Jun 27, 2011
8
Jun 27, 2011
ஜிஎஸ்ஆர்
இதற்கு பெயரும் காதலாமே!
ஒரு வரி கருத்து: காதலில் பைத்தியக்காரத்தனம் இல்லையென்றால் அது காதலே இல்லை.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நான் சந்தித்த, கேட்டறிந்த விஷயத்தை பற்றி பதிகிறேன் சில பல நாட்களாக லிவின் டு கெதர் என்கிற ஒரு கலாச்சாரத்தை இருவிதமான கருத்துகளை பல இடங்களிலும் கேட்க நேர்ந்தது, படிக்க நேர்ந்தது நான் நிச்சியமாய் இதைப் பற்றி எழுதபோவதில்லை அதே நேரத்தில் காதலோடு தொடர்புடைய சில பிரச்சினைகளை கண்டு காதலித்தவர்கள் தம்மில் தம் பிரிந்து செல்கிறார்கள் இதை பலர் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள் இன்னும் சிலர் இதற்காக இன்னும் சிலர் ஏதேதோ காரணங்கள் சொல்லி விலகி செல்கிறார்கள்.
பொதுவாகவே காதலை எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை சினிமாவில் மட்டும் வேண்டுமானால் காதலை ஏற்றுக்கொண்டு அதை ஆசிர்வதிக்கும் தாய் தந்தையரை, உறவினரை பார்க்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்னவோ கசக்கும் வேப்பாங்காய் தான் பெற்றோருக்கும் சரி உறவிணர்களுக்கும் சரி சம்பந்தமே இல்லாத ஊராரும் சரி இந்த விஷயத்தில் எல்லோர் மன நிலையும் ஓரே மாதிரியாகத்தான் இருக்கிறது இதை பற்றி எழுதும் எனது மனநிலையும் கூட மேலே சொன்னவர்களை போலத்தான் இருக்கிறது.
காதல் என்பதன் அர்த்தம் அன்பு என்பது தானே அப்படியானால் எல்லோருக்கும் காதல் உணர்வு இருக்கிறது தாம் பெற்ற பிள்ளை மேல் தாய் தந்தையர் வைத்திருக்கும் அன்பிற்கு பெயரும் காதல் தானே! தங்கள் அன்பை மட்டுமே பிரதானமாக நினைக்கும் தாய் தந்தையர் உறவிணர்கள் ஏன் பருவம் அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ காதல் வருவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? இந்த நேரத்தில் உங்களுக்கு வரும் கேள்வியை நான் மறுக்கவில்லை நியாயம் தான் எல்லோருக்கும் இயல்பாய் இருப்பது தான் நம் குழந்தைகள் நல்ல இடத்தில் திருமணம் செய்து நம் மகளை, அல்லது மகனை நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்கிற இயல்பான ஆசைதான்! இருக்கத்தான் செய்யும்! பிறந்ததில் இருந்து பார்த்து பார்த்து ஈ, எறும்பு, அழுத்தமான காற்று கூட படாமல் வளர்த்தவர்களாயிற்றே அவர்கள் எதிர்பார்ப்பதில் பெரிதாய் தவறு ஒன்றும் இருப்பாதாய் தெரியவில்லை இந்த விதத்தில் அவர்கள் நிலையில் அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் உங்கள் குடும்பம், சூழ்நிலை எல்லாம் தெரிந்தும்,வளர்த்த தாய் தந்தையரின் மீதான அன்பையும் மீறி காதலிக்கிறீர்கள் காதல் அந்தளவிற்கு உங்களை தூண்டும் இந்த நேரத்தில் எல்லாம் ஒரு தூசி போல தெரியும் ஆனால் ஒரு பெண் அல்லது ஆணின் ஏற்படும் ஒருவித ஈர்ப்பு அது காதலா, காமாம, அல்லது வெறும் ஈர்ப்பு மட்டும் தானே என்பதை கூட அறிய முடியாத நிலையில் காதலிக்கிறீர்கள் காதலிக்கும் போது பெற்றோரின் கண் வெட்டி கண்களால் பேசவும் தெரிந்த உங்களுக்கு காதலின் அடுத்த கட்டமான திருமணம் என்கிற நிலையில் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை எங்கே போகிறது?
காதல் என்றாலே பிரச்சினை என்பதை நீங்கள் காதலிக்கும் போதே உணர்ந்திருப்பீர்கள். உங்களவரை முதன் முதலில் காணும் போது உங்கள் கண் முன் மின்மினி பூச்சி அழகாய் பறந்து கீர்ன் சிக்னலை உங்கள் மனது கொடுத்து விடும் ஒரு வழியாய் தனிமையாய் சந்திக்க நேர்ந்தால் உங்கள் காதலை விட அவரவர் குடும்ப பாரம்பரியம் சாதி மதம் உறவிணர்கள் என எல்லாவற்றையும் நிச்சியம் பரிமாறிக்கொள்வீர்கள் தானே அப்பொழுதே உங்களுக்கு உங்கள் காதலின் முடிவு தெரிந்திருக்கும் அப்பொழுது குருட்டு நம்பிக்கையில் எப்படியும் சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் காதலை விட மனமிருக்காது உங்கள் குருட்டு தன்னபிக்கையை உங்களவர் தன்னம்பிக்கை என நினைத்து கண்ணே மணியே என கனவில் கோட்டை கட்ட ஆரம்பித்து விடுவார்.
விளைந்த பொருள் விற்பனைக்கு வந்து தானே ஆகவேண்டும்! அப்படித்தான் உங்கள் காதலும் பெற்றோரின் வரட்டு பிடிவாதத்திலும் உங்கள் மீதான அக்கரையாலும் உங்களுக்கென வரன் பார்க்க தொடங்குவார்கள் அப்பொழுதே பிரச்சினை வந்துவிடும் உங்கள் காதலிலும் சலசலப்பு தொடங்கும்.ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சொல்வீர்கள் எப்படியாவது உன் வீட்டில் சொல்லி சம்மதிக்க வை என்பதான விவாதங்கள் தொடங்கி விடும் ஆனால் உங்கள் வீட்டிலோ கோவிலில் பலி கொடுக்க போகும் ஆடு போலத்தான் உங்கள் நிலைமை ஆட்டிற்காவது மஞ்சல் தண்ணி தலையில் ஊத்தி அதன் உடம்பை சிலிர்க வைத்து சம்மதம் கொடுத்துவிட்டது என சந்தோஷத்தில் பலி கொடுத்து விடுவார்கள் ஆனால் இந்த விஷயத்தில் பெற்றோர்கள் உங்களின் சம்மத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் நீங்கள் குழந்தையாம், உங்களுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்று தமக்கு தாமே சொல்லிக் கொள்வார்கள்.
அவர்களுக்கே தெரியாமால் கண் வெட்டி காதலிக்க தெரிந்த நீங்கள் குழந்தையாம்! ஒன்றுமே தெரியாதம்! ஆனால் குடும்பம் நடத்த மட்டும் தெரியுமாம்! திடீரென்று வாழ்வில் வந்த ஒருவரை பேசி காதலிக்க தெரிந்த உங்களுக்கு உங்கள் பெற்றோருடன் உங்கள் காரியங்களை பகிர்ந்துகொள்ள முடியாதா? உங்கள் நிலையை அவர்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்க முடியாதா? பிரச்சினை என வரும் போது பிரச்சினைகளை சமாளிக்க முடியாமால் உடனே ஆசையாய் காதலித்த உங்களவரை மெர்ச்சுரிட்டியாக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறீர்கள் இது தான் உங்கள் காதலா? மனசு முழுவதும் உங்களவரோடான வாழ்க்கையை கனவில் வாழ்ந்து விட்டு வெறும் சதை பிண்டாமாய் அப்பா சொன்னார், அம்மா சொன்னார் என நொண்டிச்சாக்கு சொல்வதற்கு பெயர் தான் காதாலா?
சரி அப்படியே பிரிந்து சென்று நீங்கள் வேறு ஒருவரோடு உங்கள் குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் வேறொருவரை திருமணம் செய்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம், நீங்களோ ஒருவரை காதலித்தீர்கள் ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்கிறீர்கள் இதைபோலவே நீங்கள் திருமணம் செய்யப்போகும் நபருக்கும் இது போன்ற ஒரு பின்னனி இருந்தால் எப்படியிருக்கும்? அப்பொழுது உங்களால் திருமண பந்தத்தில் மனதளவில் சந்தோஷமாகத்தான் இருக்க முடியுமா? சரி ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் முன்னால் உங்களவரை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்களால் இயல்பாய் இருக்க முடியுமா? என்னடா அப்படியென்றால் இவன் கூட்டிக்கொண்டு ஓடச் சொல்கிறானோ! என நினைக்க வேண்டாம் வாழ்க்கை முழுவதும் மனதுக்குள் வருந்துவதற்கு பதிலாக உங்களால் முடிந்தவரை போராடி பார்க்கலாமே மனதில் ஒருவரும் கட்டிலில் ஒருவரும் என்பது வாழ்க்கைக்கு சுகமாக இருக்காது.
தயவு செய்து காதலியுங்கள் அது ஒரு அழகான உணர்வு, சந்தோஷம் அப்படியே ஒருவேளை உங்களுக்கு திரைப்படங்களில் வருவது போல கண்டதும் காதல் வந்தால் எதார்த்தமாய் யோசித்து பாருங்கள் வண்டி வண்டியாய் ஆசைகள் சுமந்து கனவுக்கோட்டை காட்டி சுமக்க முடியாமல் வீழ்ந்து விடாதீர்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் சேர்த்தே பாதிக்கும். இந்த சமுதாயத்தை பொருத்தவரை காதல் இன்னமும் தீண்டப்பட கூடாத ஒன்று தான் ஆனால் காதலால் மட்டுமே சாதி மதம் ஒழித்து சமத்துவம் தர முடியும்.
அன்பான பெற்றோர்களே நீங்களும் யோசியுங்கள் காதலிப்பது ஒன்றும் மிக பெரிய தவறு இல்லை அது மனிதனுக்குள் இருக்கும் இயல்பான ஒன்று தான் உங்கள் பிடிவாதத்தில் திருமணம் செய்து கொடுத்து இரண்டாவது நாளே உங்கள் பெண் வீட்டிற்கு வந்தால் அவளின் நிலை என்னாவாக இருக்கும் அல்லது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த உங்கள் மகன் திருமணம் முடிந்த சில நாளிலியே துனைவியை பிரிந்தால் அவருக்கு உங்களால் என்ன ஆறுதலை சொல்லி விடமுடியம்? காலம் கடந்த ஆறுதலில் தொலைந்த சந்தோஷம், வாழ்க்கை நிம்மதி, அந்தஸ்து என ஏதாவது கிடைத்து விடுமா?
நண்பர்களே காதலிக்க நினைப்பவர்கள், இப்போது காதலித்து கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையிலோ அல்லது எதார்த்தத்தை உணர்த்தும் வகையிலான உங்கள் கருத்துகளை எழுதுங்கள் படிப்பவர்களுக்கு உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நான் சந்தித்த, கேட்டறிந்த விஷயத்தை பற்றி பதிகிறேன் சில பல நாட்களாக லிவின் டு கெதர் என்கிற ஒரு கலாச்சாரத்தை இருவிதமான கருத்துகளை பல இடங்களிலும் கேட்க நேர்ந்தது, படிக்க நேர்ந்தது நான் நிச்சியமாய் இதைப் பற்றி எழுதபோவதில்லை அதே நேரத்தில் காதலோடு தொடர்புடைய சில பிரச்சினைகளை கண்டு காதலித்தவர்கள் தம்மில் தம் பிரிந்து செல்கிறார்கள் இதை பலர் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள் இன்னும் சிலர் இதற்காக இன்னும் சிலர் ஏதேதோ காரணங்கள் சொல்லி விலகி செல்கிறார்கள்.பொதுவாகவே காதலை எந்த பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை சினிமாவில் மட்டும் வேண்டுமானால் காதலை ஏற்றுக்கொண்டு அதை ஆசிர்வதிக்கும் தாய் தந்தையரை, உறவினரை பார்க்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்னவோ கசக்கும் வேப்பாங்காய் தான் பெற்றோருக்கும் சரி உறவிணர்களுக்கும் சரி சம்பந்தமே இல்லாத ஊராரும் சரி இந்த விஷயத்தில் எல்லோர் மன நிலையும் ஓரே மாதிரியாகத்தான் இருக்கிறது இதை பற்றி எழுதும் எனது மனநிலையும் கூட மேலே சொன்னவர்களை போலத்தான் இருக்கிறது.
காதல் என்பதன் அர்த்தம் அன்பு என்பது தானே அப்படியானால் எல்லோருக்கும் காதல் உணர்வு இருக்கிறது தாம் பெற்ற பிள்ளை மேல் தாய் தந்தையர் வைத்திருக்கும் அன்பிற்கு பெயரும் காதல் தானே! தங்கள் அன்பை மட்டுமே பிரதானமாக நினைக்கும் தாய் தந்தையர் உறவிணர்கள் ஏன் பருவம் அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ காதல் வருவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? இந்த நேரத்தில் உங்களுக்கு வரும் கேள்வியை நான் மறுக்கவில்லை நியாயம் தான் எல்லோருக்கும் இயல்பாய் இருப்பது தான் நம் குழந்தைகள் நல்ல இடத்தில் திருமணம் செய்து நம் மகளை, அல்லது மகனை நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்கிற இயல்பான ஆசைதான்! இருக்கத்தான் செய்யும்! பிறந்ததில் இருந்து பார்த்து பார்த்து ஈ, எறும்பு, அழுத்தமான காற்று கூட படாமல் வளர்த்தவர்களாயிற்றே அவர்கள் எதிர்பார்ப்பதில் பெரிதாய் தவறு ஒன்றும் இருப்பாதாய் தெரியவில்லை இந்த விதத்தில் அவர்கள் நிலையில் அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் உங்கள் குடும்பம், சூழ்நிலை எல்லாம் தெரிந்தும்,வளர்த்த தாய் தந்தையரின் மீதான அன்பையும் மீறி காதலிக்கிறீர்கள் காதல் அந்தளவிற்கு உங்களை தூண்டும் இந்த நேரத்தில் எல்லாம் ஒரு தூசி போல தெரியும் ஆனால் ஒரு பெண் அல்லது ஆணின் ஏற்படும் ஒருவித ஈர்ப்பு அது காதலா, காமாம, அல்லது வெறும் ஈர்ப்பு மட்டும் தானே என்பதை கூட அறிய முடியாத நிலையில் காதலிக்கிறீர்கள் காதலிக்கும் போது பெற்றோரின் கண் வெட்டி கண்களால் பேசவும் தெரிந்த உங்களுக்கு காதலின் அடுத்த கட்டமான திருமணம் என்கிற நிலையில் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை எங்கே போகிறது?
காதல் என்றாலே பிரச்சினை என்பதை நீங்கள் காதலிக்கும் போதே உணர்ந்திருப்பீர்கள். உங்களவரை முதன் முதலில் காணும் போது உங்கள் கண் முன் மின்மினி பூச்சி அழகாய் பறந்து கீர்ன் சிக்னலை உங்கள் மனது கொடுத்து விடும் ஒரு வழியாய் தனிமையாய் சந்திக்க நேர்ந்தால் உங்கள் காதலை விட அவரவர் குடும்ப பாரம்பரியம் சாதி மதம் உறவிணர்கள் என எல்லாவற்றையும் நிச்சியம் பரிமாறிக்கொள்வீர்கள் தானே அப்பொழுதே உங்களுக்கு உங்கள் காதலின் முடிவு தெரிந்திருக்கும் அப்பொழுது குருட்டு நம்பிக்கையில் எப்படியும் சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் காதலை விட மனமிருக்காது உங்கள் குருட்டு தன்னபிக்கையை உங்களவர் தன்னம்பிக்கை என நினைத்து கண்ணே மணியே என கனவில் கோட்டை கட்ட ஆரம்பித்து விடுவார்.
விளைந்த பொருள் விற்பனைக்கு வந்து தானே ஆகவேண்டும்! அப்படித்தான் உங்கள் காதலும் பெற்றோரின் வரட்டு பிடிவாதத்திலும் உங்கள் மீதான அக்கரையாலும் உங்களுக்கென வரன் பார்க்க தொடங்குவார்கள் அப்பொழுதே பிரச்சினை வந்துவிடும் உங்கள் காதலிலும் சலசலப்பு தொடங்கும்.ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சொல்வீர்கள் எப்படியாவது உன் வீட்டில் சொல்லி சம்மதிக்க வை என்பதான விவாதங்கள் தொடங்கி விடும் ஆனால் உங்கள் வீட்டிலோ கோவிலில் பலி கொடுக்க போகும் ஆடு போலத்தான் உங்கள் நிலைமை ஆட்டிற்காவது மஞ்சல் தண்ணி தலையில் ஊத்தி அதன் உடம்பை சிலிர்க வைத்து சம்மதம் கொடுத்துவிட்டது என சந்தோஷத்தில் பலி கொடுத்து விடுவார்கள் ஆனால் இந்த விஷயத்தில் பெற்றோர்கள் உங்களின் சம்மத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் நீங்கள் குழந்தையாம், உங்களுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்று தமக்கு தாமே சொல்லிக் கொள்வார்கள்.
அவர்களுக்கே தெரியாமால் கண் வெட்டி காதலிக்க தெரிந்த நீங்கள் குழந்தையாம்! ஒன்றுமே தெரியாதம்! ஆனால் குடும்பம் நடத்த மட்டும் தெரியுமாம்! திடீரென்று வாழ்வில் வந்த ஒருவரை பேசி காதலிக்க தெரிந்த உங்களுக்கு உங்கள் பெற்றோருடன் உங்கள் காரியங்களை பகிர்ந்துகொள்ள முடியாதா? உங்கள் நிலையை அவர்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்க முடியாதா? பிரச்சினை என வரும் போது பிரச்சினைகளை சமாளிக்க முடியாமால் உடனே ஆசையாய் காதலித்த உங்களவரை மெர்ச்சுரிட்டியாக ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல முடிவெடுக்கிறீர்கள் இது தான் உங்கள் காதலா? மனசு முழுவதும் உங்களவரோடான வாழ்க்கையை கனவில் வாழ்ந்து விட்டு வெறும் சதை பிண்டாமாய் அப்பா சொன்னார், அம்மா சொன்னார் என நொண்டிச்சாக்கு சொல்வதற்கு பெயர் தான் காதாலா?
சரி அப்படியே பிரிந்து சென்று நீங்கள் வேறு ஒருவரோடு உங்கள் குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் வேறொருவரை திருமணம் செய்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம், நீங்களோ ஒருவரை காதலித்தீர்கள் ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்கிறீர்கள் இதைபோலவே நீங்கள் திருமணம் செய்யப்போகும் நபருக்கும் இது போன்ற ஒரு பின்னனி இருந்தால் எப்படியிருக்கும்? அப்பொழுது உங்களால் திருமண பந்தத்தில் மனதளவில் சந்தோஷமாகத்தான் இருக்க முடியுமா? சரி ஏதோ ஒரு தருணத்தில் உங்கள் முன்னால் உங்களவரை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்களால் இயல்பாய் இருக்க முடியுமா? என்னடா அப்படியென்றால் இவன் கூட்டிக்கொண்டு ஓடச் சொல்கிறானோ! என நினைக்க வேண்டாம் வாழ்க்கை முழுவதும் மனதுக்குள் வருந்துவதற்கு பதிலாக உங்களால் முடிந்தவரை போராடி பார்க்கலாமே மனதில் ஒருவரும் கட்டிலில் ஒருவரும் என்பது வாழ்க்கைக்கு சுகமாக இருக்காது.
தயவு செய்து காதலியுங்கள் அது ஒரு அழகான உணர்வு, சந்தோஷம் அப்படியே ஒருவேளை உங்களுக்கு திரைப்படங்களில் வருவது போல கண்டதும் காதல் வந்தால் எதார்த்தமாய் யோசித்து பாருங்கள் வண்டி வண்டியாய் ஆசைகள் சுமந்து கனவுக்கோட்டை காட்டி சுமக்க முடியாமல் வீழ்ந்து விடாதீர்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் சேர்த்தே பாதிக்கும். இந்த சமுதாயத்தை பொருத்தவரை காதல் இன்னமும் தீண்டப்பட கூடாத ஒன்று தான் ஆனால் காதலால் மட்டுமே சாதி மதம் ஒழித்து சமத்துவம் தர முடியும்.
அன்பான பெற்றோர்களே நீங்களும் யோசியுங்கள் காதலிப்பது ஒன்றும் மிக பெரிய தவறு இல்லை அது மனிதனுக்குள் இருக்கும் இயல்பான ஒன்று தான் உங்கள் பிடிவாதத்தில் திருமணம் செய்து கொடுத்து இரண்டாவது நாளே உங்கள் பெண் வீட்டிற்கு வந்தால் அவளின் நிலை என்னாவாக இருக்கும் அல்லது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த உங்கள் மகன் திருமணம் முடிந்த சில நாளிலியே துனைவியை பிரிந்தால் அவருக்கு உங்களால் என்ன ஆறுதலை சொல்லி விடமுடியம்? காலம் கடந்த ஆறுதலில் தொலைந்த சந்தோஷம், வாழ்க்கை நிம்மதி, அந்தஸ்து என ஏதாவது கிடைத்து விடுமா?
நண்பர்களே காதலிக்க நினைப்பவர்கள், இப்போது காதலித்து கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையிலோ அல்லது எதார்த்தத்தை உணர்த்தும் வகையிலான உங்கள் கருத்துகளை எழுதுங்கள் படிப்பவர்களுக்கு உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 22, 2011
21
Jun 22, 2011
ஜிஎஸ்ஆர்
Google English to Tamil Translate கூகுளின் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வசதி
ஒரு வரி கருத்து: ஒருவன் கீழே விழுந்தால் இந்த மொத்த உலகமும் அவன் மீது ஓடும்.
வணக்கம் நண்பர்களே நமக்கெல்லாம் எட்டாக்கணியாக இருந்த மொழிபெயர்ப்பு வசதி இப்போது கூகுள் அறிமுகபடுத்தியிருக்கிறது அவசியமாக இந்த விஷயத்தை பொருத்தவரை இதை ஒரு மைல் கல்லாகவே நான் கருதுகிறேன் இனி இதைப்பற்றி அதிகம் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை இந்த பதிவை பற்றி நான் அதிகம் ஏன் எழுதபோவதில்லை என்று சொன்னதை நீங்களே உணர்வீர்கள் இனி ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது என்பது ஒரு குறையாகவே இருக்காது.
என்னை பொருத்த வரை இனி வருங்காலங்களில் தமிழ் உலக அளவில் படிக்கப்படும் அது வலைத்தளங்களாக இருந்தாலும் சரி செய்திகள் என்றாலும் சரி நிச்சியம் உலக அளவில் தமிழின் வளர்ச்சிக்கு உதவும் அதோடு நிற்காது இப்போது மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வுகள் கூட மேலே நாட்டினர் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.இனி இதன் பின்னனியாக கூகுள் ஆட்சென்ஸ் தமிழுக்கு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது
Google English to Tamil Translater (கூகுள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு
நான் கீழே இனைத்திருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.

