Sep 15, 2010

12

பிடிஎப்-பில் பாஸ்வேர்ட் இடலாம்

  • Sep 15, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கவனமின்றிக் கோட்டை விட்டவன் காலம் கலிகாலம் என்றானாம்.

    வணக்கம் நண்பர்களே கடந்த சில பல நாட்களாக வேலைப்பளுவின் இறுக்கத்தில் வலைத்தளம் பக்கம் வர முடியவில்லை அப்படி பெரிதாக எதிர்பார்க்கும் அளவிற்கு நான் பெரிதாக ஒன்றும் எழுதிவிட போவதில்லை இருந்தாலு இறுக்கத்தை தளர்த்த ஒரு போதை அவசியமாகிறது அதிலும் எனக்கு ஏதாவது ஒன்றை எழுதுவதில் விருப்பம் உள்ளவன், அதனாலேயே இன்று எப்படியும் எழுதிவிடவேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பதிவை எழுதுகிறேன் ஆனாலும் இது உபயோகமாக இருக்கும்.

    நம்மில் பிடிஎப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள் இந்த பிடிஎப் பல காரணங்களுக்காக பயன்படுத்த படுகிறதென்றாலும் குறிப்பாக நம் தமிழ் மக்களுக்கு நல்ல வசதியை தருகிறது நம்மிடம் இருக்கும் ஒரு தமிழ் டாக்குமெண்டை நண்பர் ஒருவருக்கு நேரடியாக எக்‌ஷெல் அல்லது வேர்டு பைலாக அனுப்பினால் ஒருவேளை அவர் கணினியில் தமிழை படிக்க முடியாமல் போகும் அதே நேரத்தில் அந்த பைலை பிடிஎப் ஆக மாற்றிவிட்டால் யாரும் எழுத்துரு பிரச்சினை இல்லாமல் எழுதில் படிக்க முடியும் இதை பற்றி ஏற்கனவே நான் இங்கு ஒரு பதிவை எழுதியிருக்கிறேன் படித்து பாருங்கள் இந்த பதிவிலேயே நிறைய விஷயங்கள் இருக்கும்.

    நாம் சில காரணங்களுக்காக நமது பிடிஎப் பைலை பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்க நினைப்போம் அதற்காகத்தான் இந்த பிடிஎப் செக்குயூரிட்டி தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதை பயன்படுத்தி எளிதாக பாஸ்வேர்ட் இட்டு வைக்கலாம் அதற்கான படங்களை இனைத்துள்ளேன் பாருங்கள் புரியும்.





    என்ன நண்பர்களே விரிவாக எழுதமுடியவில்லை மன்னிக்கவும் மேலும் இந்த பாஸ்வேர்ட் இட்டாலும் இதையும் திறக்கும் மென்பொருள்கள் இருக்கின்றன முடிந்தால் நாளை அல்லது விரைவில் அதை பற்றியும் ஒரு பதிவு எழுதுகிறேன் என்ன எல்லா தொழில்நுட்பத்திலும் எதிர்மறைகளும் இருக்கின்றன. பதிவு பிடித்திருந்தால் அவசியம் வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் சிலரை சென்றடைய உதவலாமே.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 10, 2010

    16

    பதிவுலகத்தில் இப்படியும் நடக்குமா?

  • Sep 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வை தீர்மானிக்கிறதெயொழிய தகுதி அல்ல.

    வணக்கம் நண்பர்களே சில நாட்களுக்கு முன் முகம் அறியா நண்பர் ஒருவர் நம் தளத்தின் பதிவை அப்படியே காப்பி எடுத்து அவர் தளத்தில் பிரசுரித்திருக்கிறார் என பதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவிற்கு அருமை நண்பர்கள் நீங்களும் ஆதரவாக இருந்தீர்கள் ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் அந்த நண்பர் நம் தளத்தில் பின்னுட்டத்தில் வழியாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் நல்ல வேளை நான் அந்த வேகத்தில் அந்த நண்பரே தவறுதலாக எதுவும் எழுதவில்லை அப்படி எழுதியிருந்தால் நான் எழுதிய வார்த்தைகளயோ என்னால் திருப்பி எடுத்திருக்க முடியுமா? ஒன்று மட்டும் நிச்சியமாக உணர்கிறேன் எதையும் ஆத்திரப்பட்டு எழுதினால் ஒரு வேளை இந்த நண்பர் அவர் தவறை உணர்ந்திருப்பாரா? இல்லை தவறைத்தான் ஒத்துக்கொண்டிருப்பாரா? அவர் அவரின் தவறை ஒத்துக் கொண்டிருக்கும் போது நாமும் அதை பெருந்தன்மையோடு மன்னிப்பது தானே மனிதம்.

    இதை அவருடைய தளத்திலும் தெரிவித்திருக்கிறார் அவருடைய தள முகவரிகண்ணா 3H.

    அவர் நமது தளத்தில் எழுதியதை கீழே படமாக இனைத்திருக்கிறேன் அதனை காண நம் தளத்தின் முகவரிபுரியாத கிறுக்கல்கள் சென்று அவர் எழுதியதை பார்க்கலாம்.



    இந்த பதிவை எழுதியதன் நோக்கம் நாம் குற்றப்படுத்திய ஒருவர் அவர் தவறை உணரும் போது நாமும் அதை அங்கீகரிக்க பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தவறுகள் செய்வது மனித இயல்பு அதை மன்னிக்க தெரிந்தால் தான் சிறந்த மனிதனாக இருக்க முடியும் மறப்போம் மன்னிப்போம்,மனிதனாய் இருப்போம்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    12

    தமிழில் மருத்துவ தளங்கள் I

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கடவுள் தீயவர்களை மன்னித்து விடுகிறார் ஆனால் எப்போதும் அல்ல.

    வணக்கம் நண்பர்களே நான் இங்கு சில தமிழ் மருத்துவ தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் ஒரு வேளை இந்த தளங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்க்ள் சிலர் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவட்டுமே என்கிற நோக்கம் மட்டுமே. இந்த காலத்தில் நிறைய விதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன ஒரு விதத்தில் நம் உணவு முறையும் இதற்கு காரணம் இது யாவருக்கும் தெரியும் ஆனாலும் நாம் நம்மை மாற்றிக்கொள்வதில்லை. நாம் எடுத்த்தெற்கெல்லாம் நாம் மருத்துவமனை செல்லமுடிவதில்லை ஆனால் நமக்கு அந்த குறையை போக்குவதற்கென்றே எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அவர்களுக்கு இருக்கும் நேரமின்மையிலும் தமிழில் மருத்துவ தகவல்களை என்னைப்போல சராசரி மனிதனுக்கும் புரியும் வகையில் மருத்துவ தகவல்களை எழுதுகிறார்கள்.

