Oct 4, 2011
11
Oct 4, 2011
ஜிஎஸ்ஆர்
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
ஒரு வரி கருத்து: வேண்டாததை தேடும் போது வேண்டியது கை விட்டு போகும்.
வணக்கம் நண்பர்களே கடந்தநட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து அறிவது பற்றி பார்த்தோம்.
இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள
நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம் பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல் எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கபட்டிருந்த்து இந்த பதிவில் இனைக்கப்பட்டிருக்கும் பிடிஎப்-பில் தமிழ் எழுத்துகளும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துகளும், தமிழுக்கு நிகரான ஹிந்தி எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது, புத்தகத்தின் தகவல்கள் யாவும் பல தளங்களில் இருந்து சேகரிக்கபட்டவையே.
இனி அடுத்த்தாக முந்தைய பதிவில் சொல்லியிருந்தபடி பிறந்த நாள், மற்றும் பிறந்த நேரம் வைத்துக்கொண்டு ஜாதகம் கணிப்பது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான மென்பொருள்கள் தருகிறேன் அதே நேரத்தில் இதில் வரும் தகவல்கள் 100% உண்மையானது என்பதை உறுதிபட கூற முடியவில்லை. என் ஜாதகத்தையும் இன்னும் சில ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு சோதித்து பார்க்கும் போது சில மிகச்சரியாய் இருக்கிறது சில தவறாக இருக்கிறது குறிப்பாக குறிப்பாக மதியம் 12 மணி அதற்கு முன்பும் பின்பும், இரவு 12 மணி அதற்கு முன்பும் பின்பும் வரும் பிறப்புகளில் இந்த பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன் மற்றபடி பொதுவான பலன்கள் மற்றும் சிறப்பு பலன்கள் என பார்க்கும் போது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருக்கிறது. இப்போதைய நேரத்தில் உள்ள பிரச்சினைகளை அறிய முடிகிறது சில உடல் உபாதைகள் என்பதாக காட்டப்படுபவையை தவறு என்று நிராகரிக்க முடியவில்லை.
முதலாவதாக Tamil Astrology Software ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி பார்க்கலாம், இதை பயனபடுத்துவது மிக எளிது இதில் தேவையான அயானாம்சம் முறையை தெரிவு செய்யவும் இதற்கு File -> Preference செல்லவும்.

இரண்டாவதாக Tamil Horoscope Software ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த மென்பொருள் இருக்கிறது ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி அதை விட ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என எட்டு மொழிகளில் பலன் தெரிந்துகொள்ள முடியும் இதனால் பிற மொழி பேசுபவர்களுக்கும் இந்த மென்பொருள் உதவும்.

பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் பிறந்த நாள் பலன்கள், பெயருக்கான எண் பலன்கள் போன்றவை பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே கடந்தநட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து அறிவது பற்றி பார்த்தோம்.
இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள
நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம் பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல் எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கபட்டிருந்த்து இந்த பதிவில் இனைக்கப்பட்டிருக்கும் பிடிஎப்-பில் தமிழ் எழுத்துகளும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துகளும், தமிழுக்கு நிகரான ஹிந்தி எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது, புத்தகத்தின் தகவல்கள் யாவும் பல தளங்களில் இருந்து சேகரிக்கபட்டவையே.
இனி அடுத்த்தாக முந்தைய பதிவில் சொல்லியிருந்தபடி பிறந்த நாள், மற்றும் பிறந்த நேரம் வைத்துக்கொண்டு ஜாதகம் கணிப்பது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான மென்பொருள்கள் தருகிறேன் அதே நேரத்தில் இதில் வரும் தகவல்கள் 100% உண்மையானது என்பதை உறுதிபட கூற முடியவில்லை. என் ஜாதகத்தையும் இன்னும் சில ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு சோதித்து பார்க்கும் போது சில மிகச்சரியாய் இருக்கிறது சில தவறாக இருக்கிறது குறிப்பாக குறிப்பாக மதியம் 12 மணி அதற்கு முன்பும் பின்பும், இரவு 12 மணி அதற்கு முன்பும் பின்பும் வரும் பிறப்புகளில் இந்த பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன் மற்றபடி பொதுவான பலன்கள் மற்றும் சிறப்பு பலன்கள் என பார்க்கும் போது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருக்கிறது. இப்போதைய நேரத்தில் உள்ள பிரச்சினைகளை அறிய முடிகிறது சில உடல் உபாதைகள் என்பதாக காட்டப்படுபவையை தவறு என்று நிராகரிக்க முடியவில்லை.
முதலாவதாக Tamil Astrology Software ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி பார்க்கலாம், இதை பயனபடுத்துவது மிக எளிது இதில் தேவையான அயானாம்சம் முறையை தெரிவு செய்யவும் இதற்கு File -> Preference செல்லவும்.
இரண்டாவதாக Tamil Horoscope Software ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த மென்பொருள் இருக்கிறது ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி அதை விட ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என எட்டு மொழிகளில் பலன் தெரிந்துகொள்ள முடியும் இதனால் பிற மொழி பேசுபவர்களுக்கும் இந்த மென்பொருள் உதவும்.

பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் பிறந்த நாள் பலன்கள், பெயருக்கான எண் பலன்கள் போன்றவை பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Oct 3, 2011
26
Oct 3, 2011
ஜிஎஸ்ஆர்
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஒரு வரி கருத்து: நல்லொழுக்கம் பகைவரையும் வென்று விடும்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.

விஞ்ஞானம் மெய்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஜோதிட்த்தின் மீதான நம்பிக்கை ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது அதன் அடிப்படையில் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள் பிறந்த நேரத்தை குறித்து வைத்து யாராவது ஒரு ஜோதிடரிம் கொடுத்து அவர்கள் வழியாக நட்சத்திரமும், ராசியும், , அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் ஜாதகமும் எழுதி வாங்குவது வழக்கம். ராசி நட்சத்திரம் சரியாக தெரிந்துகொள்ள முடிகிறது அதே நேரத்தில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்கள் அவ்வளவு சிறப்பானதாக தெரியவில்லை இருப்பினும் அதற்கான தரவிறக்கமும் தருகிறேன்.
இனி முதலில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க.
குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி
முதலாவதாக Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) தளம் சென்று பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கொடுக்கவும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் Time Zone மாற்ற வேண்டியதில்லை வெளி நாடுகளில் பிறந்த குழந்தையாய் இருக்கும்பட்சத்தில் அதற்கான Time Zone மாற்றவேண்டியது அவசியமாகும் இந்த தளம் உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 1901 ம் ஆண்டு முதல் 2100 ம் ஆண்டு வரையிலான நட்சத்திரம் மற்றும் ராசி இரண்டையும் எளிதாக அறிய முடியும்.
இரண்டாவதாக இவர்களும் Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) சரியான பதிலை தருகிறார்கள் ஆனால் கொஞ்சம் நம்மை அதிகம் கேள்வி கேட்டு குழப்புவார்கள் உதாரணத்துக்கு Latitude, Longitude இவையிரண்டும் ஜோதிட்த்தில் அவசியமே ஆனால் நமக்கு சரியான இடத்திற்கான Latitude, Longitude எல்லோருக்கும் தெரிவதில்லை ஆனால் அதை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான மென்பொருள் ஜாதகம் கணிக்கும் மென்பொருளின் உள்ளே அந்த வசதியும் இருக்கிறது அதை வைத்து இங்கு தேவையான Latitude, Longitude இரண்டையும் நிரப்ப முடியும். இவர்களின் முடிவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.
மூன்றவதாக முழுவதும் தமிழ் பெயர்கள் மற்றும் எந்த நட்சத்திரத்துக்கு எந்த எழுத்து தமிழில் தொடங்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள தமிழில் பெயர் மற்றும் நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
இப்பொழுது உங்களால் மிக எளிதாக பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் மேலும் நட்சத்திர, மற்றும் ராசி பலன்கள் தெரிந்து கொள்ள.
நட்சத்திரம் மற்றும் ராசியின் பொதுவான பலன்கள்
பொதுவான நட்சத்திர பலன் தெரிந்து கொள்ள tamilkalanjiyam , astrology.himadurai
பொதுவான ராசி பலன் தெரிந்து கொள்ள astrology.dinakaran
இனி நட்சதிரத்துகான பெயர் அடிப்படையில் பெயர் வைப்பதற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்து தொடக்க எழுத்தாக அமையவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள.
பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstar எழுத்துக்கள் தமிங்கிழிஷ் அடிப்படையை கொண்டது உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்துக்கு Cho, Che, Chu, La இதை சு,சே,சோ,ல என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும், தெவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
பிறந்த குழந்தைக்கான நட்சத்திரம் ராசி தெரிந்து கொண்டாகி விட்டது அதனிடையே பொதுவான நட்சத்திர, ராசி பலனகளும் தெரிந்துகொண்டோம் இனி குழந்தைகளுக்கான பெயர் எந்த தளங்களில் தேடலாம் என்பதற்காக சில தளங்களை வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கான பெயர்கள் தேட
web.archive.org
thamizhagam.net
shaivam.org
pudhucherry.com
anbutamil.com
babynames.looktamil.com
indiaparenting.com
hinduchildnames.com
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் ஜாதகம்,திருமண பொருத்தம்,வருட பலன் தெரிந்துகொள்வது பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.

விஞ்ஞானம் மெய்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஜோதிட்த்தின் மீதான நம்பிக்கை ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது அதன் அடிப்படையில் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள் பிறந்த நேரத்தை குறித்து வைத்து யாராவது ஒரு ஜோதிடரிம் கொடுத்து அவர்கள் வழியாக நட்சத்திரமும், ராசியும், , அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் ஜாதகமும் எழுதி வாங்குவது வழக்கம். ராசி நட்சத்திரம் சரியாக தெரிந்துகொள்ள முடிகிறது அதே நேரத்தில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்கள் அவ்வளவு சிறப்பானதாக தெரியவில்லை இருப்பினும் அதற்கான தரவிறக்கமும் தருகிறேன்.
இனி முதலில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க.
குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி
முதலாவதாக Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) தளம் சென்று பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கொடுக்கவும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் Time Zone மாற்ற வேண்டியதில்லை வெளி நாடுகளில் பிறந்த குழந்தையாய் இருக்கும்பட்சத்தில் அதற்கான Time Zone மாற்றவேண்டியது அவசியமாகும் இந்த தளம் உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 1901 ம் ஆண்டு முதல் 2100 ம் ஆண்டு வரையிலான நட்சத்திரம் மற்றும் ராசி இரண்டையும் எளிதாக அறிய முடியும்.
இரண்டாவதாக இவர்களும் Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) சரியான பதிலை தருகிறார்கள் ஆனால் கொஞ்சம் நம்மை அதிகம் கேள்வி கேட்டு குழப்புவார்கள் உதாரணத்துக்கு Latitude, Longitude இவையிரண்டும் ஜோதிட்த்தில் அவசியமே ஆனால் நமக்கு சரியான இடத்திற்கான Latitude, Longitude எல்லோருக்கும் தெரிவதில்லை ஆனால் அதை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான மென்பொருள் ஜாதகம் கணிக்கும் மென்பொருளின் உள்ளே அந்த வசதியும் இருக்கிறது அதை வைத்து இங்கு தேவையான Latitude, Longitude இரண்டையும் நிரப்ப முடியும். இவர்களின் முடிவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.
மூன்றவதாக முழுவதும் தமிழ் பெயர்கள் மற்றும் எந்த நட்சத்திரத்துக்கு எந்த எழுத்து தமிழில் தொடங்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள தமிழில் பெயர் மற்றும் நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
இப்பொழுது உங்களால் மிக எளிதாக பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் மேலும் நட்சத்திர, மற்றும் ராசி பலன்கள் தெரிந்து கொள்ள.