என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே நமக்கெல்லாம் எட்டாக்கணியாக இருந்த மொழிபெயர்ப்பு வசதி இப்போது கூகுள் அறிமுகபடுத்தியிருக்கிறது அவசியமாக இந்த விஷயத்தை பொருத்தவரை இதை ஒரு மைல் கல்லாகவே நான் கருதுகிறேன் இனி இதைப்பற்றி அதிகம் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை இந்த பதிவை பற்றி நான் அதிகம் ஏன் எழுதபோவதில்லை என்று சொன்னதை நீங்களே உணர்வீர்கள் இனி ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது என்பது ஒரு குறையாகவே இருக்காது.
என்னை பொருத்த வரை இனி வருங்காலங்களில் தமிழ் உலக அளவில் படிக்கப்படும் அது வலைத்தளங்களாக இருந்தாலும் சரி செய்திகள் என்றாலும் சரி நிச்சியம் உலக அளவில் தமிழின் வளர்ச்சிக்கு உதவும் அதோடு நிற்காது இப்போது மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வுகள் கூட மேலே நாட்டினர் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.இனி இதன் பின்னனியாக கூகுள் ஆட்சென்ஸ் தமிழுக்கு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது
Google English to Tamil Translater (கூகுள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு
நான் கீழே இனைத்திருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 20, 2011
8
Jun 20, 2011
ஜிஎஸ்ஆர்
ஆங்கிலம் தமிழ் டிக்ஸ்னரியும், ஆங்கிலம் வழி தமிழ் தேடலும்
ஒரு வரி கருத்து: கோபத்திலும் பாவம் செய்யாதீர்கள்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் இரண்டு விஷயங்களை பார்க்கலாம் ஒன்று தமிழ் அகராதி(டிக்ஸ்னரி) மற்றொன்று இனையத்தில் எல்லோருக்கும் தமிழில் எழுத தெரியாது ஆனால் தமிழில் இருக்கும் ஒரு விஷயத்தை தான் தேட வேண்டியிருக்கிறது என்றால் என்ன செய்வது அதற்கு தான் இந்த பதிவு இதன் வழியே நாம் puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வரலாம்.
இனி முதலாவதாக ஐரோப்பியன் டிக்ஸ்னரி குறித்து பார்க்கலாம் இவர்கள் 31 மொழிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் குறிபிட்டு சொல்வதனால் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு இந்திய மொழிகளுக்கு இல்லை என்பதை உணரமுடிகிறது இனி இதன் தேடலின் பதில் எப்படியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதாரணமாக Aggregate என்பதை தேடினால் அது எந்தவிதமான இடத்தில் பயன்படுத்த படுகிறது வேறு எந்த இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு தெரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக தருகிறார்கள் மேலும் தமிழ் வார்த்தைக்கான ஆங்கில சொற்றொடரும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் என்ன ஒரு குறை இனையத்தில் மட்டுமே பயன்படுத்தும் வசதி கொண்டது.
ஐரோப்பியன் டிக்ஸ்னரி பயன்படுத்தி பார்க்க நினைப்பவர்களுக்கும் மேலும் புக்மார்க் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் ஐரோப்பியன் டிக்ஸ்னரி EUROPEAN DICTIONARY