    மதிப்பிற்குறிய நண்பர் திரு.துமிழ் அவர்களின் தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் பதிகிறார் அதுமட்டுமல்லாமல் நமக்கு இருக்கும் சந்தேகத்தையும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கும் பதில் அளிக்கிறார் கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் அவர் அளிக்கும் தகவல்கள் நமக்கு புரியும் வகையில் இருக்கும். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.துமிழ் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக மதிப்பிற்குறிய நண்பர் திரு.ராஜ்மோகன் அவர்களின் தளத்தில் குழந்தைகளுக்கன மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் ஆனால் இன்னும் அவர்கள் மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி தருவார்களேயானால் குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ தளம் என்பதில் சந்தேகமில்லை. அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    திரு.ராஜ்மோகன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக தமிழ் கன்சல்ட் தளம் இங்கு நான்கு மருத்துவர்கள் நமக்கு உதவி செய்வதெற்கென்றே இருக்கிறார்கள் இவர்களும் இந்த மருத்துவ சேவையே இலவசமாகவே செய்கிறார்கள் இவர்களை பொறுத்த வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கலாம் ஆனால் தமிழையே அவர்கள் முதன்மைபடுத்துகிறார்கள் ஆனால் சில இடங்களில் பதில் முழுவதையும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் அது ஒரு குறையாகத்தான் நான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்கள் புரிந்துகொளவதில் பிரச்சினையும் இருக்கும் ஆனால் அந்த குறையை களைந்தால் இது சிறந்த தமிழ் மருத்துவ தளம் தான். அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    தமிழ் கன்சல்ட் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    அடுத்ததாக ஆயுர்வேத மருத்துவ தகவல்களை ஆயுர்வேத மருத்துவம் எனும் தளத்தில் பொதுவான மருத்துவ தகவல்களை பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம் மின்னஞ்சல் தொடர்பு கொடுத்திருக்கிறார் அவரின் இலட்சிய கணவாக ஆயுர்வேத 50 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அமைக்க விரும்புவதாக எழுதியிருக்கிறார், பயன்படுத்தி பாருங்கள் சிறந்த தளமாக இருப்பின் அன்பின் நண்பர்கள் இந்த தளத்தை உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

    ஆயுர்வேத மருத்துவ தளம் செல்ல படத்தை கிளிக்கவும்



    என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.

    தமிழில் மருத்துவம் II

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 8, 2010

    14

    பாஸ்வேர்ட் இட்ட சிடி டிரைவ் திறக்கலாம்

  • Sep 8, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அறிவுறை விளக்கெண்ணெய் போன்றது கொடுப்பது சுலபம், நடப்பது தான் கடினம்.

    வணக்கம் நண்பர்களே நாம் தினந்தோறும் எத்தனையோ விதமான மென்பொருள்களை பார்க்கிறோம் சில நமக்கு பிரயோசன்படுவதாய் இருக்கும் சில நமக்கு எந்த விதத்திலும் உதவும் வகையில் இருக்காது நாம் பார்க்க போகும் இந்த பதிவும் அப்படிப்பட்ட ஒன்று தான் ஒரு வேளை உங்கள் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம் அல்லது உபயோகமில்லாத பதிவாகவும் இருக்கலாம்.

    சமீப காலங்களாக பென்டிரைவ் அதிகமான புழக்கத்தில் இருப்பதாலும் அதில் அதன் வழியாக வைரஸ் வர சாத்தியகூறு அதிகம் உள்ளதாலும் சில கணினிகளில் அதை பயன்படுத்த முடியாதவாறு செய்திருப்பார்கள் அதை பற்றி நாம் ஏற்கனவே நம் பதிவின் வழியாக பார்த்திருக்கிறோம் ஒரு வேளை அப்படிப்பட்ட கணினிகளில் எப்படி தகவல்களை காப்பி எடுப்பது என்பது பற்றியும் பார்த்திருக்கிறோம் இதெயெல்லாம் ஆராய்ந்த சில நண்பர்கள் தகவல்களை கையால குறுந்தகடு பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் இந்த விஷயம் வீடு முதல் அலுவலகங்களில் உள்ள கணினிகளுக்கும் பொருந்தும்.

    நாம் நம்பும் சிலர் கூட நம் கணினியில் தகவலை எடுக்கக் கூடும் எனவே இந்த கணினியில் சிடி டிரைவ் திறக்கவிடாமல் செய்துவிட்டால் ஒருவேளை தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம் நான் இங்கே சில மென்பொருள்களை பரிந்துரை செய்கிறேன் CD DVD Locker அல்லது CD DVD Locker அல்லது CD DVD Locker அல்லது CD DVD Locker
    கணினியில் நிறுவிக்கொண்டு அதில் தேவையான கீ செட்டிங் செய்து பாஸ்வேர்ட் செட் செய்து விடுங்கள். இனி உங்களை அறியாமல் யாரும் உங்கள் டிரைவின் வழியாக தகவல்களை குறுந்தகடில் பதிய முடியாது.

    சரி இப்போது நீங்கள் பாதுக்காப்புக்காக ஏற்படுத்திய பாஸ்வேர்ட் மறந்துவிட்டீர்கள் என்ன செய்வீர்கள் ஒன்றும் பதற வேண்டியதில்ல இங்கு அதற்கான நான்கு விதமான மென்பொருள்கள் இருக்கின்றன தேவைப்படுபவர்கள் CD DVD Ejector அல்லது CD DVD Ejector அல்லது CD DVD Locker அல்லது CD DVD Ejectorஅல்லது CD DVD Ejector தரவிறக்கவும் இந்த நான்கு மென்பொருள்களும் பாஸ்வேர்ட் இட்ட திறக்க முடியாத சிடி, டிவிடி டிரைவ்களை அழகாக திறந்து விடும் இது பற்றி நான் முன்னமே எழுதிய பதிவு தங்களின் மேலதிக தகவலுக்காக படித்து பாருங்கள்.

    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருக்கிறதா, இருப்பின் இந்த பதிவு மேலும் பலரை சென்றடையும் வகையில் உங்களின் சில நிமிடங்களை இதற்கென செலவழித்து வாக்கும், பதிவை பற்றிய கருத்துரையும் எழுதுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 7, 2010

    9

    வோடாபோனும் விளங்காத கஷ்டமர்கேரும்

  • Sep 7, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: செல்வாக்கை நாம் தேடுவதை விட அது நம்மை தேடி வர வேண்டும்.