நட்சத்திரம் மற்றும் ராசியின் பொதுவான பலன்கள்
பொதுவான நட்சத்திர பலன் தெரிந்து கொள்ள tamilkalanjiyam , astrology.himadurai
பொதுவான ராசி பலன் தெரிந்து கொள்ள astrology.dinakaran
இனி நட்சதிரத்துகான பெயர் அடிப்படையில் பெயர் வைப்பதற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்து தொடக்க எழுத்தாக அமையவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள.
பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstar எழுத்துக்கள் தமிங்கிழிஷ் அடிப்படையை கொண்டது உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்துக்கு Cho, Che, Chu, La இதை சு,சே,சோ,ல என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும், தெவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
பிறந்த குழந்தைக்கான நட்சத்திரம் ராசி தெரிந்து கொண்டாகி விட்டது அதனிடையே பொதுவான நட்சத்திர, ராசி பலனகளும் தெரிந்துகொண்டோம் இனி குழந்தைகளுக்கான பெயர் எந்த தளங்களில் தேடலாம் என்பதற்காக சில தளங்களை வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கான பெயர்கள் தேட
web.archive.org
thamizhagam.net
shaivam.org
pudhucherry.com
anbutamil.com
babynames.looktamil.com
indiaparenting.com
hinduchildnames.com
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் ஜாதகம்,திருமண பொருத்தம்,வருட பலன் தெரிந்துகொள்வது பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
11
ஜிஎஸ்ஆர்
அயல் தேசத்து அநாதை
ஒரு வரி கருத்து: உதாரணமாய் நடப்பதே சிறந்த போதனை.
வணக்கம் நண்பர்களே பொதுவாகவே கவிதைகளை பொருத்தவரை பத்து பக்கத்தில் எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயத்தை வெறும் பத்து வரிகளுக்குள் எழுதி சாட்டையில் அடித்தாற் போல புரிய வைத்துவிடும். இப்படித்தான் இந்த கவிதையும் இருக்க போகிறது ஒவ்வொரு வரியிலும் ஏக்கமும், சோகமும், விரக்தியும் ஒவ்வொரு வரிகளிலிலும் தெறிக்க போகிறது.. முகம் அறியா நண்பர் வழியாக வந்தடைந்த ’ஒரு சிறு கவிதையை’, வெளிநாட்டு நண்பர்களுடன் கிடைத்த கலந்துரையாடலாலும் அவர்களுடான பேச்சின் போதான மனநிலையையும் மனதில் உருவகபடுத்தி என் அரைகுறை கவிதை ஞானத்தோடு எழுதியதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
என் மற்ற கவிதைகளை படித்து ரசித்தவர்கள், இந்த கவிதையை படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், நடைமுறை வாழ்க்கையில் அவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள், அவர்களும் மனிதர்களே!ஆம் உணர்ச்சிகளை மாற்றி வைத்த மனிதர்கள்!.
அயல் தேசத்து அநாதை

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து அநாதைகளின் ..
கண்ணீர் கதை !
விசாரிப்புகளோடும்
எதிர்பார்ப்புகளுடனும் வருகின்ற ...
தொலைபேசி அழைப்புகளை நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !
நாங்கள் பூசிக்கொள்ளும்
நறுமணத்தில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?
வசந்தமில்லாமால் தான் தவிக்கிறோம்!
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு!
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மர உச்சியில் நின்று ...
ஒரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு
ஆற்றில் பிடித்த மீன்
பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !
கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக் கூறி
வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமலே போய்விட்டது...
கண்டிப்பாய் வரவேண்டும் என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு-ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
நண்பர்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து அநாதைகள் தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்... நண்பர்களின் ...
துக்கச் செய்திக்கெல்லாம்
ஊர் நினைவுகள் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!
இறுதிநாள் நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும்-திர்ஹமும்-டாலரும்
தந்துவிடுவதில்லை?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?
பெற்ற குழந்தையின் முகத்தை கூட
தொலைபேசி வழியாகத்தான்
உருவகபடுத்தி
சிலாகித்து கொள்கிறோம்
யாருக்கு புரியும் எங்கள் ஏக்கம்!.....
ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
முதல் பார்வை...
நெருங்கியவர்களின்
மவுணம், திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
குழந்தைகளின் எதிர்காலமும்...
எதிர்கால பயமும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
இப்படிக்கு
அயல் தேசத்து அநாதை
என்ன நண்பர்களே படிச்சிங்களா உங்கள் நண்பர்களோ அல்லது உங்கள் உடன் பிறந்த சகோதரர்களோ இது போல வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்ககூடும் உங்களுக்கு அவர்கள் ஏக்கம் தெரியாது எதையும் நாமாக நேரிடையாக அனுபவப்படும் போது மட்டுமே அதன் வலியும் தாக்கமும் புரியும் ஆனாலும் இந்த கவிதையை படித்து முடிக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் உங்களின் வேண்டப்பட்டவர்களின் வலிகளையும் வேதனைகளையும் உங்களால் உணர முடியும் என்றே நம்புகிறேன்..
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே பொதுவாகவே கவிதைகளை பொருத்தவரை பத்து பக்கத்தில் எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயத்தை வெறும் பத்து வரிகளுக்குள் எழுதி சாட்டையில் அடித்தாற் போல புரிய வைத்துவிடும். இப்படித்தான் இந்த கவிதையும் இருக்க போகிறது ஒவ்வொரு வரியிலும் ஏக்கமும், சோகமும், விரக்தியும் ஒவ்வொரு வரிகளிலிலும் தெறிக்க போகிறது.. முகம் அறியா நண்பர் வழியாக வந்தடைந்த ’ஒரு சிறு கவிதையை’, வெளிநாட்டு நண்பர்களுடன் கிடைத்த கலந்துரையாடலாலும் அவர்களுடான பேச்சின் போதான மனநிலையையும் மனதில் உருவகபடுத்தி என் அரைகுறை கவிதை ஞானத்தோடு எழுதியதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
என் மற்ற கவிதைகளை படித்து ரசித்தவர்கள், இந்த கவிதையை படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், நடைமுறை வாழ்க்கையில் அவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள், அவர்களும் மனிதர்களே!ஆம் உணர்ச்சிகளை மாற்றி வைத்த மனிதர்கள்!.
அயல் தேசத்து அநாதை

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து அநாதைகளின் ..
கண்ணீர் கதை !
விசாரிப்புகளோடும்
எதிர்பார்ப்புகளுடனும் வருகின்ற ...
தொலைபேசி அழைப்புகளை நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !
நாங்கள் பூசிக்கொள்ளும்
நறுமணத்தில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?
வசந்தமில்லாமால் தான் தவிக்கிறோம்!
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு!
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மர உச்சியில் நின்று ...
ஒரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு
ஆற்றில் பிடித்த மீன்
பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !
கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக் கூறி
வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமலே போய்விட்டது...
கண்டிப்பாய் வரவேண்டும் என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு-ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
நண்பர்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து அநாதைகள் தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்... நண்பர்களின் ...
துக்கச் செய்திக்கெல்லாம்
ஊர் நினைவுகள் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!
இறுதிநாள் நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும்-திர்ஹமும்-டாலரும்
தந்துவிடுவதில்லை?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?
பெற்ற குழந்தையின் முகத்தை கூட
தொலைபேசி வழியாகத்தான்
உருவகபடுத்தி
சிலாகித்து கொள்கிறோம்
யாருக்கு புரியும் எங்கள் ஏக்கம்!.....
ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
முதல் பார்வை...
நெருங்கியவர்களின்
மவுணம், திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
குழந்தைகளின் எதிர்காலமும்...
எதிர்கால பயமும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
இப்படிக்கு
அயல் தேசத்து அநாதை
என்ன நண்பர்களே படிச்சிங்களா உங்கள் நண்பர்களோ அல்லது உங்கள் உடன் பிறந்த சகோதரர்களோ இது போல வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்ககூடும் உங்களுக்கு அவர்கள் ஏக்கம் தெரியாது எதையும் நாமாக நேரிடையாக அனுபவப்படும் போது மட்டுமே அதன் வலியும் தாக்கமும் புரியும் ஆனாலும் இந்த கவிதையை படித்து முடிக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் உங்களின் வேண்டப்பட்டவர்களின் வலிகளையும் வேதனைகளையும் உங்களால் உணர முடியும் என்றே நம்புகிறேன்..
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Sep 29, 2011
14
Sep 29, 2011
ஜிஎஸ்ஆர்
ச்சும்மா இரண்டு கணக்கு..
ஒரு வரி கருத்து: வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது
வணக்கம் நண்பர்களே அதிகமான பதிவுகள் எழுதுவதற்கு போதிய நேரமின்மையும்,அயற்சியும் காரணமாய் இருக்கிறது, தொடர்ந்து தளம் வந்து சேரும் நண்பர்கள் இனைந்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.இனி இந்த பதிவின் வழியாக இரண்டு கணக்குகள் பார்க்கலாம் இரண்டிற்கும் சூத்திரம் ஒன்றும் வேண்டியதில்லை, இதற்கென கொஞ்சம் நேரம் செலவழித்து உங்கள் கணித திறமையை சோதித்து தான் பாருங்களேன். இந்த கணக்குகளுக்கான விடையை நான் சில தினங்கள் கழித்து வெளியிடுகிறேன் அதற்கு முன்பாக நீங்கள் விடையை கண்டுபிடித்து பின்னுட்டத்தில் தெரிவியுங்கள் இதற்காக பின்னுட்டங்களை மட்டுப்படுத்த போவதில்லை.
முதல் கணக்கு
உங்களிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது, அதே நேரத்தில் அந்த ஆயிரம் ரூபாயை பத்து பெட்டிகளில் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்பதாக நினைவில் வைக்கவும், இனி உங்களிடம் நான் ஐம்பது ரூபாய் கேட்கிறேன் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு நீங்கள் பணம் தரும் பொழுது பெட்டிகளாக மட்டுமே தரவேண்டும், தேவைக்கு ஏற்றார்போல ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு எடுத்தெல்லாம் தரக்கூடாது.
நான் தங்களிடம் கேட்ட ஐம்பது ரூபாயை உதாரணமாக ஒரு பெட்டியில் 10 ரூபாய், மற்றொரு பெட்டியில் 20 ரூபாய், வேறொரு பெட்டியில் 20 ரூபாய் இருந்தால் எனக்கு எளிதில் கொடுக்கலாம்.அதே நேரத்தில் ஒரு பெட்டியில் இருந்து வேறொரு பெட்டிக்கு பணம் மாற்றி எடுத்தெல்லாம் கொடுக்க கூடாது.
இந்த மாதிரியாக நான் ஒன்று முதல் ஆயிரத்துக்குள் எவ்வளவு பணம் கேட்டாலும் பெட்டிகளாய் மட்டும் எடுத்துகொடுக்க வேண்டும்
இனி கீழிருக்கும் பெட்டிகளை பாருங்கள் பத்து பெட்டி இருக்கிறது ஒவ்வொரு பெட்டியிலும் தலா ரூ100 இருக்கிறது ஆக மொத்தம் ஆயிரம் இருக்கிறது இது உதாரணத்துக்கு மட்டுமே.
நான் தங்களிடம் பணம் ஒன்று முதல் ஆயிரம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம், நான் எவ்வளவு பணம் கேட்டாலும் நீங்கள் பெட்டிகளாக மட்டுமே எடுத்து தரவேண்டும், உதாரணத்திற்கு நான் முந்நூறு கேட்டால் நீங்கள் மூன்று பெட்டிகளை எடுத்து தரலாம், அதே நேரத்தில் நான் வெறும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டால் ஒரு ரூபாய் உள்ள ஒரு பெட்டியை மட்டுமே எடுத்து கொடுக்கலாம், இப்படியாக நான் எந்த தொகை கேட்டாலும் பெட்டிகளாக மட்டுமே தரவேண்டும்.