இரண்டாவதாக தமிழை தேடுவதற்கு தமிங்கிலீஸ் அதாவது நான் மேலே சொன்ன மாதிரி puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட இனைய தகவல்களை காணலாம் தேவைப்படுபவர்கள் தங்கள் தளத்திலேயே இனைத்துக்கொள்ளலாம்.
இனி சோதித்து பார்க்க விரும்புவர்கள் இங்கேயே நம் தளத்தின் வலது பக்கம் கீழ் மூலையில் பாருங்கள் தமிழை ஆங்கிலத்தில் தேடு என்பதாக இருக்கும் முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு தேவையென்று விரும்பினால் மேலிருக்கும் நிரலை பயன்படுத்துங்கள்.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் இரண்டு விஷயங்களை பார்க்கலாம் ஒன்று தமிழ் அகராதி(டிக்ஸ்னரி) மற்றொன்று இனையத்தில் எல்லோருக்கும் தமிழில் எழுத தெரியாது ஆனால் தமிழில் இருக்கும் ஒரு விஷயத்தை தான் தேட வேண்டியிருக்கிறது என்றால் என்ன செய்வது அதற்கு தான் இந்த பதிவு இதன் வழியே நாம் puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வரலாம்.
இனி முதலாவதாக ஐரோப்பியன் டிக்ஸ்னரி குறித்து பார்க்கலாம் இவர்கள் 31 மொழிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் குறிபிட்டு சொல்வதனால் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு இந்திய மொழிகளுக்கு இல்லை என்பதை உணரமுடிகிறது இனி இதன் தேடலின் பதில் எப்படியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதாரணமாக Aggregate என்பதை தேடினால் அது எந்தவிதமான இடத்தில் பயன்படுத்த படுகிறது வேறு எந்த இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு தெரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக தருகிறார்கள் மேலும் தமிழ் வார்த்தைக்கான ஆங்கில சொற்றொடரும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் என்ன ஒரு குறை இனையத்தில் மட்டுமே பயன்படுத்தும் வசதி கொண்டது.
ஐரோப்பியன் டிக்ஸ்னரி பயன்படுத்தி பார்க்க நினைப்பவர்களுக்கும் மேலும் புக்மார்க் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் ஐரோப்பியன் டிக்ஸ்னரி EUROPEAN DICTIONARY
இரண்டாவதாக தமிழை தேடுவதற்கு தமிங்கிலீஸ் அதாவது நான் மேலே சொன்ன மாதிரி puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட இனைய தகவல்களை காணலாம் தேவைப்படுபவர்கள் தங்கள் தளத்திலேயே இனைத்துக்கொள்ளலாம்.
இனி சோதித்து பார்க்க விரும்புவர்கள் இங்கேயே நம் தளத்தின் வலது பக்கம் கீழ் மூலையில் பாருங்கள் தமிழை ஆங்கிலத்தில் தேடு என்பதாக இருக்கும் முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு தேவையென்று விரும்பினால் மேலிருக்கும் நிரலை பயன்படுத்துங்கள்.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 16, 2011
25
Jun 16, 2011
ஜிஎஸ்ஆர்
தமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்
ஒரு வரி கருத்து: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
வணக்கம் நண்பர்களே இந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் திரு.ராஜ்மோகன் அவர்களின் http://doctorrajmohan.blogspot.com தளத்தில் இருந்து எடுத்து தொகுக்கபட்டிருக்கிறது, குழந்தைகள் இல்லாத வீடில்லை குழந்தையை விரும்பாதவர்களும் இருக்க முடியாது அதனால் தான் என்னவோ முன்பே நம் மூதாதையர்களும் அவர்களை பற்றி குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்! என்பதாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாகவும் ஒப்பிட்டிருக்கின்றனர் இவை எதுவும் பொய்யில்லை எல்லாம் நிதர்சன உண்மைகள் இப்படிப்பட்ட நம் குழந்தை செல்வங்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி அவர்களை ஆரோக்கியத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் நமக்கு வளர்க்க ஆசை தானே ஆனால் முன்பு போல இந்நாட்கள் இல்லை நமது தற்போதையை உணவுமுறையும் சுற்றுச்சூழலும் பல்வேறு விதமான நோய்களை நமக்கும் நம் குழந்தை செல்வங்களுக்கும் தந்து கொண்டிருக்கிறது இந்த சூழலில் திரு.ராஜ்மோகன் அவர்களின் பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகளை எளிய் தமிழில் எழுதியிருக்கிறார் அவசியம் நாம் இதை தெரிந்துகொள்வது நல்லது அந்த நல்லெண்ணத்துடனேயே இது வரை அவர் எழுதிய கட்டுரைகளை புத்தமாக தொகுத்திருக்கிறேன்.
திரு.ராஜ்மோகன் அவர்கள் பின்வருமாறான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சில இடங்களில் மட்டும் நான் தலைப்பை மாற்றியிருக்கிறேன் ஓரு சில தகவல்கள் மற்றும் தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கும் மற்றவை எல்லாம் முழுமையான தமிழில் தான் தரப்பட்டிருக்கிறது இனி குழந்தை மருத்துவம் (Kulanthai Maruththuvam) புத்தகம் தரவிறக்கவும்.
1. தடுப்பூசி கால அட்டவணை
2. படுக்கையில் சிறுநீர் கழித்தல்
3. வயிற்றில் குடல் புழு
4. வேலைக்கு செல்லும் தாய்
5. குழந்தைகள் வளரும் வேகம்
6. குழந்தைகள் தூங்கும் நேரம்
7. குண்டு குழந்தைகள்
8. மிகை சுட்டி குழந்தைகள்
9. குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா
10. மூச்சு விடாமல் அழும் குழந்தை
11. அடம் பிடிக்கும் குழந்தைகள்
12. மண்ணை மட்டும் தின்றால்
13. ஜுர வலிப்பு
14. விடாமல் அழும் குழந்தை
15. BABY WALKERS உபயோக படுத்தலாமா
16. சூப்பான் தேவையா
17. விரல் சப்பும் குழந்தை
18. விமானத்தில் போகும் குழந்தைகள்
19. அடிக்கடி குழந்தைகளுக்கு வரும் ஜுரம்
20. NIMESULIDE ஆபத்து
21. குடல்வால் அழற்சி
22. காய்ச்சல் இன்புளூயன்சியா (H1N1)
23. பன்றிக்காய்ச்சல்
24. வைரஸ்க்கு எதிரான மலிவான வலியில்ல மருத்துவம்
25. தேள் கடி
26. தாய்ப்பால் சில உண்மைகள்
27. வயிற்று போக்கு
28. குழந்தைகளின் உயரம் & எடை
29. இரத்த சோகை
30. பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது
31. குடற் காய்ச்சல்,குடற் புண் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல்
32. தாய்ப்பாலால் தாய்க்கும் பல நன்மைகள்
33. குழந்தைகள் பார்வையை பாதுகாக்க
34. மாறுகண் வரமா? சாபமா?
35. டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல
36. குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
37. குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம்
38. குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி
39. குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல்
40. குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
41. உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க
42. குழந்தைகளுக்கு வரும் காது வலி
43. ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி
44. டெங்கு ஜுரம் பயங்கரம்
45. குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது
46. பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போடும் முறை
47. குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி
48. சோர்வடைய காரணங்கள் 10
49. மெட்ராஸ் ஐ-குறித்த உண்மைகள்
50. ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல
51. பிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்
52. மஞ்சள் காமாலை மஞ்சள் நிறமே
53. தொப்புள் கொடி
54. குழந்தைகளில் IQ திறனை வளர்ப்பது எப்படி
55. ஸ்கூல் பேக் சிண்ட்ரோம்
56. குழந்தைகளுக்கான இனை உணவு எப்பொழுது தரலாம்
57. குழந்தைகளுக்கு புரதமாவு எப்போது எப்படி தரலாம்
58. Ear Canal கிளீன் செய்வது எப்படி
59. விளையாட்டும் உடல் நலமும்
60. பிறந்த குழந்தையின் பிறவி பற்கள்
61. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
62. பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது
63. தேன் பற்றியதான ஆயுர்வேதம்
64. குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தரலாம்
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட குழந்தை மருத்துவத்திற்கான தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ள புத்தகத்தை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது இன்ன பிற வழிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மேலும் நண்பர்கள் கவணத்திற்கு நம் தளம் வழியாக மின்னஞ்சல் அனுப்பும் போது தயவுசெய்து தாங்கள் சொல்ல நினைப்பதை அல்லது கேட்க நினைப்பதை தெளிவாக இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் குறிப்புகள் எனக்கு புரிந்தால் மட்டுமே நான் தங்களுக்கு பதில் அளிக்க முடியும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் திரு.ராஜ்மோகன் அவர்களின் http://doctorrajmohan.blogspot.com தளத்தில் இருந்து எடுத்து தொகுக்கபட்டிருக்கிறது, குழந்தைகள் இல்லாத வீடில்லை குழந்தையை விரும்பாதவர்களும் இருக்க முடியாது அதனால் தான் என்னவோ முன்பே நம் மூதாதையர்களும் அவர்களை பற்றி குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்! என்பதாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாகவும் ஒப்பிட்டிருக்கின்றனர் இவை எதுவும் பொய்யில்லை எல்லாம் நிதர்சன உண்மைகள் இப்படிப்பட்ட நம் குழந்தை செல்வங்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி அவர்களை ஆரோக்கியத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் நமக்கு வளர்க்க ஆசை தானே ஆனால் முன்பு போல இந்நாட்கள் இல்லை நமது தற்போதையை உணவுமுறையும் சுற்றுச்சூழலும் பல்வேறு விதமான நோய்களை நமக்கும் நம் குழந்தை செல்வங்களுக்கும் தந்து கொண்டிருக்கிறது இந்த சூழலில் திரு.ராஜ்மோகன் அவர்களின் பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகளை எளிய் தமிழில் எழுதியிருக்கிறார் அவசியம் நாம் இதை தெரிந்துகொள்வது நல்லது அந்த நல்லெண்ணத்துடனேயே இது வரை அவர் எழுதிய கட்டுரைகளை புத்தமாக தொகுத்திருக்கிறேன்.திரு.ராஜ்மோகன் அவர்கள் பின்வருமாறான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சில இடங்களில் மட்டும் நான் தலைப்பை மாற்றியிருக்கிறேன் ஓரு சில தகவல்கள் மற்றும் தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கும் மற்றவை எல்லாம் முழுமையான தமிழில் தான் தரப்பட்டிருக்கிறது இனி குழந்தை மருத்துவம் (Kulanthai Maruththuvam) புத்தகம் தரவிறக்கவும்.
1. தடுப்பூசி கால அட்டவணை
2. படுக்கையில் சிறுநீர் கழித்தல்
3. வயிற்றில் குடல் புழு
4. வேலைக்கு செல்லும் தாய்
5. குழந்தைகள் வளரும் வேகம்
6. குழந்தைகள் தூங்கும் நேரம்
7. குண்டு குழந்தைகள்
8. மிகை சுட்டி குழந்தைகள்
9. குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா
10. மூச்சு விடாமல் அழும் குழந்தை
11. அடம் பிடிக்கும் குழந்தைகள்
12. மண்ணை மட்டும் தின்றால்
13. ஜுர வலிப்பு
14. விடாமல் அழும் குழந்தை
15. BABY WALKERS உபயோக படுத்தலாமா
16. சூப்பான் தேவையா
17. விரல் சப்பும் குழந்தை
18. விமானத்தில் போகும் குழந்தைகள்
19. அடிக்கடி குழந்தைகளுக்கு வரும் ஜுரம்
20. NIMESULIDE ஆபத்து
21. குடல்வால் அழற்சி
22. காய்ச்சல் இன்புளூயன்சியா (H1N1)
23. பன்றிக்காய்ச்சல்
24. வைரஸ்க்கு எதிரான மலிவான வலியில்ல மருத்துவம்
25. தேள் கடி
26. தாய்ப்பால் சில உண்மைகள்
27. வயிற்று போக்கு
28. குழந்தைகளின் உயரம் & எடை
29. இரத்த சோகை
30. பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது
31. குடற் காய்ச்சல்,குடற் புண் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல்
32. தாய்ப்பாலால் தாய்க்கும் பல நன்மைகள்
33. குழந்தைகள் பார்வையை பாதுகாக்க
34. மாறுகண் வரமா? சாபமா?
35. டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல
36. குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
37. குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம்
38. குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி
39. குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல்
40. குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
41. உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க
42. குழந்தைகளுக்கு வரும் காது வலி
43. ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி
44. டெங்கு ஜுரம் பயங்கரம்
45. குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது
46. பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போடும் முறை
47. குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி
48. சோர்வடைய காரணங்கள் 10
49. மெட்ராஸ் ஐ-குறித்த உண்மைகள்
50. ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல
51. பிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்
52. மஞ்சள் காமாலை மஞ்சள் நிறமே
53. தொப்புள் கொடி
54. குழந்தைகளில் IQ திறனை வளர்ப்பது எப்படி
55. ஸ்கூல் பேக் சிண்ட்ரோம்
56. குழந்தைகளுக்கான இனை உணவு எப்பொழுது தரலாம்
57. குழந்தைகளுக்கு புரதமாவு எப்போது எப்படி தரலாம்
58. Ear Canal கிளீன் செய்வது எப்படி
59. விளையாட்டும் உடல் நலமும்
60. பிறந்த குழந்தையின் பிறவி பற்கள்
61. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
62. பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது
63. தேன் பற்றியதான ஆயுர்வேதம்
64. குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தரலாம்
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட குழந்தை மருத்துவத்திற்கான தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ள புத்தகத்தை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது இன்ன பிற வழிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
மேலும் நண்பர்கள் கவணத்திற்கு நம் தளம் வழியாக மின்னஞ்சல் அனுப்பும் போது தயவுசெய்து தாங்கள் சொல்ல நினைப்பதை அல்லது கேட்க நினைப்பதை தெளிவாக இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் குறிப்புகள் எனக்கு புரிந்தால் மட்டுமே நான் தங்களுக்கு பதில் அளிக்க முடியும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Jun 10, 2011
23
Jun 10, 2011
ஜிஎஸ்ஆர்
கருப்பு வெள்ளை நிழல்படத்தை எளிதாக கலராக மாற்றலாம்
ஒரு வரி கருத்து: பாரட்டுவதிலும், அங்கிகரிப்பதிலும் கஞ்சத்தணம் வேண்டாம்.
வணக்கம் நண்பர்களே முன்பு போல அதிகம் பதிவுகள் எழுதமுடியவில்லை பணிச்சுமையோடு மன அழுத்தமும் சேர்ந்து எழுதுவதற்கான சூழலை தடுத்து விடுகிறது பொதுவாகவே நான் எழுதுவதை கொஞ்சம் விரும்புகிற பக்கத்தை சேர்ந்தவன் அது என் சுய நலம் மட்டுமல்ல கூடவே எனக்கு தெரிந்த நல்ல உபயோகபடுகிற விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களுக்கு பயனபடும் என்கிற உள்ளுணர்வு தான் காரணம் அதனால் தான் முடிந்தவரை சிறந்த நல்ல தகவல்களை மட்டுமே இது வரை பகிர்ந்து வந்திருக்கிறேன் விதி விலக்காக சில பதிவுகளும் இருக்கும். சரி நண்பர்களே இனி நேரடியாக பதிவுக்குள் வந்துவிடுவோம்.
பொதுவாக நம்மிடம் இருக்கும் நமது மூதாதையாரின் நிழல்படங்கள் கருப்பு வெள்ளை சார்ந்ததாகவே இருக்கும் அப்படி இருக்கும் வெள்ளை நிற நிழல்படங்களை கலராக மாற்ற போட்டோஷாப் மென்பொருள் உதவும் அதிலும் கொஞ்சம் மெனக்கெட்டாலே சரி செய்யமுடியும் போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு எளிதான காரியம் தான் ஆனால் போட்டோஷாப் தெரியாத எத்தனை நண்பர்கள் இருக்ககூடும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும் ஆனால் இதிலும் கொஞ்சம் சிரத்தையோடு செய்தால் மிகச்சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.
இனி ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி எப்படி கருப்பு வெள்ளை நிழல்படத்தை கலர் வண்ணப்படமாக மாற்றுவதை என்பதை கீழே பார்க்கலாம்.
உங்களுக்கு செய்து காண்பிப்பதற்காக எனது மகன் ஸ்ரீராம் நிழல்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன் கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது ஒரிஜினல் நிழல்படம்.