    வணக்கம் நண்பர்களே இது சமீபத்தில் நடந்த சம்பவம் சாதரணமாகவே இந்த மொபைல் சர்வீஸ் வழங்குபவர்களின் தொல்லை பல விதத்திலும் இருக்கும் அவர்களின் ஒரு எண்ணை நாம் தடை செய்து வைத்திருந்தாலும் வெவேறு எண்களில் இருந்து பல தொல்லைகள் கொடுப்பார்கள் அதையெல்லாம் நாம் சகித்துக்கொள்வோம் ஆனால் சமீபத்தில் மொபைல் வழியான திருட்டுத்தனங்களை ஒரு கும்பல் ஆரம்பித்துள்ளது.

    சமீபத்தில் ஒரு அழைப்பு பெண் பேசுகிறார் வணக்கம் நாங்கள் வோடாபோனில் இருந்து அழைக்கிறோம் எங்களின் சிறப்பு சலுகை திட்டத்தில் தென் மாவட்டத்தில் நாங்கள் வழங்கியுள்ள அலைபேசி எண்களில் பத்து எண்களை தெரிவு செய்து அவர்களுக்கு இலவசமாக எல்ஐசி காப்பீட்டு திட்டத்தில் ஒரு இலட்சம் தர இருக்கிறோம் அதில் தெரிவு செய்தவர்களின் பட்டியலில் தாங்களும் ஒருவர் என்பதாக அழைப்பு அழைப்பு வந்த எண்ணோ மதுரையிலிருந்து, நான் என்ன என்று யோசிப்பதற்குள்ளாகவே அவர்கள் நம்மை ஏமாற்றும் விதமாக நம் முகவரியையும் சரியாக சொல்கின்றனர். நான் பொதுவாக இந்த இலவசம் அதிர்ஷ்டம் மண்ணாங்கட்டி இதற்கெல்லாம் எளிதில் நான் என்னை விட்டுக் கொடுப்பதில்ல, அதிலும் அவர்களிடம் அன்று சாயந்திரமே வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஒரு பொய்யான முகவரியையும் கொடுத்தார்கள்.

    வோடாபோன் கஷ்டமர் கேர் தொடர்புகொண்டு என் அலைபேசிக்கு தங்களின் நிறுவணத்தில் இருந்து பேசுவதாகவும் அதில் எனக்கு ஒரு இலட்சம் காப்பீட்டு தொகை இன்சூர் செய்து தருவதாகவும் தகவல் வந்தது இது போல ஒரு திட்டம் உங்கள் நிறுவணம் செய்கிறதா எனக் கேட்டால் அதற்கு அவரின் பதில் ஒரு வேளை இருக்கலாம் என்கிறார் இதற்கு பெயர் தான் கஷ்டமர் கேர் சேவையா? சரி இந்த வீணாப்போன கஷ்டமர்கேரில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை போலும் என நினைத்து அவர்களின் வலைத்தளத்தில் பார்த்தால் இது போல எந்த அறிவிப்பும் இல்லை ஒரு வழியாக மீண்டும் கஷ்டமர் கேர் தொடர்பு கொண்டபோது இப்போது பேசியவர் மிகவும் தெளிவாக அப்படி எதுவுமில்லை இது யாரோ விஷமிகள் செய்யும் வேலை எனவும் இது குறித்தான தகவலை எங்கள் கவணத்துக்கு கொண்டுவந்ததுக்கு நன்றி என்பதாக முடித்துக்கொண்டார்.

    நான் இது பற்றி நண்பர்களிடம் பேசிய போதுதான் உண்மை புரிகிறது இதற்கு முன்னதாகவே எனது தெருவில் நிறைய பேருக்கு இது போல அழைப்புகள் வந்திருக்கின்றன அதில் சிலர் நேரடியாக அவர்கள் கொடுத்த பொய்யான முகவரிக்கும் சென்றிருக்கின்றனர், அப்படிச் சென்ற எனக்கு தெரிந்த ஒருவர் நேரடியாக சென்ற போது அங்கிருந்த நான்கு இளைஞர்கள் இது போல நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்திருந்தாகவும் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு இறுதியில் அவருக்கு மட்டும் ஒரு பத்திரம் கொடுத்திருக்கிறார்கள் அதோடு அல்லாமல் நாங்கள் உங்கள் முதலாண்டுக்கான தொகையை அடைத்து விட்டோம் இனி நீங்கள் செய்துகொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்கள்.

    அந்த அண்ணனும் அதை பொறுமையோடு வாங்கி வந்திருக்கிறார், அவரிடம் பேசிய போதுதான் அவர்கள் பிராடு என்பது தெரிகிறது இனி அந்த பத்திரத்தை எல்ஐசி அலுவலகம் கொண்டு சென்று காண்பித்தால் அவர்கள் என்ன செய்வார்கள் இதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா? இது போல் நீங்கள் யாரவது அனுபவப்பட்டிருக்கிறீர்களா? இதில் எனக்கு புரியாதது இதனால் அந்த விஷமிகளுக்கு கிடைக்கும் இலாபம் என்ன? எப்படி நம் முகவரியை சரியாக சொல்கிறார்கள் யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் என்னைப்போல பிறருக்கும் உதவியாக இருக்கும்.

    இது போல அழைப்புகள் உங்களுக்கு வந்தால் முதலில் கஷ்டமர் கேர் தொடர்புகொண்டு கேளுங்கள் அவர்கள் வலைத்தளத்தில் பாருங்கள், மீண்டும் அடுத்த முறை அதே எண்ணில் உங்களை தொடர்புகொள்ள முடியாதவாறு செய்யஇங்குசிறப்பு மென்பொருள் இனைத்திருக்கிறேன் தரவிறக்கி பயன்படுத்தவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 6, 2010

    17

    எக்‌ஷெல்லில் கேமரா பிக்ஸிங்

  • Sep 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அரசியல் ஒரு சாக்கடை தான் இறங்கி சுத்தம் செய்யாத வரை.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் பார்க்க போவது எக்‌ஷெல்லில் ஒரு குறிப்பிட்ட பாகத்தை எப்படி ஸ்கிரீன் ஷாட் எடுப்பது என்பதை பற்றித்தான் நாம் எல்லோருக்குமே தெரியும் கணினியில் ஸ்கிரீன் ஷார் எடுப்பதற்கு நம் கீபோர்டில் Print Scrn Sys Rq என்கிற பெயரில் ஒரு கீ இருக்கும் அதை அழுத்துவதன் மூலம் நாம் கணினியில் ஸ்கீரின் ஷாட் எடுக்க முடியும் அது மொத்த திரையையும் பிடித்து விடும் ஆனால் நாம் பார்க்க போவதோ எக்‌ஷெல்லில் நமக்கு தேவையான பாகத்தை மின்னஞ்சலில் அனுப்புவதற்கோ அல்லது வேறு ஏதாவது அலுவல் காரணங்களுக்காகவோ சில நேரம் தேவைப்படலாம்.