நான் எவ்வளவு பணம் கேட்டாலும் தரக்கூடிய வழியில் பணம் பெட்டியில் இருக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு பெட்டியிலும் எவ்வளவு பணம் போடு வைப்பீர்கள்.விடையை கண்டுபிடித்து பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.
இரண்டாவது கணக்கு
நீங்கள் ஒரு வியாபாரி தங்களிடம் மொத்தம் நான்கு எடைக்கற்கள் இருக்கிறது அதன் மொத்த எடை 40 கிலோ மட்டுமே இந்த நான்கு எடைக்கற்களும் எந்த எடையில் வேண்டுமானாலும் இருக்காலம் ஆனால் 40 கிலோவிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.
நான் உதாரணத்திற்கு நான்கு எடைக்கற்களின் எடை கொடுத்திருக்கிறேன் இதே போல நீங்கள் விரும்பும் வைகையில் எடைக்கற்களின் எடையை வைத்துக்கொள்ளலாம்.
இனி கணக்கிற்கான கேள்விக்குள் வருகிறேன் உங்களிடம் வரும் வாடிக்கையாளர் 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான பொருள்களை வாங்க வரலாம், உதாரணாமாக நான் தங்களிடம் வந்து 27 கிலோ அளவில் அரிசி கேட்கிறேன் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், தங்களிடம் முறையே 5 கிலோ, 10 கிலோ, 12 கிலோ எடைக்கற்கள் இருந்தால் எனக்கான 27 கிலோ எடைகான பொருளை கொடுத்து விட முடியும்.
ஒரு வேளை நான் தஙகளிடம் வெறும் 1 கிலோ அளவிளான பொருளை கேட்டால் உங்களிம் இருக்கும் 12 கிலோ, 13 கிலோ எடைக்கற்களை ஒரு பக்கத்தில் 13 கிலோ எடைக்கல்லையும் மற்றொரு பக்கத்தில் 12 கிலோ எடைக்கல்லையும் வைத்து , 12 கிலோ எடைக்கல் இருக்கும் பகுதியில் எனக்கான 1 கிலோ அளவிலான பொருளை எடை போட்டு கொடுத்து விட முடியும்.
இனி இரண்டாவது கணக்கிற்கான கேள்வி நான் உங்களிடம் 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான எந்த எடையில் பொருள் கேட்டாலும் தங்களால் கொடுக்க முடியவேண்டும், அப்படியானால் உங்களிடம் எந்த எடையில் எடைக் கற்கள் இருந்தால் கொடுக்க முடியும்? நான்கு எடைக்கற்கள் எந்த எடையில் இருக்க வேண்டும்.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே அதிகமான பதிவுகள் எழுதுவதற்கு போதிய நேரமின்மையும்,அயற்சியும் காரணமாய் இருக்கிறது, தொடர்ந்து தளம் வந்து சேரும் நண்பர்கள் இனைந்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.இனி இந்த பதிவின் வழியாக இரண்டு கணக்குகள் பார்க்கலாம் இரண்டிற்கும் சூத்திரம் ஒன்றும் வேண்டியதில்லை, இதற்கென கொஞ்சம் நேரம் செலவழித்து உங்கள் கணித திறமையை சோதித்து தான் பாருங்களேன். இந்த கணக்குகளுக்கான விடையை நான் சில தினங்கள் கழித்து வெளியிடுகிறேன் அதற்கு முன்பாக நீங்கள் விடையை கண்டுபிடித்து பின்னுட்டத்தில் தெரிவியுங்கள் இதற்காக பின்னுட்டங்களை மட்டுப்படுத்த போவதில்லை.
முதல் கணக்கு
உங்களிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது, அதே நேரத்தில் அந்த ஆயிரம் ரூபாயை பத்து பெட்டிகளில் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்பதாக நினைவில் வைக்கவும், இனி உங்களிடம் நான் ஐம்பது ரூபாய் கேட்கிறேன் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு நீங்கள் பணம் தரும் பொழுது பெட்டிகளாக மட்டுமே தரவேண்டும், தேவைக்கு ஏற்றார்போல ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு எடுத்தெல்லாம் தரக்கூடாது.நான் தங்களிடம் கேட்ட ஐம்பது ரூபாயை உதாரணமாக ஒரு பெட்டியில் 10 ரூபாய், மற்றொரு பெட்டியில் 20 ரூபாய், வேறொரு பெட்டியில் 20 ரூபாய் இருந்தால் எனக்கு எளிதில் கொடுக்கலாம்.அதே நேரத்தில் ஒரு பெட்டியில் இருந்து வேறொரு பெட்டிக்கு பணம் மாற்றி எடுத்தெல்லாம் கொடுக்க கூடாது.
இந்த மாதிரியாக நான் ஒன்று முதல் ஆயிரத்துக்குள் எவ்வளவு பணம் கேட்டாலும் பெட்டிகளாய் மட்டும் எடுத்துகொடுக்க வேண்டும்
இனி கீழிருக்கும் பெட்டிகளை பாருங்கள் பத்து பெட்டி இருக்கிறது ஒவ்வொரு பெட்டியிலும் தலா ரூ100 இருக்கிறது ஆக மொத்தம் ஆயிரம் இருக்கிறது இது உதாரணத்துக்கு மட்டுமே.
| Box 1 | Box 2 | Box 3 | Box 4 | Box 5 | Box 6 | Box 7 | Box 8 | Box 9 | Box 10 |
| 100 | 100 | 100 | 100 | 100 | 100 | 100 | 100 | 100 | 100 |
நான் தங்களிடம் பணம் ஒன்று முதல் ஆயிரம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம், நான் எவ்வளவு பணம் கேட்டாலும் நீங்கள் பெட்டிகளாக மட்டுமே எடுத்து தரவேண்டும், உதாரணத்திற்கு நான் முந்நூறு கேட்டால் நீங்கள் மூன்று பெட்டிகளை எடுத்து தரலாம், அதே நேரத்தில் நான் வெறும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டால் ஒரு ரூபாய் உள்ள ஒரு பெட்டியை மட்டுமே எடுத்து கொடுக்கலாம், இப்படியாக நான் எந்த தொகை கேட்டாலும் பெட்டிகளாக மட்டுமே தரவேண்டும்.
நான் எவ்வளவு பணம் கேட்டாலும் தரக்கூடிய வழியில் பணம் பெட்டியில் இருக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு பெட்டியிலும் எவ்வளவு பணம் போடு வைப்பீர்கள்.விடையை கண்டுபிடித்து பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.
இரண்டாவது கணக்கு
நீங்கள் ஒரு வியாபாரி தங்களிடம் மொத்தம் நான்கு எடைக்கற்கள் இருக்கிறது அதன் மொத்த எடை 40 கிலோ மட்டுமே இந்த நான்கு எடைக்கற்களும் எந்த எடையில் வேண்டுமானாலும் இருக்காலம் ஆனால் 40 கிலோவிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.
நான் உதாரணத்திற்கு நான்கு எடைக்கற்களின் எடை கொடுத்திருக்கிறேன் இதே போல நீங்கள் விரும்பும் வைகையில் எடைக்கற்களின் எடையை வைத்துக்கொள்ளலாம்.
| Weight Kg | Weight Kg | Weight Kg | Weight Kg |
| 5 | 10 | 12 | 13 |
இனி கணக்கிற்கான கேள்விக்குள் வருகிறேன் உங்களிடம் வரும் வாடிக்கையாளர் 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான பொருள்களை வாங்க வரலாம், உதாரணாமாக நான் தங்களிடம் வந்து 27 கிலோ அளவில் அரிசி கேட்கிறேன் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், தங்களிடம் முறையே 5 கிலோ, 10 கிலோ, 12 கிலோ எடைக்கற்கள் இருந்தால் எனக்கான 27 கிலோ எடைகான பொருளை கொடுத்து விட முடியும்.
ஒரு வேளை நான் தஙகளிடம் வெறும் 1 கிலோ அளவிளான பொருளை கேட்டால் உங்களிம் இருக்கும் 12 கிலோ, 13 கிலோ எடைக்கற்களை ஒரு பக்கத்தில் 13 கிலோ எடைக்கல்லையும் மற்றொரு பக்கத்தில் 12 கிலோ எடைக்கல்லையும் வைத்து , 12 கிலோ எடைக்கல் இருக்கும் பகுதியில் எனக்கான 1 கிலோ அளவிலான பொருளை எடை போட்டு கொடுத்து விட முடியும்.
இனி இரண்டாவது கணக்கிற்கான கேள்வி நான் உங்களிடம் 1 கிலோ முதல் 40 கிலோ வரையிலான எந்த எடையில் பொருள் கேட்டாலும் தங்களால் கொடுக்க முடியவேண்டும், அப்படியானால் உங்களிடம் எந்த எடையில் எடைக் கற்கள் இருந்தால் கொடுக்க முடியும்? நான்கு எடைக்கற்கள் எந்த எடையில் இருக்க வேண்டும்.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jul 7, 2011
20
Jul 7, 2011
ஜிஎஸ்ஆர்
வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்தால் மந்தபுத்தி (அறிவியல் உண்மை)
ஒரு வரி கருத்து: எப்படி பாரட்டுவதென்று தெரியாமல் அறியாத விஷயத்தை குறை சொல்லாதீர்கள்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எத்தனையோ நண்பர்கள், பெரியோர்கள் இதனை பற்றி தெரியாமல் இருக்க கூடும் ஆனால் நம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா.. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நமக்கு எல்லோருக்கும் தெரியும் நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது நமது கிரகங்களும் (Planet) காந்த முனைவுகளை கொண்டுள்ளது நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது இதை சாதரணமாக நம்மிடம் இருக்கும் திசை காட்டும் கருவியில் (Compass) பார்த்தாலே தெரியும். திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும் எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும் இந்த காந்த சக்தியை முன்பே விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னொர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் தெற்கு கிழக்கு பகுதிகளில் சரி சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமால் எழுந்திருக்க முடியும்.
நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய் ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது இது நம் இந்தியாவில் இதை கடைபிடிக்கிறார்கள் வேறு இடங்களில் குறைவாகவே இருக்கிறது.
மேலும் இது பற்றிய ஆராய்ச்சியில் வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத்தன்மையும் மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும் அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது உறங்கும் போது கிழக்கு பக்கம் தலை வைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும். இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம்.
சரி என்ன பெரிய தூக்கம் தூங்கின பின் நமக்கு என்ன தெரியபோகுது? எப்படி தூங்குனா தான் என்ன என கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் இரவு தூக்கம் சரியில்லை என்றால் அன்றைய தினம் விடிந்ததும் உங்களால் அசூசையான நிலையை உணரமுடியும் பின்ன என்ன எடுத்ததுக்கெல்லாம் எரிச்சல் வரும் வீட்டில் சண்டை வரும் அதோடு அலுவகம் சென்றால் அங்கு சொல்லவே வேண்டாம் உங்கள் தூக்கம் தான் பிரச்சினைகளை விடுபட வைக்கும் சரியான தூக்கமின்மையும் மேலும் சில வியாதிகளை பரிசாக தரும் சரியான நேரத்தில் தூங்கி எழுபவரின் மூளைக்கும் மன உளைசல் அல்லது இன்ன பிற காரணங்களால் தூங்காதவர்களின் மூளையும் EGG (ELECTRICAL ACTIVITY IN THE BRAIN) என்கிற பரிசோதனையில் அதிகம் வித்யாசம் வருவதாக சொல்கிறார்கள்.