மகனின் கலர் நிழல்படத்தை சோதனை முயற்சிக்காக கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது.

இனி நான் மேலே கொடுத்திருந்த Recolor மென்பொருள் திறந்து வழக்கமான முறையில் பைலை திறக்கவும் இதன் வலது பக்கத்தில் ஒவ்வொன்றிற்குமான கலர் வகைப்படுத்த பட்டிருக்கும் அதன் வழியாக தேவையான இடங்களை அந்தந்த கலரை செலக்ட் செய்து பிரஷால் நான் படத்தில் காண்பித்துள்ளது போல அந்தந்த பாகத்தை சுற்றி வரைந்து விடுங்கள் ஆனால் நான் உங்களுக்கு இந்த வழிமுறையை பரிந்துரைக்க போவதில்லை கலர் செலக்ட் செய்ய எளிதாக இருக்கும் வகையில் வேறு ஏதாவது ஒரு கலர் நிழல்படத்தையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
நான் இந்த வழிமுறையை பரிந்துரைப்பதன் காரணம் பொதுவாகவே முகம், கை போன்ற தோல் வெளியில் தெரியும் பாகத்தில் உங்களால் சரியான கலர் செலக்ட் செய்யமுடியாத நிலை இருக்கும் அதற்காக தான் கூடவே ஒரு கலர் நிழல்படத்தையும் திறக்க சொல்கிறேன் இனி கிழிருக்கும் படத்தை பாருங்கள் சிவப்பு நிற குறியிட்டு இரண்டு என எழுதியிருக்கும் டூல் தான் Eye Droer அந்த டூலை பயன்படுத்தி கலர் நிழல்படத்தில் உங்களுக்கு எந்த கலர் எந்த இடத்திற்கு சரியாக வரும் என நினைக்கிறீர்களோ அந்த கலரை செலகட் செய்யுங்கள் செலக்ட் செய்ய ஒரு முறை கலரை தொட்டால் போதும் அடுத்தாக சிவப்பு கட்டத்திற்குள் மூன்று என குறிப்பிட்டுருக்கிறேன் பாருங்கள் அந்த டூல் தான் பிரஷ், இனி பிரஷை பயன்படுத்தி வரைந்து விடுங்கள் உதாரணமாக முகத்திற்கான கலர் செலக்ட் செய்தாகிவிட்டது என்றால் கருப்பு வெள்ளை படத்தில் முகத்தை சுற்றி வரைந்து விடுங்கள், வரையும் போது மிகச்சரியாக துல்லியமாக இருக்க வேண்டுமென்பதில்லை ஓரளவிற்கு வரைந்தாலே போதும் இப்படிடையாக ஒவ்வொரு பாகமாக முடிந்த்தும் படத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் பின்புலத்துக்கு ஏற்றவாறு கலரை கொடுத்து விடுங்கள். நீங்கள் இபோது வரைந்த்து எப்படி இருக்கிறது என பார்க்க நினைத்தால் நான்கு என்ற எண் அடையாளபடுத்தியுள்ள டூலை கிளிக்கினால் போதும் படத்தின் பிரிவியூ பார்க்கலாம் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வந்துவிட்டது என்றால் படத்தை சேமித்து விடுங்கள் தேவையானால் இதன் Working File –யையும் போட்டோஷாப்பில் PSD சேமித்து வைப்பது போல சேமித்து வைக்கலாம்.

கீழிருக்கும் படத்தை பாருங்கள் எப்படியாக கலர் வரைந்திருக்கிறேன் என இதே போல ஓரளவிற்கு வரைந்தாலே போதும் முதலில் கொஞ்சம் சிரமாக தெரியும் ஆனால் கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு பழகிவிடும் “சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பதை போல எல்லாம் முயன்றால் எளிதாய் முடியும்.