    முதலில் எக்‌ஷெல் 2003-ல் எப்படி இதனை கொண்டு வருவது என பார்க்கலாம்.

    எக்‌ஷெல் பைலை திறந்து கொண்டு அதில் Tools திறக்கவும் அதில் Customize என்பதை கிளிக்கவும்.



    இபோது புதிதாய் ஒரு பாப் அப் விண்டோ திறந்திருக்கும் அதில் Commands திறந்து இடப்பக்கம் இருக்கும் Categories-ல் Tools கண்டுபிடிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Camera என இருக்கும் இனி இந்த Camera-வின் மேல் கர்சரை அழுத்தி பிடித்து Drag & Drop முறையில் மேலே மெனு பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் இழுத்து விடவும் அவ்வளவுதான் இனி உங்கள் எக்‌ஷெல்லில் கேமரா பங்ஷன் வந்துவிடும்.



    இனி எக்‌ஷெல் 2007-ல் எப்படி இதனை கொண்டு வருவது என பார்க்கலாம்.

    எக்‌ஷெல் பைலை திறந்துகொண்டு மேலிருக்கும் ஆபிஸ் பட்டனை கிளிக்கி அதில் Excel Options என்பதை கிளிக்கவும்.



    இப்போது ஒரு பாப் அப் விண்டோ வந்திருக்கிறதா அதில் Customize என்பதை கிளிக்கவும் இனி All Commands என்பதை தெரிவு செய்யவும் இனி கீழே தேடுங்கள் Camera இருக்கும் சிரமாமாக இருந்தால் C என அழுத்துவதன் எளிதாய் கண்டுபிடிக்கலாம் இனி Camera செலக்ட் செய்து Add கொடுக்கவும் கடைசியில் ஓக்கே கொடுக்கவும்.



    இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் புதிதாக கேமராவும் வந்திருக்கும்.



    இனி நீங்கள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டிய பகுதியை செலக்ட் செய்து நாம் ஏற்கனவே மேலே இழுத்து விட்ட கேமராவை கிளிக்கினால் போதும் நாம் செலக்ட் செய்த பகுதியானது இமேஜாக மாற்றப்பட்டுவிடும் அதை அப்படியே வேறு ஒரு எக்‌ஷெல்லில் ஒட்டமுடியும் அல்லாது வேர்ட் பைலில் ஒட்டிக்கொள்ள முடியும் இல்லையென்றால் மைக்ரோசாப்ட் பெயிண்ட் (Start-Run- type mspaint (or) pbrush) அல்லது போட்டோஷாப்பிலும் ஒட்டி தேவையான மாற்றங்களை செய்து சேமித்துக்கொள்ளலாம். என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கிறதா, புதிய தகவலாய் இருக்கிறதா? இருப்பின் சிரமம் பாரமால் வாக்கும் கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் பலரை சென்றடைய வகை செய்யலாமே. வாக்கும் கருத்துரையும் அளிக்க சொல்வதால் தவறாக எண்ண வேண்டாம் பலரும் பயன்பெற உங்கள் ஆதரவு அவசியம் தேவை.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 4, 2010

    9

    வேர்ட் கிளிப்போர்டில் இரண்டு மெமரி

  • Sep 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஒருவனை எப்படி அளவிட வேண்டும் என்று தெரிந்துகொண்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகமே.

    வணக்கம் நண்பர்களே இது உங்களுக்கு அதிகம் உபயோகப்படாது ஆனால் தெரிந்துகொண்டால் எப்போதாவது உங்களுக்கு உபயோகப்படுமே என்பதற்காக இந்த பதிவு. நாம் அநேகம் பேர் மைக்ரோசாப்ட் வேர்ட் பைல் உபயோகித்திருப்போம் அதில் நாம் ஒரு வரியையோ அல்லது ஒரு எழுத்தையோ, வார்த்தையையோ காப்பி எடுத்தால் நாம் கடைசியாக காப்பி எடுத்தவை மட்டுமே கிளிப்பேர்ட் மெமரியில் இருக்கும் அதை மட்டுமே நாம் எங்காவது பேஸ்ட் செய்யவும் முடியும் அதாவது புதியவை காப்பி எடுக்கும் போது தானக பழையவை அழிக்கப்பட்டுவிடும், நாம் இங்கேதான் மைக்ரோசாப்ட் வேர்டில் நாம் அதிகம் உப்யோகம் செய்யாத ஒரு விஷயத்தை பார்க்க போகிறோம்.

    ஒரே நேரத்தில் இரண்டு தகவல்களை கிளிப்பேர்ட் மெமரியில் வைத்து நமக்கு தேவைப்படும் இடத்தில் இரண்டு விதமான தகவல்களையும் பேஸ்ட் செய்யப்போகிறோம்.

    நீங்கள் ஒரு ஐம்பது பக்கம் அளவுள்ள ஒரு வேர்ட் பைல் தயாரித்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம் அதில் கடைசி பக்கதிற்கு தேவையான இரண்டு விதமான தகவல்கள் மூன்றாவது பக்கம் மற்றும் பத்தாவது பக்கத்தில் இருக்கிறது இப்போது நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் கடைசி பக்கத்தில் பத்தாவது பக்கத்தில் இருக்கும் ஒரு வரி முதலாகவதாகவும் மூன்றாவது பக்கம் இருக்கும் ஒரு வரி இரண்டாதாகவும் பேஸ்ட் செய்ய நினைக்கிறீர்கள், என்ன எப்போதும் செய்வதுதானே என்று நினைக்கிறீர்களா? நீங்கள் முதலில் இரண்டாவதாக பேஸ்ட் செய்ய விரும்புவதை முதலில் Ctrl + C வழியாக காப்பி எடுத்துக்கொள்ளவும் அடுத்து முதலாவதாக பேஸ்ட் செய்யவிரும்பும் வாசகத்தை தேர்வு செய்து Shift + F2 அழுத்தவும், இப்போது இரண்டு வெவ்வேறு விதமான தகவல்கள் கணினியின் மெமரியில் இருக்கும் இப்போது முதலில் பேஸ்ட் செய்ய வேண்டிய இடத்தில் மவுஸ் கர்சரை வைத்து எண்டர் அடிக்கவும் என்ன நண்பர்களே பேஸ்ட் ஆகிவிட்டதா இனி வழக்கம் போல Ctrl + V என அழுத்தி இரண்டாவதையும் பேஸ்ட் செய்யவும்.