நாம் சரியாக தூங்காத போது நம் உடலின் தசைகளும் ரிலாக்ஸாக ஆவதில்லையாம் மாறாக முறுக்கு கூடி அதனாலே முதுகு வலி, கை கால் வலி வரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது அதே போலவே தூங்குவதும் எழுந்திருப்பதும் ஒரு சரியான நேரத்தை வழமையாக்கி கொள்வது நல்லது அதனால் உடல் சரியான இயக்கதில் இருக்கவும் செய்யும்.
வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்து படுத்தால் மந்த புத்தி சுகவீணம், தன்னம்பிக்கை குறைவு வரும்.
தெற்கு கிழக்கு தலை வைத்து படுப்பதால் காந்த சக்தியால் நமக்கு இழப்பு ஏற்படுவதில்லை தேவையில்லாதா அசூசகமான நிலை வருவதில்லை.
ஓவ்வொரு நபருக்கும் தூக்கத்திற்கான அளவுகள் இருக்கிறது.
குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்க வேண்டும்
இளைஞர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேண்டும்
வயது வந்தவர்கள் 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.
கர்ப்பமான பெண்கள் வழமையாக தூங்கும் நேரத்தை விட மேலும் சில மணி நேரங்கள் உறங்குவது நல்லது.
நண்பர்களே ஒரு அன்பான வேண்டுகோள் இதற்கு பெயரும் காதலாமே! பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.
மேலும் தகவல்களுக்கு wikipedia
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எத்தனையோ நண்பர்கள், பெரியோர்கள் இதனை பற்றி தெரியாமல் இருக்க கூடும் ஆனால் நம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா.. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நமக்கு எல்லோருக்கும் தெரியும் நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது நமது கிரகங்களும் (Planet) காந்த முனைவுகளை கொண்டுள்ளது நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது இதை சாதரணமாக நம்மிடம் இருக்கும் திசை காட்டும் கருவியில் (Compass) பார்த்தாலே தெரியும். திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும் எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும் இந்த காந்த சக்தியை முன்பே விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னொர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் தெற்கு கிழக்கு பகுதிகளில் சரி சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமால் எழுந்திருக்க முடியும். நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய் ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது இது நம் இந்தியாவில் இதை கடைபிடிக்கிறார்கள் வேறு இடங்களில் குறைவாகவே இருக்கிறது.
மேலும் இது பற்றிய ஆராய்ச்சியில் வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத்தன்மையும் மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும் அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது உறங்கும் போது கிழக்கு பக்கம் தலை வைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும். இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம்.
சரி என்ன பெரிய தூக்கம் தூங்கின பின் நமக்கு என்ன தெரியபோகுது? எப்படி தூங்குனா தான் என்ன என கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் இரவு தூக்கம் சரியில்லை என்றால் அன்றைய தினம் விடிந்ததும் உங்களால் அசூசையான நிலையை உணரமுடியும் பின்ன என்ன எடுத்ததுக்கெல்லாம் எரிச்சல் வரும் வீட்டில் சண்டை வரும் அதோடு அலுவகம் சென்றால் அங்கு சொல்லவே வேண்டாம் உங்கள் தூக்கம் தான் பிரச்சினைகளை விடுபட வைக்கும் சரியான தூக்கமின்மையும் மேலும் சில வியாதிகளை பரிசாக தரும் சரியான நேரத்தில் தூங்கி எழுபவரின் மூளைக்கும் மன உளைசல் அல்லது இன்ன பிற காரணங்களால் தூங்காதவர்களின் மூளையும் EGG (ELECTRICAL ACTIVITY IN THE BRAIN) என்கிற பரிசோதனையில் அதிகம் வித்யாசம் வருவதாக சொல்கிறார்கள்.
நாம் சரியாக தூங்காத போது நம் உடலின் தசைகளும் ரிலாக்ஸாக ஆவதில்லையாம் மாறாக முறுக்கு கூடி அதனாலே முதுகு வலி, கை கால் வலி வரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது அதே போலவே தூங்குவதும் எழுந்திருப்பதும் ஒரு சரியான நேரத்தை வழமையாக்கி கொள்வது நல்லது அதனால் உடல் சரியான இயக்கதில் இருக்கவும் செய்யும்.
வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்து படுத்தால் மந்த புத்தி சுகவீணம், தன்னம்பிக்கை குறைவு வரும்.
தெற்கு கிழக்கு தலை வைத்து படுப்பதால் காந்த சக்தியால் நமக்கு இழப்பு ஏற்படுவதில்லை தேவையில்லாதா அசூசகமான நிலை வருவதில்லை.
ஓவ்வொரு நபருக்கும் தூக்கத்திற்கான அளவுகள் இருக்கிறது.
குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்க வேண்டும்
இளைஞர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேண்டும்
வயது வந்தவர்கள் 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.
கர்ப்பமான பெண்கள் வழமையாக தூங்கும் நேரத்தை விட மேலும் சில மணி நேரங்கள் உறங்குவது நல்லது.
நண்பர்களே ஒரு அன்பான வேண்டுகோள் இதற்கு பெயரும் காதலாமே! பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.
மேலும் தகவல்களுக்கு wikipedia
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 27, 2011
8
Jun 27, 2011
ஜிஎஸ்ஆர்
இதற்கு பெயரும் காதலாமே!
ஒரு வரி கருத்து: காதலில் பைத்தியக்காரத்தனம் இல்லையென்றால் அது காதலே இல்லை.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நான் சந்தித்த, கேட்டறிந்த விஷயத்தை பற்றி பதிகிறேன் சில பல நாட்களாக லிவின் டு கெதர் என்கிற ஒரு கலாச்சாரத்தை இருவிதமான கருத்துகளை பல இடங்களிலும் கேட்க நேர்ந்தது, படிக்க நேர்ந்தது நான் நிச்சியமாய் இதைப் பற்றி எழுதபோவதில்லை அதே நேரத்தில் காதலோடு தொடர்புடைய சில பிரச்சினைகளை கண்டு காதலித்தவர்கள் தம்மில் தம் பிரிந்து செல்கிறார்கள் இதை பலர் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள் இன்னும் சிலர் இதற்காக இன்னும் சிலர் ஏதேதோ காரணங்கள் சொல்லி விலகி செல்கிறார்கள்.
பொதுவாகவே காதலை எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை சினிமாவில் மட்டும் வேண்டுமானால் காதலை ஏற்றுக்கொண்டு அதை ஆசிர்வதிக்கும் தாய் தந்தையரை, உறவினரை பார்க்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்னவோ கசக்கும் வேப்பாங்காய் தான் பெற்றோருக்கும் சரி உறவிணர்களுக்கும் சரி சம்பந்தமே இல்லாத ஊராரும் சரி இந்த விஷயத்தில் எல்லோர் மன நிலையும் ஓரே மாதிரியாகத்தான் இருக்கிறது இதை பற்றி எழுதும் எனது மனநிலையும் கூட மேலே சொன்னவர்களை போலத்தான் இருக்கிறது.
காதல் என்பதன் அர்த்தம் அன்பு என்பது தானே அப்படியானால் எல்லோருக்கும் காதல் உணர்வு இருக்கிறது தாம் பெற்ற பிள்ளை மேல் தாய் தந்தையர் வைத்திருக்கும் அன்பிற்கு பெயரும் காதல் தானே! தங்கள் அன்பை மட்டுமே பிரதானமாக நினைக்கும் தாய் தந்தையர் உறவிணர்கள் ஏன் பருவம் அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ காதல் வருவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? இந்த நேரத்தில் உங்களுக்கு வரும் கேள்வியை நான் மறுக்கவில்லை நியாயம் தான் எல்லோருக்கும் இயல்பாய் இருப்பது தான் நம் குழந்தைகள் நல்ல இடத்தில் திருமணம் செய்து நம் மகளை, அல்லது மகனை நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்கிற இயல்பான ஆசைதான்! இருக்கத்தான் செய்யும்! பிறந்ததில் இருந்து பார்த்து பார்த்து ஈ, எறும்பு, அழுத்தமான காற்று கூட படாமல் வளர்த்தவர்களாயிற்றே அவர்கள் எதிர்பார்ப்பதில் பெரிதாய் தவறு ஒன்றும் இருப்பாதாய் தெரியவில்லை இந்த விதத்தில் அவர்கள் நிலையில் அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் உங்கள் குடும்பம், சூழ்நிலை எல்லாம் தெரிந்தும்,வளர்த்த தாய் தந்தையரின் மீதான அன்பையும் மீறி காதலிக்கிறீர்கள் காதல் அந்தளவிற்கு உங்களை தூண்டும் இந்த நேரத்தில் எல்லாம் ஒரு தூசி போல தெரியும் ஆனால் ஒரு பெண் அல்லது ஆணின் ஏற்படும் ஒருவித ஈர்ப்பு அது காதலா, காமாம, அல்லது வெறும் ஈர்ப்பு மட்டும் தானே என்பதை கூட அறிய முடியாத நிலையில் காதலிக்கிறீர்கள் காதலிக்கும் போது பெற்றோரின் கண் வெட்டி கண்களால் பேசவும் தெரிந்த உங்களுக்கு காதலின் அடுத்த கட்டமான திருமணம் என்கிற நிலையில் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை எங்கே போகிறது?
காதல் என்றாலே பிரச்சினை என்பதை நீங்கள் காதலிக்கும் போதே உணர்ந்திருப்பீர்கள். உங்களவரை முதன் முதலில் காணும் போது உங்கள் கண் முன் மின்மினி பூச்சி அழகாய் பறந்து கீர்ன் சிக்னலை உங்கள் மனது கொடுத்து விடும் ஒரு வழியாய் தனிமையாய் சந்திக்க நேர்ந்தால் உங்கள் காதலை விட அவரவர் குடும்ப பாரம்பரியம் சாதி மதம் உறவிணர்கள் என எல்லாவற்றையும் நிச்சியம் பரிமாறிக்கொள்வீர்கள் தானே அப்பொழுதே உங்களுக்கு உங்கள் காதலின் முடிவு தெரிந்திருக்கும் அப்பொழுது குருட்டு நம்பிக்கையில் எப்படியும் சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் காதலை விட மனமிருக்காது உங்கள் குருட்டு தன்னபிக்கையை உங்களவர் தன்னம்பிக்கை என நினைத்து கண்ணே மணியே என கனவில் கோட்டை கட்ட ஆரம்பித்து விடுவார்.
விளைந்த பொருள் விற்பனைக்கு வந்து தானே ஆகவேண்டும்! அப்படித்தான் உங்கள் காதலும் பெற்றோரின் வரட்டு பிடிவாதத்திலும் உங்கள் மீதான அக்கரையாலும் உங்களுக்கென வரன் பார்க்க தொடங்குவார்கள் அப்பொழுதே பிரச்சினை வந்துவிடும் உங்கள் காதலிலும் சலசலப்பு தொடங்கும்.ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சொல்வீர்கள் எப்படியாவது உன் வீட்டில் சொல்லி சம்மதிக்க வை என்பதான விவாதங்கள் தொடங்கி விடும் ஆனால் உங்கள் வீட்டிலோ கோவிலில் பலி கொடுக்க போகும் ஆடு போலத்தான் உங்கள் நிலைமை ஆட்டிற்காவது மஞ்சல் தண்ணி தலையில் ஊத்தி அதன் உடம்பை சிலிர்க வைத்து சம்மதம் கொடுத்துவிட்டது என சந்தோஷத்தில் பலி கொடுத்து விடுவார்கள் ஆனால் இந்த விஷயத்தில் பெற்றோர்கள் உங்களின் சம்மத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் நீங்கள் குழந்தையாம், உங்களுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்று தமக்கு தாமே சொல்லிக் கொள்வார்கள்.