நான் தங்களுக்காக எடுத்துக்கொண்ட எனது மகனின் கருப்பு வெள்ளை நிழல்படம் இப்போது கலர் வண்ணப்படமாக மாறியிருக்கிறது சிறு குறைகள் இருக்கலாம் உதாரணத்திற்காக என்பதில் நேரம் அதிகம் செலவலிக்காமல் வரைந்த்து மேலும் கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் அருமையாய் வந்திருக்கும் அதனால் என்ன உங்களுக்காக தானெ இது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன் இதை பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் கருத்துரையில் பதியவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும் அதற்கான வசதியும் நம் தளத்தில் இருக்கிறது.

என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு புரிந்திருக்குமென்றே நம்புகிறேன் பதிவு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே முன்பு போல அதிகம் பதிவுகள் எழுதமுடியவில்லை பணிச்சுமையோடு மன அழுத்தமும் சேர்ந்து எழுதுவதற்கான சூழலை தடுத்து விடுகிறது பொதுவாகவே நான் எழுதுவதை கொஞ்சம் விரும்புகிற பக்கத்தை சேர்ந்தவன் அது என் சுய நலம் மட்டுமல்ல கூடவே எனக்கு தெரிந்த நல்ல உபயோகபடுகிற விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களுக்கு பயனபடும் என்கிற உள்ளுணர்வு தான் காரணம் அதனால் தான் முடிந்தவரை சிறந்த நல்ல தகவல்களை மட்டுமே இது வரை பகிர்ந்து வந்திருக்கிறேன் விதி விலக்காக சில பதிவுகளும் இருக்கும். சரி நண்பர்களே இனி நேரடியாக பதிவுக்குள் வந்துவிடுவோம்.
பொதுவாக நம்மிடம் இருக்கும் நமது மூதாதையாரின் நிழல்படங்கள் கருப்பு வெள்ளை சார்ந்ததாகவே இருக்கும் அப்படி இருக்கும் வெள்ளை நிற நிழல்படங்களை கலராக மாற்ற போட்டோஷாப் மென்பொருள் உதவும் அதிலும் கொஞ்சம் மெனக்கெட்டாலே சரி செய்யமுடியும் போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு எளிதான காரியம் தான் ஆனால் போட்டோஷாப் தெரியாத எத்தனை நண்பர்கள் இருக்ககூடும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும் ஆனால் இதிலும் கொஞ்சம் சிரத்தையோடு செய்தால் மிகச்சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.
இனி ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி எப்படி கருப்பு வெள்ளை நிழல்படத்தை கலர் வண்ணப்படமாக மாற்றுவதை என்பதை கீழே பார்க்கலாம்.
உங்களுக்கு செய்து காண்பிப்பதற்காக எனது மகன் ஸ்ரீராம் நிழல்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன் கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது ஒரிஜினல் நிழல்படம்.
மகனின் கலர் நிழல்படத்தை சோதனை முயற்சிக்காக கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது.
இனி நான் மேலே கொடுத்திருந்த Recolor மென்பொருள் திறந்து வழக்கமான முறையில் பைலை திறக்கவும் இதன் வலது பக்கத்தில் ஒவ்வொன்றிற்குமான கலர் வகைப்படுத்த பட்டிருக்கும் அதன் வழியாக தேவையான இடங்களை அந்தந்த கலரை செலக்ட் செய்து பிரஷால் நான் படத்தில் காண்பித்துள்ளது போல அந்தந்த பாகத்தை சுற்றி வரைந்து விடுங்கள் ஆனால் நான் உங்களுக்கு இந்த வழிமுறையை பரிந்துரைக்க போவதில்லை கலர் செலக்ட் செய்ய எளிதாக இருக்கும் வகையில் வேறு ஏதாவது ஒரு கலர் நிழல்படத்தையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
நான் இந்த வழிமுறையை பரிந்துரைப்பதன் காரணம் பொதுவாகவே முகம், கை போன்ற தோல் வெளியில் தெரியும் பாகத்தில் உங்களால் சரியான கலர் செலக்ட் செய்யமுடியாத நிலை இருக்கும் அதற்காக தான் கூடவே ஒரு கலர் நிழல்படத்தையும் திறக்க சொல்கிறேன் இனி கிழிருக்கும் படத்தை பாருங்கள் சிவப்பு நிற குறியிட்டு இரண்டு என எழுதியிருக்கும் டூல் தான் Eye Droer அந்த டூலை பயன்படுத்தி கலர் நிழல்படத்தில் உங்களுக்கு எந்த கலர் எந்த இடத்திற்கு சரியாக வரும் என நினைக்கிறீர்களோ அந்த கலரை செலகட் செய்யுங்கள் செலக்ட் செய்ய ஒரு முறை கலரை தொட்டால் போதும் அடுத்தாக சிவப்பு கட்டத்திற்குள் மூன்று என குறிப்பிட்டுருக்கிறேன் பாருங்கள் அந்த டூல் தான் பிரஷ், இனி பிரஷை பயன்படுத்தி வரைந்து விடுங்கள் உதாரணமாக முகத்திற்கான கலர் செலக்ட் செய்தாகிவிட்டது என்றால் கருப்பு வெள்ளை படத்தில் முகத்தை சுற்றி வரைந்து விடுங்கள், வரையும் போது மிகச்சரியாக துல்லியமாக இருக்க வேண்டுமென்பதில்லை ஓரளவிற்கு வரைந்தாலே போதும் இப்படிடையாக ஒவ்வொரு பாகமாக முடிந்த்தும் படத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் பின்புலத்துக்கு ஏற்றவாறு கலரை கொடுத்து விடுங்கள். நீங்கள் இபோது வரைந்த்து எப்படி இருக்கிறது என பார்க்க நினைத்தால் நான்கு என்ற எண் அடையாளபடுத்தியுள்ள டூலை கிளிக்கினால் போதும் படத்தின் பிரிவியூ பார்க்கலாம் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வந்துவிட்டது என்றால் படத்தை சேமித்து விடுங்கள் தேவையானால் இதன் Working File –யையும் போட்டோஷாப்பில் PSD சேமித்து வைப்பது போல சேமித்து வைக்கலாம்.
கீழிருக்கும் படத்தை பாருங்கள் எப்படியாக கலர் வரைந்திருக்கிறேன் என இதே போல ஓரளவிற்கு வரைந்தாலே போதும் முதலில் கொஞ்சம் சிரமாக தெரியும் ஆனால் கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு பழகிவிடும் “சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பதை போல எல்லாம் முயன்றால் எளிதாய் முடியும்.
நான் தங்களுக்காக எடுத்துக்கொண்ட எனது மகனின் கருப்பு வெள்ளை நிழல்படம் இப்போது கலர் வண்ணப்படமாக மாறியிருக்கிறது சிறு குறைகள் இருக்கலாம் உதாரணத்திற்காக என்பதில் நேரம் அதிகம் செலவலிக்காமல் வரைந்த்து மேலும் கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் அருமையாய் வந்திருக்கும் அதனால் என்ன உங்களுக்காக தானெ இது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன் இதை பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் கருத்துரையில் பதியவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும் அதற்கான வசதியும் நம் தளத்தில் இருக்கிறது.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு புரிந்திருக்குமென்றே நம்புகிறேன் பதிவு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
May 24, 2011
20
May 24, 2011
ஜிஎஸ்ஆர்
பணம் பத்தும் செய்யுமாமே!
ஒரு வரி கருத்து: பணத்தை விட நாம் நேசிக்க உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.
வணக்கம் நண்பர்களே ஐந்து மாத இடைவெளிக்கு பின்னர் இன்று எழுதியிருக்கிறேன் சரி நண்பர்களே இனி நம் பதிவிற்குள் செல்லும் முன் உங்கள் அனைவரின் நலமும் அறிய விழைகிறேன்.
பணம் என்பதை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த பணம் தனக்கென ஒரு இடத்தை நமக்கே தெரியாமல் ஆக்ரமித்துகொண்டிருக்கிறது, சில நேரம் நாமே இது போன்ற சிக்கல்களில் வழிய சென்று மாட்டிக்கொள்வதும் உண்டு, சில நேரம் விலகிச்சென்றாலும் விக்ரமாதித்தன் போல நம்மை துரத்தவும் செய்யும் பணம்.
இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் பணம் தேவையாய் இருக்கிறது அன்றாட தேவைகள் முதல் அத்யாவசிய தேவைகள், ஆடம்பர தேவைகள் வரை பணத்தை சுற்றியே எல்லாமும் நடக்கிறது யோசித்து பாருங்கள் ஒரு வேளை சாப்பிட வேண்டும் என்றாலும், சிறுநீர் கழிப்பதென்றாலும் கூட பணம் தேவைப்படுகிறது இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா நமக்கு தேவையான உணவுக்கும் பணம் தேவைப்படுகிறது, நம் உடலுக்கு தேவையில்லை என நினைத்து வெளியேற்றும் சிறுநீருக்கும் பணம் தேவைப்படுகிறது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பணம் தான் இந்த உலகத்தை ஆள்கிறது.
உலகில் முதன் முதலாய் இந்த பண்டமாற்று முறை வந்த போது யாருமே சிந்தித்து இருக்க மாட்டார்கள் பின்னாளில் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்ட ஒரு காகிதம் வரும் அது தான் உலகத்தை மாற்றப்போகிறது என்பதை என்ன அதிசியம் இன்று பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்கிற நம்பிக்கை நமக்குள்ளும் இருக்கிறது தானே.
நம்மிடம் கொஞ்சம் பேச்சு திறமையும் பணமும் இருந்துவிட்டால் நமக்குள் கானல் நீராய் நம்பிக்கை வருவது இயல்பு தானே! இப்படி நாம் பணத்தை மட்டுமே நம்பி பணத்திற்காகவே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ஆனால் இதையெல்லாம் வெறுக்கின்ற மனிதர்கள் எங்கோ ஒருபக்கம் ஞானிகளாக வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறார்கள்.
பொதுவாக பேச்சு வழக்கில் சொல்வார்கள் ”பணம் பத்தும் செய்யும்” என்று எங்கே உங்களில் யாராவது பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என உறுதியாக சொல்ல முடியுமா நிச்சியமாய் முடியாது பணத்தை விட உலகில் உன்னதமான விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது அன்பு, காதல், விட்டுகொடுத்தல், இப்படி அடுக்கடுக்காய் சொல்லிக்கொண்டே போகலாம்.
பசிக்கும் போது நம்மிடம் இருக்கும் பணத்தை தின்று நம் பசியை தீர்க்க முடியுமா?
நோய்வாய் பட்டிருக்கும் ஒருவரிடம் அன்பை காட்டாமல் வெறும் பணத்தை பாதுகாவலனாய் வைக்க முடியுமா?
விண்ணில் ராக்கெட் விடலாம், செயற்கைகோள் நிறுவலாம் ஆனால் இறந்த ஒருவரின் உயிரை வாங்க முடியுமா?
முலைப்பாலுக்கு அழும் குழந்தையின் பசியை நம்மிடம் இருக்கும் பணம் தீர்த்து விடுமா?
இங்கு நான் பணம் தேவையில்லை என்கிற விவாதத்துக்கு வரவில்லை ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை தான் சொல்ல விரும்புகிறேன். இந்த பணத்திற்கு ஒரு விஷேச குணம் இருக்கிறது ஒரு முறை பணத்தை விரும்ப தொடங்கிவிட்டால் அதன் பின்னால் அதன் மீது காதல் என்பதை விட பணத்தின் மீதான வெறி அதிகமாக இருக்கும். இதற்கு இன்னொரு குணமும் உண்டு அதாவது இருப்பவரிடம் மேலும் மேலும் சேரும் இல்லாதவனுக்கு அவன் விரும்பும் போது கைக்கு வருவதில்லை இந்த இடத்தில் நீங்கள் நினைக்கலாம் உழைத்தால் முடியும் என்கிற முட்டாள்தனமான வாசகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை உங்களுக்கு தெரிந்த எத்தனையோ நபர்கள் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள் அவர்களின் வாழ்க்கை தரம் என்னவோ மோசமானதாக இருக்கும்.
பணம் உள்ளவனிடம் பணம் சேரும் என்பார்கள் அது எப்படி என பார்த்தால் உங்களேயே இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் உங்களிடம் தேவைக்கு மேல் பணம் இருந்தால் நீங்கள் நினைப்பது போல ஒரு தொழிலை தொடங்கலாம், வெற்றியும் பெறலாம் மேலும் சம்பாதிக்கலாம் ஒருவேளை உங்கள் கணக்கு தவறானல் மீதம் இருப்பதை வைத்து நீங்கள் வாழ்ந்து விடுவீர்கள் அதே நேரத்தில் தங்களிம் குறைவான பணம் மட்டும் இருக்கிறது என்றால் உங்களால் தைரியமாக ஒரு தொழிலை தொடங்கமுடியமா? அப்படியே உங்களிடம் திறமை இருந்தாலும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் பயமே அதிகம் இருக்கும் இதை இழந்தால் என்ன செய்வது இந்த விஷயத்தில் தான் பணம் பணத்தோடு சேர்கிறது.
பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பவர்களின் வாழ்க்கையை பாருங்கள் புரியும் அவர்களிடம் இருக்கும் பணம் வெறும் கணக்குக்கு மட்டுமே இருக்கும் அத்தனையும் அவர்களுக்கு உபயோகபடுமா என்றால் பதில் கேள்விக்குறியாக தான் இருக்கும். ஒரு நிலைக்கு மேல் இருக்கும் எல்லாம் வெறும் பொருளாக மட்டுமே இருக்கும் அதனால் பயன் இருக்காது இதைத்தான் முனோர்கள் சொன்னார்கள் “ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதாக.
எழுத்தில் நிறைய தடுமாற்றம் இருக்கும் ஒருவேளை சொல்ல வந்த விஷயம் கோர்வையாக இல்லாமல் கூட இருக்கலாம் மன்னிக்கவும் செரிவான எழுத்திற்கு மன அமைதியும் அவசியமாகிறது.நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள் எதிர் காலத்தில் பணம் எப்படி இருக்கும்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே ஐந்து மாத இடைவெளிக்கு பின்னர் இன்று எழுதியிருக்கிறேன் சரி நண்பர்களே இனி நம் பதிவிற்குள் செல்லும் முன் உங்கள் அனைவரின் நலமும் அறிய விழைகிறேன்.
பணம் என்பதை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த பணம் தனக்கென ஒரு இடத்தை நமக்கே தெரியாமல் ஆக்ரமித்துகொண்டிருக்கிறது, சில நேரம் நாமே இது போன்ற சிக்கல்களில் வழிய சென்று மாட்டிக்கொள்வதும் உண்டு, சில நேரம் விலகிச்சென்றாலும் விக்ரமாதித்தன் போல நம்மை துரத்தவும் செய்யும் பணம்.
இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் பணம் தேவையாய் இருக்கிறது அன்றாட தேவைகள் முதல் அத்யாவசிய தேவைகள், ஆடம்பர தேவைகள் வரை பணத்தை சுற்றியே எல்லாமும் நடக்கிறது யோசித்து பாருங்கள் ஒரு வேளை சாப்பிட வேண்டும் என்றாலும், சிறுநீர் கழிப்பதென்றாலும் கூட பணம் தேவைப்படுகிறது இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா நமக்கு தேவையான உணவுக்கும் பணம் தேவைப்படுகிறது, நம் உடலுக்கு தேவையில்லை என நினைத்து வெளியேற்றும் சிறுநீருக்கும் பணம் தேவைப்படுகிறது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பணம் தான் இந்த உலகத்தை ஆள்கிறது.
உலகில் முதன் முதலாய் இந்த பண்டமாற்று முறை வந்த போது யாருமே சிந்தித்து இருக்க மாட்டார்கள் பின்னாளில் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்ட ஒரு காகிதம் வரும் அது தான் உலகத்தை மாற்றப்போகிறது என்பதை என்ன அதிசியம் இன்று பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்கிற நம்பிக்கை நமக்குள்ளும் இருக்கிறது தானே.
நம்மிடம் கொஞ்சம் பேச்சு திறமையும் பணமும் இருந்துவிட்டால் நமக்குள் கானல் நீராய் நம்பிக்கை வருவது இயல்பு தானே! இப்படி நாம் பணத்தை மட்டுமே நம்பி பணத்திற்காகவே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ஆனால் இதையெல்லாம் வெறுக்கின்ற மனிதர்கள் எங்கோ ஒருபக்கம் ஞானிகளாக வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறார்கள்.
பொதுவாக பேச்சு வழக்கில் சொல்வார்கள் ”பணம் பத்தும் செய்யும்” என்று எங்கே உங்களில் யாராவது பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என உறுதியாக சொல்ல முடியுமா நிச்சியமாய் முடியாது பணத்தை விட உலகில் உன்னதமான விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது அன்பு, காதல், விட்டுகொடுத்தல், இப்படி அடுக்கடுக்காய் சொல்லிக்கொண்டே போகலாம்.
பசிக்கும் போது நம்மிடம் இருக்கும் பணத்தை தின்று நம் பசியை தீர்க்க முடியுமா?
நோய்வாய் பட்டிருக்கும் ஒருவரிடம் அன்பை காட்டாமல் வெறும் பணத்தை பாதுகாவலனாய் வைக்க முடியுமா?
விண்ணில் ராக்கெட் விடலாம், செயற்கைகோள் நிறுவலாம் ஆனால் இறந்த ஒருவரின் உயிரை வாங்க முடியுமா?
முலைப்பாலுக்கு அழும் குழந்தையின் பசியை நம்மிடம் இருக்கும் பணம் தீர்த்து விடுமா?
இங்கு நான் பணம் தேவையில்லை என்கிற விவாதத்துக்கு வரவில்லை ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை தான் சொல்ல விரும்புகிறேன். இந்த பணத்திற்கு ஒரு விஷேச குணம் இருக்கிறது ஒரு முறை பணத்தை விரும்ப தொடங்கிவிட்டால் அதன் பின்னால் அதன் மீது காதல் என்பதை விட பணத்தின் மீதான வெறி அதிகமாக இருக்கும். இதற்கு இன்னொரு குணமும் உண்டு அதாவது இருப்பவரிடம் மேலும் மேலும் சேரும் இல்லாதவனுக்கு அவன் விரும்பும் போது கைக்கு வருவதில்லை இந்த இடத்தில் நீங்கள் நினைக்கலாம் உழைத்தால் முடியும் என்கிற முட்டாள்தனமான வாசகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை உங்களுக்கு தெரிந்த எத்தனையோ நபர்கள் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள் அவர்களின் வாழ்க்கை தரம் என்னவோ மோசமானதாக இருக்கும்.
பணம் உள்ளவனிடம் பணம் சேரும் என்பார்கள் அது எப்படி என பார்த்தால் உங்களேயே இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் உங்களிடம் தேவைக்கு மேல் பணம் இருந்தால் நீங்கள் நினைப்பது போல ஒரு தொழிலை தொடங்கலாம், வெற்றியும் பெறலாம் மேலும் சம்பாதிக்கலாம் ஒருவேளை உங்கள் கணக்கு தவறானல் மீதம் இருப்பதை வைத்து நீங்கள் வாழ்ந்து விடுவீர்கள் அதே நேரத்தில் தங்களிம் குறைவான பணம் மட்டும் இருக்கிறது என்றால் உங்களால் தைரியமாக ஒரு தொழிலை தொடங்கமுடியமா? அப்படியே உங்களிடம் திறமை இருந்தாலும், உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் பயமே அதிகம் இருக்கும் இதை இழந்தால் என்ன செய்வது இந்த விஷயத்தில் தான் பணம் பணத்தோடு சேர்கிறது.
பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பவர்களின் வாழ்க்கையை பாருங்கள் புரியும் அவர்களிடம் இருக்கும் பணம் வெறும் கணக்குக்கு மட்டுமே இருக்கும் அத்தனையும் அவர்களுக்கு உபயோகபடுமா என்றால் பதில் கேள்விக்குறியாக தான் இருக்கும். ஒரு நிலைக்கு மேல் இருக்கும் எல்லாம் வெறும் பொருளாக மட்டுமே இருக்கும் அதனால் பயன் இருக்காது இதைத்தான் முனோர்கள் சொன்னார்கள் “ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதாக.
எழுத்தில் நிறைய தடுமாற்றம் இருக்கும் ஒருவேளை சொல்ல வந்த விஷயம் கோர்வையாக இல்லாமல் கூட இருக்கலாம் மன்னிக்கவும் செரிவான எழுத்திற்கு மன அமைதியும் அவசியமாகிறது.நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள் எதிர் காலத்தில் பணம் எப்படி இருக்கும்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Dec 30, 2010
27
Dec 30, 2010
ஜிஎஸ்ஆர்
புது வருட வாழ்த்துகள்-2011
ஒரு வரி கருத்து: வேலை செய்யாமல் அதிர்ஷ்டமில்லை என புலம்புவதில் பலனில்லை.
வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில் நமது வலைத்தளம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.
புது வருடம்-2011