    என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 3, 2010

    24

    உடை குறைப்பது தான் நாகரீகமா?

  • Sep 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அளவோடு பேசுங்கள் அதையும் ஆழ்ந்து யோசித்து பேசுங்கள்.

    இப்போதெல்லாம் அடிக்கடி யோசிப்பது நாம் எந்த காலக்கட்டத்தில் இருக்கிறோம் எனபதை பற்றித்தான், மனிதன் தோன்றிய காலத்தில் நிர்வாணமாகத்தான் இருந்தான் பின்னர் அவனாகவே நாகரீகம் எனும் பாதையில் சுயமாக மாறத்தொடங்கினான் வெற்றுடம்புடன் திரிந்த மனிதன் தன் அந்தரங்களை மறைக்க இலை தழைகளை கொண்டு மறைக்க ஆரம்பித்தான் அந்தரங்கள் மறைக்கப்படாமல் வெளிவருவதை அன்றே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் அமைப்பு வெவ்வேறாக இருந்தாலும் பெண் என்கிற விஷயத்தில் ஆண் விருப்பம் கொண்டுள்ளான் என்பது இயற்கையாகவே இருக்கிறது அது நமக்கும் தெரியும்.

    முன்பெல்லாம் நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் என பார்த்தோமேயானால் ஆண்கள் கோவணமும், வேட்டியுமாக இருந்திருக்கின்றனர், பெண்கள் பதினாறு முழம் சேலை கட்டியிருந்திருக்கிறார்கள் இந்த காலகட்டத்தில் இருவருமே மேலாடை அணிந்திருக்கவில்லை பின்னர் மீண்டும் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சியில் மேலாடையும் போடத்தொடங்கினர் பின்னர் நாகரீக வளர்ச்சியில் வீடு வாகனம் இன்னும் பல இத்யாதிகள் எல்லாம் மாறின, இப்படி போய்க்கொண்டிருந்த நாகரீக மாற்றத்தில் மீண்டும் சைக்கிளிங் போல பழைய விஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினோம்.

    இயற்கைக்கு இசைவாய் வாழ்கிறோம் என்கிற பெயரில் வீடுகள் இயற்கையை ஒத்ததாக அமைத்தனர் மீண்டும் பழைய ஒரு நிலைக்கு செல்ல விரும்பினர் இது வரவேற்கபட வேண்டிய ஒன்றுதான் ஆனால் இதில் ஒரு வில்லங்கமான விஷயத்தையும் சேர்த்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை, உடை நாகரீகம் இதில் பழைய நிலைக்கு நேரடியாக செல்லவிட்டாலும் மறைமுகமாக அந்த நிலைக்கு சென்று விடுவோமோ என்கிற அச்சம் வருகிறது.

    பொதுவாகவே ஆண்களுக்கு அதிக உடை விஷயங்கள் இல்லை வேஷ்டி, பேண்ட், கைலி, சட்டை என ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கிவிடலாம் ஆனால் பெண்களை பொருத்தவரை எத்தனை உடைகள் எத்தனை நாகரீங்கள் இன்னும் ஏன் இப்போதெல்லாம் பெண்களும் ஆண்கள் அணியும் பேண்ட் டீசர்ட் என அணிய தொடங்கிவிட்டார்கள், சரி அணிந்தால் என்ன இதில் என்ன தவறு இருக்கிறது? சரி ஆண்கள் வெறும் வேஷ்டியோடு இருந்தாலும் அது மற்றவர்களை அதிகம் பாதிப்பதில்லை இன்னும் நேரடியாக சொல்லப்போனால் காமத்தை தோற்றுவிப்பதில்லை ஆனால் பெண்கள் அப்படியில்லையே அவர்களின் சிறு கவனக்குறைவான உடையலங்காராம் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்துவிடுமே அதோடு ஒரு தவறான கண்ணோட்டத்தையும் உருவாக்கும் என்பது தெரியாதா?

    முன்பெல்லாம் பெண்கள் சுடிதார் அணிந்தார்கள் அதோடு சால்வையும் போர்த்திகொண்டார்கள் அப்போது நிச்சியமாக அது நல்ல உடையாகத்தான் இருந்தது ஆனால் அதே சுடிதார் இப்போது வேறொரு வடிவம் பெற்று இருக்கிறது இப்போது உள்ள சுடிதார் எப்படியிருக்கும் என்பதற்கு படம் இனைக்க விரும்பவில்லை காரணம் உங்களுக்கே தெரியும் உடல் அவையங்களை அச்சு பிசகாமல் அளவெடுத்து காண்பிக்கும் உடைதான் நாகரீகமா? முன்பெல்லாம் உடல் அவயங்களை மறைக்கதானே ஆடை அணிந்தோம் ஆனால் இப்போது எடுத்துக்காட்டும் வகையில் ஆடை தேவைதானா? மேலும் இருக்கமான டீசர்ட் மற்றும் பேண்ட் இதை பற்றியும் அதிகம் சொல்லவோ அதற்காக போட்டோவோ இனைக்கவேண்டியதில்லை எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆனாலும் மாறுவதில்லை யாருக்காக இந்த ஆடை அலங்கரிப்பு?

    சமீபத்திய ஆராய்ச்சியில் பெண்கள் தான் ஆண்களின் தவறான கண்ணோட்டத்துக்கு வித்திடுவதாக வெளியிட்டு இருந்தார்கள் உடனே கோபப்படவேண்டாம் ஆராய்ச்சிக்காக பங்கெடுத்தவர்கள் எல்லோருமே பெண்கள்தான், மேலும் இப்போதெல்லம் நாம் நம்முடைய தனிமையை இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ரோட்டில் நடந்து சென்றாலும் நம்மையும் அறியாமல் மொபைல் போனில் உள்ள கேமரா கொண்டு படம் எடுத்து விடுகிறார்கள் நாம் நினைப்போம் நம்மை யார் போட்டோ எடுக்க போகிறார்கள் என நினைத்தால் நாம்தான் ஏமாந்துகொண்டிருக்கிறோம் இப்போதெல்லாம் மார்பிங் வழியாக போட்டோவையே மாற்றிவிடுகிறார்கள் இதனால் எவ்வளவு பாதிப்பு? இருந்தாலும் சர்வ சாதரணமாக பேஸ்புக் மற்றும் ஆர்குட்டில் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டோவை வெளியிடுவது ஆச்சரியமளிக்கிறது சரி அவர்கள் என்ன படிக்காதவர்களா என்றால் நன்கு படித்தவர்க்ள் இதன் விளைவுகளை யோசிக்கமாட்டர்களா? கொஞ்சம் பொறுமையாய் கூகுளில் தேடிப்பார்த்தால் நம் போட்டோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    பழைய காலத்து பெண்கள் போல முழுவதும் மூடி சுற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் சேலையாவது அணியலாமே, சுடிதார் அணியும்போது கொஞ்சம் இறுக்கமில்லாமல் அணிந்தால் உங்கள் உடலை அப்படியே எடுத்துக்காட்டாதே? உடலை மறைக்க தானே உடை? நீங்கள் அழகாக சேலை உடுத்தி சென்று பாருங்கள் உங்களை பார்ப்பவரின் கண்ணோட்டம் நல்லவிதமாகவே இருக்கும் அதே வேளையில் கொஞ்சம் நாகரீகம் என்கிற பெயரில் மேலே சொன்ன உடைகளை அணிந்து செல்லுங்கள் உங்களை பார்ப்பவர்களின் கண்களில் வித்யாசம் தெரிவதை உங்களால் உணரமுடியும்.