அவர்களுக்கே தெரியாமால் கண் வெட்டி காதலிக்க தெரிந்த நீங்கள் குழந்தையாம்! ஒன்றுமே தெரியாதம்! ஆனால் குடும்பம் நடத்த மட்டும் தெரியுமாம்! திடீரென்று வாழ்வில் வந்த ஒருவரை பேசி காதலிக்க தெரிந்த உங்களுக்கு உங்கள் பெற்றோருடன் உங்கள் காரியங்களை பகிர்ந்துகொள்ள முடியாதா? உங்கள் நிலையை அவர்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்க முடியாதா? பிரச்சினை என வரும் போது பிரச்சினைகளை சமாளிக்க முடியாமால் உடனே ஆசையாய் காதலித்த உங்களவரை மெர்ச்சுரிட்டியாக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறீர்கள் இது தான் உங்கள் காதலா? மனசு முழுவதும் உங்களவரோடான வாழ்க்கையை கனவில் வாழ்ந்து விட்டு வெறும் சதை பிண்டாமாய் அப்பா சொன்னார், அம்மா சொன்னார் என நொண்டிச்சாக்கு சொல்வதற்கு பெயர் தான் காதாலா?
சரி அப்படியே பிரிந்து சென்று நீங்கள் வேறு ஒருவரோடு உங்கள் குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் வேறொருவரை திருமணம் செய்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம், நீங்களோ ஒருவரை காதலித்தீர்கள் ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்கிறீர்கள் இதைபோலவே நீங்கள் திருமணம் செய்யப்போகும் நபருக்கும் இது போன்ற ஒரு பின்னனி இருந்தால் எப்படியிருக்கும்? அப்பொழுது உங்களால் திருமண பந்தத்தில் மனதளவில் சந்தோஷமாகத்தான் இருக்க முடியுமா? சரி ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் முன்னால் உங்களவரை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்களால் இயல்பாய் இருக்க முடியுமா? என்னடா அப்படியென்றால் இவன் கூட்டிக்கொண்டு ஓடச் சொல்கிறானோ! என நினைக்க வேண்டாம் வாழ்க்கை முழுவதும் மனதுக்குள் வருந்துவதற்கு பதிலாக உங்களால் முடிந்தவரை போராடி பார்க்கலாமே மனதில் ஒருவரும் கட்டிலில் ஒருவரும் என்பது வாழ்க்கைக்கு சுகமாக இருக்காது.
தயவு செய்து காதலியுங்கள் அது ஒரு அழகான உணர்வு, சந்தோஷம் அப்படியே ஒருவேளை உங்களுக்கு திரைப்படங்களில் வருவது போல கண்டதும் காதல் வந்தால் எதார்த்தமாய் யோசித்து பாருங்கள் வண்டி வண்டியாய் ஆசைகள் சுமந்து கனவுக்கோட்டை காட்டி சுமக்க முடியாமல் வீழ்ந்து விடாதீர்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் சேர்த்தே பாதிக்கும். இந்த சமுதாயத்தை பொருத்தவரை காதல் இன்னமும் தீண்டப்பட கூடாத ஒன்று தான் ஆனால் காதலால் மட்டுமே சாதி மதம் ஒழித்து சமத்துவம் தர முடியும்.
அன்பான பெற்றோர்களே நீங்களும் யோசியுங்கள் காதலிப்பது ஒன்றும் மிக பெரிய தவறு இல்லை அது மனிதனுக்குள் இருக்கும் இயல்பான ஒன்று தான் உங்கள் பிடிவாதத்தில் திருமணம் செய்து கொடுத்து இரண்டாவது நாளே உங்கள் பெண் வீட்டிற்கு வந்தால் அவளின் நிலை என்னாவாக இருக்கும் அல்லது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த உங்கள் மகன் திருமணம் முடிந்த சில நாளிலியே துனைவியை பிரிந்தால் அவருக்கு உங்களால் என்ன ஆறுதலை சொல்லி விடமுடியம்? காலம் கடந்த ஆறுதலில் தொலைந்த சந்தோஷம், வாழ்க்கை நிம்மதி, அந்தஸ்து என ஏதாவது கிடைத்து விடுமா?
நண்பர்களே காதலிக்க நினைப்பவர்கள், இப்போது காதலித்து கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையிலோ அல்லது எதார்த்தத்தை உணர்த்தும் வகையிலான உங்கள் கருத்துகளை எழுதுங்கள் படிப்பவர்களுக்கு உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நான் சந்தித்த, கேட்டறிந்த விஷயத்தை பற்றி பதிகிறேன் சில பல நாட்களாக லிவின் டு கெதர் என்கிற ஒரு கலாச்சாரத்தை இருவிதமான கருத்துகளை பல இடங்களிலும் கேட்க நேர்ந்தது, படிக்க நேர்ந்தது நான் நிச்சியமாய் இதைப் பற்றி எழுதபோவதில்லை அதே நேரத்தில் காதலோடு தொடர்புடைய சில பிரச்சினைகளை கண்டு காதலித்தவர்கள் தம்மில் தம் பிரிந்து செல்கிறார்கள் இதை பலர் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள் இன்னும் சிலர் இதற்காக இன்னும் சிலர் ஏதேதோ காரணங்கள் சொல்லி விலகி செல்கிறார்கள்.பொதுவாகவே காதலை எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை சினிமாவில் மட்டும் வேண்டுமானால் காதலை ஏற்றுக்கொண்டு அதை ஆசிர்வதிக்கும் தாய் தந்தையரை, உறவினரை பார்க்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்னவோ கசக்கும் வேப்பாங்காய் தான் பெற்றோருக்கும் சரி உறவிணர்களுக்கும் சரி சம்பந்தமே இல்லாத ஊராரும் சரி இந்த விஷயத்தில் எல்லோர் மன நிலையும் ஓரே மாதிரியாகத்தான் இருக்கிறது இதை பற்றி எழுதும் எனது மனநிலையும் கூட மேலே சொன்னவர்களை போலத்தான் இருக்கிறது.
காதல் என்பதன் அர்த்தம் அன்பு என்பது தானே அப்படியானால் எல்லோருக்கும் காதல் உணர்வு இருக்கிறது தாம் பெற்ற பிள்ளை மேல் தாய் தந்தையர் வைத்திருக்கும் அன்பிற்கு பெயரும் காதல் தானே! தங்கள் அன்பை மட்டுமே பிரதானமாக நினைக்கும் தாய் தந்தையர் உறவிணர்கள் ஏன் பருவம் அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ காதல் வருவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? இந்த நேரத்தில் உங்களுக்கு வரும் கேள்வியை நான் மறுக்கவில்லை நியாயம் தான் எல்லோருக்கும் இயல்பாய் இருப்பது தான் நம் குழந்தைகள் நல்ல இடத்தில் திருமணம் செய்து நம் மகளை, அல்லது மகனை நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்கிற இயல்பான ஆசைதான்! இருக்கத்தான் செய்யும்! பிறந்ததில் இருந்து பார்த்து பார்த்து ஈ, எறும்பு, அழுத்தமான காற்று கூட படாமல் வளர்த்தவர்களாயிற்றே அவர்கள் எதிர்பார்ப்பதில் பெரிதாய் தவறு ஒன்றும் இருப்பாதாய் தெரியவில்லை இந்த விதத்தில் அவர்கள் நிலையில் அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் உங்கள் குடும்பம், சூழ்நிலை எல்லாம் தெரிந்தும்,வளர்த்த தாய் தந்தையரின் மீதான அன்பையும் மீறி காதலிக்கிறீர்கள் காதல் அந்தளவிற்கு உங்களை தூண்டும் இந்த நேரத்தில் எல்லாம் ஒரு தூசி போல தெரியும் ஆனால் ஒரு பெண் அல்லது ஆணின் ஏற்படும் ஒருவித ஈர்ப்பு அது காதலா, காமாம, அல்லது வெறும் ஈர்ப்பு மட்டும் தானே என்பதை கூட அறிய முடியாத நிலையில் காதலிக்கிறீர்கள் காதலிக்கும் போது பெற்றோரின் கண் வெட்டி கண்களால் பேசவும் தெரிந்த உங்களுக்கு காதலின் அடுத்த கட்டமான திருமணம் என்கிற நிலையில் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை எங்கே போகிறது?
காதல் என்றாலே பிரச்சினை என்பதை நீங்கள் காதலிக்கும் போதே உணர்ந்திருப்பீர்கள். உங்களவரை முதன் முதலில் காணும் போது உங்கள் கண் முன் மின்மினி பூச்சி அழகாய் பறந்து கீர்ன் சிக்னலை உங்கள் மனது கொடுத்து விடும் ஒரு வழியாய் தனிமையாய் சந்திக்க நேர்ந்தால் உங்கள் காதலை விட அவரவர் குடும்ப பாரம்பரியம் சாதி மதம் உறவிணர்கள் என எல்லாவற்றையும் நிச்சியம் பரிமாறிக்கொள்வீர்கள் தானே அப்பொழுதே உங்களுக்கு உங்கள் காதலின் முடிவு தெரிந்திருக்கும் அப்பொழுது குருட்டு நம்பிக்கையில் எப்படியும் சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் காதலை விட மனமிருக்காது உங்கள் குருட்டு தன்னபிக்கையை உங்களவர் தன்னம்பிக்கை என நினைத்து கண்ணே மணியே என கனவில் கோட்டை கட்ட ஆரம்பித்து விடுவார்.
விளைந்த பொருள் விற்பனைக்கு வந்து தானே ஆகவேண்டும்! அப்படித்தான் உங்கள் காதலும் பெற்றோரின் வரட்டு பிடிவாதத்திலும் உங்கள் மீதான அக்கரையாலும் உங்களுக்கென வரன் பார்க்க தொடங்குவார்கள் அப்பொழுதே பிரச்சினை வந்துவிடும் உங்கள் காதலிலும் சலசலப்பு தொடங்கும்.ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சொல்வீர்கள் எப்படியாவது உன் வீட்டில் சொல்லி சம்மதிக்க வை என்பதான விவாதங்கள் தொடங்கி விடும் ஆனால் உங்கள் வீட்டிலோ கோவிலில் பலி கொடுக்க போகும் ஆடு போலத்தான் உங்கள் நிலைமை ஆட்டிற்காவது மஞ்சல் தண்ணி தலையில் ஊத்தி அதன் உடம்பை சிலிர்க வைத்து சம்மதம் கொடுத்துவிட்டது என சந்தோஷத்தில் பலி கொடுத்து விடுவார்கள் ஆனால் இந்த விஷயத்தில் பெற்றோர்கள் உங்களின் சம்மத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் நீங்கள் குழந்தையாம், உங்களுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்று தமக்கு தாமே சொல்லிக் கொள்வார்கள்.
அவர்களுக்கே தெரியாமால் கண் வெட்டி காதலிக்க தெரிந்த நீங்கள் குழந்தையாம்! ஒன்றுமே தெரியாதம்! ஆனால் குடும்பம் நடத்த மட்டும் தெரியுமாம்! திடீரென்று வாழ்வில் வந்த ஒருவரை பேசி காதலிக்க தெரிந்த உங்களுக்கு உங்கள் பெற்றோருடன் உங்கள் காரியங்களை பகிர்ந்துகொள்ள முடியாதா? உங்கள் நிலையை அவர்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்க முடியாதா? பிரச்சினை என வரும் போது பிரச்சினைகளை சமாளிக்க முடியாமால் உடனே ஆசையாய் காதலித்த உங்களவரை மெர்ச்சுரிட்டியாக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறீர்கள் இது தான் உங்கள் காதலா? மனசு முழுவதும் உங்களவரோடான வாழ்க்கையை கனவில் வாழ்ந்து விட்டு வெறும் சதை பிண்டாமாய் அப்பா சொன்னார், அம்மா சொன்னார் என நொண்டிச்சாக்கு சொல்வதற்கு பெயர் தான் காதாலா?
சரி அப்படியே பிரிந்து சென்று நீங்கள் வேறு ஒருவரோடு உங்கள் குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் வேறொருவரை திருமணம் செய்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம், நீங்களோ ஒருவரை காதலித்தீர்கள் ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்கிறீர்கள் இதைபோலவே நீங்கள் திருமணம் செய்யப்போகும் நபருக்கும் இது போன்ற ஒரு பின்னனி இருந்தால் எப்படியிருக்கும்? அப்பொழுது உங்களால் திருமண பந்தத்தில் மனதளவில் சந்தோஷமாகத்தான் இருக்க முடியுமா? சரி ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் முன்னால் உங்களவரை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்களால் இயல்பாய் இருக்க முடியுமா? என்னடா அப்படியென்றால் இவன் கூட்டிக்கொண்டு ஓடச் சொல்கிறானோ! என நினைக்க வேண்டாம் வாழ்க்கை முழுவதும் மனதுக்குள் வருந்துவதற்கு பதிலாக உங்களால் முடிந்தவரை போராடி பார்க்கலாமே மனதில் ஒருவரும் கட்டிலில் ஒருவரும் என்பது வாழ்க்கைக்கு சுகமாக இருக்காது.
தயவு செய்து காதலியுங்கள் அது ஒரு அழகான உணர்வு, சந்தோஷம் அப்படியே ஒருவேளை உங்களுக்கு திரைப்படங்களில் வருவது போல கண்டதும் காதல் வந்தால் எதார்த்தமாய் யோசித்து பாருங்கள் வண்டி வண்டியாய் ஆசைகள் சுமந்து கனவுக்கோட்டை காட்டி சுமக்க முடியாமல் வீழ்ந்து விடாதீர்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் சேர்த்தே பாதிக்கும். இந்த சமுதாயத்தை பொருத்தவரை காதல் இன்னமும் தீண்டப்பட கூடாத ஒன்று தான் ஆனால் காதலால் மட்டுமே சாதி மதம் ஒழித்து சமத்துவம் தர முடியும்.
அன்பான பெற்றோர்களே நீங்களும் யோசியுங்கள் காதலிப்பது ஒன்றும் மிக பெரிய தவறு இல்லை அது மனிதனுக்குள் இருக்கும் இயல்பான ஒன்று தான் உங்கள் பிடிவாதத்தில் திருமணம் செய்து கொடுத்து இரண்டாவது நாளே உங்கள் பெண் வீட்டிற்கு வந்தால் அவளின் நிலை என்னாவாக இருக்கும் அல்லது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த உங்கள் மகன் திருமணம் முடிந்த சில நாளிலியே துனைவியை பிரிந்தால் அவருக்கு உங்களால் என்ன ஆறுதலை சொல்லி விடமுடியம்? காலம் கடந்த ஆறுதலில் தொலைந்த சந்தோஷம், வாழ்க்கை நிம்மதி, அந்தஸ்து என ஏதாவது கிடைத்து விடுமா?
நண்பர்களே காதலிக்க நினைப்பவர்கள், இப்போது காதலித்து கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையிலோ அல்லது எதார்த்தத்தை உணர்த்தும் வகையிலான உங்கள் கருத்துகளை எழுதுங்கள் படிப்பவர்களுக்கு உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 22, 2011
21
Jun 22, 2011
ஜிஎஸ்ஆர்
Google English to Tamil Translate கூகுளின் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வசதி
ஒரு வரி கருத்து: ஒருவன் கீழே விழுந்தால் இந்த மொத்த உலகமும் அவன் மீது ஓடும்.
வணக்கம் நண்பர்களே நமக்கெல்லாம் எட்டாக்கணியாக இருந்த மொழிபெயர்ப்பு வசதி இப்போது கூகுள் அறிமுகபடுத்தியிருக்கிறது அவசியமாக இந்த விஷயத்தை பொருத்தவரை இதை ஒரு மைல் கல்லாகவே நான் கருதுகிறேன் இனி இதைப்பற்றி அதிகம் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை இந்த பதிவை பற்றி நான் அதிகம் ஏன் எழுதபோவதில்லை என்று சொன்னதை நீங்களே உணர்வீர்கள் இனி ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது என்பது ஒரு குறையாகவே இருக்காது.
என்னை பொருத்த வரை இனி வருங்காலங்களில் தமிழ் உலக அளவில் படிக்கப்படும் அது வலைத்தளங்களாக இருந்தாலும் சரி செய்திகள் என்றாலும் சரி நிச்சியம் உலக அளவில் தமிழின் வளர்ச்சிக்கு உதவும் அதோடு நிற்காது இப்போது மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வுகள் கூட மேலே நாட்டினர் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.இனி இதன் பின்னனியாக கூகுள் ஆட்சென்ஸ் தமிழுக்கு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது
Google English to Tamil Translater (கூகுள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு
நான் கீழே இனைத்திருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.

என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே நமக்கெல்லாம் எட்டாக்கணியாக இருந்த மொழிபெயர்ப்பு வசதி இப்போது கூகுள் அறிமுகபடுத்தியிருக்கிறது அவசியமாக இந்த விஷயத்தை பொருத்தவரை இதை ஒரு மைல் கல்லாகவே நான் கருதுகிறேன் இனி இதைப்பற்றி அதிகம் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை இந்த பதிவை பற்றி நான் அதிகம் ஏன் எழுதபோவதில்லை என்று சொன்னதை நீங்களே உணர்வீர்கள் இனி ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது என்பது ஒரு குறையாகவே இருக்காது.
என்னை பொருத்த வரை இனி வருங்காலங்களில் தமிழ் உலக அளவில் படிக்கப்படும் அது வலைத்தளங்களாக இருந்தாலும் சரி செய்திகள் என்றாலும் சரி நிச்சியம் உலக அளவில் தமிழின் வளர்ச்சிக்கு உதவும் அதோடு நிற்காது இப்போது மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வுகள் கூட மேலே நாட்டினர் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.இனி இதன் பின்னனியாக கூகுள் ஆட்சென்ஸ் தமிழுக்கு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது
Google English to Tamil Translater (கூகுள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு
நான் கீழே இனைத்திருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 20, 2011
8
Jun 20, 2011
ஜிஎஸ்ஆர்
ஆங்கிலம் தமிழ் டிக்ஸ்னரியும், ஆங்கிலம் வழி தமிழ் தேடலும்
ஒரு வரி கருத்து: கோபத்திலும் பாவம் செய்யாதீர்கள்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் இரண்டு விஷயங்களை பார்க்கலாம் ஒன்று தமிழ் அகராதி(டிக்ஸ்னரி) மற்றொன்று இனையத்தில் எல்லோருக்கும் தமிழில் எழுத தெரியாது ஆனால் தமிழில் இருக்கும் ஒரு விஷயத்தை தான் தேட வேண்டியிருக்கிறது என்றால் என்ன செய்வது அதற்கு தான் இந்த பதிவு இதன் வழியே நாம் puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வரலாம்.
இனி முதலாவதாக ஐரோப்பியன் டிக்ஸ்னரி குறித்து பார்க்கலாம் இவர்கள் 31 மொழிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் குறிபிட்டு சொல்வதனால் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு இந்திய மொழிகளுக்கு இல்லை என்பதை உணரமுடிகிறது இனி இதன் தேடலின் பதில் எப்படியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதாரணமாக Aggregate என்பதை தேடினால் அது எந்தவிதமான இடத்தில் பயன்படுத்த படுகிறது வேறு எந்த இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு தெரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக தருகிறார்கள் மேலும் தமிழ் வார்த்தைக்கான ஆங்கில சொற்றொடரும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் என்ன ஒரு குறை இனையத்தில் மட்டுமே பயன்படுத்தும் வசதி கொண்டது.
ஐரோப்பியன் டிக்ஸ்னரி பயன்படுத்தி பார்க்க நினைப்பவர்களுக்கும் மேலும் புக்மார்க் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் ஐரோப்பியன் டிக்ஸ்னரி EUROPEAN DICTIONARY

இரண்டாவதாக தமிழை தேடுவதற்கு தமிங்கிலீஸ் அதாவது நான் மேலே சொன்ன மாதிரி puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட இனைய தகவல்களை காணலாம் தேவைப்படுபவர்கள் தங்கள் தளத்திலேயே இனைத்துக்கொள்ளலாம்.
இனி சோதித்து பார்க்க விரும்புவர்கள் இங்கேயே நம் தளத்தின் வலது பக்கம் கீழ் மூலையில் பாருங்கள் தமிழை ஆங்கிலத்தில் தேடு என்பதாக இருக்கும் முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு தேவையென்று விரும்பினால் மேலிருக்கும் நிரலை பயன்படுத்துங்கள்.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் இரண்டு விஷயங்களை பார்க்கலாம் ஒன்று தமிழ் அகராதி(டிக்ஸ்னரி) மற்றொன்று இனையத்தில் எல்லோருக்கும் தமிழில் எழுத தெரியாது ஆனால் தமிழில் இருக்கும் ஒரு விஷயத்தை தான் தேட வேண்டியிருக்கிறது என்றால் என்ன செய்வது அதற்கு தான் இந்த பதிவு இதன் வழியே நாம் puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வரலாம்.
இனி முதலாவதாக ஐரோப்பியன் டிக்ஸ்னரி குறித்து பார்க்கலாம் இவர்கள் 31 மொழிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் குறிபிட்டு சொல்வதனால் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு இந்திய மொழிகளுக்கு இல்லை என்பதை உணரமுடிகிறது இனி இதன் தேடலின் பதில் எப்படியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதாரணமாக Aggregate என்பதை தேடினால் அது எந்தவிதமான இடத்தில் பயன்படுத்த படுகிறது வேறு எந்த இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு தெரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக தருகிறார்கள் மேலும் தமிழ் வார்த்தைக்கான ஆங்கில சொற்றொடரும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் என்ன ஒரு குறை இனையத்தில் மட்டுமே பயன்படுத்தும் வசதி கொண்டது.
ஐரோப்பியன் டிக்ஸ்னரி பயன்படுத்தி பார்க்க நினைப்பவர்களுக்கும் மேலும் புக்மார்க் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் ஐரோப்பியன் டிக்ஸ்னரி EUROPEAN DICTIONARY
இரண்டாவதாக தமிழை தேடுவதற்கு தமிங்கிலீஸ் அதாவது நான் மேலே சொன்ன மாதிரி puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட இனைய தகவல்களை காணலாம் தேவைப்படுபவர்கள் தங்கள் தளத்திலேயே இனைத்துக்கொள்ளலாம்.
இனி சோதித்து பார்க்க விரும்புவர்கள் இங்கேயே நம் தளத்தின் வலது பக்கம் கீழ் மூலையில் பாருங்கள் தமிழை ஆங்கிலத்தில் தேடு என்பதாக இருக்கும் முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு தேவையென்று விரும்பினால் மேலிருக்கும் நிரலை பயன்படுத்துங்கள்.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 16, 2011
25
Jun 16, 2011
ஜிஎஸ்ஆர்
தமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்
ஒரு வரி கருத்து: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
வணக்கம் நண்பர்களே இந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் திரு.ராஜ்மோகன் அவர்களின் http://doctorrajmohan.blogspot.com தளத்தில் இருந்து எடுத்து தொகுக்கபட்டிருக்கிறது, குழந்தைகள் இல்லாத வீடில்லை குழந்தையை விரும்பாதவர்களும் இருக்க முடியாது அதனால் தான் என்னவோ முன்பே நம் மூதாதையர்களும் அவர்களை பற்றி குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்! என்பதாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாகவும் ஒப்பிட்டிருக்கின்றனர் இவை எதுவும் பொய்யில்லை எல்லாம் நிதர்சன உண்மைகள் இப்படிப்பட்ட நம் குழந்தை செல்வங்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி அவர்களை ஆரோக்கியத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் நமக்கு வளர்க்க ஆசை தானே ஆனால் முன்பு போல இந்நாட்கள் இல்லை நமது தற்போதையை உணவுமுறையும் சுற்றுச்சூழலும் பல்வேறு விதமான நோய்களை நமக்கும் நம் குழந்தை செல்வங்களுக்கும் தந்து கொண்டிருக்கிறது இந்த சூழலில் திரு.ராஜ்மோகன் அவர்களின் பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகளை எளிய் தமிழில் எழுதியிருக்கிறார் அவசியம் நாம் இதை தெரிந்துகொள்வது நல்லது அந்த நல்லெண்ணத்துடனேயே இது வரை அவர் எழுதிய கட்டுரைகளை புத்தமாக தொகுத்திருக்கிறேன்.
திரு.ராஜ்மோகன் அவர்கள் பின்வருமாறான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சில இடங்களில் மட்டும் நான் தலைப்பை மாற்றியிருக்கிறேன் ஓரு சில தகவல்கள் மற்றும் தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கும் மற்றவை எல்லாம் முழுமையான தமிழில் தான் தரப்பட்டிருக்கிறது இனி குழந்தை மருத்துவம் (Kulanthai Maruththuvam) புத்தகம் தரவிறக்கவும்.
1. தடுப்பூசி கால அட்டவணை
2. படுக்கையில் சிறுநீர் கழித்தல்
3. வயிற்றில் குடல் புழு
4. வேலைக்கு செல்லும் தாய்
5. குழந்தைகள் வளரும் வேகம்
6. குழந்தைகள் தூங்கும் நேரம்
7. குண்டு குழந்தைகள்
8. மிகை சுட்டி குழந்தைகள்
9. குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா
10. மூச்சு விடாமல் அழும் குழந்தை
11. அடம் பிடிக்கும் குழந்தைகள்
12. மண்ணை மட்டும் தின்றால்
13. ஜுர வலிப்பு
14. விடாமல் அழும் குழந்தை
15. BABY WALKERS உபயோக படுத்தலாமா
16. சூப்பான் தேவையா
17. விரல் சப்பும் குழந்தை
18. விமானத்தில் போகும் குழந்தைகள்
19. அடிக்கடி குழந்தைகளுக்கு வரும் ஜுரம்
20. NIMESULIDE ஆபத்து
21. குடல்வால் அழற்சி
22. காய்ச்சல் இன்புளூயன்சியா (H1N1)
23. பன்றிக்காய்ச்சல்
24. வைரஸ்க்கு எதிரான மலிவான வலியில்ல மருத்துவம்
25. தேள் கடி
26. தாய்ப்பால் சில உண்மைகள்
27. வயிற்று போக்கு
28. குழந்தைகளின் உயரம் & எடை
29. இரத்த சோகை
30. பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது
31. குடற் காய்ச்சல்,குடற் புண் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல்
32. தாய்ப்பாலால் தாய்க்கும் பல நன்மைகள்
33. குழந்தைகள் பார்வையை பாதுகாக்க
34. மாறுகண் வரமா? சாபமா?
35. டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல
36. குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
37. குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம்
38. குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி
39. குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல்
40. குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
41. உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க
42. குழந்தைகளுக்கு வரும் காது வலி
43. ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி
44. டெங்கு ஜுரம் பயங்கரம்
45. குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது
46. பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போடும் முறை
47. குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி
48. சோர்வடைய காரணங்கள் 10
49. மெட்ராஸ் ஐ-குறித்த உண்மைகள்
50. ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல
51. பிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்
52. மஞ்சள் காமாலை மஞ்சள் நிறமே
53. தொப்புள் கொடி
54. குழந்தைகளில் IQ திறனை வளர்ப்பது எப்படி
55. ஸ்கூல் பேக் சிண்ட்ரோம்
56. குழந்தைகளுக்கான இனை உணவு எப்பொழுது தரலாம்
57. குழந்தைகளுக்கு புரதமாவு எப்போது எப்படி தரலாம்
58. Ear Canal கிளீன் செய்வது எப்படி
59. விளையாட்டும் உடல் நலமும்
60. பிறந்த குழந்தையின் பிறவி பற்கள்
61. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
62. பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது
63. தேன் பற்றியதான ஆயுர்வேதம்
64. குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தரலாம்
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட குழந்தை மருத்துவத்திற்கான தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ள புத்தகத்தை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது இன்ன பிற வழிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மேலும் நண்பர்கள் கவணத்திற்கு நம் தளம் வழியாக மின்னஞ்சல் அனுப்பும் போது தயவுசெய்து தாங்கள் சொல்ல நினைப்பதை அல்லது கேட்க நினைப்பதை தெளிவாக இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் குறிப்புகள் எனக்கு புரிந்தால் மட்டுமே நான் தங்களுக்கு பதில் அளிக்க முடியும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் திரு.ராஜ்மோகன் அவர்களின் http://doctorrajmohan.blogspot.com தளத்தில் இருந்து எடுத்து தொகுக்கபட்டிருக்கிறது, குழந்தைகள் இல்லாத வீடில்லை குழந்தையை விரும்பாதவர்களும் இருக்க முடியாது அதனால் தான் என்னவோ முன்பே நம் மூதாதையர்களும் அவர்களை பற்றி குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்! என்பதாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாகவும் ஒப்பிட்டிருக்கின்றனர் இவை எதுவும் பொய்யில்லை எல்லாம் நிதர்சன உண்மைகள் இப்படிப்பட்ட நம் குழந்தை செல்வங்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி அவர்களை ஆரோக்கியத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் நமக்கு வளர்க்க ஆசை தானே ஆனால் முன்பு போல இந்நாட்கள் இல்லை நமது தற்போதையை உணவுமுறையும் சுற்றுச்சூழலும் பல்வேறு விதமான நோய்களை நமக்கும் நம் குழந்தை செல்வங்களுக்கும் தந்து கொண்டிருக்கிறது இந்த சூழலில் திரு.ராஜ்மோகன் அவர்களின் பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகளை எளிய் தமிழில் எழுதியிருக்கிறார் அவசியம் நாம் இதை தெரிந்துகொள்வது நல்லது அந்த நல்லெண்ணத்துடனேயே இது வரை அவர் எழுதிய கட்டுரைகளை புத்தமாக தொகுத்திருக்கிறேன்.திரு.ராஜ்மோகன் அவர்கள் பின்வருமாறான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சில இடங்களில் மட்டும் நான் தலைப்பை மாற்றியிருக்கிறேன் ஓரு சில தகவல்கள் மற்றும் தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கும் மற்றவை எல்லாம் முழுமையான தமிழில் தான் தரப்பட்டிருக்கிறது இனி குழந்தை மருத்துவம் (Kulanthai Maruththuvam) புத்தகம் தரவிறக்கவும்.
1. தடுப்பூசி கால அட்டவணை
2. படுக்கையில் சிறுநீர் கழித்தல்
3. வயிற்றில் குடல் புழு
4. வேலைக்கு செல்லும் தாய்
5. குழந்தைகள் வளரும் வேகம்
6. குழந்தைகள் தூங்கும் நேரம்
7. குண்டு குழந்தைகள்
8. மிகை சுட்டி குழந்தைகள்
9. குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா
10. மூச்சு விடாமல் அழும் குழந்தை
11. அடம் பிடிக்கும் குழந்தைகள்
12. மண்ணை மட்டும் தின்றால்
13. ஜுர வலிப்பு
14. விடாமல் அழும் குழந்தை
15. BABY WALKERS உபயோக படுத்தலாமா
16. சூப்பான் தேவையா
17. விரல் சப்பும் குழந்தை
18. விமானத்தில் போகும் குழந்தைகள்
19. அடிக்கடி குழந்தைகளுக்கு வரும் ஜுரம்
20. NIMESULIDE ஆபத்து
21. குடல்வால் அழற்சி
22. காய்ச்சல் இன்புளூயன்சியா (H1N1)
23. பன்றிக்காய்ச்சல்
24. வைரஸ்க்கு எதிரான மலிவான வலியில்ல மருத்துவம்
25. தேள் கடி
26. தாய்ப்பால் சில உண்மைகள்
27. வயிற்று போக்கு
28. குழந்தைகளின் உயரம் & எடை
29. இரத்த சோகை
30. பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது
31. குடற் காய்ச்சல்,குடற் புண் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல்
32. தாய்ப்பாலால் தாய்க்கும் பல நன்மைகள்
33. குழந்தைகள் பார்வையை பாதுகாக்க
34. மாறுகண் வரமா? சாபமா?
35. டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல
36. குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
37. குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம்
38. குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி
39. குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல்
40. குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
41. உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க
42. குழந்தைகளுக்கு வரும் காது வலி
43. ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி
44. டெங்கு ஜுரம் பயங்கரம்
45. குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது
46. பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போடும் முறை
47. குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி
48. சோர்வடைய காரணங்கள் 10
49. மெட்ராஸ் ஐ-குறித்த உண்மைகள்
50. ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல
51. பிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்
52. மஞ்சள் காமாலை மஞ்சள் நிறமே
53. தொப்புள் கொடி
54. குழந்தைகளில் IQ திறனை வளர்ப்பது எப்படி
55. ஸ்கூல் பேக் சிண்ட்ரோம்
56. குழந்தைகளுக்கான இனை உணவு எப்பொழுது தரலாம்
57. குழந்தைகளுக்கு புரதமாவு எப்போது எப்படி தரலாம்
58. Ear Canal கிளீன் செய்வது எப்படி
59. விளையாட்டும் உடல் நலமும்
60. பிறந்த குழந்தையின் பிறவி பற்கள்
61. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
62. பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது
63. தேன் பற்றியதான ஆயுர்வேதம்
64. குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தரலாம்
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட குழந்தை மருத்துவத்திற்கான தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ள புத்தகத்தை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது இன்ன பிற வழிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மேலும் நண்பர்கள் கவணத்திற்கு நம் தளம் வழியாக மின்னஞ்சல் அனுப்பும் போது தயவுசெய்து தாங்கள் சொல்ல நினைப்பதை அல்லது கேட்க நினைப்பதை தெளிவாக இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் குறிப்புகள் எனக்கு புரிந்தால் மட்டுமே நான் தங்களுக்கு பதில் அளிக்க முடியும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 10, 2011
23
Jun 10, 2011
ஜிஎஸ்ஆர்
கருப்பு வெள்ளை நிழல்படத்தை எளிதாக கலராக மாற்றலாம்
ஒரு வரி கருத்து: பாரட்டுவதிலும், அங்கிகரிப்பதிலும் கஞ்சத்தணம் வேண்டாம்.
வணக்கம் நண்பர்களே முன்பு போல அதிகம் பதிவுகள் எழுதமுடியவில்லை பணிச்சுமையோடு மன அழுத்தமும் சேர்ந்து எழுதுவதற்கான சூழலை தடுத்து விடுகிறது பொதுவாகவே நான் எழுதுவதை கொஞ்சம் விரும்புகிற பக்கத்தை சேர்ந்தவன் அது என் சுய நலம் மட்டுமல்ல கூடவே எனக்கு தெரிந்த நல்ல உபயோகபடுகிற விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களுக்கு பயனபடும் என்கிற உள்ளுணர்வு தான் காரணம் அதனால் தான் முடிந்தவரை சிறந்த நல்ல தகவல்களை மட்டுமே இது வரை பகிர்ந்து வந்திருக்கிறேன் விதி விலக்காக சில பதிவுகளும் இருக்கும். சரி நண்பர்களே இனி நேரடியாக பதிவுக்குள் வந்துவிடுவோம்.
பொதுவாக நம்மிடம் இருக்கும் நமது மூதாதையாரின் நிழல்படங்கள் கருப்பு வெள்ளை சார்ந்ததாகவே இருக்கும் அப்படி இருக்கும் வெள்ளை நிற நிழல்படங்களை கலராக மாற்ற போட்டோஷாப் மென்பொருள் உதவும் அதிலும் கொஞ்சம் மெனக்கெட்டாலே சரி செய்யமுடியும் போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு எளிதான காரியம் தான் ஆனால் போட்டோஷாப் தெரியாத எத்தனை நண்பர்கள் இருக்ககூடும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும் ஆனால் இதிலும் கொஞ்சம் சிரத்தையோடு செய்தால் மிகச்சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.
இனி ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி எப்படி கருப்பு வெள்ளை நிழல்படத்தை கலர் வண்ணப்படமாக மாற்றுவதை என்பதை கீழே பார்க்கலாம்.
உங்களுக்கு செய்து காண்பிப்பதற்காக எனது மகன் ஸ்ரீராம் நிழல்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன் கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது ஒரிஜினல் நிழல்படம்.

மகனின் கலர் நிழல்படத்தை சோதனை முயற்சிக்காக கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது.

இனி நான் மேலே கொடுத்திருந்த Recolor மென்பொருள் திறந்து வழக்கமான முறையில் பைலை திறக்கவும் இதன் வலது பக்கத்தில் ஒவ்வொன்றிற்குமான கலர் வகைப்படுத்த பட்டிருக்கும் அதன் வழியாக தேவையான இடங்களை அந்தந்த கலரை செலக்ட் செய்து பிரஷால் நான் படத்தில் காண்பித்துள்ளது போல அந்தந்த பாகத்தை சுற்றி வரைந்து விடுங்கள் ஆனால் நான் உங்களுக்கு இந்த வழிமுறையை பரிந்துரைக்க போவதில்லை கலர் செலக்ட் செய்ய எளிதாக இருக்கும் வகையில் வேறு ஏதாவது ஒரு கலர் நிழல்படத்தையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
நான் இந்த வழிமுறையை பரிந்துரைப்பதன் காரணம் பொதுவாகவே முகம், கை போன்ற தோல் வெளியில் தெரியும் பாகத்தில் உங்களால் சரியான கலர் செலக்ட் செய்யமுடியாத நிலை இருக்கும் அதற்காக தான் கூடவே ஒரு கலர் நிழல்படத்தையும் திறக்க சொல்கிறேன் இனி கிழிருக்கும் படத்தை பாருங்கள் சிவப்பு நிற குறியிட்டு இரண்டு என எழுதியிருக்கும் டூல் தான் Eye Droer அந்த டூலை பயன்படுத்தி கலர் நிழல்படத்தில் உங்களுக்கு எந்த கலர் எந்த இடத்திற்கு சரியாக வரும் என நினைக்கிறீர்களோ அந்த கலரை செலகட் செய்யுங்கள் செலக்ட் செய்ய ஒரு முறை கலரை தொட்டால் போதும் அடுத்தாக சிவப்பு கட்டத்திற்குள் மூன்று என குறிப்பிட்டுருக்கிறேன் பாருங்கள் அந்த டூல் தான் பிரஷ், இனி பிரஷை பயன்படுத்தி வரைந்து விடுங்கள் உதாரணமாக முகத்திற்கான கலர் செலக்ட் செய்தாகிவிட்டது என்றால் கருப்பு வெள்ளை படத்தில் முகத்தை சுற்றி வரைந்து விடுங்கள், வரையும் போது மிகச்சரியாக துல்லியமாக இருக்க வேண்டுமென்பதில்லை ஓரளவிற்கு வரைந்தாலே போதும் இப்படிடையாக ஒவ்வொரு பாகமாக முடிந்த்தும் படத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் பின்புலத்துக்கு ஏற்றவாறு கலரை கொடுத்து விடுங்கள். நீங்கள் இபோது வரைந்த்து எப்படி இருக்கிறது என பார்க்க நினைத்தால் நான்கு என்ற எண் அடையாளபடுத்தியுள்ள டூலை கிளிக்கினால் போதும் படத்தின் பிரிவியூ பார்க்கலாம் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வந்துவிட்டது என்றால் படத்தை சேமித்து விடுங்கள் தேவையானால் இதன் Working File –யையும் போட்டோஷாப்பில் PSD சேமித்து வைப்பது போல சேமித்து வைக்கலாம்.

கீழிருக்கும் படத்தை பாருங்கள் எப்படியாக கலர் வரைந்திருக்கிறேன் என இதே போல ஓரளவிற்கு வரைந்தாலே போதும் முதலில் கொஞ்சம் சிரமாக தெரியும் ஆனால் கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு பழகிவிடும் “சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பதை போல எல்லாம் முயன்றால் எளிதாய் முடியும்.

நான் தங்களுக்காக எடுத்துக்கொண்ட எனது மகனின் கருப்பு வெள்ளை நிழல்படம் இப்போது கலர் வண்ணப்படமாக மாறியிருக்கிறது சிறு குறைகள் இருக்கலாம் உதாரணத்திற்காக என்பதில் நேரம் அதிகம் செலவலிக்காமல் வரைந்த்து மேலும் கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் அருமையாய் வந்திருக்கும் அதனால் என்ன உங்களுக்காக தானெ இது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன் இதை பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் கருத்துரையில் பதியவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும் அதற்கான வசதியும் நம் தளத்தில் இருக்கிறது.

என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு புரிந்திருக்குமென்றே நம்புகிறேன் பதிவு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே முன்பு போல அதிகம் பதிவுகள் எழுதமுடியவில்லை பணிச்சுமையோடு மன அழுத்தமும் சேர்ந்து எழுதுவதற்கான சூழலை தடுத்து விடுகிறது பொதுவாகவே நான் எழுதுவதை கொஞ்சம் விரும்புகிற பக்கத்தை சேர்ந்தவன் அது என் சுய நலம் மட்டுமல்ல கூடவே எனக்கு தெரிந்த நல்ல உபயோகபடுகிற விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களுக்கு பயனபடும் என்கிற உள்ளுணர்வு தான் காரணம் அதனால் தான் முடிந்தவரை சிறந்த நல்ல தகவல்களை மட்டுமே இது வரை பகிர்ந்து வந்திருக்கிறேன் விதி விலக்காக சில பதிவுகளும் இருக்கும். சரி நண்பர்களே இனி நேரடியாக பதிவுக்குள் வந்துவிடுவோம்.
பொதுவாக நம்மிடம் இருக்கும் நமது மூதாதையாரின் நிழல்படங்கள் கருப்பு வெள்ளை சார்ந்ததாகவே இருக்கும் அப்படி இருக்கும் வெள்ளை நிற நிழல்படங்களை கலராக மாற்ற போட்டோஷாப் மென்பொருள் உதவும் அதிலும் கொஞ்சம் மெனக்கெட்டாலே சரி செய்யமுடியும் போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு எளிதான காரியம் தான் ஆனால் போட்டோஷாப் தெரியாத எத்தனை நண்பர்கள் இருக்ககூடும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும் ஆனால் இதிலும் கொஞ்சம் சிரத்தையோடு செய்தால் மிகச்சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.
இனி ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி எப்படி கருப்பு வெள்ளை நிழல்படத்தை கலர் வண்ணப்படமாக மாற்றுவதை என்பதை கீழே பார்க்கலாம்.
உங்களுக்கு செய்து காண்பிப்பதற்காக எனது மகன் ஸ்ரீராம் நிழல்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன் கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது ஒரிஜினல் நிழல்படம்.
மகனின் கலர் நிழல்படத்தை சோதனை முயற்சிக்காக கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது.
இனி நான் மேலே கொடுத்திருந்த Recolor மென்பொருள் திறந்து வழக்கமான முறையில் பைலை திறக்கவும் இதன் வலது பக்கத்தில் ஒவ்வொன்றிற்குமான கலர் வகைப்படுத்த பட்டிருக்கும் அதன் வழியாக தேவையான இடங்களை அந்தந்த கலரை செலக்ட் செய்து பிரஷால் நான் படத்தில் காண்பித்துள்ளது போல அந்தந்த பாகத்தை சுற்றி வரைந்து விடுங்கள் ஆனால் நான் உங்களுக்கு இந்த வழிமுறையை பரிந்துரைக்க போவதில்லை கலர் செலக்ட் செய்ய எளிதாக இருக்கும் வகையில் வேறு ஏதாவது ஒரு கலர் நிழல்படத்தையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
நான் இந்த வழிமுறையை பரிந்துரைப்பதன் காரணம் பொதுவாகவே முகம், கை போன்ற தோல் வெளியில் தெரியும் பாகத்தில் உங்களால் சரியான கலர் செலக்ட் செய்யமுடியாத நிலை இருக்கும் அதற்காக தான் கூடவே ஒரு கலர் நிழல்படத்தையும் திறக்க சொல்கிறேன் இனி கிழிருக்கும் படத்தை பாருங்கள் சிவப்பு நிற குறியிட்டு இரண்டு என எழுதியிருக்கும் டூல் தான் Eye Droer அந்த டூலை பயன்படுத்தி கலர் நிழல்படத்தில் உங்களுக்கு எந்த கலர் எந்த இடத்திற்கு சரியாக வரும் என நினைக்கிறீர்களோ அந்த கலரை செலகட் செய்யுங்கள் செலக்ட் செய்ய ஒரு முறை கலரை தொட்டால் போதும் அடுத்தாக சிவப்பு கட்டத்திற்குள் மூன்று என குறிப்பிட்டுருக்கிறேன் பாருங்கள் அந்த டூல் தான் பிரஷ், இனி பிரஷை பயன்படுத்தி வரைந்து விடுங்கள் உதாரணமாக முகத்திற்கான கலர் செலக்ட் செய்தாகிவிட்டது என்றால் கருப்பு வெள்ளை படத்தில் முகத்தை சுற்றி வரைந்து விடுங்கள், வரையும் போது மிகச்சரியாக துல்லியமாக இருக்க வேண்டுமென்பதில்லை ஓரளவிற்கு வரைந்தாலே போதும் இப்படிடையாக ஒவ்வொரு பாகமாக முடிந்த்தும் படத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் பின்புலத்துக்கு ஏற்றவாறு கலரை கொடுத்து விடுங்கள். நீங்கள் இபோது வரைந்த்து எப்படி இருக்கிறது என பார்க்க நினைத்தால் நான்கு என்ற எண் அடையாளபடுத்தியுள்ள டூலை கிளிக்கினால் போதும் படத்தின் பிரிவியூ பார்க்கலாம் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வந்துவிட்டது என்றால் படத்தை சேமித்து விடுங்கள் தேவையானால் இதன் Working File –யையும் போட்டோஷாப்பில் PSD சேமித்து வைப்பது போல சேமித்து வைக்கலாம்.
கீழிருக்கும் படத்தை பாருங்கள் எப்படியாக கலர் வரைந்திருக்கிறேன் என இதே போல ஓரளவிற்கு வரைந்தாலே போதும் முதலில் கொஞ்சம் சிரமாக தெரியும் ஆனால் கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு பழகிவிடும் “சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பதை போல எல்லாம் முயன்றால் எளிதாய் முடியும்.
நான் தங்களுக்காக எடுத்துக்கொண்ட எனது மகனின் கருப்பு வெள்ளை நிழல்படம் இப்போது கலர் வண்ணப்படமாக மாறியிருக்கிறது சிறு குறைகள் இருக்கலாம் உதாரணத்திற்காக என்பதில் நேரம் அதிகம் செலவலிக்காமல் வரைந்த்து மேலும் கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் அருமையாய் வந்திருக்கும் அதனால் என்ன உங்களுக்காக தானெ இது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன் இதை பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் கருத்துரையில் பதியவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும் அதற்கான வசதியும் நம் தளத்தில் இருக்கிறது.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு புரிந்திருக்குமென்றே நம்புகிறேன் பதிவு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Subscribe to:
Posts(Atom)