பூத்தது புது வருடம்
பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்
நடந்து முடிந்தது முடிந்தது - இனி
நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.
எதிர்காலத்தை திட்டமிடுவோம்
எண்ணங்களை வசப்படுத்துவோம்
கடந்த வருடம்- நம்
கஷ்டங்களை கொண்டு போகட்டும்
புது வருடம் – பல
புதுமைகள் காண உதவட்டும்
நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
நிஜமாய் மாறட்டும்
இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
இந்த சொந்தங்கள் தொடரட்டும்
நம் வீட்டு சொந்தங்கள்
நலம் வாழ நாளும் பிராத்திப்போம்
இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவனமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில் நமது வலைத்தளம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.
புது வருடம்-2011

பூத்தது புது வருடம்
பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்
நடந்து முடிந்தது முடிந்தது - இனி
நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.
எதிர்காலத்தை திட்டமிடுவோம்
எண்ணங்களை வசப்படுத்துவோம்
கடந்த வருடம்- நம்
கஷ்டங்களை கொண்டு போகட்டும்
புது வருடம் – பல
புதுமைகள் காண உதவட்டும்
நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
நிஜமாய் மாறட்டும்
இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
இந்த சொந்தங்கள் தொடரட்டும்
நம் வீட்டு சொந்தங்கள்
நலம் வாழ நாளும் பிராத்திப்போம்
இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவனமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Dec 28, 2010
24
Dec 28, 2010
ஜிஎஸ்ஆர்
மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சுவாமி ஐய்யப்பன் கோவிலை சுற்றிப்பார்க்கலாம்.
ஒரு வரி கருத்து: எல்லாம் வல்லவன் இறைவன்.
வணக்கம் நண்பர்களே நான் வழக்கமாய் எழுதும் பதிவில் இருந்து இந்த பதிவு முற்றிலும் மாறுபட்டது நான் என்னுடைய சில பதிவுகளில் கடவுளை பற்றிய என சிந்தனைகளை எழுதியிருக்கிறேன் ஆனால் இந்த முறை பெரிதாக நான் ஒன்றும் எழுதபோவதில்லை உங்களுக்கு இரண்டு தளங்களை அறிமுகம் செய்கிறேன் நீங்கள் உங்கள் கணினியில் இருந்தபடியே மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலையும், அருள்மிகு மணிகண்டன் ஐய்யப்பனையும் காண்பதற்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக பனோரமா தளங்கள் இரண்டை உருவாக்கி இருக்கிறார்கள் அதிலும் மதுரை மீனாட்சியம்மன் தளத்தை பார்க்கும் போது என்னையறியாமல் ஒரு நெருக்கம் இருப்பதாய் உணர்கிறேன் ஒருவேளை நான் அடிக்கடி கடந்த சென்ற பாதையாய் இருக்கலாம் அதோடு சுவாமி ஐய்யப்பனின் தளத்தை நுழைந்தால் ஒலிக்கும் பாடல் நம்மை கோவிலுக்குள் இருப்பதாகவே உணரச்ச்செய்கிறது தொலைவில் இருக்கும் நண்பர்கள் இந்த ஆலயங்களுக்கு வரமுடியாதவர்கள் இந்த தளங்களை பாருங்கள் நீங்கள் நேரடியாக சென்று வந்த அனுபவத்தை உணர்வீர்கள்.
முதலாவதாக Madurai Meenachi Amman Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.

இரண்டாவதாகSwamy Iyyappan Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.

என்ன நண்பர்களே புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் சூழ்நிலை சிலருக்கு ஒத்துவராமல் இருக்கலாம் அதனால் என்ன இனையம் வழியாகவே மீனாட்சியம்மனையும், ஐய்யப்பனையும் தரிசிக்கலாமே. தளம் பயனுள்ளதாய், மனதிற்கு நிறைவு அளிப்பதாக இருந்தால் அவசியம் உங்கள் கருத்துக்களையும், இன் ட்லியில் வாக்கும் அளிப்பதன் மூலம் நீங்கள் பெற்ற மன நிறைவை மற்றவர்களும் பெறட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே நான் வழக்கமாய் எழுதும் பதிவில் இருந்து இந்த பதிவு முற்றிலும் மாறுபட்டது நான் என்னுடைய சில பதிவுகளில் கடவுளை பற்றிய என சிந்தனைகளை எழுதியிருக்கிறேன் ஆனால் இந்த முறை பெரிதாக நான் ஒன்றும் எழுதபோவதில்லை உங்களுக்கு இரண்டு தளங்களை அறிமுகம் செய்கிறேன் நீங்கள் உங்கள் கணினியில் இருந்தபடியே மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலையும், அருள்மிகு மணிகண்டன் ஐய்யப்பனையும் காண்பதற்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக பனோரமா தளங்கள் இரண்டை உருவாக்கி இருக்கிறார்கள் அதிலும் மதுரை மீனாட்சியம்மன் தளத்தை பார்க்கும் போது என்னையறியாமல் ஒரு நெருக்கம் இருப்பதாய் உணர்கிறேன் ஒருவேளை நான் அடிக்கடி கடந்த சென்ற பாதையாய் இருக்கலாம் அதோடு சுவாமி ஐய்யப்பனின் தளத்தை நுழைந்தால் ஒலிக்கும் பாடல் நம்மை கோவிலுக்குள் இருப்பதாகவே உணரச்ச்செய்கிறது தொலைவில் இருக்கும் நண்பர்கள் இந்த ஆலயங்களுக்கு வரமுடியாதவர்கள் இந்த தளங்களை பாருங்கள் நீங்கள் நேரடியாக சென்று வந்த அனுபவத்தை உணர்வீர்கள்.
முதலாவதாக Madurai Meenachi Amman Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.
இரண்டாவதாகSwamy Iyyappan Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.
என்ன நண்பர்களே புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் சூழ்நிலை சிலருக்கு ஒத்துவராமல் இருக்கலாம் அதனால் என்ன இனையம் வழியாகவே மீனாட்சியம்மனையும், ஐய்யப்பனையும் தரிசிக்கலாமே. தளம் பயனுள்ளதாய், மனதிற்கு நிறைவு அளிப்பதாக இருந்தால் அவசியம் உங்கள் கருத்துக்களையும், இன் ட்லியில் வாக்கும் அளிப்பதன் மூலம் நீங்கள் பெற்ற மன நிறைவை மற்றவர்களும் பெறட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Dec 27, 2010
22
Dec 27, 2010
ஜிஎஸ்ஆர்
கீறல் விழுந்த சிடியில் காப்பி எடுத்தல் 1
ஒரு வரி கருத்து: எல்லாவற்றிற்கும் காலம் மாற்று வழியை வைத்திருக்கிறது.
வணக்கம் நண்பர்களே நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.
நண்பர்களே இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.
முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் நான் முயற்சித்து பார்த்த வரை சிறப்பாகத்தான் இருக்கிறது.

இரண்டாவதாக Un Stoppable இது ஒரு இலவச மென்பொருள் வேகம் சிறப்பாக இருக்கிறது.

மூன்றாவதாக Any Reader தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் அவசியம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதன் தேவை ஏற்படலாம்.

இதில் சில மென்பொருள் தரவிறக்கி உபயோகிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் முடிந்தவரை உதவுகிறேன். பதிவு உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றியாதான் உங்கள் கருத்தையும் இன்ட்லியில் வாக்கும் அளித்துச்செல்லுங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.
நண்பர்களே இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.
முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் நான் முயற்சித்து பார்த்த வரை சிறப்பாகத்தான் இருக்கிறது.
இரண்டாவதாக Un Stoppable இது ஒரு இலவச மென்பொருள் வேகம் சிறப்பாக இருக்கிறது.
மூன்றாவதாக Any Reader தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் அவசியம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதன் தேவை ஏற்படலாம்.
இதில் சில மென்பொருள் தரவிறக்கி உபயோகிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் முடிந்தவரை உதவுகிறேன். பதிவு உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றியாதான் உங்கள் கருத்தையும் இன்ட்லியில் வாக்கும் அளித்துச்செல்லுங்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Dec 24, 2010
26
Dec 24, 2010
ஜிஎஸ்ஆர்
எதிர்காலத்தில் பணம் எப்படி இருக்கும்? எனது பார்வையில்!
ஒரு வரி கருத்து: மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.
வணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் பணம் எனும் அத்யாவசிய தேவையை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த விரும்பும் வசதிகளுக்கேற்ப பணத்தின் தேவை கூடியோ அல்லது தேவைக்கோ தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நாம் முன்னோர்கள் உப்யோகித்த நாணயமும் நாம் இப்போது உபயோகிக்கிற நாணயமும், முன்னோர்கள் உபயோகித்த பணத்திற்கும், நாம் இப்போது உபயோகித்து கொண்டிருக்கும் பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அதில் நம் நாகரிகத்தின் வளர்ச்சியும் நம் சிந்தனையின், அறிவு கூர்மையின் வளர்ச்சியையும் ஒத்ததாக தான் வடிவமைப்பு இருந்திருக்கிறது ஆனால் நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போவது எதிர்காலத்தில் பணத்தின் அடையாளம் எப்படி இருக்கும் அல்லது அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றிய எனது சிந்தனை மட்டுமே இது மற்றவர்களோடு ஒத்து போகவேண்டுமென்பதில்லை.
நான் கொடுத்திருக்கும் படங்கள் கூகுள் வழியாக இனையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை படத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் கரண்சிகள் பல காலக்கட்டத்தை சேர்ந்தவை வெறும் உதாரணத்துக்கு மட்டுமே படம் இனைத்திருக்கிறேன்




மேலும் படங்களிற்கு கூகுலில் தேடுங்கள் கொட்டிக்கிடக்கிறது.என்ன நண்பர்களே மேலே உள்ள படத்தை பார்த்தீர்கள் தானே இனி எதிர்காலத்தில் நமது பணம் எப்படி இருக்க போகிறது என்பதையும் கிழே பாருங்கள்.
என்ன வெற்றிடமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா?ஆம் உண்மைதான் இன்னும் 20 வருடங்களில் இந்த பணத்திற்கான வடிவமோ,தாளோ இருக்காது இனி இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
நாம் இப்போதே பணத்தை கண்ணில் பார்க்கும் வாய்ப்பை குறைத்து கொண்டே வருகிறோம் அதற்கு இப்போதுள்ள கணினி வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் வலுச்சேர்க்கிறது உதராணமாக நீங்கள் ஒரு அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவணங்களில் வேலை பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் வேலைக்கான கூலி நேரடியாக வங்கியில் செலுத்தி விடுகிறார்கள் அதன் பின் தேவைப்படுபவர்கள் பணத்தை கையில் எடுக்கிறார்கள் இன்னும் சிலர் பற்று அட்டை (Debit Card) வழியாக பொருள்கள் வாங்குகிறார்கள் செலுத்த வேண்டிய தொகையை வங்கி கணக்கில் இருந்தே செலுத்தி விடுகிறார்கள் ஒரு வகையில் இதை பாதுகாப்பாக உணர்கிறார்கள் இன்னும் சிலர் கடன் அட்டை வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பணத்தை அலைபேசி வழியாக செலுத்துபவர்களும் இருக்கிறார்கள் இந்த வகையினரும் பணத்தை கையில் வைத்திருப்பதை விரும்பவில்லை ஆனால் இதில் நான் சாதரண தொழிலாலர்களை இந்த வகையில் உட்படுத்த முடியாது அதற்க்கு தான் நாம் மேலே சொன்ன 20 வருடங்கள்.
இனி எப்படி சில ஆண்டுகளில் பணம் மொத்தத்தையும் நிறுத்தி வெறும் எண்கள் வரும் என்பதை பார்க்கலாம் இப்படியாக நடக்கும் போது நிச்சியம் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை கருப்பு பணம் லஞ்சம் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் இந்தியாவில் இருந்து கருப்பு பணமாக ஒரு பைசா கூட வெளியில் செல்லமுடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் புதிய நியமங்கள் கொண்டுவரவேண்டும், அதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருக்கின்றன நமது இந்தியாவில் இப்போது அமுலுக்கு கொண்டு வந்திருக்கும் அடையாள அட்டையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி வரும், அதை இப்போதே இன்போசிஸ் நிறுவணத்தினர் அரசின் உத்தரவின் பேரில் சில மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ஆனால் அதையும் நிறைய மேம்படுத்த வேண்டி இருக்கும்.
முன்பு ஒரு முறை வருடமோ யாருடையை ஆட்சி என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை 1000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமாக் புழக்கத்தில் இருந்த போது அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்தது அதில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து தங்களிடம் இருக்கும் 1000 ரூபாயை வங்கியில் ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி ஒரு தேதியையும் அறிவித்த்து அந்த தேதிக்கு பின்னால் அந்த பணத்தின் மதிப்பு வெறும் பூஜ்யம் என்பதை தெளிபடுத்தி ஆனையிட்டது அரசு எதிர்பார்த்தது போலவே கறுப்பு பணம் அரசுக்குள் வந்துவிட்டது அப்படி செலுத்தாதவர்களின் பணம் வெறும் பேப்பராக மாற்றிவிட்டிருந்தது.
இனி இந்தியனுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் அடிப்படை தகவல்கள், சொந்த விபரங்கள், சொத்து விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், மருத்துவ விபரங்கள் இன்னும் பிற இத்யாதிகள் அடங்கியதாக இருக்கும் அதன் வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிவரும், கடைக்கு சென்று விளக்கெண்ணைய் வாங்குவதென்றாலும் தீப்பெட்டி வாங்குவதென்றாலும் ஒவ்வொரு பரிமாற்றமும் அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டையில் இருக்கும் வங்கி கணக்கின் வழியாகவே மேற்கொள்ளப்படும், இந்த அடையாள அட்டை இல்லாமல் எந்த ஒரு வங்கி கணக்கோ, பணப் பரிவர்த்தனையோ அல்லது வேறு தகவல்களோ பரிமாற்றம் செய்யமுடியாத வகையில் இருக்கும்.
ஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் உரிய விலை கொடுக்காமல் நிலத்தை வாங்க முடியாது அப்படி நிலம் வாங்கும் போது அதற்கான பரிவர்த்தனை அரசின் அடையாள அட்டையின் வழியால் நடைபெறுவதால் உங்களால் அரசுக்கான வரியை ஏய்ப்பு செய்ய முடியாது அப்படி செய்ய நினைத்தாலும் அரசுக்கு கண்டுபிடிப்பதில் எந்த பிரச்சினையும் வராது இதனால் சில இடங்களில் கருப்பு பணம் சேர வழியில்லை.
மொத்த பண பரிவர்த்தனையும் வங்கியின் வழி மேற்கொள்வதால் கள்ளப்பணம் வெளியிட முடியாது காரணம் பணத்திற்கான வடிவம் காணமல் போய் அரசால் நியுமரிக் எண்கள் வழங்கப்பட்டிருக்கும் அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் நியுமரிக் எண்ணில் இடைச்செறுகலாக ஒரே எண்ணில் மீண்டும் ஒரு எண்ணை உட்செலுத்த முடியாது சரி புதிதாக எண்களை வழங்க நினைத்தாலும் அரசின் இயந்திரங்கள் அதை அனுமதிக்காது யோசித்து பாருங்கள் அரசியல்வாதியோ பெறும் பண முதலைகளோ அரசை ஏமாற்றி பணத்தை வெளியில் கொண்டு செல்லமுடியுமா?பணத்தை வேறு ஒரு நாட்டு பணமாக மாற்ற நினைத்தாலும் அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியுமா?ஆக பணம் என்பது வெறும் எண்களாகவும் கண்களில் பார்க்க முடியாததாகவும், நம்முடைய பணம் வெளி நாட்டில் இருந்தால் பத்திரங்களாக மாறியிருக்கும் ஆக இதன் வழியாக வெளிநாட்டில் இருந்து அந்நிய நாட்டு பணத்தையும் அரசின் அனுமதி இல்லாமல் உள்ளே கொண்டு வரமுடியாது!
சரி நம் அடையாள அட்டை காணமால் போய்விட்டது அல்லது அடுத்தவர்களால் களவாடப்பட்டது என்றாலும் நமக்கு பாதிப்பு இருக்காது காரணம் அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு நம் கண், கைரேகை மற்றும் கூடுதலாக கடவுச்சொல்லும் பயன்படுத்தினால் மட்டுமே நம் தகவல்கள் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதாக இருந்தால் திருடுவது எளிமையான விஷயமா? இதையும் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
இனி எப்படி இதன் வளர்ச்சியும் சாதகமும், பாதகமும் இருக்குமென்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஆனால் இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள். என்ன நண்பர்களே இது சாத்தியமில்லை என நினைக்கிறீர்களா? அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் இவையெல்லாம் சாத்தியப்படும் போது நாம் நிச்சியமாய் எவராலும் அசைக்க முடியாத வல்லரசாய் இருப்போம்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் பணம் எனும் அத்யாவசிய தேவையை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த விரும்பும் வசதிகளுக்கேற்ப பணத்தின் தேவை கூடியோ அல்லது தேவைக்கோ தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நாம் முன்னோர்கள் உப்யோகித்த நாணயமும் நாம் இப்போது உபயோகிக்கிற நாணயமும், முன்னோர்கள் உபயோகித்த பணத்திற்கும், நாம் இப்போது உபயோகித்து கொண்டிருக்கும் பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது அதில் நம் நாகரிகத்தின் வளர்ச்சியும் நம் சிந்தனையின், அறிவு கூர்மையின் வளர்ச்சியையும் ஒத்ததாக தான் வடிவமைப்பு இருந்திருக்கிறது ஆனால் நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போவது எதிர்காலத்தில் பணத்தின் அடையாளம் எப்படி இருக்கும் அல்லது அதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றிய எனது சிந்தனை மட்டுமே இது மற்றவர்களோடு ஒத்து போகவேண்டுமென்பதில்லை.
நான் கொடுத்திருக்கும் படங்கள் கூகுள் வழியாக இனையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை படத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் கரண்சிகள் பல காலக்கட்டத்தை சேர்ந்தவை வெறும் உதாரணத்துக்கு மட்டுமே படம் இனைத்திருக்கிறேன்

மேலும் படங்களிற்கு கூகுலில் தேடுங்கள் கொட்டிக்கிடக்கிறது.என்ன நண்பர்களே மேலே உள்ள படத்தை பார்த்தீர்கள் தானே இனி எதிர்காலத்தில் நமது பணம் எப்படி இருக்க போகிறது என்பதையும் கிழே பாருங்கள்.
என்ன வெற்றிடமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா?ஆம் உண்மைதான் இன்னும் 20 வருடங்களில் இந்த பணத்திற்கான வடிவமோ,தாளோ இருக்காது இனி இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
நாம் இப்போதே பணத்தை கண்ணில் பார்க்கும் வாய்ப்பை குறைத்து கொண்டே வருகிறோம் அதற்கு இப்போதுள்ள கணினி வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் வலுச்சேர்க்கிறது உதராணமாக நீங்கள் ஒரு அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவணங்களில் வேலை பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் வேலைக்கான கூலி நேரடியாக வங்கியில் செலுத்தி விடுகிறார்கள் அதன் பின் தேவைப்படுபவர்கள் பணத்தை கையில் எடுக்கிறார்கள் இன்னும் சிலர் பற்று அட்டை (Debit Card) வழியாக பொருள்கள் வாங்குகிறார்கள் செலுத்த வேண்டிய தொகையை வங்கி கணக்கில் இருந்தே செலுத்தி விடுகிறார்கள் ஒரு வகையில் இதை பாதுகாப்பாக உணர்கிறார்கள் இன்னும் சிலர் கடன் அட்டை வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பணத்தை அலைபேசி வழியாக செலுத்துபவர்களும் இருக்கிறார்கள் இந்த வகையினரும் பணத்தை கையில் வைத்திருப்பதை விரும்பவில்லை ஆனால் இதில் நான் சாதரண தொழிலாலர்களை இந்த வகையில் உட்படுத்த முடியாது அதற்க்கு தான் நாம் மேலே சொன்ன 20 வருடங்கள்.
இனி எப்படி சில ஆண்டுகளில் பணம் மொத்தத்தையும் நிறுத்தி வெறும் எண்கள் வரும் என்பதை பார்க்கலாம் இப்படியாக நடக்கும் போது நிச்சியம் நம் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை கருப்பு பணம் லஞ்சம் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டிவிடலாம் இந்தியாவில் இருந்து கருப்பு பணமாக ஒரு பைசா கூட வெளியில் செல்லமுடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் புதிய நியமங்கள் கொண்டுவரவேண்டும், அதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருக்கின்றன நமது இந்தியாவில் இப்போது அமுலுக்கு கொண்டு வந்திருக்கும் அடையாள அட்டையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யவேண்டி வரும், அதை இப்போதே இன்போசிஸ் நிறுவணத்தினர் அரசின் உத்தரவின் பேரில் சில மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ஆனால் அதையும் நிறைய மேம்படுத்த வேண்டி இருக்கும்.
முன்பு ஒரு முறை வருடமோ யாருடையை ஆட்சி என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை 1000 ரூபாய் கள்ள நோட்டு அதிகமாக் புழக்கத்தில் இருந்த போது அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்தது அதில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதித்து தங்களிடம் இருக்கும் 1000 ரூபாயை வங்கியில் ஒப்படைத்து அதற்கு பதிலாக வேறு பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி ஒரு தேதியையும் அறிவித்த்து அந்த தேதிக்கு பின்னால் அந்த பணத்தின் மதிப்பு வெறும் பூஜ்யம் என்பதை தெளிபடுத்தி ஆனையிட்டது அரசு எதிர்பார்த்தது போலவே கறுப்பு பணம் அரசுக்குள் வந்துவிட்டது அப்படி செலுத்தாதவர்களின் பணம் வெறும் பேப்பராக மாற்றிவிட்டிருந்தது.
இனி இந்தியனுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் அடிப்படை தகவல்கள், சொந்த விபரங்கள், சொத்து விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், மருத்துவ விபரங்கள் இன்னும் பிற இத்யாதிகள் அடங்கியதாக இருக்கும் அதன் வழியாகவே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிவரும், கடைக்கு சென்று விளக்கெண்ணைய் வாங்குவதென்றாலும் தீப்பெட்டி வாங்குவதென்றாலும் ஒவ்வொரு பரிமாற்றமும் அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டையில் இருக்கும் வங்கி கணக்கின் வழியாகவே மேற்கொள்ளப்படும், இந்த அடையாள அட்டை இல்லாமல் எந்த ஒரு வங்கி கணக்கோ, பணப் பரிவர்த்தனையோ அல்லது வேறு தகவல்களோ பரிமாற்றம் செய்யமுடியாத வகையில் இருக்கும்.
ஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் உரிய விலை கொடுக்காமல் நிலத்தை வாங்க முடியாது அப்படி நிலம் வாங்கும் போது அதற்கான பரிவர்த்தனை அரசின் அடையாள அட்டையின் வழியால் நடைபெறுவதால் உங்களால் அரசுக்கான வரியை ஏய்ப்பு செய்ய முடியாது அப்படி செய்ய நினைத்தாலும் அரசுக்கு கண்டுபிடிப்பதில் எந்த பிரச்சினையும் வராது இதனால் சில இடங்களில் கருப்பு பணம் சேர வழியில்லை.
மொத்த பண பரிவர்த்தனையும் வங்கியின் வழி மேற்கொள்வதால் கள்ளப்பணம் வெளியிட முடியாது காரணம் பணத்திற்கான வடிவம் காணமல் போய் அரசால் நியுமரிக் எண்கள் வழங்கப்பட்டிருக்கும் அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் நியுமரிக் எண்ணில் இடைச்செறுகலாக ஒரே எண்ணில் மீண்டும் ஒரு எண்ணை உட்செலுத்த முடியாது சரி புதிதாக எண்களை வழங்க நினைத்தாலும் அரசின் இயந்திரங்கள் அதை அனுமதிக்காது யோசித்து பாருங்கள் அரசியல்வாதியோ பெறும் பண முதலைகளோ அரசை ஏமாற்றி பணத்தை வெளியில் கொண்டு செல்லமுடியுமா?பணத்தை வேறு ஒரு நாட்டு பணமாக மாற்ற நினைத்தாலும் அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியுமா?ஆக பணம் என்பது வெறும் எண்களாகவும் கண்களில் பார்க்க முடியாததாகவும், நம்முடைய பணம் வெளி நாட்டில் இருந்தால் பத்திரங்களாக மாறியிருக்கும் ஆக இதன் வழியாக வெளிநாட்டில் இருந்து அந்நிய நாட்டு பணத்தையும் அரசின் அனுமதி இல்லாமல் உள்ளே கொண்டு வரமுடியாது!
சரி நம் அடையாள அட்டை காணமால் போய்விட்டது அல்லது அடுத்தவர்களால் களவாடப்பட்டது என்றாலும் நமக்கு பாதிப்பு இருக்காது காரணம் அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு நம் கண், கைரேகை மற்றும் கூடுதலாக கடவுச்சொல்லும் பயன்படுத்தினால் மட்டுமே நம் தகவல்கள் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதாக இருந்தால் திருடுவது எளிமையான விஷயமா? இதையும் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
இனி எப்படி இதன் வளர்ச்சியும் சாதகமும், பாதகமும் இருக்குமென்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன் ஆனால் இந்த நேரத்தில் பிக் பாக்கெட் திருடன் போய் நிறைய ஹைடெக் கணினி திருடர்கள் நிறைய முளைத்திருப்பார்கள். என்ன நண்பர்களே இது சாத்தியமில்லை என நினைக்கிறீர்களா? அல்லது சாத்தியம் என நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் இவையெல்லாம் சாத்தியப்படும் போது நாம் நிச்சியமாய் எவராலும் அசைக்க முடியாத வல்லரசாய் இருப்போம்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Subscribe to:
Posts(Atom)