    நிர்வாணம் என்பது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை ஆனால் அரைகுறை ஆடைகள் ஆபாசத்தை தோற்றிவிக்கிறது என்றால் நிச்சியம் மிகையில்லை. நாம் ஆடை அணிவது உடலை மறைக்கவும் கொஞ்சம் அழகுக்காவும் தானே! அதே ஆடையே நமக்கு பாதுகாப்பில்லாத நம்மை சமுதாயத்தில் தவறாய் பிரதிபலிக்க கூடிய நாகரீகம் எனும் பெயரில் உடுத்தும் ஆடை நமக்கு தேவைதானா? வெளிநாட்டினர் நம்மை வியந்து பார்த்த்தில் நம் ஆடைக்கும் பங்கு உண்டுதானே இப்போதும் வெளிநாட்டு பெண்கள் நம் இந்தியாவில் சேலை உடுத்துவதை பார்த்திருப்பீர்கள் தானே. வெளிநாட்டினர் எப்படியெல்லாம் உடை உடுத்துகிறார்கள் என கேள்வி வேண்டாம் அவர்களின் கலாச்சாரமும் சூழ்நிலையும் வேறு ஆனால் நமக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறதே, குறைந்தபட்சம் நம் கலாச்சார காவலர்களாக இல்லாவிட்டாலும் மனதில் தவறான சிந்தையை விதைக்க நம் உடை ஒரு காரணமாய் இருக்கவேண்டாமே.

    பெற்றோர்களின் கவணத்திற்கு இப்போது நமது உணவு முறை மாற்றத்தினால் நமது குழந்தைகள் சீக்கிரமே பெரியவர்களாகி விடுகின்றனர் அதிலும் பெண் குழந்தைகள் பத்து முதல் பதிநான்கு வயதுக்குள் பெரிய பெண்களாகி விடுகின்றனர் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் உருவத்தில் பெரியவர்களாக இருக்கின்றனர் சில இடங்களில் பார்த்திருக்கிறேன் குழந்தைகள் தானே என்று சிலவிதமான உடைகளை அணிவித்து விடுகிறார்கள் பெற்றோர்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தையின் மீது உங்களுக்குள்ள கண்ணோட்டமும் மற்றவர்களின் கண்ணோட்டமும் ஒரே மாதிரியாய் இருக்காது அன்றாடம் செய்திகளில் பார்க்கத்தானே செய்கிறோம் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    மேலும் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் உங்களுக்கு தெரியும்தானே உங்கள் குழந்தைகளை பொருத்தவரை நீங்கள் தான் முதலில் ஹீரோ உங்களிடமிருந்துதான் குழந்தைகள் நல்ல விஷயங்களையும் கெட்ட விஷய்ங்களையும் கற்றுக்கொள்கின்றனர்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Sep 2, 2010

    20

    அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்

  • Sep 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே சமீபத்தில் சில பதிவுகளை படிக்கும் போது சிலர் அவர்கள் மின்னஞ்சலில் இருந்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் செல்வதாக சொல்லியிருந்தார்கள் (என்னிடமல்ல) உடனே அது ஹேக்கர்கள் பணி என நினைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன் சரி அது பற்றி ஒரு பதிவை எழுதுவோமே என எழுதுகிறேன்.

    உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் மின்னஞ்சல் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் மின்னஞ்சல் கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

    சரி இது போலவே நாமும் நமக்கு தெரிந்த ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து வேறு யாருக்காவது மின்னஞ்சல் அனுப்ப முடியுமா எனக் கேட்டால் அனுப்ப முடியும் என்பதே பதில் இதற்கெனவே சில தளங்கள் இயங்குகின்றன நான் சிலவற்றை இங்கு தருகிறேன்.

    sendanonymoussms

    anonymailer

    send-fake-anonymous-email

    sharpmail

    webwizny

    நான் மேலே ஐந்து தளங்கள் தந்திருக்கிறேன் இன்னும் வேறு நிறைய தளங்கள் இருக்கின்றன இந்த ஐந்தில் நான்கு தளங்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கூடவே அவர்கள் தளத்தின் நோட்டையும் சேர்த்து விடுவார்கள் ஆனால் ஒரு தளம் மட்டும் அவர்களின் விளம்பரத்தையும் இனைப்பதில்லை இந்த தளத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் நிச்சியம் நம்பி விடுவார்கள் ஆனால் எப்படி உண்மையான ஒரு மின்னஞ்சலுக்கும் ஒரு டூப்ளிகேட் மின்னஞ்சலுக்கும் உள்ள வித்யாசத்தை கண்டுபிடிப்பது என்பதை பற்றி கீழே படத்துடன் பார்க்கலாம்.

    இனி நீங்கள் இங்கு சென்று ஏதாவது ஒரு மின்னஞ்சல் அனுப்பி பாருங்கள்.

    webwizny

    இது நான் எனது மின்னஞ்சலில் இருந்து மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு கூகுளின் ஜிமெயில் வழியாக அனுப்பியது.



    இனி உங்கள் ஜிமெயிலில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினால் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Show Details என்பதை கிளிக்கி பாருங்கள் Mailed by signed by என்பதில் gmail.com என்பதாக இருக்கும்.



    இனி நாம் அடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நாம் வேறொருவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதுவும் இப்படித்தான் இருக்கும் மேலிருக்கும் மின்னஞ்சலுக்கும் கீழிருக்கும் மின்னஞ்சலுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கிறதாவென பாருங்கள்.



    இனி நாம் மற்றவரின் மின்னஞ்சலின் முகவரியை பயன்படுத்தி நாம் வேறு நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவர்கள் Show Details என்பதை திறந்து பார்க்காதவரை சம்பந்தபட்ட நபர் தான் அனுப்பியிருப்பார் என நினைக்க கூடும், அதன் பின் Show Details திறந்து பாருங்கள் ஜிமெயிலில் இருந்து நேரடியாக அனுப்பிய மின்னஞ்சலுக்கும் நாம் மற்றவர்களின் மின்னஞ்சலை பயன்படுத்தி அனுப்பியதற்கும் வித்யாசம் புரியும்.



    இனிமேல் உங்கள் நண்பரின் பெயரில் ஏதாவது தவறான மின்னஞ்சல் வந்தால் கொஞ்சம் பொறுமையாக பாருங்கள் விபரம் புரியும் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வேறு நண்பர்களுக்கு தவறான மின்னஞ்சல் போகிறது என்றாலும் உடனே பதட்டபடாதீர்கள் உங்கள் வலைத்தளமோ அல்லது மின்னஞ்சலோ மற்றவர்களால் ஹேக் செய்யப்பட்டால் முதல் வேளையாக அவர்கள் செய்வது உங்கள் பாஸ்வேர்ட் செட்டிங்ஸ் மாற்றி விடுவார்கள் ரீட்டிரைவ் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் எல்லாவற்றையும் மாற்றுவதுடன் உங்கள் முழுத்தளத்தையும் அழித்து விடுவார்கள் உங்கள் சொந்த தகவல் எல்லாம் திருடப்படும் இவை எதுவும் நடக்காமல் இருந்தால் நிச்சியும் உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவர் அல்லது மேலே சொன்ன சில வியாபார தளங்களும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி விளையாடுகிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள் உடனடியாக இதற்கெல்லாம் பாஸ்வேர்ட் மாற்றுவதில் பெரிதாக பயன் இல்லை.

    இந்த வழிமுறையை உங்களுக்கு தெரிந்துகொள்ள மட்டுமே தயவுசெய்து நீங்கள் இதனை தவறான வழிக்கு பயன்படுத்தாதீர்கள் குற்றம் செய்ப்வர்கள் நெடு நாட்கள் தப்பிக்க முடியாது.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...
    28

    வலைப்பதிவரும் வாசகர்களும்.

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: புகழ்ச்சியை விரும்பாத மனிதன் இல்லை, அப்படியொருவன் இருந்தால் அவன் மனிதனே இல்லை.

    வணக்கம் நண்பர்களே நான் சில நாட்களுக்கு முன்பு இந்த வலைத்தளம் மூடப்படுகிறது என பெரிதாய் ஒரு பதிவிட்டு கொஞ்ச நாள் எழுதாமல் இருந்தேன் ஆனாலும் என் பழைய பதிவுகளை அவ்வப்போது இண்டலியில் இனைத்துக்கொண்டு தான் இருந்தேன் சரி எத்தனை நாள் தான் எழுதாமல் இருப்பது என யோசித்து இறுதியில் மீண்டும் இன்று ஒரு பதிவு எழுதுகிறேன். உடனே நீங்கள் என்னை பாரட்டினாலும் சரி அல்லது பரிகசித்தாலும் சரி. நான் பதிவு எழுதமாட்டேன் என எழுதிய பதிவில் சில நபர்கள் கருத்துரை என்கிற பெயரில் அவர்களின் திமிர்த்தனத்தையும் காட்டியிருந்தார்கள் அவர்களுக்கெலாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க போவதில்லை.

    இந்த பதிவு முழுக்க முழுக்க வலைப்பதிவர்களுக்கும், வலைப்பதிவின் வாசகர்களுக்கும் மட்டுமே நான் எழுதாத காலத்தில் கிடைக்கும் நேரத்தில் சில பல வலைத்தளங்களை படிப்பேன் அதில் நல்ல விஷயங்கள் உள்ள பதிவுகளை கண்டால் நிச்சியம் என் வாக்கும் கருத்துரையும் இருக்கும் அதில் நிச்சியமாக சில பதிவர்களின் பதிவுகளை என்னவென்று தெரியாமல் ஒரு முறை திறந்து பார்த்து நொந்து போயிருக்கிறேன், அதில் என்ன இருக்கிறதென்று வாக்குகளும் கருத்துரைகளும் அளித்தார்கள் என தெரியவில்லை ஆனால் நான் எப்போது இண்டலி வலைத்தளம் திறந்தாலும் முன்னனி இடுகைகளாக இருக்கும் இது ஆரோக்கியமானதா என்றால் நிச்சியம் இல்லை என்பதை தவிர வேற பதில் என்னிடமில்லை.

    இந்த வலைத்தளம் என்பது எல்லோருக்கும் கிடைத்த வாய்ப்பு ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த விஷங்களை எழுதுகிறார்கள் அதை நாம் குறை சொல்வதற்கில்லை காரணம் நம்மை படிக்க சொல்லி அவர்கள் கட்டாயபடுத்துவதில்லை, அவர்கள் எழுதுகிறார்கள் அவர்களுக்கென ஒரு ஓட்டுக்கூட்டமும், கருத்துரை அளிக்க ஒரு கூட்டமும் இருக்கிறார்கள் அது பற்றி நமக்கு கவலையில்லை ஆனால் இது போன்ற உதவாக்கரை பதிவுகள் மற்றவர்களை பாதிக்கிறது, இந்த பதிவுகள் படிக்கப்பட்டு வாக்களிக்க படுவதில்லை எல்லாமே கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வேலைதான் சமீபத்தில் சில வலைத்தளங்களை நான் கவணித்த போது ஒரு அணியாக இருந்து தான் செயல்படுகின்றனர் குறைந்த பட்சம் இருபது நண்பர்களை கூட்டாக சேர்த்தால் போதும் பதிவு இனைத்த சிறிது நேரத்தில் வாக்குகள் விழத்தொடங்கி விடும் இவையெல்லாம் பதிவை படித்து வாக்களிப்பது இல்லை.

    உங்களுக்கு புரியும் வகையில் ஒரு உதாரணத்தை சொல்கிறேன் சில முன்னனி பதிவுகளை நீங்கள் காப்பி எடுத்துக்கொள்ளுங்கள் நீங்களாக சோதனைக்காக ஒரு ஒரு வலைத்தளம் தொடங்கி அதில் முன்னனி பதிவின் பதிவை வெளியிட்டு பாருங்கள் அவர்கள் எழுதிய தலைப்பையே வைத்து விடுங்கள், பதிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இண்டலியில் இனைத்து விடுங்கள, உண்மையில் உங்களுக்கு அதிகபட்சம் போனால் சில வாக்குகள் கிடைக்கலாம், யோசித்து பாருங்கள் ஓரே விஷயம் அதில் எந்த மாற்றமுமில்லை ஆனால் நீங்கள் இனைப்பதற்கும் அவர்கள் இனைப்பதற்கும் மிகப்பெரிய வித்யாசம் இருக்கும்.

    இது போன்ற வலைப்பதிவுகள் இண்டலியில் இனைத்தவுடன் அவர்களின் கூட்டு சகாக்கள் பார்ப்பது பதிவை இனைத்தவரின் அவதாரையோ அல்லது இனைத்தவரின் பெயரைத்தான், அது தெரிந்தால் போதும் கண்ணை மூடிக்கொண்டு வாக்கும் ஓ, அருமை, நல்ல சிந்தனை, வெங்காயம் என டெம்ப்ளேட் பின்னுட்டங்கள் இருக்கும் ஆங்கில வலைத்தளங்களில் பார்ந்தால் பதிவை பற்றியதான விவாதம் மட்டுமே கருத்துரையில் நடக்கும் ஆனால் நம் தமிழ் வலைப்பூவை பொருத்தவரை சம்பந்தமே இல்லாமல் கருத்துரை எழுதுவதில் வல்லவர்கள் அவர்களை சொல்லி குற்றமில்லை என்ன செய்வார்கள் எல்லாம் ஒரு ஒப்பந்த கொடுக்கல் வாங்கல் தானே.

    இது போன்ற விஷயங்கள் உதவாக்கரை பதிவுகளில் மட்டுமல்ல ஒட்டு மொத்த பதிவு எழுதுபவர்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு வாக்கு அளிக்கும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்து தான் வாக்கோ அல்லது கருத்துரையோ அளிக்கிறார்களா? நீங்களே உங்கள் மனதை கேட்டு பாருங்கள் அதற்கான விடை கிடைக்கும். இங்கு எல்லோரும் பெரிய சேவை மனப்பாண்மை உள்ளவர்கள் இல்லை எல்லோரின் சேவை என்கிற பெயரில் அவர்கள் சுய விருப்பம் இருக்கிறது. புகழ்ச்சி இதை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? இங்கு எல்லாமே சுய சொரிதல்கள் தான் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் மேலும் சேவை என்பதை விட சிலர் இதையே மூலதனமாக்கி சம்பாதிக்கவும் முடியும் அவர்கள் பிரச்சினை இல்லை அவர்களின் நோக்கம் வலைத்தளத்தின் மூலம் சம்பாதிப்பது அதை நாம் தவறு என்பதற்கில்லை ஆனால் இரட்டை வேடம் இடும் நபர்களை என்ன செய்வது?

    இன்னும் சில வகையான மனிதர்கள் அவர்களின் ஆண் பதிவர்களின் பதிவை திரும்பி கூட பார்ப்பதில்லை என சபதம் செய்திருப்பார்கள் போல வாழ்க அவர்கள் சபதம் கொள்கையும். இதை பற்றி ஏற்கனவே சில பதிவர்கள் சுட்டி காட்டியிருக்கிறார்கள் அதனால் இது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை இவ்வளவு எழுதுறானே ஒருத்தர் பெயரையும் குறிப்பிடவில்லையே என நினைக்க வேண்டாம் உங்களுக்கு தெரியும் யார் அவர்களென்று! ஒரு வேளை இதை நீங்கள் படிக்கும் போது மேலே சொல்ல விஷயங்கள் உங்களுக்கு பொருந்துமேயானல் சந்தேகமே இல்லை அது நீங்கள் தான் தயவுசெய்து இனிமேலாவது மாற்றிக்கொள்ளுங்கள்.

    சில நண்பர்கள் சொல்வார்கள் நல்ல பதிவு என்றால் நிச்சியம் அவர்களாகவே வந்து படிப்பார்கள் மக்கள் தேடி வந்து படிக்க வைக்கவேண்டுமென்றால் கொஞ்சம் பலான விஷயங்களை பதிவின் மேல் தூவினால் மலரை மொய்க்கும் வண்டு போல வந்துவிடுவார்கள் நானும் எழுத வந்த ஆறு மாத காலத்திற்குள் சில நல்ல பதிவர்களை கண்டிருக்கிறேன் அவர்களின் பதிவு எப்போதுமே பிரபல பகுதிக்கு கூட வருவதேயில்லை இங்கு ஒருவரின் வளர்ச்சியை மற்றவர் விரும்புவதில்லை இது மனித இயல்புதானே என்ன செய்வது இங்கு திறமைக்கு மதிப்பில்லை மாறாக இங்கு வேறு நடக்கிறது.

    உங்கள் நண்பராகவே இருந்தாலும் பதிவின் தரத்தை பொருத்து வாக்கோ கருதுரையோ அளியுங்கள் நல்ல விஷயங்களை கானும் போது அதை ஊக்கபடுத்துங்கள் அதற்கான என்ன உங்கள் சொத்தையா எழுதிக் கொடுத்துவிட போகிறீர்கள் வெட்டி பதிவுகளுக்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தில் நல்ல பதிவுகளுக்கு ஒரு சில நிமிடங்கள் செலவழித்து வாக்கும் கருத்துரையும் அளியுங்கள் அது அவர்களுக்கு ஊக்கமாய் இருக்கும்.

    இங்கு நீயெல்லாம் என்ன எழுதுறேனு நீங்க நினைப்பிங்க அதுக்கும் நானே பதில் சொல்லிறேன் சும்மா கணினி பதிவுகள் எழுதுறேனு கொஞ்சம் ட்டிரிக்ஸ், டெக்னிக்ஸ், அப்புறம் மென்பொருள் பத்திதான் எழுதுறேன் நீங்கள் நினைப்பது புரிகிறது என்ன பெரிசா மென்பொருள் இனையத்தில் தேடினா கிடைக்க போவுது உண்மைதான், இனையத்தில் கிடைப்பதை தான் எழுதுகிறேன் அதிலும் நான் எப்போது எந்த மென்பொருள் பற்றி எழுதினாலும் கீயையோ அல்லது கிராக் பேட்ச் நிச்சியம் இனைத்திருப்பேன் இது உங்களாலும் முடியும். கூடிய விரைவிலேயே இனையத்தில் எங்கும் கிடைக்காத ஒரு மென்பொருள் நமது சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கிறது ஆனால் அது போல மென்பொருள்கள் இனையத்திலும் கிடைக்கும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர