேண்டும்)

    ren Gsr.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Gsr இதை காப்பி எடுத்து நோட்பேட் திறக்கவும் பேஸ்ட் செய்யவும் OPEN KEY எனும் பெயரில் BAT-ஆக சேமிக்கவும்.(Gsr என்கிற இத்தில் உங்கள் போல்டரின் பெயர் வரவேண்டும்)

    இப்பொழுது நீங்கள் ஒரு LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT என இரண்டு பேட் பைல்கள் உருவாக்கி விட்டீர்கள் இதுதான் உங்கள் டிரைவில் உள்ள அனைத்து பைல்களையும் பாதுகாக்கபோகிறது.

    இனி நான் முன்னமே கூறியபடி Gsr எனும் போல்டரை மறைக்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் இப்பொழுது Gsr எனும் போல்டர் மற்றும் LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT மூன்றும் ஒரே இடத்தில் இருக்கட்டும் இனி தாங்கள் LOCK KEY.BAT டபுள் கிளிக் செய்யுங்கள் Gsr எனும் போல்டர் Control Panel Icon போல மாறியிருக்கும் இப்பொழுது Gsr எனும் போல்டர் திறந்து பாருங்கள் Control Panel திறக்கும் இனி இதை திறப்பதற்கு OPEN KEY.BAT எனும் பைலை டபுள் கிளிக் செய்யுங்கள் உங்கள் பைல்கள் அனைத்தும் பார்க்க இயலும்.

    எந்த போல்டரை தாங்கள் மறைக்க விருப்புகிறீர்களோ அந்த போல்டரை மறைத்தவுடன் LOCK KEY.BAT மற்றும் OPEN KEY.BAT இரண்டையும் வேறு இடத்தில் மாற்றி வைத்துவிடுங்கள் முயற்சிக்கும் முன்பு சோதனைக்காக ஒரு டம்மி போல்டரில் செய்துபார்க்கவும்.

    இல்லை நண்பா இது கொஞ்சம் சிரமாமாக இருக்கிறது ஏதாவது ஒரு மென்பொருளாக இருந்தால் பரவாயில்லை என நினைக்கிறீர்களா? ஒன்றும் பிரச்சினையில்லை உங்களுக்கு ஒரு Free Folder Hide மென்பொருள் இனைப்பும் தந்துவிடுகிறேன் உபயோகிப்பதற்கு எளிமையாக இருக்கும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்வதில்லை இது இலவச மென்பொருள் தான் நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு நன்கொடை வழங்கலாம்.

    என்ன நண்பர்களே உங்களுக்கு இது உபயோகமில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படும் ஒரு வேளை உங்களுக்கு இது உபயோகமானது என்றால் மற்றவர்களும் பயனடைய உதவுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    May 28, 2010

    15

    (Startup Drive Checkup) ஸ்டார்ட் அப் டிரைவ் செக்கப் நிறுத்த வழி

  • May 28, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்னவென்று தெரிவதற்குள் அதன் முக்கால் பகுதி கடந்து விடுகிறது.

    நண்பர் பிரபு அவர்களின் வேண்டுதலுக்காகவும் மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் நண்பர்களுக்கு வந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவும் இந்த பதிவு எழுதப்படுகிறது.

    சில நேரங்களில் கணினி இயக்கம் ஆரம்பிக்கும் போதே நீல நிற விண்டோவில் உங்கள் கணினியின் வன்தட்டுகளை சோதிக்கிறேன் ஏதாவது ஒரு விசையை அழுத்தசொல்லி வரும் நீங்கள் இதை தவிர்க்க நினைத்தாலும் விண்டோ மாறாமல் முழு வன்தட்டையும் சோதித்த பின் தான் விண்டோ திறக்கும் நாம் பார்க்க போவது இதை தவிர்ப்பதற்கான மாற்றுவழிகளைத்தான் இப்போது பார்க்கபோகிறோம்.



    முதல் வழி

    கணினியை இயக்கி F8 கீயை விட்டு விட்டு அழுத்துங்கள் உங்களுக்கு ஒரு கருப்பு விண்டோ திறக்கும் இனி அதில் Last Know Good Configuration என்பதை தெரிவு செய்து எண்டர் கொடுத்து போய் பாருங்கள் ஒரு வேளை பிரச்சினை சரியாகலாம்.

    இரண்டாவது வழி

    இல்லை இன்னும் சரியாகவில்லை என்றால் அடுத்ததாக மீண்டும் கணினியை இயக்கி Start ->Run->Programs->Accessories->System Tools->Restore என்பதை செலக்ட் செய்து புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Restore My Computer to an Earlier Time என்பதை தேர்வு செய்து ஓக்கே கொடுங்கள் இனி அடுத்த பக்கத்தில் புதிய விண்டோவில் ஒரு பக்கம் தேதியும் மறுபக்கம் நீங்கள் கணினியில் ஏற்படுத்திய மாற்றங்களும் காணப்படும் இனி நீங்கள் உங்கள் கணினியில் எந்த நாளில் உங்கள் கணினி நல்ல நிலையில் இயங்கியது என்பதை ஒவ்வொரு தேதியாக கிளிக்கும் போதும் வலது பக்கம் தெரியும் உங்களுக்கு சரியானதாக தெரியும் ஒரு தேதியை தெரிவு செய்து ஓக்கே கொடுக்கவும் இனி உங்கள் கணினி ரீஸ்டோர் செய்ய தொடங்கிவும் சிறிது நேரத்திற்க்கு பிறகு உங்கள் கணினி அனைந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகி ஒரு பாப் அப் விண்டோ போல திறக்கும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் கணினி நல்ல நிலைக்கு வந்துவிட்டாதாவென ஒரு வேளை சரியாக பட்சத்தில் மீண்டும் வேறு ஒரு தேதியை முயற்சி செய்து பார்க்கலாம் பொருமை இல்லாதவர்கள் அடுத்த முயற்சிக்கு செல்லலாம்.



    மூன்றாவது வழி

    Start ->Run & Type msconfig என டைப் செய்து ஓக்கே கொடுக்கவும் இப்போது ஒரு சிறிய விண்டோ திறக்கும் அதில் Startup என்கிற டேப்பில் CHKDISK என்பது மாதிரியான பெயரில் ஏதாவது டிக் மார்க் செய்யப்பட்டுள்ளதா என பார்க்கவும் இருந்தால் மட்டும் அந்த டிக் மார்க் எடுத்துவிடுவதன் மூலம் அதை டிசாபிள் செய்யலாம் இனி கணினி ரீஸ்டோர் கேட்கும் ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி பிரச்சினை சரியாகும். ஒரு வேளை அப்படி இல்லையென்றால் ஒன்றும் பிரச்சினையில்லை அப்படியே மூடிவிடவும்.



    நான்காவது வழி

    விண்டோஸ் இயக்கம் தொடங்கும் முன் எந்த டிரைவில் பிரச்சினை இருப்பதாக சொல்லி டிரைவ் செக்கிங் செய்கிறதோ அந்த டிரைவின் பிராப்பர்ட்டிஸ் திறங்கள் உதாரணமாக D டிரைவில் பிரச்சினை என்றால் D டிரைவின் வலது பக்கம் கிளிக்கி Properties என்பதை தெரிவு செய்து திறக்கும் சிறிய விண்டோவில் Tool டேப்பை கிளிக்குங்கள் அதில் Check Now என்பதை கிளிக்கி அதில் டிக் மார்க் இருந்தால் எடுத்துவிட்டு ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி உங்கள் கணினியில் இந்த பிரச்சினை இருக்காது சரி இப்பவும் சரியாகவில்லை நண்பா நான் என்ன பண்றது அப்படினு கேக்கிற நண்பர்களுக்காக அடுத்த வழிமுறையும் பார்த்துவிடலாம்.



    ஐந்தாவது வழி

    இந்த முறையில் நிச்சியம் சரியாகிவிடும் நம்பிக்கையோடு செயல்படுங்கள் இனி நீங்கள் செய்ய வேண்டியது Start –> Run & Type cmd இப்போது உங்களுக்கு கமாண்ட் பிராம்ட் வந்திருக்கும் அதில் உங்களுக்கு D டிரைவ் பிரச்சினைக்குரியதாக இருக்கிறதோ அதற்கு தீர்வாக chkntfs /X D: என கமாண்ட் கொடுஙகள் இனி சரியாகிவிடும் ஒரு வேளை உங்களுடைய கணினியில் நான்கு டிரைவ்கள் அதாவது C, D, E, F என்பதாக இருக்கிறது இந்த நான்கு டிரைவிலும் பிரச்சினை இருக்கிறது அதற்கு Chkntfs /X C: D: E: F: என கொடுத்து பாருங்கள் இபோது உங்கள் கணினி இயங்கும் போது டிரைவ் செக்கிங் இருக்காது இனி இந்த கமாண்ட் கொடுப்பதிலும் பிரச்சினை இருக்கிறது ஒன்றும் கவலைப்படவேண்டாம் அடுத்து ரிஜிஸ்டரியில் மாற்றம் ஏற்படுத்தி முயற்சி செய்துபார்ப்போம்.

    ஆறாவது வழி

    உங்கள் கணினியில் Start –> Run & Type regedit என டைப் செய்து ஓக்கே கொடுங்கள் உங்களுக்கு கணினியின் இதயபகுதியான ரிஜிஸ்டரி பகுதி திறக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது முதலில் ரிஜிஸ்டரி பேக்கப் எடுத்துவைத்துக் கொள்வதுதான் அடுத்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CURRENTCONTROLSET\CONTROL\Session Manager இதில் இந்த Session Manager கண்டுபிடித்ததும் அதை இருமுறை கிளிக்கி வலது பான் பக்கம் பார்க்கவும் அங்கு BootExecute என்கிற பெயரில் ஒரு ரெஜ் இருக்கும் இனி அதை டபுள் கிளிக் அல்லது Modify என்பதை தெரிவு செய்யுங்கள் ஏற்கனவே அங்கு autocheck autochk * என்பதாக இருக்கும் இனி நீங்கள் செய்யவேண்டியது D டிரைவில் பிரச்சினை என்றால் autocheck autochk /k:D * இப்படி மாற்றிவிடவும் இல்லை முறையாக மூன்று டிரைவ்களிலும் பிரச்சினை என்றால் autocheck autochk /k:C /k:D /k:E * என மாற்றிவிடுங்கள் இனி ஓக்கே கொடுத்து வெளியேறி விடுங்கள் ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்துவிடுங்கள் இப்போது எல்லாம் சரியாகி இருக்கும் இனியும் பிரச்சினை இருந்தால் மூன்றாம் நபர் மென்பொருள் உபயோகித்து பார்க்கலாம் இல்லையென்றால் உங்கள் விண்டோஸ் குறுந்தகடு இருந்தால் அதன் மூலமாக ரிப்பேர் செய்யலாம்.



    என்ன நண்பர்களே உங்களுக்கு இது உபயோகமில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள் ஏதாவது ஒரு நேரத்தில் பயன்படும் ஒரு வேளை உங்களுக்கு இது உபயோகமானது என்றால் மற்றவர்களும் பயனடைய உதவுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    May 26, 2010

    8

    ராஜா சின்ன ரோஜா

  • May 26, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நாமே பெற்றோர் ஆகும் வரை நம் பெற்றோர்களின் அன்பு நமக்கு புரியாது.

    அன்பு நண்பர்களை எதை பற்றியெல்லமோ எழுதுகிறேன் ஆனால் அது எல்லாமே உங்களுக்கு பயன்படுமே என்கிற நோக்கில் தான், இன்று நான் எழுதுவதோ என் அன்பு மகனுக்கு ஒரு கவிதை கிறுக்கல் ஏற்கனவே நான் சில சமுதாய கருத்துள்ள கவிதைகள் எழுதியிருக்கிறேன அவையெல்லாம் நான் எதிர்பார்க்காத அளவிற்கு வாக்குகளும் கருத்துரைகளும் பதிவாகியிருந்தன அந்த நம்பிக்கையோடும் என் உள்ளக்கிடக்கையும் சேர்ந்து வந்ததுதான் இந்த ராஜா சின்ன ரோஜா கவிதை கிறுக்கல்.

    ராஜா சின்ன ரோஜா

    சின்ன பூமணியே
    செந்தாழம் தேன் கனியே
    வண்டாடும் சோலைக்குள்
    புது மொட்டாய் பிறந்தாயோ
    எந்நாள் வீட்டிற்க்குள்
    தேன்சிட்டாய் உலா வருவாயோ

    காமாட்சியம்மன் குத்துவிளக்கு
    ஒளிச்சுடர் நீதானே
    இருமுடி கட்டும்
    சரணமும் நீதானே
    புதிதாய் பிறந்த சூரியன்
    அது நீதானே

    விடிவெள்ளியின்
    வெளிச்சமும் நீதானே
    தவமிருந்து பெற்ற
    செல்வம் நீதானே
    என் தவத்தின்
    வலிமையும் நீதானே

    செந்தமிழ் செல்வன்
    என் செல்லமகன் நீதானே
    செந்தாழம்பூவின் கசியும்
    தேன் துளியும் நீதானே
    கடவுள் தந்த பிள்ளை- எங்கள்
    வீட்டு சின்ன கிள்ளை நீதானே

    நீங்களும் உங்கள் செல்ல குழந்தைகளுக்காக ஒரு கவிதை எழுதித்தான் பாருங்களேன் உங்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த ஒன்றும் எதுகை மோனையின் அவசியம் இல்லை அன்பின் ஆழம் எதுகை மோனையில் இல்லை.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    19

    படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: உபயோகமில்லை என்று தூக்கியெறிந்த பின்னர் தான் அதன் அவசியம் புரியும்.

    மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் எப்படி எழுதுவது என பார்க்கலாம்.

    இந்த வசதி நம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சல்களில் இது போன்ற வசதி இல்லை மேலும் ஜிமெயிலில் மட்டும் மின்னஞ்சல் அனுப்பி சில நிமிடங்களுக்குள் திறும்ப பெறும் வசதி இருக்கிறது இதற்கு மாற்று வழியாக நிறைய தளங்கள் இது போன்ற வசதியை தருகிறது இருப்பினும் நான் இங்கு மூன்று தளங்களை மட்டும் தருகிறேன் இவை எளிமையாக இருக்கும் மேலும் நேரம் அதிகம் தேவைப்படாது.

    இந்த மூன்று தளங்களை பொருத்தவரை உங்கள் சொந்த விபரம் எதுவும் கேட்பதில்லை உறுப்பினராக சொல்லி தொந்திரவு செய்வதில்லை, இந்த வழியாக மின்னஞ்சல் அனுப்பியதும் நீங்கள் அனுப்பும் நபருக்கு எந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்புகிறீர்களோ அந்த முகவரியின் இட்டு பெறும் நபருக்கு மின்னஞ்சல் செல்லும் கூடவே அதில் ஒரு உரல் இனைக்க பட்டிருக்கும் அந்த உரலை கிளிக்கினால் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் தெரியும் அவர்கள் அதை படிக்கலாம் வேண்டுமானால் அதை அவர்கள் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர்கள் அதை மூடிவிட்டு மீண்டும் திறக்க நினைத்தால் அவ்வளவுதான் அந்த மின்னஞ்சல் அழிக்கப்பட்டிருக்கும்.

    படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

    sdmessage

    படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

    destructingmessage

    படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்

    kicknotes

    என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் உங்கள் நண்பர்களும் பயனடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    May 23, 2010

    4

    காப்பி எடுக்கப்பட்ட என் பதிவுகள்

  • May 23, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கைகளை மட்டுமின்றி உங்கள் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள்.

    நண்பர்களே சமீபகாலமாக நானும் ஒரு வலைப்பூவை எழுதுகிறேன் அதில் எனக்கு தெரிந்த விஷயங்களை பதிவு செய்கிறேன் அதில் எந்தவிதமான வியாபார நோக்கமும் இல்லை வெறும் அறிவுப் பகிர்தல் என்கிற முறையில் மட்டுமே எழுதுகிறேன்.

    நாமும் பதிவுகள் எழுதுகிறோமே இது எத்தனை பேருக்கு சென்றடைகிறது என்பதை நீங்கள் அளிக்கும் வாக்குகளும் மற்றும் கருத்துரைகளும் தான் தீர்மானிக்கும், நான் முன்பே கவணித்திருக்கிறேன் என் பதிவுகள் சில தளங்களில் அச்சு பிசகாமல் அப்படியே வேறு தளத்தில் இருக்கும் அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை நான் சொல்ல வருவது தன்னிலை விளக்கம் மட்டுமே, நண்பர்களே நீங்கள் என் பதிவை பயன்படுத்துவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை குறைந்த பட்ச நாகரீகமாக என் பெயரையாவது போட்டிருக்கலாம் , இன்னும் சில பதிவுகள் இருக்கின்றன அவையும் என் பதிவுகளின் சாயல் இருக்கதான் செய்கிறது இருப்பினும் அதை நான் இங்கே குறிப்பிடவில்லை.

    நண்பர்களே என் பதிவை நீங்கள் உபயோகபடுத்துவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை தயவுசெய்து வியாபார நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்த வேண்டாம்.

    இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்

    http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_8670.html

    http://www.z9tech.com/view.php?2beddnB5ddc23QQAA334aaCe0FFad0e0JXO4Yccd34mmlHn22eeh9966dce02OmM0o44b4cZZBL500

    http://shanthythas.blogspot.com/

    http://paperpediyan.blogspot.com/2010/04/blog-post_7895.html

    உங்கள் தளத்திற்கான புக்மார்க்

    http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_17.html

    http://idimulhakkam.blogspot.com/2010/04/blog-post_9369.html

    இளைஞனே மாற்றிக்காட்டு

    http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_9707.html

    http://covairamanathan.blogspot.com/2010/04/blog-post_20.html

    நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்

    http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_18.html

    http://idimulhakkam.blogspot.com/2010/04/blog-post_6600.html

    http://www.tmkudi.com/?p=674

    http://celltekpvt.blogspot.com/2010/04/blog-post_18.html

    http://thamilvideo.blogspot.com/2010/04/blog-post_19.html

    வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவச எஸ் எம் எஸ்

    http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_14.html

    http://www.tmkudi.com/?p=668

    கணினியில் வைரஸ்

    http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_8920.html

    http://usetamil.forumotion.com/-f4/-t3800.htm

    காணாமல் போன கண்ட்ரோல் பேனல்

    http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_07.html

    http://usetamil.forumotion.com/-f4/--t3799.htm

    ஜிமெயிலில் HTML கையெழுத்து

    http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_18.html

    http://computerthaha.blogspot.com/2010/03/html.html

    ஜிமெயில் அரட்டையில் ட்டிரிக்ஸ்

    http://gsr-gentle.blogspot.com/2010/03/blog-post_7397.html

    http://computerthaha.blogspot.com/2010/04/blog-post.html

    வன் தட்டு வேகம் அறிய

    http://gsr-gentle.blogspot.com/2010/05/blog-post_13.html

    http://acsstudy.blogspot.com/2010/05/blog-post_22.html

    யுஎஸ்பி-யில் எழுதுவதை தடுக்கலாம்

    http://gsr-gentle.blogspot.com/2010/05/blog-post_20.html

    http://acsstudy.blogspot.com/2010/05/blog-post.html

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    6

    (Amicus Curiae)அமிக்கஸ் குயூர்ரி தெரியுமா?

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மகிழ்ச்சியும் துயரமும் எப்போதும் அடுத்தடுத்தே இருக்கின்றன.

    நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட ஒரு விஷயத்தை இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சாதரணமாக குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை விசாரிப்பார்கள் ஆனால் சில நேரங்களில் குற்றவாளிகளுக்கே தெரியாது அவர்கள் நீதிமன்றத்தின் விசாரனையில் இருக்கிறார்கள் என்பது அது பற்றித்தான் பதிவு.

    நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் நீதிமன்றத்தின் நேரடி விருப்பம் அல்லது வருட வருமாணம் 17,000 க்கு குறைவாக உள்ளவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள், மற்றும் வழக்கறிஞர் வைத்து வாதாட வசதி இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நீதிமன்றம் இது போன்ற அமிக்கஸ் குயூர்ரியை நியமிக்கும் அந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் ஜுடிசனல் கீழாக வருபவர் மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இவரே ஒரு நீதிமன்றத்துக்கு சமமானவர் இவரின் விசாரனை தகவல்களை மட்டும் வைத்து சம்பந்தபட்டவரை விசாரிக்கமலே நீதிமன்றம் நீதி வழங்கலாம்.

    இந்த அமிக்கஸ் குயூர்ரி சாதரணமாக அதிக மக்கள் ஈடுபட்டுள்ள பொதுநலம் சம்பந்தபட்ட பிரச்சினைகளை மட்டும் தான் கையில் எடுக்கிறது அதாவது சமுதாயத்திற்கு அதிகம் பிரச்சினைகள் விளைவிக்க கூடியவர்கள் மற்றும் மாபியா கும்பல்கள்(சிவில் வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகள்) இவர்களுக்கு எதிராகவும் மேலும் அரசு பொதுநல வழக்குகளுக்கும் அமிக்கஸ் குயூர்ரி நியமிக்க படுகிறார்.

    அமிக்கஸ் குயூர்ரி வெறும் ஒரு வழக்கிறிஞர் மட்டுமல்லமால் இந்த நேரத்தில் ஒரு புலனாய்வு துறை அதிகாரியின் தைரியத்தோடும் சாதுரியத்துடனும் செயல்படுவார்கள் இவர்களை பிரித்து அறிவது என்பது முடியாத காரியம் மேலும் ஒரு வழக்கறிஞர் சில வழக்குகளுக்கு எதிராக தன்னையே அமிக்கஸ் குயூர்ரியாக நியமிக்க மனு கோரலாம் இருப்பினும் அதை பரிசீலித்து முடிவெடுப்பது நீதி மன்றமே.

    இந்த முறையில் இவர்கள் காண்பதே ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் காரணம் நீதிமன்றமும் தான் தனக்கு பதிலாக அமிக்கஸ் குயூர்ரியை நியமிக்கிறது அதற்காக இந்த அமிக்கஸ் குயூர்ரி சொல்வதை அவர் தரும் அறிக்கையை மட்டுமே வைத்து தீர்ப்பளிப்பதில்லை அதை ஒரு பெஞ்ச் கூடி அதனை அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவார்கள்.

    உதாரணத்துக்கு நாம் ஒரு குற்றவாளி ஆனால் நம்மீது இது வரை வழக்குகள் இல்லை எந்தவிதமான தெளிவுகள் அல்லது புகார் எதுவும் இல்லாத பட்சத்திலும் நீதிமன்றத்துக்கு தேவைப்பட்டால் நமக்கு எதிராக ஒரு அமிக்கஸ் குயூர்ரி நியமித்து குற்றத்தை வெளியே கொண்டுவருவார் மேலும் குற்றவாளியுடைய விவாதம் கேட்காமலே தீர்ப்பு வழங்கி தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    9

    எக்‌ஸெல் டேட்டாவை கிடைமட்டமாக ஒட்டலாம்

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அறிவை விட தைரியத்தினால் தான் சில பெரிய காரியங்கள் சாதிக்கபடுகின்றன.

    சாதரணம் நமக்கு எல்லோருக்குமே தெரியும் எக்‌ஷெல்லில் காப்பி எடுத்து பேஸ்ட் செய்வது ஆனால் நாம் பார்க்க போவது கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு டேட்டா உங்களிடம் செங்குத்தான வரிசையில் இருக்கிறது இதை அப்படியே காப்பி எடுத்து பேஸ்ட் செய்வதுதான் எளிதாயிற்றே அப்படியே இரண்டாவதாக இருக்கும் பத்தையும் பாருங்கள் அதாவது செங்குத்தான வரிசையில் இருந்த டேட்டாவை கிடைமட்டமாக பேஸ்ட் செய்திருக்கிறேன் அது எப்படி என பார்க்கலாம் இது எப்போதாவது உங்களுக்கு தேவைப்படும் உதாரணமாக நீங்கள் எக்‌ஷெல்லில் டேட்டா பில்ட்டர் பயன்படுத்தும் போது கிடைமட்டமாக இருந்தால் வசதியாய் இருக்கும்.





    இனி நீங்கள் மாற்ற நினைக்கும் டேட்டாவை காப்பி எடுத்துக்கொள்ளுங்கள் எலியின்(மவுஸ்) வலது பக்கம் கிளிக்கி அதில் Paste Special என்பதை தேர்ந்தெடுங்கள்.



    இனி புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Transpose என்பதை தெரிவு செய்ய அதன் அருகில் உள்ள கட்டத்தில் டிக் குறி ஏற்படுத்தி ஓக்கே கொடுக்கவும்.



    என்ன நண்பர்களே இப்போது பாருங்கள் மொத்த டேட்டாவும் கிடைமட்டமாக மாறியிருக்கும் என்ன நண்பர்களை இது தேவையில்லை என நினைக்கிறீர்களா? தெரிந்து கொள்வதில் தவறில்லையே! உப்யோகமான தகவல் என்றால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    May 20, 2010

    6

    பிளாக்கரில் அரட்டை அறை

  • May 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அறிவாளிகள் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள், முட்டாள்கள் முன்னின்று முடிவெடுப்பார்கள்.

    வணக்கம் நண்பர்களே இது பிளாக்கர் எழுதும் நண்பர்களுக்காக மற்றவர்கள் தெரிந்து கொண்டாலும் தவறில்லை. நாம் சில தளங்களில் அரட்டை அடிப்பதற்கான அரட்டை அறையையும் நிறுவியிருப்பார்கள் அதே போல் நமது வலைத்தளத்திலும் இரண்டு விதமான அரட்டை அறையை நிறுவலாம்.

    முதலாம் வழிமுறை: HTML CODE தரவிறக்கி உங்கள் பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்து Layout திறந்து அதில் Add Gadget என்பதை தெரிவு செய்து புதிதாய் திறக்கும் விண்டோவில் HTML/JavaScript என்பதை தெரிவு செய்து கீழிருக்கும் கோடிங்கை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து ஓக்கே கொடுத்து விடவும்.

    <iframe width="234" frameborder="0" src="http://talkgadget.google.com/talkgadget/client?fid=gtalk0&relay=http%3A%2F%2Fwww.google.com%2Fig%2Fifpc_relay" height="350"> </iframe><p style="margin:-8px 0">
    <center> <a style="text-decoration:none;font-size:70%;" href="http://rohman-freeblogtemplate.blogspot.com/2008/01/add-google-talk-to-blog.html">Add to your blog</a></center></p>



    இரண்டாவது வழிமுறை: சாட் ரோல் அரட்டை அறை இதை நாம் நிறுவிக்கொண்டால் எந்த மின்னஞ்சல் வைத்திருப்பவரும் விரும்பினால் தங்களோடு கலந்துரையாட வசதியாய் இருக்கும் இதை தங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ள விண்டோவை திறந்தவுடன் அதில் இருக்கும் திறக்கும் பக்கத்தில் அங்கு கேக்கும் தேவையான விபரங்களை கொடுக்கவும் இருதியில் உங்களிடன் பிளாக்கருக்கு தேவையான அரட்டை அறையின் HTML கோடு கிடைக்கும் அதை காப்பி எடுத்து நீங்கள் வழக்கம் போல பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்து Layoutல் Add a Gadget என்பதை கிளிக்கி புதிதாய் திறக்கும் விண்டோவில் HTML/JavaScript என்பதை தெரிவு செய்து அதில் நீங்கள் காப்பி எடுத்த HTML கோடிங்கை பேஸ்ட் செய்யவும் அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கரில் அரட்டை அறை நிறுவப்பட்டிருக்கும்.



    இனி நீங்கள் ஆன்லைனில் இருந்தால் உங்கள் பிளாக் படிப்பவர்களோடு உரையாடலாம் அவர்களின் கருத்துகளை கேக்கலாம்

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர